21 August, 2011

வரலாறு காணாத மக்கள் புரட்சி வெடிக்கும் !

அன்னா ஹசாரே கூறுகையில்:


அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவாக, டெல்லி இந்தியா கேட்டில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. பேரணி உண்ணாவிரத பந்தலை அடைந்ததும், அவர்கள் மத்தியில் அன்னா ஹசாரே ஆவேசமாக பேசினார். 




ஊழலுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக நான் பேராட்டம் நடத்தி வருகிறேன். லோக்பால் விவகாரத்தில், முதலில் கூட்டு குழு அமைத்து 2 மாத காலம் பேச்சு நடத்தி மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது. இந்த அரசின் ஊழல் ஒழிப்பு நோக்கம் நேர்மையானது அல்ல. 

வருகிற 30ந் தேதிக்குள் மக்கள் லோக்பால் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிட்டால், நாட்டில் வரலாறு காணாத மக்கள் புரட்சி வெடிக்கும். இந்த அரசு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment