21 March, 2011

சாதிக்பாட்சா உடலை பரிசோதனை செய்த டாக்டர் ராஜினாமா


ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடையவரும், மாஜி அமைச்சர் ராஜாவின் நெருக்கமான நண்பருமான சாதிக்பாட்சா கடந்த கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த உடலை பரிசோதனை செய்தவர் டாக்டர் டெக்கால் . இவர் தனது அரசு டாக்டர் பணியை ராஜினாமா செய்துள்ளார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் ராஜினாமா செய்தது ஏன் என யூகங்கள் கிளம்பிய நேரத்தில் தேர்தல் போட்டி என்று கூறியிருக்கிறார். இவருக்கு சில கட்சிகள் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.ஆனால் டெக்காலுக்கு ரிலீவ் ஆர்டர் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment