|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 December, 2012

எல்லாம் மெண்டலுங்கல அலையுது!


அப்புறம் நட்பு முறிஞ்சிடும்!

ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு தனிப்பட்ட ‘பெர்சனல்’ விஷயம் இருக்கும். என்ன தான் நட்பு என்றாலும் அதை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் அதை வெளியில் சொல்லவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் வாகனங்களை இரவல் கேட்பது. இரவல் தரும் யாருமே முழு மனதுடன் தருவதில்லை. அதை புரிந்து கொள்ளாமல் திரும்ப திரும்ப இரவல் கேட்பவர்களிடம் இருந்து நாசூக்காக தப்பிக்க, வேறு வழியில்லாமல் வாகனத்தின் பின்னாலேயே இவர் எழுதிப்போட்டு விட்டார்.

விசாரணையை சொந்த செலவில் வீடியோ எடுக்கலாம்.

குற்றவாளிகள் தங்களிடம் நடத்தும் போலீஸ் விசாரணையை சொந்த செலவில் வீடியோ எடுத்து கொள்ளலாம் என மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ‘ஸ்பீக் ஆசியா பீனலிஸ்ட் அசோசியேஷன்' என்ற அமைப்பின் தலை வர் அசோக் பஹிர்வானி என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 5ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே சமயம் அசோக் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். டிசம்பர் 6ம் தேதி 13வது தடவையாக விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் அவருடைய முன்ஜாமீன் மனு நீதிபதி ஏ.எம்.திப்சே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரம்பத்தில் இருந்தே போலீஸ் விசாரணையில் தாம் ஒத்துழைத்து வந்தாலும், போலீசார் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார். அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பட் கூறுகையில், "போலீஸ் விசாரணையில் என் கட்சிக்காரர் ஒத்துழைத்தாரா? அல்லது ஒத்துழைக்கவில்லையா? என்பது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக விசாரணை முழுவதையும் பதிவு செய்ய வேண்டும் என்று எனது கட்சிக்காரர் விரும்புகிறார்" என்றார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.டி.காரட், "அசோக்கிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதையும் அவர் வீடியோவில் பதிவு செய்து கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்"' என்றார். 
 
 இதைத் தொடர்ந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த செலவில் விசாரணைகளை வீடியோவில் பதிவு செய்ய அனுமதித்து நீதிபதி திப்சே உத்தரவிட்டார். பின்னர் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், "உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், குறிப்பாக தாங்கள் நிரபராதி என்று உறுதியாக நம்பும் நபர்கள், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பயன்படுத்திக் கொண்டு போலீஸ் விசாரணைகளை தாங்களே தங்கள் சொந்த செலவில் பதிவு செய்து கொள்ளலாம். அமெரிக்காவில் இந்த முறை அமலில் இருக்கிறது. வழக்கு விசாரணைகள் வெளிப்படையானதாக இருக்கவும், குற்ற வாளிகளிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக சித்ரவதை செய்யும் முறையை போலீசார் பயன்படுத்தாமல் இருக்கவும் இந்த உத்தரவு உதவும்" என்றார்.

சத்தியமா பார்காதிங்க...


கண்ணீரால் நிறைந்த நிஜம்!

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார். ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர்.மண்ணாங்கட்டிக்கு கோபம்.

என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி. அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார். என்னவென்று கேட்கிறார்.

’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள். மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை.... அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு
‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க.எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது.
காமராஜர் கையொப்பமிடுகிறார்.
மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை.
அதிகாரிகளை பார்த்து
‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம். மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார். ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்.

ஆட்டம் ஆரம்பம்!


ஆட்டம் ஆரம்பம்! இந்தியாவின் (கிரிக்கெட் அணியின் ) டவுசரை கலட்ட...!!
4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக் டக் அவுட்,டெண்டுல்கர் 2 ரன்கள்.இந்திய அணி 4விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 87 ரன்களை?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...