06 December, 2011

ஜீரோ பர்சன்ட் பர்சேஸ் பிளான்...

நாதெள்ளா சம்பத்து செட்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம், இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து, "ஜீரோ பர்சன்ட் பர்சேஸ் பிளான்' என்ற தங்க சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, நாதெள்ளா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் பிரபன்ன குமார் கூறியதாவது: இந்திய அஞ்சலகத்தின் சென்னை தெற்கு வட்டத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள 106 அஞ்சலகங்களில், குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் சேமித்து வரலாம். 12 மாதங்களுக்கு பிறகு, சேமிப்பிற்கேற்ப தங்க நகைகளை, செய்கூலி, சேதாரம் மற்றும் மதிப்புக் கூட்டு வரியின்றி பெறலாம் என்பது, இத்திட்டத்தின் தனிச் சிறப்பாகும். சென்னையில் மேலும், பல அஞ்சலக கிளைகளில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். நிறுவனத்திற்கு சென்னையில் நான்கு கிளைகள் உள்ளன. வேலூர், ஓசூர் நகரங்களில், தலா ஒரு கிளை உள்ளது

No comments:

Post a Comment