|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 August, 2013

கசப்பான உண்மைகள்!!


1.அத்தியாவசிய தேவையான அரிசியின் 

விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் 

சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!  


2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசி

யின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் 

பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று 

ரூபாய்..!! 


 3.வங்கிகளில் வாகனக் 

கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் 

கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!  


4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், 

பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி 

நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு 

வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

  
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான 

பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய 

செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் 

பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு 

நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய 

செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!  


6. அணியும் ஆடைகளும், காலணிகளும் 

குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. 

ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் 

நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 


 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc 

இவையெல்லாம் செயற்கையான 

இரசாயனப்பொருட்களால் 

தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும்

நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் 

(லெமனில்) தயாரிக்கப்படுவதாக 

சொல்லப்படுகிறது..!! 

 
8.மொத்தமாகப் பள்ளிகளையும், 

கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, 

வீதிக்குவீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.

சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று 

கல்லூரிகளை வைத்து வியாபாரம் 

நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  


9.கோதுமைக்கு வரியில்லை. அது 

விளைபொருள். கோதுமையை மாவாகத் 

திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை 

சப்பாத்தியாக செய்து விற்றால் 

வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், 

பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!  


10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் 

அனைவருக்கும் உண்டு. ஆனால் 

பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் 

செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் 

இல்லை..!!!  


11.குழந்தைத் தொழிலாளர்களை 

ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் 

தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் 

சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை 

மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!

நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி குழந்தைக்குப் பால்



நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய ஹவாய் தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்தப் பெண் இந்தப் புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...