10 July, 2011

இன்றுடன் விடைபெற்றது "நியூஸ் ஆப் தி வோர்ல்ட்"

பிரிட்டனில் புகழ்பெற்ற "நியூஸ் ஆப் தி வோர்ல்ட்" பத்திரிகை இன்றுடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவந்து கொண்டிருந்த இந்த பத்திரிகையின் கடைசி நாளான இன்று, முகப்புப் பக்கத்தில் "நன்றி, விடைபெறுகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.




பல்வேறு தரப்பினரின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டுக் கேட்டதாக அந்த பத்திரிகையில் பணியாற்றியவர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து, 168 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்த "நியூஸ் ஆப் தி வோர்ல்ட்" பத்திரிகையை மூடும் முடிவை அதன் உரிமையாளர் ஜேம்ஸ் முர்டோக் லண்டனில் வியாழக்கிழமை அறிவித்தார்.



இந்த பத்திரிகை, பிரிட்டனில் அதிகளவில் விற்பனையாகி வந்தது. கடைசி நாள் வெளியீட்டில் கிடைக்கும் விளம்பர வருவாயை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக ஜேம்ஸ் முர்டோக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment