05 December, 2011

முல்லைப் பெரியாறு அணைக்காக கூடலூரில் இளைஞர் செல்வப் பாண்டியன் தீக்குளிப்பு!


கூடலூர் அருகே இரு மாநிலங்களிலும் மக்கள் ஒரு மாநில வாகனங்களை மறு மாநிலத்தினுள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறை, கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் கூடலூரில் இன்று காலை செல்வப் பாண்டியன் என்பவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் திடீரெனத் தீக்குளித்தார். உடன் இருந்தவர்கள் அவரை உடனடியாக  மருத்துவமனையில் அனுமதித்தனர்.

No comments:

Post a Comment