17 March, 2013

இந்தியன? தமிழனா? நீயே முடிவெடு!


ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையை இந்தியா வாழ்த்தி பேசியுள்ளது மனித உரிமை ஆர்வலர்களையும், உலக தமிழர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இலங்கை அரசு செய்த இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும், போர்க்குற்றம் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும், தனித் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் உலகளாவிய காலமுறை அறிக்கை (யு.பி.ஆர்) குறித்து இந்தியா இலங்கை அரசைப் பாராட்டியும், வாழ்த்தியும் பேசியுள்ளது. இந்தியாவின் இந்த செயல் உலகத் தமிழர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியன? தமிழனா? நீயே முடிவெடு என நமது அரசாங்கம் நமக்கு விடப்படும் சவால்தான் இந்த வாழ்த்து பேச்சு தமிழன் இளிச்சவாயன், தமிழனிடம் ஒற்றுமை இல்லை, தமிழன் கேனையன் என்ற எண்ணம் இன்னும் இந்த மத்திய அரசாங்கம் நினைக்குமேயானால் தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் காரனும் உயிரோடு இருக்க மாட்டான்.

No comments:

Post a Comment