19 March, 2011

புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் காலிறுதிக்குள் நுழைகிறார்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 206 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிகா அணி அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 39வது லீக் ஆட்டம் வங்காள தேசத்தில் உள்ள மிர்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் சுமித் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அவரும், ஹசிம் அம்லாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்காள தேச அணி 28 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்கள் எடுத்து. இதனால் 206 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது


இந்த படு தோல்வியின் மூ்லம் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது வங்கதேசம்

No comments:

Post a Comment