03 December, 2011

இலங்கை நாடாளுமன்றத்தில் சென்னை நீதிமன்ற வாரண்ட்!

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்து வழங்கியவர் என்று கூறப்படும் குமரன் பத்மநாதன் என்ற கே.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த வாரண்ட் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கூட்டணியைச் சேர்ந்த ஜெயலந்த் ஜெயவர்த்தனே இந்த வாரண்ட் நகலை தாக்கல் செய்தார். கே.பி. இப்போது இலங்கை அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் சென்னை வந்தபோது, கே.பி. தொடர்பாக சென்னை நீதிமன்றம் இண்டர்போலுக்கு அளித்த வாரண்டின் நகலை தமிழக டிஜிபி என்னிடம் அளித்தார். அதனை நான் இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் அளித்தேன் என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

No comments:

Post a Comment