29 February, 2012

2030 ல் இந்தியா இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும்.


வருகிற 2030 ஆம் ஆண்டு இந்தியா,இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக உலகின் முன்னணி சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான பி.பி. நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் ரஹ்ல் கூறியதாவது:  வரும் 2030 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் இந்தியாவும், சீனாவும் 35 விழுக்காட்டை கொண்டிருக்கும் என்பதால் இவ்விரண்டு நாடுகளும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளாகவும்,அதிக நுகர்வோர்களை கொண்டதாகவும் இருக்கும்.  மேலும் 2030 ஆம் ஆண்டு இந்தியா இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும்.அதன் 47 விழுக்காடு எரிவாயு தேவை மற்றும் 97 விழுக்காடு எண்ணெய் தேவை ஆகியவை இறக்குமதி வழியே பூர்த்தி செய்யப்படும்.  40 விழுக்காடு நிலக்கரி தேவைப்பாடு இறக்குமதியையே சார்ந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment