14 November, 2013

இந்தியாவின் ரன் மெஷின்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது!மும்பை, வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுக்கவிருக்கிறார் சச்சின். இனி இந்தியக் கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் - சச்சினுக்குப் பின் என்றே குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment