09 March, 2012

இது பெண்கள் தின ஸ்பெசல் இங்கல்ல பஞ்சாபில் பெண்களுக்கு எம்.ஏ. வரை இலவச கல்வி!

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. வரும் 14-ம் தேதி நடக்க இருக்கும்  பதவியேற்பு விழாவில் பிரகாஷ் சிங் பாதல் 5-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். 85 வயதான பாதல் ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த முறை பாதல் ஆட்சிக்கு வந்தபோது பஞ்சாபில் பெண்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்பட்டது.  இம்முறை பதவியேற்பதற்கு முன்பே பஞ்சாபில் அனைத்து பெண்களுக்கும் எம்.ஏ. வரை இலவச கல்வி வழங்கப்படும் என பாதல் அறிவித்துள்ளார்.  மேலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கும் இனி இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும் பாதல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment