எல்லாருமே திருடங்கதான்


அதிரடி நாயகன்' என அழைக்கப்படும் ஜாக்கிசான் சுங்கக் கட்டணம் மற்றும் இதர சாலை வரிகளை ஏய்க்கும் வகையில் ராணுவ நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரை பயன்படுத்தும் புகைப்படம் சீனர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. 'டுவிட்டர்' போன்ற சீனாவின் புகழ்பெற்ற சமூகவலைத் தளமான 'வெய்போ'-வில், ராணுவ நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரில் 2 இளம்பெண்களுடன் ஜாக்கிசான் ஏறுவதைப் போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ராணுவ வாகனங்களுக்கு சோதனைச் சாவடிகளில் சுங்கவரிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தி இருக்கலாம் என சிலர் வெய்போ-வில் கருத்து வெளியிட்டுள்ளனர். இன்னொரு விமர்சகரோ, மிக ஆழமாக யோசித்து, 'சீன வீரர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுத்தருவதற்ககாக ராணுவம் ஜாக்கிசானை புதிதாக பணியமர்த்தியுள்ளதோ..என்னவோ..?' என நையாண்டி செய்துள்ளார். 


இதையாவது விட்டு வையுங்களேன்!

மோதிஜி.. மோதி மோதி விளையாடுறீங்கோ... எங்க சமூகத்தைத்தான் ஒரு கை பார்த்தீங்கோ... இந்த சமூக வலைத் தளத்தையாவது விட்டுவைக்கக் கூடாதா? நானும் உங்களுக்குப் போட்டியா டிவிட்டரு, பேஸுபுக்குன்னு கையில செல்போனை வெச்சிக்கிட்டு பட்டனைத் தட்டைத்தட்டி... இதோ பாருங்க என்னோட விரலெல்லாம் தேஞ்சுபோச்சு... ஆனா... இப்பவும் உங்களுக்குதான் ஃபாலோயர்ஸ் அதிகமாம். எண்ணிக்கை டாப் கியர்ல ஏறிட்டே இருக்காம்... கொஞ்சம் இதுலயாச்சும் எங்களோட போட்டிக்கு வராம இருக்கக் கூடாதா...?

ரொம்ப கரெக்டுங்க!


விவசாய தொழில் செய்வோர் வேறு ஏதாவது மாற்றுத்தொழில் பார்த்துக்கொள்வது நல்லது என்று பிரதமர் போன்றவர்களே சொல்லிவரும் இந்த காலத்தில், விவசாயம் செய்பவர்களும் தெய்வத்திற்கு சமமானவர்களே என்று சொல்லியிருப்பது ரொம்பவும் சரியான வார்த்தை,ஆனால் இப்போது விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை இன்னும் கொஞ்ச காலத்தில் (ரியல் எஸ்டேட் புண்ணியத்தில்)விவசாயம் செய்ய இடமும் இல்லை என்றாகிவிடும்.

மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..? சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது.

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது. அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார் வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது . 

காற்று பவர் பக்கம் ஒன்னும் பண்ண முடியாது!

இந்தப் பாடலில் பவர் ஆடிய ஆட்டம்தான் செம கரகாட்டம். அடி பைப்பில் தண்ணீர் அடிப்பார்களே அதுபோல..கிதாரைக் கையில் பிடித்தபடி முன்னும் பின்னும் அவர் போய் வரும் அழகே தனியாக இருக்கிறது...