04 February, 2013

(கருப்பு)பணக்காரர்களை மீண்டும் அழைக்கும் சுவிஸ் வங்கி!

முறைகேடாக சேர்த்த சொத்துகளை, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச்   சேர்ந்த பணக்காரர்கள், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக,   குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை,   தங்கள் வங்கிகளில், டெபாசிட் செய்ய வருமாறு, உலகில் உள்ள   பணக்காரர்களுக்கு, சுவிஸ் வங்கிகள் அழைப்பு   விடுத்துள்ளன."வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், அவர்களது   நாட்டின், வருமான வரி துறையினர் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால்   கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு, பாதுகாப்பாக இருக்கும்' என,   சுவிஸ் வங்கிகள் உறுதியளித்துள்ளன.சுவிஸ் வங்கிகள், இது   தொடர்பாக, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.   சமீபத்தில், டாவோசில் நடைபெற்ற, உலக பொருளாதார கூட்டத்தில்   கலந்து கொண்ட, சுவிஸ் வங்கியாளர்களில் தகவலை   தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment