09 March, 2012

காந்தி பிறந்த தேசத்துக்கு இல்லையே.மனிதாபிமானம்!

சென்னையில் சிறுவன் கொலையில் தேடப்பட்டு வரும் குற்ற்றவாளி டக்லஸ் 

தேவானந்தா,ஈழத்தில் நம் மக்களை கொலை செய்து சர்வதேச நாடுகளால் 

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜபக்க்ச்கேவுடன் விருந்தில் நம் 

நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கும்,சோனியா காந்தியும.இவர்கள் பழரசத்தை 

குடிப்பதாக நினைத்துவிடாதீர்கள்.அதில் நம் ஈழ மக்களின் 

இரத்தமும்,மீனவர்களின் இரத்தமும் இருக்கலாம்.  ஐநா மன்றத்தில் 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா 

ஆதரிக்கவில்லை.இந்தியா இலங்கையை ஆதரிக்க காரணம்.ஈழத்தில் நடந்த 

படுகொலைகளுக்கு இலங்கை முதல் குற்ற்றவாளியென்றால் இந்தியா 

இரண்டாவது குற்றவாளி.....!

ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் எல்லாம் காஸ்மீர்,பீகார்,சத்தீஸ்கர் 

மற்றும் தண்டகாரணிய பகுதியில் இந்திய அரசால் பசுமை வேட்டை என்ற 

பெயரில் மலைவாழ் மக்களை துன்புறுத்திக் கொண்டுள்ளது.இன்று இலங்கை 

குற்றவாளி கூண்டில் ஏறினாள் நாளை நாமும் ஏற வேண்டுமே என்ற பயம் 

இந்திய அரசுக்கு.அதனால் தான் இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது.

இனத்தாலும் மொழியாலும் வேறுபட்ட அமெரிக்காவுக்கு இருக்கும் 

மனிதாபிமானம் கூட காந்தி பிறந்த தேசத்துக்கு இல்லையே என்பது தான் 

வருத்தமாக இருக்கிறது .....!

No comments:

Post a Comment