|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 December, 2011

எனக்கு சிலோனே பிடிக்காது இதுல சிலோன் புரோட்டா வேனுமாம்! போராளி திரை விமர்சனம்.!

வழக்கம் போல் சமுத்திரகனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்திருக்கும் கலக்கல் படம் ரோட்டில் பைத்தியமாய்  திரியும் எத்தனையோ பேரை நாம் ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறோம் நமது அவசர வேலை பளுவில்.  கொஞ்சம் உற்காந்து அதையே திரைப்படமாய் எடுத்து இருக்கும் சமுத்திரகனிக்கு பாராட்டுக்கள். ஊரில் லூசுத்தனமாய் சுற்றும் சசிக்கு அவ்வளவு முடி தேவைதானா? ஊரில் நட்பாய் கூடவே சுற்றும் சூரி பின்னி பெடலெடுத்து. நாங்கள்லாம் அப்பவே அப்படி இப்ப ? படம் முழுவதும் பஞ்சு!  

சில படங்கள் பார்க்கும் பொழுது இந்த கஞ்ச கருப்புக்கு கமொடிய வராதான்னு யோசிப்பது உண்டு ஆனால் இந்த படம் பார்க்கும் பொழுது அது ஒழுங்கா யூஸ் பண்ணுறவங்க கைலதான் இப்படம் மூலம் தெரியுது. படம் முழுவதும் நீண்ட நாள்களுக்கு பிறகு நல்ல கமோடி. சொத்துக்காக கொலை செய்ய துடிக்கும் குடும்பம் தப்பித்து ஓடி மனநல காப்பாகத்துக்குள் ஒளியும் சசி அங்கு ஏற்கனவே இருக்கும் அல்லுறு நரேஷ்சையும் கூடவே தப்பிக்க வைத்து சென்னை கூட்டி வருகிறார் (எனக்கு என்னமோ தமிழ்லையே இந்த கேரக்டருக்கு நிறைய பேர் இருக்க இவங்க ஏன் தெலுங்கு மலையாளம்னு அலையுறது தெரியல ?) பெட்ரோல் பங்கில் வேளைக்கு சேரும் இருவரும் அங்கு கஷ்ட படும் புதுமுகம்   நிவேதா தன் அக்காள் கணவனின் இம்சைக்கு ஆளாகும் பொழுது இருவரும் உதவி செய்கிறார்கள் அக்காளை கொடுமை படுத்தும் கணவனாக நமோ நாராயணன் தன் பங்கை கட்சிதமாக ஊரில் பேராண்மை வசுந்தர நடிப்பில் மிரட்டி இருக்காங்க சும்மாவே அவங்களுக்குள்ள ஆண்மைத்தனம் இருக்கும் இதுல ஆண்களுடன் சண்டை போடணும்னா? சுப்பர். சசிக்காக உயிரை விடும் காட்சி மனதில்!    இந்த கதாநாயகி சசியின் முதல் பட நாயகி சுவாதி அந்த கிராமத்து தேவதை இதுல மிஸ்ஸிங் (சொந்த குரலாம் நல்ல பண்ணிருக்காங்க) 

எல்லாம் சுப்பர் இந்த பாடல்தான் ஏன் சொதப்ப விடுறாங்கனு தெரியல ஒரு பாட்டு கூட மனதில் நிற்கவில்லை ஏதோ டூயட் வேற கருமம்! சுந்தர்.c. பாபு கொடுமை!!   சொத்தே அவங்களுக்கு இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஏன் கொலை செய்ய துடிக்கிறது புரியலை?. காலனியில் குடி இருக்கும் படவா கோபி அவர் மனைவி அடிக்கும் ரவுசு வயிறு புண்ணாகும் குடிகாரனை வருபவரும் ஞானசம்பந்தம், பெட்ரோல் பங் முதலாளி, ஜெயபிரகாஷ். அனைவரின் நடிப்பும் கச்சிதம் இப்படத்தினால் மயக்கம் என்ன சற்று அடிவாங்கும்.மீண்டும் ஒருமுறை நகைச்சுவைக்காக பார்க்க துண்டும் படம். ரொம்ப யோசிக்காம, பார்ப்பவர்களை மண்டை குழம்பவிடாமல் சிம்பிளா, ஜாலியா, நியாமான கோபத்துடன் ஒரு படம் போராளி.     

பார்த்ததில் பிடித்தது...


Night Clubs of Chennai








குஜராத்தில் புதிய கார் ஆலை அமைக்க ரினால்ட் திட்டம்.


ஃபோர்டு, பியூஜியட், மாருதியை தொடரந்து குஜராத்தில் புதிய கார் ஆலை அமைக்க ரினால்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனத்தின் கூட்டணியில் சென்னை அருகே ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. 

புளூயன்ஸ், கோலியோஸ் ஆகிய கார்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் டஸ்ட்டர் என்ற காம்பெக்ட் எஸ்யூவியையும், பல்ஸ் என்ற ஹெட்ச்பேக் காரையும் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கியுள்ள அந்த நிறுவனம் தனது உற்பத்தி திறனை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட வகையில் குஜராத்தில் புதிய கார் ஆலையை அமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஃபோர்ஸ் வர்த்தக இதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஆலையில் சிறிய கார்களை தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குஜராத்தில் 400 ஏக்கரில் புதிய ஆலையை கட்டுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் 7வது நாளான இன்று காலையில் நடைபெற்ற மகா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி வீதி உலா நடைபெற்று வருகின்றது. கார்த்திகை தீப திருவிழாவின் 6ம் நாளான நேற்று வெள்ளி ரத தேரோட்டம், சாமி வீதி உலா, 63 நாயன்மார்கள் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் 7வது நாளான இன்று அதிகாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோரை மரத் தேரில் கொண்டு வந்து சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர்.

காலை 7.20 மணிக்கு விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதன் பிறகு முருகன் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் மதியம் நிலைக்கு வந்ததும் சாமியின் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. அந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'அண்ணாமலைக்கு அரோகா' என்று கோஷமிட்டனர். பெரிய மகாதேர் நிலைக்கு வந்த பிறகு, இன்று இரவு அம்மன் தேர் புறப்படும். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் செல்வது வழக்கம். அம்மன் தேரைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் புறப்படும். மகா தேரோட்டத்தின்போது குழந்தை வரம் வேண்டி குழந்தைகள் பெற்ற தம்பதிகள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்ய கரும்பு தொட்டிலில் தங்கள் குழந்தைகளை வைத்து மாட வீதிகளில் வலம் வந்தனர்.தேரோட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எப்எச்எம் இதழுக்கு ரூ. 10 கோடி கேட்டு வீணா மாலிக் நோட்டீஸ்


தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி எப்எச்எம் இந்தியா இதழுக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்தில் வீணா மாலிக்கின் முழு நீள நிர்வாணப் படம் இடம் பெற்றிருந்தது. இடதுபுற தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்ற பச்சை பெரிதாக தெரியும் வகையிலும், தனது இரு கைகளாலும், முன்னழகை மறைத்தபடியும் போஸ் கொடுத்திருந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் நான் இப்படி ஒரு போஸே கொடுக்கவில்லை என்று வீணா விளக்கம் அளித்தார். ஆனால் எப்எச்எம் இதழ் அதை மறுத்தது. வீணாதான் இப்படி போஸ் கொடுத்தார். மேலும் ஐஎஸ்ஐ என்ற எழுத்து நன்கு பெரிதாக தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த போஸுக்காக அவருக்கு பெரும் தொகையும் கொடுத்துள்ளோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எப்எச்எம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா. அதில், இந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது. இதனால் எனது புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டது. இந்த செயலானது இந்திய பீனல் கோட் சட்டத்தின்படியும், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வீணா கூறியுள்ளார்.

ஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம் பாஜக


தமிழகத்தில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின் கடமை; அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கைமுல்லை பெரியாறு அணையை அடைத்து விட்டு புதிய அணையை கட்டுகிறோம். தமிழகத்தின் 999 ஆண்டு முல்லை பெரியாறு அணையின் உரிமையை மூட்டை கட்டிவையுங்கள். நாங்கள் கட்டும் புதிய அணையில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தாராளமாக தருகிறோம் என்று கேரள அரசும், முல்லை ரியாறு அணையை மூடி விட வேண்டும் என்று மூச்சுக்கு முன்னூறு முறை குரல் கொடுக்கும் கேரளத்தின் அனைத்து கட்சிகளும் முழங்குகிறார்கள். 

இருக்கின்ற அணையில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமையை பலம் இழக்க வைப்பதற்காக அணையே பலவீனமானது என்று உண்மைக்கு புறம்பாக குரல் கொடுக்கும் சுயநலவாதிகள் புதிதாக அணைகட்டி அதில் தண்ணீர் உரிமை தருவார்களாம் அதை மக்கள் நம்பவேண்டுமாம். அணை பலமாக இருக்கிறது என்று மத்திய நிபுணர் குழு கூறிவிட்டது. உச்சநீதி மன்றம் முல்லை பெரியாறு அணையின் பலம் உறுதியாக உள்ளது. நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று கூறிவிட்டது. அப்படி இருந்தும் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு தயாராக இல்லாததோடு ஏற்கனவே குறைக்கபட்டுள்ள 136 அடியை மேலும் 120 அடிக்கு குறைக்க வலியுறுத்தி கேரள முதல்வர் உம்மன் சாண்டி முதற்கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கேரளத்தில் பேசுகிறார்கள் என்றால் இது தண்ணீர் தருவதற்காக அல்ல தவிக்கின்றவன் குரல்வளையை நசுக்குவதற்காகத்தான். 

நதிநீர் பிரச்சனையில் கேரளம் தமிழகத்தை வஞ்சிப்பதில் தான் குறியாக உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணங்களாக நெய்யாறு இடது கரை சானல், பரம்பிக்குளம் ஆழியாறு போன்று பல பிரச்சனைகள் உள்ளன. எனவே தமிழக அரசு முல்லை பெரியாறு அணை பிரச்சனையை மட்டும் மனதில் கொள்ளாமல் அம்மாநிலத்தோடு தொடர்புடைய அனைத்து நதிநீர் பிரச்னைக்கும் தீர்வு கானும் வகையில் தான் பிரச்னையை அனுகவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண் உண்மையில் விருப்பம் இருக்குமென்றால் யாரோடு அதுகுறித்து பேச வேண்டுமோ அவர்களையும் மதிக்கும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். மாறாக தமிழக முதல்வர் அவர்களின் உருவ பொம்மையை எரிக்கும் அளவுக்கு செல்கிறார்கள் என்றால் இவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் மனநிலைக்கு மாறாக பூதாகரமாக்கவே திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவு. தமிழர் உணர்வுகளை சீர்குலைக்கும் எந்த ஒரு செயலையும் பாரதீய ஜனதா கட்சி ஏற்காது.  

முல்லை பெரியாறு அணை பிரச்னையை வைத்து தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு செல்கின்ற வாகனங்கள் தாக்கப்படுவதும் தடுக்கப்படுவதும் உடனடியாக நிறுத்த வேண்டும் அதற்கு அம்மாநில அரசு தயாராக இல்லாத நிலையில் தேச ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்போருக்கு துணைபோகும் கேரள அரசை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தயாராக வேண்டும். கேரள மாநிலத்தின் சபரிமலைக்கு புனித யாத்திரையாக லட்சக்கணக்கான தமிழர்கள் தினந்தோறும் சென்று வருகிறார்கள். இந்த பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள அரசின் கடமை. அதற்காக ஐயப்ப பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்பட்டால் தமிழக பாரதிய ஜனதா கட்சி அதனை வேடிக்கை பார்க்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த விரும்பினால் வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த நதிநீர் இணைப்பு திட்டத்தை உருவாக்குவதற்கு உறுதியாக அனைத்து நதிகளையும் தேசிய மயமாக்கி எந்த மாநிலத்திற்கும் பாதகமில்லாத வகையில்; நதிநீர் பங்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற சுயநல அரசியல் சிந்தனையும் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசை உலுக்க இருக்கும் லோக்பால் மசோதா மற்றும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி இறக்கப்பட்டு மன்மோகன் சிங் அரசே கவிழ்ந்திடும் ஆபத்தான அரசியல் புயலில் இருந்து திசை திருப்பவும்; தான் செய்த பாமாயில் ஊழல் போன்ற புகார்களிலிருந்து தப்பிக்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி எடுத்துள்ள அரசியல் வியூகம் தான் இது என்பது அரசியல் தெரிந்தவர்கள் நன்கு அறிவார். அதே போல் 5ஆண்டுகள் கேரளத்தில் முதலமைச்சராக இருந்த முல்லை பெரியாறு பிரச்னைக்கு ஒரு தீர்வும் காண இயலாத கேரள கம்யூனிஸ்ட் தலைவருள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் பிரவம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று உம்மன்சாண்டி அரசை வீழ்த்தி பதவியை தட்டிப்பறிக்கும் ஒரே நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளார்கள். இவர்களின் இந்த சூழ்ச்சிகளுக்கு கேரள மக்கள் துணை போகக்கூடாது என்பதோடு தமிழக மக்களும் இதனை நன்கு புரிந்து கொண்டு அரசியல் சதுரங்க விளையாட்டிற்கு இரையாகி நாட்டின் ஒற்றுமையை குலைக்க முயல்வோருக்கு துணை போய்விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்னிய முதலீடு முடிவு: நிறுத்தப் படவில்லை ஒத்திவைக்கப் பட்டுள்ளது! பிரணாப் முகர்ஜி திமிர் பேச்சு!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற அரசின் முடிவால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற முடக்க நிலைக்கு தீர்வு காண, மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, தற்காலிகமாக அன்னிய முதலீட்டு முடிவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. பாகக மூத்தத் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, மத்திய அரசு தனது முடிவை நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், எதிர்கட்சிகளுடன் சுமுகத் தீர்வு ஏற்படும் வரையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற மத்திய அரசின் முடிவு நிறுத்திவைக்கப்படும் என்று பிரணாப் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரிசெய்யும் வகையிலேயே மத்திய அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.


முன்னதாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற முடிவை மத்திய அரசு நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, தன்னிடம் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், முடிவு நிறுத்தப்படவில்லை என்றும் தெளிவாகத் தெரிகிறது.

பொறியியல் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு!


இந்தியாவில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 5 சதவீத இடம் ஒதுக்கப்பட உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிமுகப்படுத்தியுள்ள கல்விக் கட்டண ரத்து திட்டத்தின் மூலம் இந்த ஒதுக்கீடு ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்று ஏஐசிடிஇ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேலும், 2012-13ம் கல்வியாண்டில் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டண ரத்து திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஏழை மாணவர்களுக்குப் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இவர்களுக்கு தனிக் கலந்தாய்வு நடத்தப்படும். கல்விக் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
புதிய கல்விக் கட்டண ரத்து திட்டத்தை, கடந்த கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் சில மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அதற்கு முன்பே மாணவ சேர்க்கை நடைமுறைகளை முடித்து விட்டிருந்ததால் , அப்போது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டது என்று அவர் குறிப்பட்டார்.

ஃபோர்ப்ரியா படத்திற்கு தங்கமயில் விருது...


கோவாவில் 10நாட்களாக நடந்து வந்த 42வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 3ம் தேதி கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. இறுதிநாள் விழா கலா அகடாமி கலை அரங்கில் கோலாகலமாக நடந்தது.   * விழாவில் சிறந்த படத்திற்கான தங்கமயில் விருதுக்கு பல்வேறு படங்கள் போட்டியிட்டது. அதில் கொலம்பியா நாட்டில் தயாரான ஃபோர்ப்ரியா என்ற படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு, தங்கமயில் விருதும், ரூ.50லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதனை இப்படத்தின் டைரக்டர் அலெஜன்ட்ரோ லான்டிஸ் பெற்றுக் கொண்டார். 

* ஈரான் நாட்டின் தயாரிப்பான நதிர் அன்ட் ஸி‌மன் என்ற பெர்ஷிய மொழி படத்திற்கு வெள்ளி மயிலும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதனை இப்படத்தை இயக்கிய அஸ்கர் பர்ஹாடிக்கு பெற்றுக்கொண்டார். 

* சென்ற ஆண்டு இந்தியாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதாமின்டே மகன் அபு, மலையாள படத்திற்கு, நடுவர் குழுவின் விஷேச விருது மற்றும் ரூ.15 லட்சம் பரிசுத்தொகையும் கிடைத்தது.  

* சிறந்த நடிகருக்கான ரூ.10 லட்ச பரிசுத்தொகை, இஸ்ரேல் நாட்டு படமான ரெஸ்டோரேஷன் படத்தில் நடித்த சஸ்ஸான் கேபேவுக்கு கிடைத்தது.  

* சிறந்த நடிகருக்கான ரூ.10 லட்ச பரிசுத்தொகை, ரஷ்ய படமான எலெனா படத்தில் நடித்த நடேஸ்தா மார்கினாவிற்கு கிடைத்தது.  

* கோவா திரைப்பட விழாவின் போது மாரடைப்பால் மரணமடைந்த பிரேசில் நாட்டு இயக்குநர் ஆஸ்கர் மரோன் ஃபில்ஹோவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விழாவின் இறுதி நாளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.    இந்தவிழாவில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் சவுத்ரி மோகன் ஜதுவா, கோவா முதலமைச்சர் திகம்பர் காமத், ‌கோவா திரைப்பட விழாவின் இயக்குநர் சங்கர் மோகன் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே நாள்...


  • தாய்லாந்து தேசிய தினம் மற்றும் தந்தையர் தினம்
  •  உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த தினம்(1901)
  •  இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ அரவிந்தர் இறந்த தினம்(1950)
  •  எஸ்.டி.டி., தொலைப்பேசி இணைப்பு சேவை ஐக்கிய ராஜ்யத்தில் 2ம் எலிசபெத் ராணியால் துவங்கப்பட்டது(1958)
  •  பிரெஞ்ச் நாணயமான பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது(1360)

இந்தியர்களிடம் ஒரு கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்!!!


இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது' என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும். இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம். கடந்த 2009 -10ம் ஆண்டில், இந்தியர்களின் சேமிப்பில், 7 முதல் 8 சதவீதம் தங்கமாக இருந்தது. தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு சொத்தாக சேமித்து வைப்பதில், இந்தியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்கத்தின் தேவையானது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 23 சதவீதம் குறைந்திருந்தாலும், டன் அளவில், தங்கத்தை அதிகளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. பணத்தின் மதிப்பு குறைவதற்கு, தங்கத்தின் நுகர்வு அதிகரிப்பதும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தங்கம் தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில், இந்தியாவில் சப்ளையான தங்கத்தில், 92 சதவீதம் இறக்குமதி மூலமே சரி செய்யப்பட்டது. மீதி மட்டுமே இதர வகைகளில் வந்தது. இவ்வாறு, மேக்குவாரி கூறியுள்ளது.

நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர்...


தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது இவர்கள் தஞ்சை ஆற்றுப்பாலம் ஜூம்மா மசூதியில், சில வாரங்களாக தங்கி பிச்சை எடுத்து வருகின்றனர். காந்திஜி சாலையில் உள்ள இரட்டை மஸ்தான் தர்கா அருகில் இரவு நேரங்களில் தங்கி வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி, கீழவாசலைச் சேர்ந்த மன்சூர் என்பவர், தொழுகைக்கு வந்துள்ளார். அவர் மொபைல் போன் தொலைந்ததும் போலீசில் புகார் செய்தார். உடனே, பள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் மன்சூர் சேர்ந்து, சந்தேகத்தின் பேரில் மசூதி வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை சோதனையிட்டனர். அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அப்துல் சமது பையை எடுத்து சோதனையிட்ட போது, அவரது பையிலிருந்து கத்தை, கத்தையாக லட்சக்கணக்கில் பணம் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகிகள், சமதையும், அவரது பணத்தையும் தஞ்சை மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். எஸ்.ஐ., சுதா மற்றும் போலீசார், அப்துல் சமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அப்துல் சமது கூறியதாவது: கடந்த 2003ல், சென்னை தாம்பரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்திருந்தேன். அதேபோல், சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் சில வங்கிகளில் பணத்தை பிரித்து டெபாசிட் செய்து வைத்திருந்தேன். பிச்சை எடுப்பது எளிதாக இருந்தாலும், இரவில் தங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆகையால், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணத்தை எடுத்து, தஞ்சையில் இடம் வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஆசையில் வந்தேன். ஒரு மாதமாக இடம் தேடியும், சரியான இடம் அமையவில்லை என்பதால், கையிலேயே பணத்தை வைத்து அலைந்து வருகிறேன். இவ்வாறு அப்துல் சமது கூறினார். மேலும், அவர் வைத்திருந்த, 6 லட்சத்து, 23 ஆயிரத்து, 930 ரூபாய்க்கு உரிய வங்கி ரசீதுகளை போலீசாரிடம் காட்டியதும், அவரை, "பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறி வியப்புடன் அனுப்பி வைத்தனர்.

மகராஷட்டிராவில் 42 லட்சம் போலி ரேசன் கார்டு மூலம் உணவுபொருளை கொள்ளையடித்து வெளிமார்க்கெட்டில் விற்ற விவரம் 25 ஆயிரம் கோடி வரை இழப்பு!


நாட்டில் பெரும் புயலை கிளப்பிய ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடு விவகாரம் எழுந்த மகாராஷட்டிராவில் போலி ரேசன் கார்டுகள் மூலம் உணவுபொருளை கொள்ளையடித்து வெளிமார்க்கெட்டில் விற்ற விவரம் வெளிவந்திருக்கிறது. காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் ஏற்கனவே ஒரு முறைகேடு காரணமாக முதல்வர் பதவியை இழந்தவர் அசோகக்சவான். இவருக்கு பின்னர் புதிதாக கடந்த 2010 நவம்பர் மாதம் முதல்வராக பிரிதிவிராஜ்சவான் பொறுப்பேற்றார்.

தற்போது வெளியாகியிருக்கும் முறைகேடு விவரம் வருமாறு; போலி ரேசன் கார்டு மூலம் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மும்பை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. இந்த மனுவில் அன்னாஹசாரே குழுவை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் சட்டப்படி இந்த துறையில் நடந்த விவரத்தையும் ஆதாரமாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25 ஆயிரம் கோடி வரை இழப்பு: மனுதாரர் வக்கீல் ஆசீஸ்கைவாட் இந்த வழக்கு குறித்து கூறுகையில்: உணவுபொருள் பொது விநியோ திட்டத்தின்கீழ் தாசில்தார் அலுவலகம் முறையான ஆவணங்கள் பராமரிக்கவில்லை. பல ஆவணங்கள் போலியாக சித்திரிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் கவனமும், ஒப்புதலும் இல்லாமல் சுமார் 42 லட்சம் போலி ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட உணவு பொருள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் கோடி வரை சுரண்டி அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். நாங்கள் கேட்பதெல்லாம் போலி ரேசன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதுடன் , சம்பந்தப்பட்ட ரேசன்கடை மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இழந்த பொருட்கள் மற்றும் இதற்கான தொகையை மீட்க வேண்டும் .இவ்வாறு வக்கீல் கூறினார். 

இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. முறைகேட்டில் மாநில அரசு எடுத்த ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்ற விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வழக்கை வரும் ஜனவரி 13 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நாளில் வரும் விசாரணையின்போது மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கோர்ட் கருதினால் கடும் உத்தரவுகளை கோர்ட் பிறப்பிக்கும் இதன்பின்னர் கிரிமினல் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் என சட்டப்படிகள் வேகமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில் கடந்த 1995 முதல் 2009 வரை இந்த முறைகேடு நடந்திருக்கிறது. இந்த காலங்களில் சிவசேன 2 முறையும், காங்கிரஸ் 6 முறையும் ஆளும் தகுதியில் இருந்துள்ளது.

தலையணையால் அமுக்கி பெண் குழந்தை கொலை!

ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் வளவெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் சசிகுமார்(31). விவசாய தொழிலாளி. மனைவி கண்மணி(28). 5வயதில் மகன் உள்ளான். பின்னர் அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. கடந்த 23ம் தேதி வளவெட்டி குப்பம் அரசுஆரம்ப சுகாதார நிலையத் தில் கண்மணிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 3வது நாள் தாயும், சேயும் வீடு வந்தனர். அடுத்த நாள்(27ம்தேதி) அந்த பெண் குழந்தை இறந்து விட்டது. குழந்தை இறப்பு குறித்து சந்தேகமடைந்த கிராம நிர்வாக அதிகாரி பொய்யாமொழி உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே அன்றைய தினம் மாலை குழந்தையின் சடலத்தை புதைக்க சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்றனர். உடையார்பாளையம் போலீசார் சென்று நடுவழியில் அவர் களை மடக்கி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பிரேத பரிசோதனையில், தலையாணையால் அமுக்கி குழந்தையை கொன்றது அம்பலமானது.  இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சசிகுமார், கண்மணி இருவரையும் நேற்று கைது செய்தனர்.

முதல் முறையாக கண்பார்வையற்றவர் தலைமை ஆசிரியராக!


காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் 5 வயதில் கண்பார்வை இழந்தார். தனது 8-வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து 11-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்து தேர்ச்சி பெற்றார். ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார். அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களை பெற்றார் பார்வையற்ற மாணவர்களுக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு 1981-ல் தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், சங்கத்தின் தலைவராகவும் சேவை புரிந்துள்ளார்.

பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தில் 2 முறை மாநில தலைவராக இருந்துள்ளார். 1984-ல் முதுகலை ஆசிரியராக பணிநியமனம் இவருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3.12.1984 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம் ஆசிரியராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் முதுநிலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

 
பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருந்தார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ் நாட்டின் முதல் பார்வையற்ற தலைமை ஆசிரியராக பொறுப்பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர். இது குறித்து தலைமை ஆசிரியர் மனோகரன்,    ‘’நான் பொறுப்பெற்று இருக்கும் பள்ளியில் போது தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை நூற்றுக்கு நூறு ஆக்க வேண்டும் என்பதே என் லட்சியம்’’ என்றார்.

மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு..... : வைகோ!


மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்:  முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கை - குறித்து.முல்லைப் பெரியாறு அணை குறித்த தமிழக மக்களின் தீவிர அச்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கேரள அரசாங்கத்தின் ஆதரவோடு அங்குள்ள அரசியல்  கட்சிகளின் மோசமான, தீய எண்ணத்தோடும், சட்ட விரோத அச்சுறுத்தலோடு கூடிய நடவடிக்கைகள் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு 2-ஆம் தேதி முல்லைப் பெரியாறு குறித்து நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பின்வரும் பகுதிகளை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“முல்லைப் பெரியாறு அணை 1895-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர்-கொச்சின் அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டிற்கு முல்லைப் பெரியாறு அணையில் சட்டபூர்வமான உரிமை உள்ளது. 1976-ஆம் ஆண்டு கேரள அரசால் கட்டப்பட்ட இடுக்கி அணைக்குத் தண்ணீரைப் பெறுவதற்காக, 800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக, சுயநலமிக்க குறுகிய எண்ணம் படைத்த சிலரால் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய்யான எச்சரிக்கையைப் பரப்பி வருகின்றனர். அப்படி குறுகிய எண்ணம் படைத்தவர்களின் முயற்சியால் அணையின் தண்ணீர் தேக்கும் உயர அளவை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்து உள்ளனர்.

அதன்மூலமாக தமிழக மக்களுக்குச் சரிசெய்ய முடியாத இழப்பையும் இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் வரத்தே இல்லாமல் செய்துள்ளார்கள். 1979-ஆம் ஆண்டு கேரள அரசாங்கம் இந்த அணை தொடர்பாக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மத்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அணைப் பகுதியைப் பார்iவியிட்ட பிறகு அணையின் நீர்மட்ட உயரத்தை முதற்கட்டமாக 145 அடிக்கு உயர்த்தலாம்; பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் அணையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்று சான்று வழங்கியுள்ளார்கள். இரு மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்ட பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையின் பலத்தைக் கூட்டுவதற்குத் தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்குக் கேரள அரசு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும், கேரள அரசாங்கம் சட்ட விரோத நடவடிக்கைகளில்  ஈடுபட்டுக் கொண்டு இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் சவால் விடுகின்ற வகையில் நடந்து கொள்கின்றது. 2006-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதியன்று கேரள சட்டமன்றத்தில் கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் சேமிப்புத் திருத்த மசோதா 2006 கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 2006 மார்ச் 18-ஆம் தேதியன்று சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு முதன்முறையாக ஜனநாயக விரோத சட்டம் கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் கேரள அரசாங்கத்திற்கு எந்தவொரு அணையையும் நீர்த்தேக்கத்தையும் உடைப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2003 வரை கேரளாவின் அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை இடம் பெறவில்லை. ஆனால், 2006-ஆம் ஆண்டு சட்டதிருத்த மசோதாவின் மூலமாகக் கேரளாவின் நீர்த் தேக்கங்கள் மற்றும் அணைகள் பட்டியலில் முல்லைப் பெரியாறு அணை முதலிடத்தில் சேர்க்கப்பட்டு  அணையின் முழுக் கொள்ளளவும் 136 அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் சட்டத்தில் கேரள அரசாங்கம் மிகவும் துணிச்சலாக நீர் ஆணையத்தின் நடவடிக்கையும், கேரள அரசாங்கத்தின் நடவடிக்கையும் இந்தியாவின் எந்த நீதிமன்ற வரம்புக்கும் உட்பட்டதல்ல என்ற ஒரு பிரிவும் இடம் பெறச் செய்துள்ளது. இது இந்திய அரசாங்கத்திற்கே கேரள அரசால் விடப்பட்ட சவால் ஆகும்.” எங்களுடைய கவலைதோய்ந்த வேண்டுகோள் மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதி வரை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் அணையின் உறுதித் தன்மையையும், பாதுகாப்பையும் ஆய்வு செய்த வண்ணம் உள்ளார்கள். உயர்ந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக அணையின் உறுதியைப்  பலப்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பது உண்மையான செய்தியாகும்.

மூன்று முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு: 1)      கான்கிரீட் கலவை மூலமாக அணைக்குத் தொப்பி போன்ற பாதுகாப்பை உருவாக்குவது : 12,000 டன் கலவை மூலமாக அணையின் பலத்தைக் கூட்டி அதன் வாயிலாக எத்தகைய அழுத்தத்தையும், நிலநடுக்கப் பாதிப்பையும் தாங்குகின்ற வலிமையை உருவாக்கியுள்ளது.

2)      கம்பிவலத் தடத்தின் மூலம் நிலைக்கச் செய்வது : ஆயத்த முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட அமைப்பை நங்கூரம் போலப் பயன்படுத்துவது.

3)      கான்கிரீட் மூலமாக அணையின் அடித்தளத்தைப் பாதுகாப்பது : அணையின் அடிமட்ட அகலம் 144.6 அடியிலிருந்து 200.6 அடியாக மாற்றுவது இந்தியாவில் எந்தவொரு அணைக்கும் இல்லாத சிறப்பாக அடித்தள அகலம் அமைந்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துப்படி அணை 7 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கத்தைத் தாங்க வல்லது. ஆனால், நிலநடுக்கம் 5 ரிக்டர் அளவுக்கு மேல் அணை இருக்கும் பகுதியில் ஏற்பட வாய்ப்பில்லை. வாதத்திற்கு 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படும் என்றுவைத்துக் கொண்டாலும் குமுளியிலும், குமுளியைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிந்து  விழுந்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தக் கடிதத்துடன் காணொளிக் குறுந்தகடு ஒன்று இணைத்துள்ளேன். அதில் அணையின் உறுதித் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அணையை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தகுதிவாய்ந்த தமிழ்நாட்டைத் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களால்

தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசும் அங்குள்ள அரசியல் கட்சிகளும் அணை உடையப் போவதாகவும், அதனால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற உளவியல் ரீதியான பயத்தையும், பதட்டத்தையும் கேரள மக்கள் மனதிலே உருவாக்கி வருகின்றார்கள். இது ஒரு பொய்யான செய்தி. கேரள அரசாங்கம் அணையை உடைக்க முடிவெடுத்து விட்டது. அதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் புதிய அணை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் முதலமைச்சர் கடந்த 6 மாதங்களில் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், அந்தச் செய்தி உண்மையல்ல. நான்கு முறைதான் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவும் முல்லைப் பெரியாறு அணை அருகில் ஏற்படவில்லை.

கேரள அரசாங்கம் புதிய அணையை ஏற்கனவே அணை இருக்கும் உயரத்தில் இருந்து கீழே தாழ்வான பகுதியில் கட்டத் திட்டமிட்டுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் அணை கட்டும்போது கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட பெற முடியாது. இப்பொழுதுள்ள அணை உடைக்கப்படுமேயானால் தமிழகத்தில் 2,17,000 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமலும், 85 இலட்சம் மக்கள் குடிதண்ணீருக்கும் வழியில்லாமல் அல்லல்பட நேரிடும். அதேநிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் தமிழகத்தின் தென்பகுதிகள் காலப்போக்கில் பாலைவனமாக மாற நேரிடும்.

மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அக்கிரமச் செயல்களில் கேரளத்தினர் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதியும், டிசம்பர் 4 ஆம் தேதியும் அணையை உடைக்க முயற்சித்துள்ளனர். ஒன்றாம் தேதி அன்று கேரளத்தினர் முல்லைப் பெரியாறு அணையை சேதப்படுத்த முயன்று அதனைத் தடுக்கப்போன கேரள மாநில போலீசாரையும், தாக்கியுள்ளனர். நேற்று டிசம்பர் 4 அன்று ஒரு வன்முறைக்கூட்டம் கடப்பாரையோடு, சம்மபட்டிகளோடு, இரும்புக் கம்பிகளோடு சென்று பேபி அணையை உடைக்க முயற்சித்துள்ளனர்.  இதனைப் தடுப்பதில் கேரள காவல்துறையை திணறிப்போயுள்ளது. அணையை உடைப்போம் என்று கேரள அரசே அறிவித்துவிட்டதால், அணையை கேரள போலீசார் பாதுகாக்க முடியாது. எனவே, முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அங்கு குவிப்பதற்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை

எடுக்க வேண்டும். இதனையே தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளர்.தமிழ்நாடு, கேரளாவுக்கு உணவு தானியங்கள், பால், காய்கறிகள், கால்நடைகள் போன்றவற்றைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுமேயானால் இரு மாநில மக்களிடையேயான சகோதர ரீதியான உறவுகள் பாதிக்கப்படும். அதன்வாயிலாக எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படும். இந்தியாவின் பரந்த நலன் கருதி நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு மத்திய அரசு புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். பழைய அணையைப் பாதுகாக்க வேண்டும். 
தங்கள் அன்புள்ள
(வைகோ)

சந்திரகிரகணம் அன்று நள்ளிரவில்தான் சாப்பிட வேண்டுமா?


சந்திர கிரகணம் நிகழும் வருகிற 10-ந்தேதி அன்று நள்ளிரவில் தான் சாப்பிட வேண்டுமா? என்பது குறித்து அர்ச்சகர்கள் விளக்கம் தெரிவித்து உள்ளனர். பெங்களூர் உள்பட இந்தியாவின் இதர பகுதிகளில் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை 6.16 மணி முதல் இரவு 9.48 மணி வரை சந்திர கிரகணம் நிகழும். சம்பிரதாய முறைகளை கடைபிடிப்பவர்கள், சந்திர கிரகணத்துக்கு முன்பாக 6 மணியில் இருந்து 9 மணி வரை உணவு சாப்பிட மாட்டார்கள். சந்திர கிரகணம் நிகழும்போது உணவு சமைக்கவோ அல்லது முன்கூட்டியே உணவை சமைத்து வைக்கவோ மாட்டார்கள். 

சந்திர கிரகணம் முடிந்த பிறகு தான் உணவு சமைக்க தொடங்குவார்கள். அதன்பிறகு குளித்து, பூஜை முடிந்த பிறகே சாப்பிடுவார்கள். இதனால் சந்திர கிரகணம் அன்று சம்பிரதாயத்தை முறையாக கடைபிடிப்பவர்கள் நள்ளிரவில் தான் உணவு சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. மேலும் இறந்த மூதாதையர்களுக்கு `திதி' கொடுக்கவும் இரவு வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது. சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்றது அல்ல, எனவே சந்திர கிரகணத்தை எந்தவித சிறப்பு கண்ணாடியும் அணியாமல் வெறும் கண்களால் பார்க்கலாம்

குளோனிங் முறையில் மீண்டும் மமூத்...


உலகில் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'மமூத்' என்ற மிகப்பெரிய உருவமுள்ள யானைகள் அதிக அளவில் இருந்தன. அவை உடலில் ரோமங்களுடன் நீண்ட பெரிய சுருண்ட தந்தங்களை கொண்டவை. அந்த யானை இனம் படிப்படியாக அழிந்தது. தற்போது ரஷ்யாவின் சைபீரியா வனப்பகுதியில் மட்டும் இந்த வகை யானைகள், மிக குறைந்த அளவில் உள்ளன. அழியும் விளிம்பில் உள்ள இந்த யானை இனத்தை மீண்டும் பெருக செய்ய ஏற்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
 
எனவே அவற்றை 'குளோனிங்' முறையில் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கான ஆராய்ச்சியில் ரஷியாவின் சக்கா குடியரசு மமூத் அருங்காட்சியகமும், ஜப்பான் கின்கி பல்கலைக் கழகமும் ஈடுபட்டுள்ளன.  ஏற்கனவே, பாதுகாக்கப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மமூத் யானையின் தொடை எலும்பு மஜ்ஜை (போன்மேரேர்) பகுதியில் இருந்து எடுக்கப்படும் செல்களின் மூலம் 'குளோனிங்'  முறையில் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அந்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் குளோனிங் 'மமூத்' யானைகள் உருவாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கணவரின் அனுமதியுடன் கவர்ச்சியாக நடிக்கிறேன்!









சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறினார். ‘நான் அவன் இல்லை’, ‘அரவான்’ ஆகிய படங்களில் நடித்தவர் சுவேதா மேனன். ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். ‘ரதிநிர்வேதம்’ என்ற படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர பல்வேறு விளம்பர படங்களிலும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார் 

இந்நிலையில், ஸ்ரீனிவாச மேனன் என்பவரை இவர் கடந்த ஜூனில் திருமணம் செய்துகொண்டார். சுவேதா மேனன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,’’ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்வதில் பெண்கள் கைதேர்ந்தவர்கள். ஒரே நேரத்தில் நடிப்பு, குடும்பம் இரண்டையும் என்னால் கவனிக்க முடிகிறது. திருமணத்துக்கு பிறகு எவ்வளவு நேரம் குடும்பத்துக்காக செலவிடுகிறேன் என்பதைவிட, அவர்களுக்கு உபயோகமாக எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்பதைத்தான் முக்கியமாக பார்க்கிறேன். சினிமா ஒரு தொழில். அதில் சாதாரண வேடம், கவர்ச்சி வேடம் என்ற வித்தியாசங்கள் கிடையாது. கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறில்லை. நான் மட்டுமல்ல, என் கணவரும் இதை நன்கு புரிந்திருக்கிறார். நடிப்பு தொழிலை நான் தொடர்ந்து செய்வதற்கு அவர் அதிகபட்சமாக உதவி செய்கிறார். எனது முன்னேற்றத்தில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்’’என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணைக்காக கூடலூரில் இளைஞர் செல்வப் பாண்டியன் தீக்குளிப்பு!


கூடலூர் அருகே இரு மாநிலங்களிலும் மக்கள் ஒரு மாநில வாகனங்களை மறு மாநிலத்தினுள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறை, கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் கூடலூரில் இன்று காலை செல்வப் பாண்டியன் என்பவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் திடீரெனத் தீக்குளித்தார். உடன் இருந்தவர்கள் அவரை உடனடியாக  மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புனித நதியின் பயணம்... uchithanai mukarnthal...





இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தன்னுடைய அழகான கிராமத்தில் ஒரு சிட்டுக்குருவியைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்த 13 வய்து சிறுமி Y.புனிதவதி. அக்குழந்தை போரின் பெயரால் எப்படி சீரழிக்கப்பட்டாள் என்பதை விவரிக்கிறது “உச்சிதனை முகர்ந்தால். திரைப்படம்.புனிதவதி எந்த தேவதையாலும் ஆசிர்வதிக்கபடவில்லை. அவள் எல்லா சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேர்ந்தது உலகில் எந்த குழந்தைக்கும் நேரக் கூடாது. 2009 மார்ச் 1-ம் தேதி புனிதவதி என்கிற அந்த புனித நதியின் வாழ்க்கை திசை திருப்பப்படுகிறது.

அதே ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வரை அந்தகுழந்தைக்கு நேரும் சோதனைகளை வார்த்தைகளால் எடுத்து சொல்லிவிட முடியாது.  எனினும் தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே மகிழ்ச்சியை சுமந்து வலம் வரும் அந்த குட்டி தேவதையை நேசிக்கிற மனிதர்கள், அவள் வாழ்க்கை பயணம் முழுவதும் அவளை தொடர்ந்து வருகிறார்கள். அந்த மனிதநேயம் தன் இறைவன் இருப்பை உறுதி செய்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - அந்த புனித நதியின் பயணம் தான் உச்சிதனை முகர்ந்தால் என்று உணர்ச்சி பொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இப்படத்தின் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.   புனிதவதியாக சிறுமி நீநிகா, சத்யராஜ், நாசர், சீமான், சங்கீதா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.   எக்காரணம் கொண்டும் நான் சினிமாவில் பாட்டெழுத மாட்டேன் என்று உறுதியோடு இருந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இப்படத்தில் பாடல்கள் எழுதி உள்ளார்.   அரசியல் விமர்சகராகவும் சினிமாவின் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழருவி மணியன் இப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.   மைனா படத்தின் மூலம் இசையில் தனக்கான முத்திரையை பதித்த டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

பாடலாசிரியர் - காசி ஆனந்தன் 

இருப்பாய் தமிழா நெருப்பா... நீ! 
இழிவாய் கிடக்க செருப்பா... நீ!  
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே 
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே...
துடித்து துடித்து உடல் சிதைகிறதே... 
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே... 
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் 
அவள்தாய்மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்! எரிமலை தனியுமா... தண்ணீரில்!  
கடல் அலை கரையுமா... கண்ணீரில்! 
முழங்கிடும் சங்கே முழங்காயோ  
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ 
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று 
விடியலைக் காணும் களம் இன்று 
வெட்டவெளியோ வீடானது...  
பட்டினியோ உணவானது... 
போராடு நீ வீரோடு!  
மின்னலின் தொடர்ச்சியே... இடியாகும்! 
இன்னலின் தொடர்ச்சியே.விடிவாகும்! 
கொந்தளித்து அறம் வெடிக்காதோ 
கொடியவர் மூச்சை முடிக்காதோ 
ஆயிரம் அலைகளை தோளாக்கு 
அடிமைக்கு விடுதலை நாடாக்கு
மாந்தர் உயிரோ நிலையற்றது... 
மானம்தானடா நிகரற்றது... போராடு நீ வீரோடு! 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...