|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 September, 2011

கே பாலச்சந்தர், விக்ரம், இயக்குநர் விஜய்க்கு ரிட்ஸ் விருது!


ரிட்ஸ் இதழின் சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்களுக்கு 'ஐகான் 2011' விருது வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து வெளிவரும் ரிட்ஸ் ஆங்கிலப் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான திரைத்துறை சாதனையாளர்களில், சிறந்த இயக்குநருக்கான விருது மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் படங்களின் இயக்குநர் ஏஎல் விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை ரிட்ஸ் சார்பில் டேவிட் தெய்வ சகாயம் வழங்கினார்.

விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய் பேசுகையில், "மதராசப் பட்டினம் படத்துக்காக தேசிய விருது கிடைக்கவில்லையே என்று பலரும் என்னிடம் வருத்தப்பட்டனர். எனக்கு அந்த வருத்தமில்லை. இயக்குநர் பாலச்சந்தர் வாயால் சிறந்த படம் என்ற பாராட்டை அந்தப் படம் பெற்றுவிட்டது. அவர் இருக்கும் இந்த மேடையில் நான் கவுரவிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த இன்னுமொரு சிறப்பு," என்றார்.

அடுத்து நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருதினை இயக்குநர் அமீர் வழங்கினார். 'எவர்கீன் ஐகான்' விருது இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து பின்னர் இயக்குநர்களான வசந்த், சரண், தாமிரா, நடிகை சுஹாசினி ஆகியோர் இந்த விருதினை அவருக்கு வழங்கினர். விழாவுக்கு வந்த விருந்தினர்களை மக்கள் தொடர்பாளர் நிகில் வரவேற்றார்.

ஆபாசமாக ஆடை அணிந்துவந்துவிட்டு போட்டோகிராபர்கள் மீது நடிகைகள் ஆவேசப்படுவது நியாயமா?


திரைப்பட விழாக்களுக்கு நடிகைகள் ஆபாசமாக உடை அணிந்து வருவது வழக்கம்.  சம்பந்தப்பட்ட படத்திற்கும், சம்பந்தப்பட்ட நடிகைக்கும் இது பப்ளிசிட்டியாக அமையும் என்பதும் வழக்கம்.   ஊடகங்கள் இதை படம் பிடித்து வெளியிடுவதும் வழக்கம்.இந்நிலையில் சில நடிகைகள்,  ’’பத்திரிகை போட்டோகிராபர்கள் நடிகைகளை ஆபாசமாக படம் எடுக்கிறார்கள்.   விழாக்களுக்கு வரும் எங்களின் ஆடைகள் மீதே கவனம் செலுத்துகிறார்கள்’’ என்று புகார் கூறிவருகிறார்கள்.


ஆனால் எல்லாம் தெரியும்படி அரைகுறை ஆடையில் வந்து மேடையின் மீது அமரும்போது விழாவுக்கு வந்திருப்போரின் பார்வையெல்லாம் அங்கேதான் இருக்கும்.  இதை உணர்ந்ததும், கைகளால் மூடிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள் நடிகைகள். எதற்கு இப்படி எல்லாம் தெரியும்படி ஆடை அணிந்துவரவேண்டும்? எல்லோரின் பார்வைபட்டதும் மூடிக்கொண்டு நெளியவேண்டும்? அட இது போகட்டும், எதற்கு போட்டோகிராபர்கள் மீது குறை கூறவேண்டும்.?  இங்கே படத்தில் கைகளால் மூடியபடி நெளிந்துகொண்டே இருக்கும் நடிகை தீக்‌ஷா ஷேத்   .  இது விக்ரமின் ராஜபாட்டை கலைஞர்களின்ன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

போதை விருந்து ! கல்லூரி மாணவ- மாணவிகள் கைது!!



சென்னையில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத் தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் 72 பேர் வேலூரில் சுற்றுலாத்தலமான ஏலகிரியில் தங்கும் விடுதியில் மது, விருந்து நடத்தியுள்ளனர்.இதில் இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை, பெங்களூரில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் என 80 பேர் கலந்துகொண்ட மது விருந்தில் கஞ்சா, அபின் போன்றவையும், பயன்படுத் தியதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து வேலூர் எஸ்.பி. பாபு தலைமையில் 100க்கணக்கான போலீசார் ஏலகிரியில் உள்ள தனியார் கெஸ்ட் அவுஸ், விடுதிகள், ஓட்டல்களில் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.அப்போது ஆரோவில் என்ற கெஸ்ட் அவுஸில் இந்த விருந்து நடப்பது தெரியவந்தது.  74 பேரை போலீசார்  கைது செய்தனர்.   இதில் 6 பேரை தவிர மற்ற அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?

நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு சட்ட படிப்பு!


நமது படைப்புகள், கண்டுபிடிப்புகளின் பயனை மற்றொருவர் அறுவடை செய்யாமல், அதற்கான உரிமையை உரியவர் பெற்றிருப்பதே அறிவுசார் சொத்துரிமை எனப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புக்கு சட்டம் வழி வகை செய்வதால், இதுதொடர்பான படிப்பும் சட்டத்தில் ஒன்றாகவே இருக்கிறது. ஆயினும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் தனியாக இப்படிப்பை வழங்குகின்றன. கவிதை, கதை, கட்டுரை போன்ற இலக்கியங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வேளாண்மை மற்றும் தொழில்சார் கண்டுபிடிப்புகள், திரைப்படம், புகைப்படங்கள்,   உள்ளிட்டவை அறிவுசார் சொத்துரிமைக்கு எடுத்துக்காட்டுகள். எல்லா படைப்புகளையும் அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பாதுகாக்க முடியும். நிறுவனத்தின் பெயர், எழுத்தின் வடிவமைப்பு, லோகோ, பாடல், ஒலி போன்றவை ஒரு நிறுவனத்தின் வர்த்தகக் குறியீடாக இருக்கலாம். இவற்றை வேறு நபர்கள் அனுமதியின்றியும், முறைகேடாகவும் பயன்படுத்துவதைத் தவிர்க்க காப்புரிமை செய்து கொள்ளலாம். காப்புரிமை என்பது, தனிமனிதர் அல்லது நிறுவனத்துக்கு படைப்பு அல்லது கண்டுபிடிப்புக்கு அரசு வழங்கும் உரிமம் ஆகும்.

பதிப்புரிமை என்பது புத்தகம், இலக்கியம், படைப்புகள் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு அரசு வழங்கும் உரிமம் ஆகும். வண்ணம், வடிவம், அளவு, எழுத்தமைப்பு உள்ளிட்டவற்றைக் கூட பதிவு செய்து கொள்ள முடியும்.இதுதொடர்பான வேலைவாய்ப்புகளை மென்பொருள் நிறுவனங்கள், சட்டக்குழுக்கள், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெறமுடியும். இத்துறை சார்ந்து இன்டெலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் முதுகலை டிப்ளமோ, பேடண்ட் பேசிக்ஸ் அன்ட் இன்ட்ரொடக்ணன் - ஐபிஆர், பேடண்ட் லிடிகேஷன், சைபர் லா அன்ட் இன்டலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ், இன்டலெக்சுவல் பிராப்பர்டி லா, ஐபிஆர் சான்றிதழ் படிப்பு போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இப்படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள்: பாலாஜி லா காலேஜ், புனே
பயோ இன்பர்மேடிக்ஸ் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் இந்தியா, நொய்டா
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், டெல்லி, 
எம்.எஸ். ராமைய்யா சட்டக் கல்லூரி, பெங்களூரூ
சிம்போசிஸ் சொசைட்டிஸ் சட்டக் கல்லூரி, புனே 

டைம்ஸ் இதழின் டாப்-25 படங்களில் லகான் படமும்!


அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் இதழில், உலகின் டாப்-25 விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில், இந்தியாவின் "லகான்" படமும் இடம்பிடித்திருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு அமீர்கானின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளிவந்த "லகான்" படத்தை, அசுதோஷ் குவாரிகர் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த வெளிநாட்டு பட வரிசையில், இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் நாளிதழ், விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த டாப்-25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து அமீர்கான் நடித்த லகான் படமும் இடம்பெற்றுள்ளது. லகான் படத்திற்கு 14வது இடத்தை வழங்கியிருக்கும் டைம்ஸ் நாளிதழ், படத்தின் இயக்குநர் அசுதோஷ் குவாரிகர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளது. 

இந்தபட்டியலில் 1998ம் ஆண்டு வெளிவந்த தி பிக் லெபோவ்ஸ்கி முதலிடத்தையும், பாடி அன்ட் சோல்(1947), ப்ரேகிங் அவே(1979), புல் தர்ஹாம்(1988), கேடிசேக்(1980) போன்ற படங்கள் அடுத்தடுத்த படங்களை பிடித்துள்ளன.

லேடி காக புதிய ஆல்பம்!


உருவியதால் ஒதுக்கப்பட்ட தமிழ்படங்கள்...!




2011-ம் ஆண்டிற்கான பிராந்திய மொழி படங்களுக்குரிய ஆஸ்கார் விருது செலக்ஷ்னுக்கு, 16 இந்‌திய மொழிபடங்களை செலக்ஷ்ன் செய்து, திரையிட்டு பார்த்தது ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா. அதில் ஆறு இந்தி படங்களும், ஐந்து தமிழ் படங்களும், இரண்டு மலையாள படங்களும், ஒரு தெலுங்கு, ஒரு மராத்தி, ஒரு பெங்காலி படமும் அடக்கம். இதில் முதல் இரண்டு இடங்களை மலையாள படங்கள் இரண்டும் பிடித்தன. அ‌தாமின்டே மகன் அபு, உருமி இந்த இரண்டு படங்களில் ஆதாமின்டே மகன் அபு படம்தான் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாகும்.செலக்ஷ்னுக்கு சென்ற எந்திரன், கோ, தெய்வத்திருமகள், முரண், ஆடுகளம் உள்ளிட்ட ஐந்து தமிழ் படங்களிலும், ஹாலிவுட் படங்களில் இருந்து நிறைய சீன்களும், அதில் சில படங்களின் கதைகளமும் உருவப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்ததால், அந்த 5 படங்களும் பேக்-டூ-தி ‌பெவிலியன் ஆகிவிட்டதாம். இப்படி சொன்னார்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கான, ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா குழுவில் இருந்த எல்.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள்.

இந்த விஷயம், தமிழ் சினிமாவை தங்களது சட்டை பாக்கெட்டுக்குள் ‌வைத்திருப்பதாக பேசிவரும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கு தெரியுமா...!

கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க பல நாடுகள் முன்வந்துள்ளன!


வருமான வரி ஏய்ப்பு செய்து, சட்டத்திற்கு புறம்பாக கோடிக்கணக்கான ரூபாய்களை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இவர்களை பற்றிய தகவல்களை வெளியிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் முடக்கியுள்ளவர்கள் பற்றி தகவல்கள் பெற அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது. வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

மொரீஷியஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் போன்ற சில நாடுகள், வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக பல சலுகைகளை வழங்கின. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பலர், சட்டத்திற்கு புறம்பாக தாங்கள் ஈட்டிய வருவாயை அந்த நாடுகளில் முதலீடு செய்தனர். இந்த வகையில், கோடிக்கணக்கான கறுப்புப் பணம இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் பற்றிய விவரங்களை அளிப்பது அந்நாடுகளிலிருந்து பெறுவதற்காக, பல்வேறு நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள் தகவல்களையும், அவர்களின் வங்கிக் கணக்குகளை அளிக்க வேண்டும் என இந்தியா உரிய சட்ட நடைமுறைகளின்படி கோரியது.தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உட்பட சில நாடுகள், இந்தியா கோரும் தகவல்களை அளிக்க முன்வந்துள்ளன. இதற்காக இந்த நாடுகள், வரி தொடர்பான சட்டங்களை திருத்த முன்வந்துள்ளன.

இந்தியா போன்ற சில நாடுகள் கேட்கும் வரி தொடர்பான தகவல்கள், வங்கி தகவல்களை பரிமாறிக்கொள்ள முன்வந்துள்ளன. வரி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வெளிப்படையான உலக அமைப்பு உள்ளது. இதில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இது பாரிஸ் நகரிலுள்ள,"பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி' அமைப்பின் கீழ் வருகிறது.இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள், கேட்கும் வரிதொடர்பான தகவல்கள் மற்றும் வங்கி தகவல்களை அளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். இதற்காக, தங்கள் நாட்டில் வரிதொடர்பான சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய பல நாடுகள் முன்வந்துள்ளன.

மத்திய நேரடி வரிகளுக்கான வாரியத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வரி பிரிவு, வரி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும், இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை செய்துள்ளன.இதன் அடிப்படையில் பெல்ஜியம், ஆஸ்திரியா போன்ற நாடுகள் தகவல்களை அளிக்க முன்வந்துள்ளன.


80 ஆயிரம் கோடி செலவிட்டும் பலனில்லை: வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு !


நம்நாடு சுதந்திரம் அடைந்த போது வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை, 32 கோடியாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது,'' என தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் என்.சி.சக்சேனா தெரிவித்துள்ளார்.

நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் என, பொருளாதார நிபுணர் அர்ஜுன் சென்குப்தாவும், 50 சதவீதம் பேர் என, என்.சி.சக்சேனாவும், 37.5 சதவீதம் என, பொருளாதார வல்லுனர் சுரேஷ் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளனர்."நகர் புறங்களில் மாதம் 965 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்கள் மற்றும் கிராம புறங்களில் மாதம் 781 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக கருதக்கூடாது. அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்' என, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தெரிவித்திருந்தது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சிலில் உறுப்பினராகவும், திட்டக்கமிஷனர் செயலராகவும் உள்ள என்.சி.சக்சேனா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சக்சேனா கூறியதாவது: ஒரு மாதத்துக்கு 965 ரூபாய் வருவாய் என்றால், ஒரு நாளைய வருவாய் 32 ரூபாய் என்ற கணக்கு வருகிறது. இந்த 32 ரூபாயை வைத்து ஒரு குடும்பம் நடத்த முடியுமா? இந்த வருவாய் உள்ளவர்களை ஏழையாக கருதக்கூடாது என, சுப்ரீம் கோர்ட்டிடம் திட்டக்கமிஷன் கேட்கிறது. இந்த பிரச்னை திட்டக்கமிஷன் கூட்டத்தில் புயலை கிளப்பியது.நம்நாடு சுதந்திரமடைந்த போது 32 கோடி பேர், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை, 40 கோடியாக உயர்ந்துள்ளது. 72-73ம் ஆண்டு காலத்தில், ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாக கருதப்பட்டனர். தற்போது, ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழை எனப்படுகின்றனர். ஏன் ஏழைகள் அதிகரித்துள்ளனர் என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, ரேஷன் அட்டை கொடுக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டையை வைத்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள். இதில், பரிதாபம் என்னவென்றால் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 20 சதவீதம் பேருக்கு இந்த ரேஷன் அட்டையே கிடையாது. பொது பங்கீட்டு முறையில் நிறைய குளறுபடிகள் உள்ளன.

வறுமையில் உள்ளவர்கள் குறித்து கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமான பழங்குடியினரும், ஏழைகளும் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.நம்மைவிட பின்தங்கிய நிலையில் உள்ள வியட்நாம், மியான்மர், பூடான் நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால், நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஏழைகளின் மேம்பாட்டுக்கு ஆண்டு தோறும், 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பலனில்லை.வறுமையில் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பின் போது மக்கள் தவறான தகவல்களை தெரிவிப்பதால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்த சரியான விவரம் கிடைப்பதில்லை. எனவே, புதிய அணுகுமுறையை பின்பற்றும்படி கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் தெரிவித்துள்ளேன். ஏழைகள் குறித்த சரியான கணக்கெடுப்பின் மூலம் தான் நலத் திட்ட உதவிகள் உரியமுறையில் சென்றடைய முடியும்.இவ்வாறு சக்சேனா கூறினார்.

திருச்சியை சேர்ந்த 8 பேர் எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள் பரிதாப பலி!


நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், திருச்சியைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட 19 பேர் பலியாகினர். எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள், எதிர்பாராதவிதமாக துயர முடிவை சந்தித்தனர்.

நேபாளத்தின் புத்தா ஏர்லைன்ஸ் விமானம், விமான ஊழியர்கள் மூன்று பேர் உள்ளிட்ட 19 பேருடன், தலைநகர் காத்மாண்டு அருகே நேற்று அதிகாலை பறந்த போது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காத்மாண்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், லலித்பூர் மாவட்டத்தில் கோட்தண்டா மலையில், இந்த விமானம் மோதி விபத்துக்குள்ளானது; சுக்குநூறாக சிதறியது.இந்த விபத்தில் இந்தியர்கள் 10 பேர் உட்பட வெளிநாட்டவர்கள் 13 பேரும், மூன்று நேபாள பயணிகளும், மூன்று விமான ஊழியர்களும் பலியாகினர். பலியான இந்தியர்கள் 10 பேரில், எட்டு பேர் திருச்சியை சேர்ந்தவர்கள். இவர்கள், இந்திய பில்டர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள். டில்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் நேபாளம் சென்றுள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தை பார்க்க விமானத்தில் சென்ற போது இந்த துயர விபத்து நடந்துள்ளது. பலியான மற்றவர்களில் இரண்டு பேர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜப்பானியர்.பலியான இந்தியர்களில் பங்கஜ்மேத்தாவும், அவரது மனைவி சாயாவும் அடங்குவர். பங்கஜ்மேத்தா, "யுனிசெப்' அமைப்பின் சுகாதார பிரிவின் தலைவராக இருந்தார். இந்த தம்பதியர் குஜராத்திலிருந்து நேபாளம் வந்துள்ளனர். காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, காத்மாண்டில் உள்ள டி.யூ.மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

எட்டு பேர் தமிழர்கள்: திருச்சியை சேர்ந்த மருதாசலம், மணிமாறன், கனகசபேசன், கிருஷ்ணன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், தனசேகரன், மகாலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். நேபாள துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான விஜயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். நேபாள விமானத்துறை ஆணைய டைரக்டர் ஜெனரல் ஜாஜேஷ்ராஜ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த விமான விபத்தில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் முதலில் உயிர் பிழைத்தாலும், பலத்த காயம் அடைந்திருந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். எவரெஸ்ட் சிகரத்தின் அழகையும், மற்ற சில சிகரங்களின் அழகையும் விமானத்தில் சென்று ரசித்தவர்கள், இந்த துயர முடிவைச் சந்தித்தனர். விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன், இந்த விபத்து நடந்துள்ளது.

முதல்வர் இரங்கல்: நேபாள விமான விபத்தில் தமிழர்கள் பலியானதற்கு, முதல்வர் ஜெயலலிதா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:நேபாளத்தில், 19 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் சுற்றுலாவை முடித்து விட்டு, காத்மாண்டு விமான நிலையத்தை நோக்கி திரும்பும் வழியில், மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த 19 சுற்றுலா பயணிகளும் பலியான செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.இந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இமயமலையில், எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிப் பார்க்க, தனியார் விமானத்தில் சுற்றுலா சென்ற, 19 பயணிகள், நேற்று காலையில் விமானம் மலையில் மோதி நொறுங்கிய காரணத்தால், பலியான செய்தியினைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.பலியானவர்களில், பத்துப் பேர் இந்தியர்கள் என்பதும், குறிப்பாக திருச்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் என்பதும், என் வேதனையை அதிகப்படுத்தியதோடு, தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை ரகுபதி, திருச்சி செல்வராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலரும், இந்த விபத்தில் சிக்கி மாண்டார்கள் என்பது, பெரிதும் வேதனையை அளிக்கின்ற செய்தி.பலியான அனைவரது குடும்பத்தினருக்கும், என் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு உதவி முதல்வர் ஜெ., உத்தரவு : நேபாள விமான விபத்தில் உயிரிழந்த, திருச்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கால்நடைத் துறை அமைச்சர் சிவபதியை, முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:நேபாளத்தில், 19 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில், திருச்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் உட்பட, விமானத்தில் பயணித்த அனைவரும் மரணமடைந்தனர். இவர்களின் மரணம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கால்நடைத் துறை அமைச்சர் சிவபதியை அனுப்பி வைத்துள்ளார்.மேலும், இந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, திருச்சிக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை, நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லுமாறும், தேவையான உதவிகளைச் செய்யுமாறும், திருச்சி எம்.பி., குமாருக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


நேபாளத்தில் விமான விபத்துகள் : நேபாளத்தில் 1949ல் முதல் முறையாக விமானம் தரையிறங்கியது. இதற்கு பின், இங்கு நடந்த 70 விமான விபத்துகளில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டனர். இங்கு நடந்த பெரிய விமான விபத்துகள்...
2011, செப். 25: லலித்பூர் அருகே "புத்தா' விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி.2010, டிச. 16: கிழக்கு நேபாளத்தில்"தாரா'விமான விபத்தில் 22 பேர் பலி.2010, அக். 8: லுக்ளா மாவட்டத்தில் "அக்னி' விமானத்தில் 14 பேர் பலி. 2008, மார்ச் 3: மாவோயிஸ்ட் ராணுவ முகாமிற்கு சென்று விட்டு, திரும்பும் வழியில் ஐ.நா., ஹெலிகாப்டர் கிழக்கு நேபாள பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி.2006, செப். 24: கிழக்கு நேபாளத்தில் "ஸ்ரீ ஏர்' விமான விபத்தில் 24 பேர் மரணம்.2006, ஜூலை, 27: டேடல்ஹுரா அருகே நடந்த ராயல் நேபாளம் ஏர்லைன்ஸ் விபத்தில் 25 பேர் பலி.1992, செப். 28: லலித்பூர் அருகே உள்ள பட்டேடண்டாவில் பி.ஐ.ஏ., ஏர்பஸ் ஏ-300 விமானம் நொறுங்கி விழுந்ததில் 167 பேர் பலி.1992, ஜூலை 31: கியாங்பேடி அருகே "தாய் ஏர்வேஸ்' ஏர்பஸ் ஏ-310 விமான விபத்தில் 113 பேர் பலி.

கவனமாய் கற்றால் "கவனக' கலையும் எளிது!


கடைசியாக நீங்கள் ஏறிய பஸ்சின் எண் என்ன? நேற்று அணிந்திருந்த சட்டையின் நிறம் என்ன? எப்போது சூரியனை கடைசியாகப் பார்த்தீர்கள்? கடந்த ஆண்டு எந்த நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடினீர்கள்? இந்த கேள்விகளுக்கு, நம்மால் ஞாபகத்தோடு பதில் சொல்ல முடியும். ஆனால், ஒரே சமயத்தில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு, உடனடியாக பதில் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த கலைக்கு, "கவனகம்' என்று பெயர். தமிழர்களின் மரபு சார்ந்த இந்தக் கலை, கவனகர்கள் குறைந்து வருவதால் அழிந்து வருகிறது.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் கலைச் செழியன், அழிந்து வரும் இந்தக் கலையை மீட்டெடுத்து, பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார்.பலரின் கேள்விகளுக்கு, உடனடியாகப் பதில் சொல்வதற்கு வடமொழியில், "அவதானம்' என்று பெயர். எட்டு கேள்விகளுக்கு பதில் சொன்னால், அஷ்ட அவதானம், பத்துக்கு தசாவதானம், நூறுக்கு சதாவதானம். இந்த, "அவதான'த்தை தனித்தமிழில், "கவனகம்' என்று பெயர் மாற்றி, புழக்கத்திற்கு கொண்டு வந்தவர் ராமையா பிள்ளை.

தற்போது, தமிழகத்தில் அருகி வரும் இந்தக் கலையை, சென்னை வாலிபர் கலைச் செழியன் சிறப்பாகப் பொது மக்களிடையே கொண்டு சென்றிருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும் போது, தந்தையோடு தமிழ்ச் சான்றோர் பேரவை விழாவிற்குச் சென்றிருந்த கலைச் செழியன், அங்கு நடந்த கவனக நிகழ்ச்சியைப் பார்த்து, தானும் அது போல நிகழ்ச்சியைச் செய்து காட்ட வேண்டும் என்று நினைத்து, அன்றிரவே வீட்டில் உள்ளவர்களை கேள்வி கேட்க வைத்து, பதில் சொல்லி இருக்கிறார். அன்று ஆரம்பித்த ஆர்வம் இன்று, "எழுபதில் கவனகம்' வரை கொண்டு சென்றிருக்கிறது.


தனித் தமிழில் கவனகம்:ஆந்திரா, கர்நாடகா, டில்லி, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில், கவனக நிகழ்ச்சி நடத்தியிருக்கும் கலைச் செழியன், தனித் தமிழில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
கவனகத்தை வெறும் அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மொழியுணர்வு ஊட்டக் கூடிய அவையாக மாற்ற வேண்டும் என்பது, கலைச் செழியனின் எண்ணம்.அதனால், தமிழகத்தில் தனித் தமிழில் நிகழ்ச்சியை நடத்தி வருகிற இவர், மொழி புரியாத வெளிநாடுகளில், ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நடத்துவதை, வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.


படைப்பாற்றல் அவசியம் :""கவனகக்கலையை நடத்துவதற்கு, நினைவாற்றல் மட்டும் போதாது; படைப்பாற்றலும் வேண்டும். அவையோர் திடீரென வெண்பா, கட்டளை களித்துறை என, பல்வேறு இலக்கணங்களில் பாடல் வடிக்கச் சொல்வார்கள். நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.இதற்கு, வெறும் நினைவாற்றல் மட்டும் இருந்தால் போதாது.கூடவே படைப்பாற்றலும் இருக்க வேண்டும். அப்போது தான், கவனகத்தில் நிலைத்து நிற்க முடியும். கவனமாய் கற்றால் கவனகக் கலையும் எளிதுதான்'' என்பது கலைச் செழியனின் அனுபவ மொழி.

நினைவாற்றலில் மனப்புரட்சி:பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் போது, இவர் எழுதிய "நினைவாற்றலில் மனப்புரட்சி' என்ற நூலுக்கு, தமிழக அரசின், "குறள் பீடம்' விருது கிடைத்திருக்கிறது.தனக்குப் பின்னால் கவனகக்கலை நிகழ்த்துவோரின் எண்ணிக்கை, அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கலைச் செழியன். அதனால், தமிழகம் முழுக்க உள்ள பள்ளிக்குச் சென்று, கவனகக் கலையை பரப்பி வருகிறார்."" பள்ளிகளில் கவனகத்தைப் பாடமாக வைத்தால், பிற்காலத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அது பாடம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல், பொது வாழ்க்கைக்கு பயன்படும் வகையிலும் அமையும்'' என்றார்.

தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், கவனகக் கலையை நிகழ்த்தியிருக்கும், கலைச் செழியன், தற்போது பெண் காவலர்களுக்கு, கவனகப் பயிற்சி கொடுத்து வருகிறார்.

எல்லா விஷயமும் சிதம்பரத்திற்கு தெரியும்” ராஜா வக்கீல்!


2 ஜி -ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தெரியும் முதலில் அவரை கூப்பிட்டு ஒரு சாட்சியாககூட விசாரியுங்கள் என்றும், இதற்கு பின்னர் பிரதமரை அழைப்பதா வேண்டாமா என்று கோர்ட் முடிவு செய்யட்டும் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் சிறையில் இருக்கும் ராஜாவின் வக்கீல் வாதாடினார்.

நீதிபதி ஓ.பி.,சைனி முன்பு இன்று விசாரணை நடந்த போது ராஜாவின் வக்கீல் சுஷீல்குமார் வாதிடுகையில் : இந்த ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பான விஷயங்கள் மற்றும் உண்மை நிலை அனைத்தும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு தெரியும். அதே நேரத்தில் அவரை நான் ஒரு குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. ராஜாவுக்கும், சிதம்பரத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வித கருத்து வேறுபாடும் எழவில்லை. 2003 ல் அமைச்சரவை எடுத்தது தொடர்ந்து வந்த அமைச்சரவை யும் இந்த முடிவையே பின்பற்றியது. ராஜாவும் இதனை பின்பற்றினார் . இதன்படி பார்த்தால் அமைச்சரவையில் உள்ள அனைவரும் விசாரணையை சந்திக்க வேண்டும். ஆனால் எனது கட்சிக்காரர் மட்டும் ஜெயிலில் அடைக்கப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். 
செக்க்ஷன் 311 படி சிதம்பரத்தை ஒரு சாட்சியாக கூப்பிட்டு விசாரியுங்கள் . அவர் பிரதமர் முன்னிலையில் அறிவுரை வழங்கினார்களா இல்லையா என்பதை அவரே கோர்ட்டில் தெரிவிக்கட்டும். இதன் பின்னர் பிரதமரை அழைக்க வேண்டுமா இல்லையா என்பதை கோர்ட்டே முடிவு செய்யட்டும் என்றார்.

இதற்கிடையில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என சு.சாமி கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு வரும் அக்., 12 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்கிறது சி.பி.ஐ., : ராஜா மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் 2 பேர் மீது நம்பிக்கை மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதிக்குமாறு சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் யு.யு.,லலித் தாக்கல் செய்த மனுவில் பொது வாழ்வில் அரசு ஊழியராக இருந்து கிரிமினல் குற்றம் புரிந்திருப்பது நம்பிக்கை மோசடியாகும் (செக்க்ஷன் 409 )மற்றும் 120 , இந்த குற்றத்தின்படி குற்றவாளிகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை வரை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த குற்றம் ராஜாவுடன் சிறையில் இருக்கும் கனிமொழி உள்பட 17 பேருக்கும் ‌பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...