|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 March, 2011

இதே நாள் 01 ஏப்ரல்

  • இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1935)
  •  மலாய் கூட்டமைப்பு உருவானது(1946)
  •  இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(1957)
  •  கூகுள், 1000 மெகாபைட் கொள்ளளவு உள்ள ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது(2004)
  •  ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது(1976)

Radiation Levels in West Coast Milk 5,000 Times Lower Than Danger Threshold


NASA says Endeavour sustained minor storm damage


7 winners claim Mega Millions ticket usa new yark


இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு நாடு


தமிழக அரசியல் வடிவேலு !



தமிழக அரசியல் விஜயகாந்த் !


தமிழக அரசியல் ! சீமான்


Jacob Tucker 2011 Dunk Video

30 March, 2011

இதே நாள் மார்ச் 31

  • மால்ட்டா விடுதலை தினம்(1979)
  •  அறிவியலாளர் ஐசக் நியூட்டன் இறந்த தினம்(1727)
  •  கூகுள் 1 ஜிகா பைட் கொள்ளளவு உள்ள ஜிமெயிலை அறிவித்தது(2004)
  •  அமெரிக்காவில் பககொளி சேமிப்பு நேரம் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது(1918)
  •  ஈபில் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)

INDIA VS PAKISTAN WORLD CUP SEMI FINAL HIGHLIGHTS 2011


இந்தி நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை

2009 ஜூன் மாதம், நடிகர் ஷைனி அஹுஜா தன்னை மானபங்கம் செய்ததாக அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 2010 செப்டம்பரில், ஷைனி தன்னை மானபங்கப்படுத்தவில்லை என்று புகார் கூறிய பெண் மறுத்தார். ஆனால், அக்கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.இது தொடர்பான வழக்கு, மும்பை செஷன்ஸ் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஷைனிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பி.எம். செளஹான் தீர்ப்பு வழங்கினார்.

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல


SeaWorld's Killer Whale Makes Splashy Return to Stage


inside of Indian Point's nuclear reactors.

 

Britney Spears' Complete 'GMA' Concert


375-Pound Shark Lands on Boat

An 8-foot shark dies after jumping onto a boat carrying three men in Texas.

Florida Air Traffic Controller Suspended After Planes Fly Too Close For Comfort


VERIFIED in the USA - Radiation and Jetstream FORECAST UPDATE - March 30...

Radiation levels soar in Japan sea water


காந்திய வழியில் நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் பிரசார குழுவை தொடங்கி நரேஷ்குப்தா பேச்சு

தமிழ்நாடு சர்வோதய மண்டல் அனைத்து காந்திய இயக்கங்கள் சார்பில் காந்தியடிகள் அகிம்சா தேர்தல் பிரசார யாத்திரை குழு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறது. வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும். பணம், பரிசு பொருட்களை வாங்கக் கூடாது. மது, பிரியாணி வாங்கிக் கொண்டு வாக்களிக்க கூடாது. தேச நலன், மக்கள் நலனுக்காக உண்மையாக உழைக்கின்ற வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற நோக்கத்தை மையமாக வைத்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
 
இந்த பிரசார பயண யாத்திரை கடந்த 25-ந்தேதி செங்கோட்டையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து இன்று சென்னை வந்தது. சென்னை முழுவதும் காந்திய பிரசார குழுவினர் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். தியாகராயநகர் தக்கர் பாலா வித்யாலயா பள்ளியில் இருந்து பிரசார குழு புறப்பட்டது. காந்திய பிரசார யாத்திரையை முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

பாகிஸ்தானில் குண்டு வெடித்தது


A suicide bomber on a motorbike drove into a crowd attending a rally in Swabi, Pakistan Wednesday, killing 10 people including two policemen,

At least 21 people were injured in the explosion, said Swabi District Police Chief Ejaz Ali Khan.
Jamiat-e-Ulama-e-Islam was a former coalition partner of the ruling Pakistan Peoples Party.
Swabi is in Khyber Pakhtunkhwa province, once known as North West Frontier province, where security forces have been battling militants led by the Pakistani Taliban

ஈராக்கில் தீவிரவாதிகள் தற்கொலை


ஈராக்கில் பாக்தாத்துக்கு அடுத்தபடியாக பெரிய நகராக திக்ரித் திகழ்கிறது. நேற்று காலை அங்குள்ள ஒரு அரசு அலுவலகத்திற்குள் துப்பாக்கிகள் ஏந்திய தற்கொலை தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணு வத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
தகவல் அறிந்ததும் அப்பகுதி போலீசார் விரைந்து சென்றனர்.அதற்குள் அரசு அலுவலகத்துக்குள் புகுந்த தற்கொலை தீவிரவாதி வருகன்கான் உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்க செய்தான். இதனால் அந்த கட்டிடம் இடிந்தது.
அதேவேளையில், அங்கு வந்த போலீசாரின் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.இந்த தாக்குதலில் 41 பேர் அதே இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர். 95 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 
The security forces in Salahuddin are nothing; they do nothing,” said Iskandar Witwit, a member of Parliament’s security committee and Iraqiya, the political bloc that won the most seats in last year’s election but was unable to form a governing coalition.
Accounts of the attack’s toll varied. State television reported that 67 had been killed and 93 wounded; the Interior Ministry reported 45 killed. Final figures will probably not be known until Wednesday or later. Confirmed among the dead were two Iraqi journalists, one working for a newspaper in Tikrit and one working for Reuters and other news organizations, including Al Arabiya, a pan-Arab satellite television channel. Three provincial council members who had been taken hostage were also killed.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச், சிபிஐ மனுவை விசாரித்தது.

பல்வாவின் ஸ்வான் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கடன் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த இருவரும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிமயாக செயல்பட்டவர்கள் என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
 

29 March, 2011

இதே நாள் 30 மார்ச் 2011

  • அமெரிக்காவில் தேசிய டாக்டர்கள் தினம்
  •  அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது(1822)
  •  அறுவை சிகிச்சைகளில் முதன் முதலாக மயக்க மருந்து, குரோஃபோர்ட் லோங் என்பரால் பயனபடுத்தப்பட்டது(1842)
  •  தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்(1709)
  •  ஐக்கிய ராஜ்யத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது(1851)

French 'Spiderman' scales Dubai skyscraper



Workers endure austere conditions in averting nuclear disaster




SIGNS OF THE END OF THE WORLD


ரசிகர்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதைப் பூர்த்தி செய்வோம்.தோனி

மொஹாலியில் செவ்வாய்க்கிழமை, இந்திய அணி கேப்டன் தோனி, பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி ஆகியோர் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தினர். அப்போது தோனி கூறியது: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி ஆட்டம் குறித்து ஊடகங்கள் பெருமளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விஷயத்தில் கவனத்தை செலுத்தாது, ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டுமென அணி வீரர்களுக்குக் கூறியுள்ளேன்.

இது மிகப்பெரிய ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் இது மிகமுக்கிய ஆட்டமாக இருக்கும். அணியில் அனைத்து வீரர்களும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறோம். இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இத்தொடரில் அப்ரிதியின் பந்து வீச்சு எதிரணியைத் திணறடித்துள்ளது. ஆனால் அதனை சிறப்பாக எதிர்கொள்ளும் பேட்டிங் வரிசை நமது அணியில் இருக்கிறது என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி


ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்துவிட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி, பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது, எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க, ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு, பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டனர். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த ஊழல் குற்றச்சாட்டால், தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?
சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று பூசாரிகள் அந்தக் காலத்தில் பம்பை அடிப்பார்கள்.மக்களும் அதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். காதம் என்றால் தொலைவு. பல்லுக்குப் பல் இரு காதம் என்றால், இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல்.அந்தளவுக்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால், வாய் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், "ஆமாம், ஆமாம்' என்று ஒப்புக் கொண்டு, பூசாரி பம்பை அடிப்பதைப் போல, பாமர மக்களை ஏமாற்ற ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கின்றனர். அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால் அது பற்றி நான் விரிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது சுப்ரீம் கோர்ட். அதில் நான் தலையிட விரும்பவில்லை. அந்த நிறுவனத்துக்கு கடனை கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம் . கடன் வாங்கிய பணம், ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்குப் பிறகு தான் தெரியும்.

விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அவருடன் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் உடன் இருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம்,  ‘’ விஜய் அதிமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளார்.    அவரது ரசிகர்களும் ஆதரவு
அளிப்பார்கள்.  விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.  இதில் எந்த மாற்றமும் இல்லை.

இதை விஜய்தான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க தேவையில்லை.   அவரது வளர்ச்சியில் அக்கறை கொண்ட
அவரது தந்தை நான் சொல்கிறேன்.   விஜய்யும் அவரது மக்கள் இயக்கமும் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறது.

சேலம் மாவட்ட தலைவரையே கேடுக்கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு கை காட்டினார்.அவர்,  ‘’உறுப்பினர் கார்டுகளை எரித்தவர்கள் விபரம் அறியாத சிறியவர்கள்.   அவர்கள் சிலரது பேச்சைக்கேட்டு அப்படி செய்துவிட்டார்கள்.   அதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன.

நாங்கள் எங்கள் தலைவர் விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம்.   அவர் அதிமுகவிற்கு ஆதரவு
தெரிவித்துள்ளார்.   அதிமுகவை ஆட்சியில் அமர்த்த நாங்கள் முழு மூச்சுடன் பாடுபடுவோம்’’ என்று தெரிவித்தார்.

குறும்படம் நண்பா


இரண்டு சிறுவர்களின் நடிப்பு அருமை ! ஒற்றுமையை வலியுறுத்தும் ரோகன் (கதை ,இயக்கம் )வாழ்த்துக்கள். இசை அருமை.

தேர்தல் அதிகாரிகளாக கல்லூரி மாணவர்கள் தேர்வு


தேர்தல் பணிகளில் பாரபட்சம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக வர வழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிரடி சோதனை நடத்தி வருவதால் அரசியல் கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர்.

இதற்கிடையே ஓட்டுப்பதிவு தினத்தன்று எந்த ஒரு சிறு அசம்பாவித சம்பவத்துக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்பதிலும் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

ஓட்டுப்பதிவின்போது பொதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு தேர்தல் அதிகாரி மற்றும் 3 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பல தொகுதிகளில் ஓட்டுப்பதிவை வெப் காமிராக்கள் மூலம் படம் பிடித்து இண்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வாக்குச்சாவடிகளில் வெப் காமிராக்கள் பொருத்தப்படும். அந்த காமிராக்கள் லேப்-டாப் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புடன் சேர்க்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கூடுதலாக மேலும் ஒரு தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த கூடுதல் தேர்தல் அதிகாரிக்கான பணி இடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகள், கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். கட்சி சார்பு இல்லாத மாணவர்கள் இந்த பணிக்கு தேர்வாகிறார்கள். அவர்களுக்கு இணைய தள நேரடி ஒளிபரப்புக்கு கூடுதல் பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: முதல்வர்


’கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அதற்கு எனது பெயர் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் எனக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

எனது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத் குமார் ஆகியோருக்கு தான் அதில் பங்குகள் உள்ளன.
சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சி கடன் பெற்றது. இதை எப்படி ஊழலாக கூறமுடியும்? சில அரசியல்வாதிகள் 2ஜி விவகாரத்தை மிகவும் பெரிதுபடுத்தி கூறி வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

வடிவேலு பிரச்சாரம்... வாக்காளர்களிடம் ஏக ரெஸ்பான்ஸ்!!

சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர்.

"எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள்

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை இதுவரை வெல்லாத பாக்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்தியாவை ஒரு முறை கூட வென்றதில்லை பாகிஸ்தான். இது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இருந்தாலும் இந்த முறை அதை மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி சவால் விட்டிருப்பதால் இந்திய அணி சற்றே கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
Shahid Afridi and Dhoni
Getty Images
இந்தியா, பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி என்றாலே அங்கு தீப்பொறி பறக்கும். வீரர்களின் ஆட்டத்தில் மட்டுமல்லாமல், ரசிகர்களின் ரசிப்பிலும் கூட ரகளை தெரிக்கும்.
இந்த இரு அணிகளும் இந்த முறை உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. இதனால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரே படு சூடாகி விட்டது. காரணம், இந்த இரு நாடுகளுக்கும் இதுதான் இறுதிப் போட்டி என்பதால்.

இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் நான்கு முறை மோதியுள்ளன. அதில் நான்கிலுமே இந்தியாதான் வென்றுள்ளது. இதுவரை ஒருமுறை கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. இது இந்தியாவைப் பொறுத்தவரை சாதகமான அம்சமாக இருந்தாலும் பாகிஸ்தான் இந்த முறை சவாலுடன் மொஹாலியில் வந்திறங்கியுள்ளதால் இந்தியா சற்றும் சகஜமாக இருக்க முடியாத நிலை.

அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றவுடனேயே பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி கூறுகையில், இந்தியாவை அரை இறுதியில் சந்திப்பதற்கு நாங்கள் பயப்படவில்லை. இதுவரை நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை வெல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இந்த முறை அது நடக்காது. இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

அதை விட முக்கியமாக சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் குறி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. சச்சின் மட்டுமல்லாமல் யுவராஜ் சிங்கையும் விரைவிலேயே வீழ்த்தவும் பாகிஸ்தான் வியூகம் வகுத்துக் காத்திருக்கிறது.

சச்சின் இன்னும் ஒரே ஒரு சதம் போட்டால், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்களை நிறைவு செய்து புதிய உலக சாதனை படைக்கலாம். ஆனால் அதை மொஹாலியில் நிறைவேற்ற விட மாட்டோம் என்றும் அப்ரிதி கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் யுவராஜ் சிங் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பதால் அவரை விரைவிலேயே அவுட் ஆக்கவும், அவரது பந்துகளை சிறப்பாக ஆடவும் தேவையான வியூகங்களை பாகிஸ்தான் வகுத்துள்ளது.

எனவே இந்த அரை இறுதிப் போட்டி இந்திய அணி மிக மிக கவனமாக இருந்தாக வேண்டிய நிலையில்தான் உள்ளது. சற்றே அசந்தாலும், அடித்து விட்டுப் போய் விடும் பாகிஸ்தான் என்பதால் இந்திய ரசிகர்கள் பதைபதைப்புடன்தான் உள்ளனர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை மோதியுள்ள போட்டிகள் குறித்த ஒரு மின்னல் பார்வை...

இரு அணிகளும் ஆடிய டெஸ்ட் போட்டிகள் - 59
இந்தியா வென்றவை - 9
பாகிஸ்தான் வென்றவை - 12
டிரா ஆனவை - 38

இரு அணிகளும் ஆடிய ஒரு நாள் போட்டிகள் - 119
இந்தியா வென்றவை 46
பாகிஸ்தான் வென்றவை - 69
டை அல்லது முடிவில்லாமல் போனவை - 4

இரு அணிகளும் ஆடிய டுவென்டி 20 போட்டிகள் - 2
இந்தியா வென்றது - 1
டை ஆனது - 1

2ஜி வழக்கு: ஏப்ரல் 2-ல் குற்றப்பத்திரிகை

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதலாக 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 2-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.2ஜி ஊழல் தொடர்பாக தங்களது விசாரணை அறிக்கைகளை சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் அளித்தன.இந்த வழக்கில் அந்நிய நிதி மேலாண்மை சட்ட விதிகள் பெருமளவு மீறப்பட்டுள்ளதாகவும், பினாமி பரிவர்த்தனைகள் இருப்பதாகவும் நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி மற்றும் ஏகே.கங்குலி ஆகியோரிடம் அளித்த விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணை அறிக்கையை படித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் 2 நாள் அவகாசம் அளித்தது

Ponnar Shankar Audio Launch


ஆசியா-பசிபிக்கில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்


India finds itself bracketed with countries like Philippines and Cambodia, rated as the fourth most corrupt nation among 16 countries of the Asia Pacific region surveyed by leading Hong Kong-based business consultancy firm PERC.
The Political & Economic Risk Consultancy Ltd (PERC) rated India at 8.67 on a scale of zero to 10 with the high end being the worst case of corruption scenario and ahead of the Philippines (8.9 points), Indonesia (9.25 points) and Cambodia (9.27 points).
Among the 16 countries reviewed in its latest report, Thailand was rated at 11 with a scale of 7.55, followed by China (7.93) and Vietnam (8.3).
Comparatively, Singapore was given a clean sheet with a score of 0.37, followed by Hong Kong (1.10), Australia (1.39), Japan (1.90) and USA (2.39), putting them in the top five.
In India, according to the report, civil and other local-level political leaders were found more corrupt than the national-level political leaders, with the former given a score of 9.25 and the latter slightly better at 8.97.
Indian civil servants at the city level too were rated at 8.18, worst than the civil servants at the national level (7.76).
"The issue of corruption has grown and overshadowed the second term in office of the Congress-led coalition headed by Prime Minister Manmohan Singh," said PERC in its Asian Intelligence report on Asian business and politics.

இந்த ஆய்வில் ஊழல் நாடுகளுக்கு 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் இந்தியா 8.67 புள்ளியைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளும், இந்தோனேசியா 9.25 புள்ளிகளும், கம்போடியா 9.27 புள்ளிகளும் பெற்று ஊழல் மிகுந்த நாடுகளில் முன்னணி வகிக்கின்றன.சீனா 7.93 புள்ளிகளும் வியட்நாம் 8.3 புள்ளிகளும் பெற்றுள்ளன. தாய்லாந்து 7.55 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது. ஹாங்காங் 1.10 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 1.39 புள்ளிகளும், ஜப்பான் 1.90 புள்ளிகளும், அமெரிக்கா 2.39 புள்ளிகளும் பெற்றுள்ளன.சிங்கப்பூர் 0.37 புள்ளிகள் மட்டும் பெற்று நற்சான்றிதழ் பெற்றுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அளவிலான அரசியல் தலைவர்களைவிட இதர சிறு பதவிகளில் உள்ள தலைவர்களிடமே ஊழல் அதிகம் காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

28 March, 2011

அதிகாரிகள் மாற்றம் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது: தேர்தல் ஆணையம்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்தார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:
 இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்த முழு அதிகாரம் உள்ளது. அதை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தேர்தலுக்காக ஒரு குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்துவதும், குறிப்பிட்ட அதிகாரியைப் பயன்படுத்தாமல் இருப்பதும் தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.  நமது நாட்டில் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், தேர்தலை நியாயமாக, வெளிப்படையாக நடத்துவதும், தனிநபர் அல்லது கட்சியின் பண பலத்தால், ஜனநாயக நடைமுறை தோல்வியுறாமல் பார்த்துக் கொள்வதும், தேர்தல் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தண்டிப்பது மட்டுமல்லாமல் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி தேர்தல் குற்றங்களைத் தடுப்பதும் ஆணையத்தின் கடமை.

எந்த டி.ஜி.பி.யிடம் தேர்தலை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் உள்ளது.  அதனால் டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனத்துக்கும் தேர்தல் நேரத்தில் யார் டி.ஜி.பி.யாக இருக்க வேண்டும் என்பதற்கும் தொடர்பு இல்லை. அவரது நியமனத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்பது இந்த வழக்குக்கு தொடர்புடையது அல்ல.  சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியே தேர்தல் ஆணையத்தின் முடிவு பற்றி கேள்வி கேட்கவில்லை. அதனால், அது தொடர்பான முதல்வரின் அறிக்கையை வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தேவையற்றது.  தமிழ்நாட்டில் 2006 உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்த உயர் நீதிமன்றம் லத்திகா சரணை சாடியுள்ளது.  அத்தகைய சூழலில் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக வேறோர் அதிகாரியை தேர்தலை நடத்தும் பொறுப்புக்கு நியமிப்பது தேர்தல் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது. எனவே, அத்தகைய நடவடிக்கையை பாரபட்சம் என்று கூற முடியாது.  தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சிறப்பு அதிகாரம் உள்ளது.  அவற்றின் கீழ் வாகனங்கள், வீடுகள் போன்றவற்றில் சோதனை செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்ய முடியும். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.  எனவே, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்க்கும் எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.    "மாநில அரசையும் கலந்தாலோசிக்க வேண்டும்'  சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறியதாவது:  தேர்தல் ஆணையம், தேர்தலை நியாயமாக, நேர்மையாக, வெளிப்படையாக நடத்துவதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது.  தேர்தல் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வெற்றி கிடைக்கிறதென்றால் அந்தப் பெருமை மாநில அரசையும் சாரும்.  எனினும், அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது தேர்தல் ஆணையம் மாநில அரசையும் கொஞ்சம் கலந்தாலோசித்தால் நன்றாக இருக்கும்.  ஏனெனில், தமிழக டி.ஜி.பி. யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவரை டி.ஜி.பி. பணியில் இருந்து தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.  மேலும், மாற்றப்படும் அதிகாரிகளுக்குப் பொறுப்பு வழங்கப்படாதபோது அவர்களுடைய பணி பதிவேட்டில் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. எனவே, அவ்வாறு மாற்றப்படுகிறவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று கூறினார்.

இதே நாள் 29 மார்ச் 2011

  • தைவான் இளைஞர் தினம்
  •  யாஹூ 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)
  •  துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது(1831)
  •  அயர்லாந்து, பொது இடங்களில் புகைபிடித்தலை தடை செய்த முதல் நாடானது(2004)
  •  கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது(2007)      

உலக கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது கபில்தேவ்

உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற வாய்ப்பு உள்ளது. இப்பட்டியலில் நான் மட்டும் 28 ஆண்டுகளாக தனிமையில் இருக்கிறேன். என்னோடு தோனியும் சேர வேண்டும்,என, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. தற்போது "தோனியின் படை சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இது குறித்து கபில் தேவ் கூறியது:

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பை வெல்லும் நேரம் நெருங்கி விட்டது. இதற்கான திறமை தோனி தலைமையிலான அணியிடம் உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையுடன், நான் மட்டும் தனிமையில் இருக்கிறேன். என்னோடு யாராவது சேர வேண்டும் என விரும்புகிறேன். இதற்கேற்ப, உலக கோப்பை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இம்முறை நல்லதே நடக்கும் என நம்புவோம். வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் ஒவ்வொருவரும் மைதானத்தில் களமிறங்குகிறோம். தற்போதைய இந்திய அணி சாதித்துக் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.

Narrow escape for two Karnataka Ministers

Karnataka Minister for Tourism Gali Janardhana Reddy and Health Minister B. Sriramulu had a miraculous escape when one of the tyres of their chartered flight burst while landing at Rajiv Gandhi International Airport here on Monday morning.
Air operations were disrupted for sometime. The chartered flight, Hawker-400XP, was on its way from Vidyanagar airport near Bellary in Karnataka to Delhi with the two Ministers, two crew members, and another person. The private plane was landing in Hyderabad for refuelling at 11 a.m.

விமான டயர் திடீரென வெடித்ததால் , அதில் பயணம் செய்யவிருந்து கர்நாடாக அமைச்சர்கள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆந்திர மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் மூலம் டில்லி செல்வதற்காக கர்நாடா மாநில அமைச்சர்கள் ( சுற்றுலாத்துறை )ஜனார்த்தனரெட்டி, ஸ்ரீராமுலு (சுகாதாரத்துறை) ஆகியோர் விமான நிலையம் வந்தனர். அமைச்சர்கள் விமானத்தில் ஏறியுடன் விமானம் புறப்பட ‌தயாராக இருந்த் போது விமானத்தின் ஒரு டயர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உடனே பயணிகள் பீதியடைந்தன. பின்னர் விமானம் நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்த ஜனார்த்தனரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் இறக்கிவிடப்பட்டு வேறு விமானம் மூலம் டெல்லி சென்றனர்

Accidental explosion at Yemen arms factory kills 100


A powerful blast at an ammunition factory in southern Yemen left more than 100 people dead yesterday after forces loyal to the embattled President, Ali Abdullah Saleh, appeared to have been driven out of the area by Islamist militants.
The explosion came as talks to broker an end to the 32-year authoritarian rule of President Saleh stalled amid continued warnings that the country was sliding into armed conflict. After weeks of protests against his rule, President Saleh has claimed that if he left power al-Qa'ida in the Arabian Peninsula (AQAP) could begin to take hold throughout the country with Yemen a "time bomb" nearing civil war. 

 ஏமன் நாட்டில் அல்கொய்தாவினர் நடத்திய ‌தாக்குதலில் அரசுக்கு சொந்தமான ஆயுத ‌தொழிற்சாலை தீப்பிடித்தது.இதில் 100 பேர் உடல் கருகிபலியாயினர். ஏமனில் அதபிர் அலி அப்துல்லா சலே பதவி விலக்கோரி பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏமன் நாட்டின் தெற்கு மாகாணமான அபிதினிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஜார் என்ற நகரில் துப்பாக்கி தோட்டக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி கொண்டிருந்தனர். சம்பவத்தன்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல்கருகி பலியானதாக கூறப்படுகிறது .

பேஸ்புக்குக்கு போட்டியாக களமிறங்கியுள்ள 'கலர்'!


உலகம் முழுக்க கிட்டத்தட்ட பேஸ்புக்குக்கு அடிமையாகிவிட்டதோ எனும் அளவு, அந்த நெட்வொர்க் பரந்து விரிந்துவிட்டது.

உலகின் முதல் நிலை இணையதள நிறுவனமான கூகுளே அஞ்சும் அளவுக்கு பேஸ்புக் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்போது இதற்குப் போட்டியாக புதிய சமூக நெட்வொர்க் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் பில் நிகுயென் என்பவர்.

இந்த தளம் ஸ்மார்ட்போன்களில் இயங்கக் கூடிய மொபைல் இணையதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன், ஆண்ட்ராய்ட் போன்களை வைத்திருப்போர், தங்களுக்குள் எளிதில் தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ளமுடியும்.

கணிப்பொறி யுகத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் மிக முக்கியமான வளர்ச்சியாக இந்த 'கலர்' சமூகத் தளம் பார்க்கப்படுகிறது

காங்கிரஸுக்கு ஓட்டுப் போடவே மாட்டோம் என சீமான் முன்னிலையில் உவரி மக்கள் அனைவரும் சத்தியம்!

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் மட்டும்தான் அவர் இலக்கு. 'திமுக, பாமக, அதிமுக யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டு போகட்டும். ஆனால் நமது இன விரோதி காங்கிரஸுக்கு மட்டும் ஓட்டளிக்காதீர்கள்' என்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று உவரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். உவரி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட சீமான், பின்னர் அப்பகுதி மக்களிடம் பேசினார்.

மீனவர்களின் இன்றைய பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியே என்றும், இந்தக் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க விட்டால், இப்போதுள்ள மோசமான நிலைதான் தொடரும் என்றும் அவர் கூறினார்.

உடனே அப்பகுதி மக்கள், "நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். மீனவர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் உங்களுக்கே அளிக்கிறோம்," என்றனர் ஒருமித்த குரலில்.

அதற்கு பதிலளித்த சீமான், "இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அடுத்த தேர்தல் வரை பொறுத்திருங்கள். இப்போது உங்கள் வாக்கை காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வீழ்த்துங்கள். அது போதும்," என்றார்.

மீனவ சமுதாயத்துக்கு காங்கிரஸ் அரசால் நேர்ந்த கொடுமைகளை விளக்கினார். ஈழத்திலும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் தமிழர் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸ்தான் என்பதை அவர் சொன்னபோது, உவரி மக்கள் உரத்த குரலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனர்.

சீமான் கிளம்புவதற்கு முன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனைவரும் விரும்பினர். அவர்களை தனித் தனி குழுவாகப் பிரித்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார் சீமான்.

எக்காரணம் கொண்டும் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடவே மாட்டோம் என சீமான் முன்னிலையில் உவரி மக்கள் அனைவரும் சத்தியமடித்து கூறிச்சென்றனர்.

அதிமுக கூட்டணி தேர்தலில் வெல்லும்-144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு

லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன். நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த்


தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.  நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த்

ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள லைசென்ஸ் கொடுத்து விட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.


தண்ணீருக்காக இவர்கள் போராடவில்லை. மணல் எடுப்பதற்காக போராடினார்கள்.   உங்களை (மக்கள்) ஏமாற்றி உங்கள் வரிபணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.


மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.


நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.

பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி
வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று பேசினார்.  

54 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவம் பாதுகாப்பு; டி.ஜி.பி.போலாநாத் அறிவிப்பு

தமிழக தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பாரபட்சமின்றி தேர்தல் பாதுகாப்பு பணியாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் விவாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2626 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 57 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 17 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுவரை 200 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். கூடுதலாக 85 கம்பெனி படையினர் வர உள்ளனர். இவர்களுக்காக 8250 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

worlds safest car





Train derailed in Canada

கனடாவில் எரிபொருள் ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டது

கனடாவிலுள்ள  ஒன்ட்டாரியோவில்  எரிபொருட்களை 25 டேங்கர்களில்      ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டது .  இதில் எரிபொருள் டேங்கர்கள் தீ பற்றி எரிந்தன அதனை தீயணைப்பு  துறையினர் உடனே அணைத்தனர் இவ் விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்

லிபியாவில் கடாபியின் சொந்த ஊரை கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர்

அதிபர் கடாபி பதவி விலகவேண்டும் என்று கோரி அந்த நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் நடத்திவரும் கிளர்ச்சிக்காரர்கள் மீது கடாபி ஆதரவு ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் லிபியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அஜ்டாபியா நகரத்தை அன்னிய நாடுகளின் போர் விமானங்களின் உதவியுடன் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினார்கள்.

Obama to Speak to Nation About Libya


இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தான் பந்துவீச்சுக்கும் போட்டி; ரமீஷ்ராஜா

 
இந்தியா பேட்டிங்கில் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் பவுலிங்கில் நன்றாக இருக்கிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். எந்த அணி தோற்றாலும் கடுமையாக போராடித்தான் தோற்கும். இந்திய அணி உள்ளூரில் விளையாடுவதால் நெருக்கடி கூடுதலாக இருக்கும். அதிக எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விளையாட வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது.இவ்வாறு ரமீஷ்ராஜா கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

 
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு வக்கீல் கோபால் சுப்பிரமணியம் 14 பக்க விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதனை படித்த பின்னர் நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
அவர்கள் கூறுகையில், புதிதாக எந்த விவரமும் அறிக்கையில் இல்லை. கறுப்பு பணத்தால் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி எந்த அளவில் விசாரணை நடக்கிறது? கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? எங்கிருந்து போனது? எப்படி போனது? என்ற மூலாதாரங்கள் பற்றி விசாரணை நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்

இலவச தேர்தல் குறும் படம்

மாணவனின் சமுதாய அக்கறை ! இப்படத்தை  பார்த்து ஒரு வாக்காலன் திருந்தினாலும்  இப்படத்துக்கு வெற்றியே ! 

32 வெளி மாநில அதிகாரிகள் ; அரண்டு போகும் கட்சிகள்


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.


தேர்தலை சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி நியாய மாகவும் நடத்த வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண் உள்பட பெரும்பாலான உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

புதிய டி.ஜி.பி.யாக போலாநாத் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே வடமாநிலங்களில் இருந்து வந்த 5 உயர் போலீஸ் அதிகாரிகள் தமிழக தேர்தல் பார்வையாளர்களாக பொறுப்பு ஏற்றனர்.

சென்னை மண்டலத்துக்கு ஜிதேந்தர், சேலம் மண்டலத்துக்கு ஜார்ஜ்அகமது, மதுரை மண்டலத்துக்கு டி.கே.பாண்டே, திருச்சி மண்ட லத்துக்கு பி.ஆர்.கே.நாயுடு பார்வையாளராக பொறுப்பேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கவும், தீவிர சோதனைகளை துணை நிலை ராணுவத்தினர், மாநில போலீசார், மாநில வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

கடந்த 3 வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் வாகன சோதனை மூலம் பல கோடி ரூபாய் சிக்கியது. ஜவுளிகள், ஆடு, மாடு, கோழிகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை சந்தித்த போதும், பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வாக்காளர்களைக் கவர பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டால் பொதுமக்கள் 18004256669 மற்றும் 1965 எண்களில் புகார் செய்யலாம். 044-2840064 என்ற எண்ணுக்கு பேக்சில் தகவல் அனுப்பலாம். இ.மெயிலில் புகார் அனுப்ப விரும்புபவர்கள்,
itcontrolroomchennai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

இதை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 14 நாட்களே உள்ளதால், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை வேட்பாளர்கள் ரகசியமாக தொடங்கி உள்ளனர்.

இது தேர்தல் கமிஷனுக்கு ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் அதிரடி வேட்டை நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே வந்துள்ள வடமாநில 5 உயர் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்


இதை ஏற்றுக் கொண்ட தலைமை தேர்தல் கமிஷன் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக வடமாநிலங்களில் இருந்து மேலும் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழ்நாட்டுக்கு வரஉள்ளனர்.

இந்த 32 அதிகாரிகளும் ஐ.ஜி. மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளாவார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் முறை கேடுகளை தடுக்க வட மாநிலங்களில் இருந்து சுமார் 40 உயர் போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 32 அதிகாரிகளும் தமிழ் நாட்டுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களது தலைமையில் தனி அதிரடிப்படை செயல்படும்.

அந்த படையுடன் இந்த போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையை இவர்கள் மேற்கொள்வார்கள்.

இந்த அதிரடி படைக்கு மாவட்ட கலெக்டரும், வருவாய்துறை அதிகாரிகளும், உள்ளூர் போலீசாரும் உதவியாக இருப்பார்கள் என்று அறி விக்கப்பட்டுள்ளது. 32 வடமாநில போலீஸ் அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தும் போது அந்த நடவடிக்கை கட்சி சார்பு இல்லாமல் பாரபட்ச மற்ற முறையில் நேர்மையாக இருக்கும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது.

இது குறித்து தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட போது உள்ளூர் போலீசார் கண்டும் காணாததும் போல இருந்து விட்டனர். அவர்களால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க இயலவில்லை. எனவே தான் வடமாநில உயர் போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு களத்தில் இறக்கி விட்டுள்ளோம் என்றார்.

தேர்தல் கமிஷனின் புதிய கட்டுப்பாடுகளால் ஏற்கனவே அரசியல் கட்சியினர் அரண்டு போய் உள்ளனர். தற்போது வடக்கில் இருந்து மேலும் 32 உயர் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து இருப்பது, பெரும்பாலான வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

TAMIL NADU ELECTION 2011 AWARENESS


கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி

முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்‌கதை, வசனம் எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

படத்தின் பாடல் சி.டி.,யை முதல்வர் வெளியிட தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது, தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. இந்நேரம் நான் ஏதாவது ஒரு கூட்டத்தில் என்னுடைய கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய பெரும் பணி இருக்கிறது. அந்தப் பணியையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றால் இந்த பணியையும் நான் அந்தப்பணியை போல மதிப்பது தான் காரணம். 

சினிமா உலகத்தை விட்டு, திரைப்படத் துறையை விட்டு, எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான். நான் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல்வராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், எழுத வேண்டும், எழுத வேண்டும், எழுத வேண்டும் என்பதிலே தான். எழுத்தை மறந்து விட்டு, இந்தக் கலைத் துறையை விட்டு, இலக்கியத் துறையை விட்டு விட்டு, அரசியல் துறையில் மட்டும் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் முடியாத காரியம். எனவே தான் அரசியல் துறையில் ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

ஒரு பெரியவர் ஒருவர் சொல்லியிருக்கிறார், கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று!
சினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம் தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிறோம்? மன்னிக்க வேண்டும் ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.

சிலர் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன், அவர்களுடைய நன்மைக்காக, வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள், நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

தமிழ்த்துளி அமைப்பின் பேச்சுப் போட்டி


துபாயில் தமிழ்த் துளி அமைப்பின் சார்பில் மார்ச் 25ம் தேதியன்று காலை லேண்ட்மார்க் ஹோட்டலில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. பேச்சுப் போட்டி பல்வேறு வயதுடைய மாணவ,மாணவியருக்காக பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. தாய்மொழி தமிழை பாடமாக படிக்க முடியாவிட்டாலும் பேச்சுப் போட்டி மூலம் தங்களது தமிழார்வத்தை 3 வயது முதல் 19 வயது வரையிலான மாணாக்கர்கள் பங்கேற்றது பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது

27 March, 2011

Japan calls off tsunami advisory

The 6.5-magnitude quake, 109km (67 miles) east of the badly-damaged port city of Sendai, prompted a brief warning of a possible small tsunami.
A much stronger earthquake on 11 March and the powerful tsunami it triggered killed more than 10,000 people and left many thousands more missing.

ஜப்பான் கதிர்வீச்சு அபாயத்தால் ஜெர்மன் சான்லர் ஆட்சிக்கு பின்னடைவு


The results gave the Greens 24.2% and their Social Democrat allies 23.1%, with Mrs Merkel's party on 39% and its Free Democrat (FDP) allies on 5.3%.
Nuclear power, following the accident in Japan, was a key issue.

ஜப்பான் அணுகதிர்வீச்சு எதிரொலியாக ஜெர்மனியில் நடந்த மாகாண தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மார்கெல்லுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று பேடன்வூட்டன்பெர்க். வர்த்தக, பொருளாதார ரீதியாக முன்னேறிய நகரமான இந்த மாகாணத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல்லின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான சோஷியலிஸ்ட் ஜனநாயக கட்சியும் போட்டியிட்டனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கருத்துகணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் சோஷியலிஸ்ட் கட்சிக்கு 48.05 சதவீதமும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு 43 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என செய்திகள் வெளியாகின. இம்மாகாணத்தை கடந்த 1953-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியே தக்கவைத்திருந்தது. 68 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக எதிர்க்கட்சிகள் இம்மாகாணத்தை பிடித்துள்ளன. இதனால் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல்லுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தோல்விக்கு காரணம், ஜப்பானில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் , புகுஷிமா , டாய்ச்சி நகரங்களில் அணுஉலைகள் வெடித்து கதிர்வீச்சினை ஏற்படுத்தின.இதன் எதிரொலியாக ஜெர்மனியில் பொதுமக்கள் தங்கள் நாட்டு அணுஉலை பாதுகாப்பு குறித்தும், நாட்டின் மிகப்பெரி அணு உலை அமையவுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஜெர்மனியில் உள்ள முக்கிய அணுஉலைகளின் உற்பத்தியை நிறத்த மார்க்கெல் உத்தரவிட்டார். இதில் பேடன் வூட்டன்பெர்க் நகரில் 4 அணு உலைகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் தேர்தலில் மார்க்கெல் கட்சி தோல்வியுற்றதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தன. ஏற்கனவே கடந்தாண்டு மே மாதம் ஹம்பர்க் நகர தேர்தலில் மார்க்கெல் கட்சி தோல்வியுற்றும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...