|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2011

அணுமின் உலை எந்த நேரமும் வெடிக்கும் அபாயம்



கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, டாய் இச்சி அணுமின் நிலையத்தின் அனைத்து உலைகளும் தாமாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டன. ஒன்றாம் எண் உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்ததால், வெப்பம் அதிகரித்தது.அதனால், பீதிக்குள்ளான அதிகாரிகள், கடல் நீரை உட்புறம் செலுத்திக் குளிர்விக்க முயன்றனர். எனினும் அம்முயற்சி பலனளிக்காமல், நேற்று முன்தினம் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. உலையின் உட்புறத்தில், அணுக்கரு பிளப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் சீசியம் - 137 மற்றும் ஐயோடின் - 131 ஆகிய தனிமங்கள் கிடந்தது கண்டறியப்பட்டது.மேலும், அணுக் கழிவு கலந்த நீர் வெளியேறியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அணுக்கதிர் வீச்சு அபாயம் ஏற்படலாம் என்ற கருத்தில், அணுமின் நிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., வட்டாரத்தில் வசித்த 45 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.இச்சம்பவத்தில் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியானார். மேலும் மூன்று பேருக்கு கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அபாயத்தில் இன்னொரு உலை: இந்நிலையில், மூன்றாம் எண் உலையில், நேற்று அதிகாலை முதல், திடீரென குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து, உலைக்குள் வெப்பம் அதிகரித்து விடாமல் இருக்க போரிக் அமிலம் கலந்த கடல்நீர் உலைக்குள் செலுத்தப்பட்டது.பொதுவாக அணு உலை நிறுத்தம் தானியங்கி நடைமுறையாகும். ஆனால் அதிலிருந்து அணுக்கசிவு ஏற்படாதவரை அபாயமில்லை. அதே சமயம் அளவுக்கதிக வெப்பத்துடன் இருக்கும் அணு உலையை குளிரூட்டுவது சுலபமானதல்ல. உலைக்குள் வெப்பம் அதிகரிக்கும். அதனால் அழுத்தமும் அதிகரிக்கும். உலையின் வெளிப்புற கொள்கலச் சுவர் இந்த அதிக அழுத்தத்தால், வெடித்து விடும். இதுதான் ஒன்றாம் எண் அணு உலை வெடிப்பில் நிகழ்ந்தது.இதைத் தடுப்பதற்காக, உலைக்குள் அதிகரித்து வரும் அழுத்தத்தை வால்வுகளை திறந்து வெளியேற்ற அதிகாரிகள் முயன்றனர். அதை வெளியேற்றுவதிலும் அளவு இருக்கிறது. இல்லை எனில் அதிக அளவு அணுக்கதிர் நச்சு பரவி பலரையும் பாதிக்கும். அம்முயற்சி வெற்றி பெற்றதா என்பது பற்றிய தகவல்கள் வரவில்லை.இந்த அணுமின் உலைகளை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம்(டெப்கோ), வெளியிட்ட அறிக்கையில், "நிலையத்தைச் சுற்றிப் பரவியுள்ள கதிர்வீச்சு அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து க்யோடோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இது ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி நிர்ணயித்துள்ள சட்டப்பூர்வ அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், மூன்றாம் எண் உலையில் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரித்து எந்நேரம் வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 160 பேர் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு லட்சம் பேர் வெளியேற்றம்:இதைத் தொடர்ந்து, டாய் இச்சி அணுமின் நிலையத்தை ஒட்டி 20 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் அனைவரும் அவசர கதியில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, கதிர்வீச்சினால் தைராய்டு புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சுற்றுவட்டார மக்களுக்கு ஐயோடின் சத்துப் பொருட்கள் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.நிலவரத்தை ஆராய்ந்து வரும், அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் கடந்த 1986ல் நடந்த செர்னோபிள் அணுமின் உலை விபத்து பாதிப்பைப் போல ஜப்பானிலும் ஏற்படக் கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

tsunami waves smashing town in Japan


Citizen observers needed, says Naresh Gupta



நேர்மையானவர்கள் பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார்.

கடலூர் மாவட்ட யூத் எக்ஸ்னோரா கிளப் சார்பில், "தூய்மை மற்றும் நேர்மையான தேர்தல் 2011' என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம், பண்ருட்டியில் நேற்று நடந்தது.

விழாவில், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசியதாவது: இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நேர்மையானவர்கள், பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். மக்கள் சேவை செய்வதற்காகத் தான் அதிகாரிகள் உள்ளனர். அரசு பணியில் லஞ்சம் பெற்றால் தான் பணிகள் நடைபெறும் என்னும் நிலை உள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானிகள், தொலைத்தொடர்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை. ஆனால், தற்போது அனைத்து வசதிகளும் பெற்றாலும் ஊழல் பாதையில் செல்வது தவறு. இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு நரேஷ் குப்தா பேசினார்.

இதே நாள் 14 மார்ச் 2011



  •  எஸ்தோனியா தாய்மொழி தினம்
  •  லினக்ஸ் கெர்னல் 1.0.0 வெளியிடப்பட்டது(1994)
  •  இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
  •  ஜெர்மன் மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் இறந்த தினம்(1883)
  •  அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் இறந்த தினம்(1932)

அமெரிக்க வெளியுறவு செய்திதொடர்பாளர் கிரவ்லி ராஜினாமா

அமெரிக்க த‌லைமை வெளியுறவு செய்தி தொ‌டர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் கிரவ்லி.விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகள் மோசமாகவும் மிகுந்த கேலிக்குரியதாகவும் தன்னைப்பற்றியும் குறிப்பிட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இது குறி்த்து அவர் குறிப்பிடுகையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்று தான் ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா கடிதத்தை ‌அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியிடம் கொடுத்துவிட்டதாகவும் கடிதத்தை அவர் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Surya Jyothika New Ad


மாப்பிள்ளை பாடல்


லிபியாவில் அல் ஜசீரா டி வி., நிருபர் சுட்டுக் கொலை

லிபியாவின் செய்திகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதில் முதன்மை நிறுவனமாக இருந்து வரும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். கடாபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வரும் லிபியாவில் ஒரு பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்த சம்பவத்தினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்றும் இந்த டி.வி., நிறுவன இயக்குனர் ஜெனரலர் வாடா கான்பார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடாபிக்கு எதிராக எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடாபி நாட்டை விட்டு தப்பி ஓடி விடுவார் என்ற செய்தி மட்டும் பரவி வருகிறதேயொழிய அவர் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவும், காப்பாற்றவும் தொடர்ந்து உழைப்பேன் என்றார். மக்கள் என்மீது பாசமுள்ளவர்கள் அவர்களை போதைக்கு அடிமைப்படுத்தி தமக்கு எதிராக திசை மாற்றப்பட்டுள்ளனர் என்றார் கடாபி.

இதற்கிடையில் இங்கு நடக்கும் போராட்டம், கடாபியின் படை பல தாக்குதல்களை முழு அளவில் கவரேஜ் செய்து வருகிறது அல் ஜசீரா டி.வி., நிறுவனம். மற்றும் உள்ளூரில் உள்ள அல்ஜசீரா அராபிக் சேனலையும் இப்பகுதி மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். இந்த நிறுவன லிபியாவின் காமிராமேன் அலிஹசன் அல் ஜாபர் செய்திகளை வழங்கி விட்டு திரும்பும் போது சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தை செய்தியாக வழங்கி விட்டு லிபியாவின் கிழக்கு பகுதியான பெங்காஷிக்கு காரில் திரும்பி கொண்டிருக்கும் நேரத்தில் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டனர். இதில் 3 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்து உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த கொலைக்கு அல்ஜசீரா நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது போன்ற கோழைத்தனமான மிரட்டலுக்கு அஞ்சாமல் எங்கள் பணி தொடர்ந்து நடக்கும் என்றும் குற்றவாளிகள் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கொலையில் கடாபியின் தலையீடு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது

இதே நாள் 13 மார்ச் 2011

  • நெல்லையில் திருநெல்வேலி எழுச்சி ஏற்பட்டது(1908)
  •  வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்(1781)
  •  ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)
  •  இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)
  •  ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜான் ஹாவர்ட் என்பவரின் பெயர் சூடப்பட்டது(1639)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...