21 October, 2011

இருளில் மூழ்கியது திருச்சி !

திருச்சி - திண்டுக்கல் மெயின் ரோட்டில் பிராத்தியூர் அருகே உள்ள டிரான்பாம் வெடித்தது. தீ எழும்பியதை ஒரு கிலோ மீட்டர் வரை உள்ள மக்கள் பார்த்துள்ளனர்.திருச்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இதன் மூலம் தான் மின்சாரம் வழங்கப்படும். இந்த சம்பவத்தால் இன்று திருச்சி நகரம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. மாலை 6 மணி முதல் மின்சாரம் இல்லை. நாளை காலை வரை மின்சாரம் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாவார்கள். தீபாவளி நேரம் என்பதால், வர்த்தக நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் சமாளித்து வருகின்றனர்

No comments:

Post a Comment