|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2014

நண்பனா இருக்கிறது கஷ்டம் ப்ரோ!


ஹீரோக்கள் பற்றிப் பேசியிருக்கோம். ஹீரோயின்கள் பற்றிப் பேசியிருக்கோம். ஹீரோவுக்கு நண்பர்களாய் வரும் பரிதாபத்துக்குரிய ஜீவன்களைப் பற்றி என்னைக்காவது யோசிச்சிருக்கோமா? ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருந்து அவஸ்தைப்படுகிறவங்களோட மைண்ட் வாய்ஸ்ங்க இது.
கேங்கா குட்டிச் சுவத்துல உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருக்கும்போது அந்தப் பக்கம் ஏதாவது ஒரு பொண்ணு கிராஸ் பண்ணிட்டாப் போதும், அந்தப் பொண்ணு ஒருவேளை ஹீரோவோட ஃப்ரெண்டை லுக் விட்டிருந்தாக்கூட, ''மச்சான் அவ உன்னைத்தான்டா பாக்குறா''னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்லணும்.
இந்த ஹீரோவுக்கு லவ் ஃபெயிலியர் ஆனாப் போதும். உடனே பீர் பாட்டிலோட ஒரு காதல் தோல்வி டாஸ்மாக் பாட்டுப் பாடறதுக்கு ரெடி ஆகிடணும். அதில் அவிய்ங்க சொல்ற மொக்கைத் தத்துவத்துக்கெல்லாம் ஃபீல் ஆகணும். கருமம்டா.
ஹீரோ புதுசா ரூட் விடுற  அந்தப் பொண்ணு காந்தி பார்க்குக்கு மூணாவது தெருவுல குடியிருந்தாலும் சரி, அந்த பார்க்கிலேயே குடியிருந்தாலும் சரி... அட்ரஸ் தேடி ஹீரோகிட்ட ஒப்படைக்க வேண்டியது நம்ம தலையாயக் கடமைங்க.
ஹீரோவுக்கு மட்டும் மும்பை, கேரளா வெளிநாட்டுல ஆரம்பிச்சு, வடநாட்டுல தொடங்கி கொடநாடு வரைக்கும் ஹீரோயின் தேடுற நம்ம  டைரக்டருங்க நமக்கும் சில நேரம் ஜோடினு ஒண்ணு போடுவாங்க. ஹூம், என்னத்தச் சொல்ல, அதே அருக்காணிகள்தான்.
அப்புறம் பாருங்க... இந்த ஹீரோயின்ஸ் சில நேரம் தண்ணிக்குள்ள விழுந்தாலோ அல்லது அவங்களை ரவுடி குரூப்ஸ் தொரத்திக்கிட்டு வந்தாலோ நாம என்னதான் ஸ்விம்மிங்ல கோல்டுமெடலும் கராத்தேவுல எல்லா கலர்லேயும் டஜன் கணக்குல பெல்ட் வாங்கியிருந்தாலும் நாம காப்பாத்தக் கூடாது. ''மாப்ள... காப்பாத்து''னு எக்கோ வாய்ஸ்ல ஹீரோவைத்தான் கூப்புடணுமாம். பாடியை டச் பண்ற எந்த விஷயமா இருந்தாலும் அவர்தான்  டீல் பண்ணனும்னு கம்பெனி ரூல்ஸு.
17 தடவை டேக் வாங்கி ரெண்டு லைன்ல ஹீரோ சொல்ற அந்தபஞ்ச் டயலாக்குக்குக் கையில் உள்ள ரேகை அழியிற வரைக்கும் கை தட்டுவானுங்க. நாம என்னதான் கருத்தா, பக்கம் பக்கமா டயலாக் பேசுனாலும் ''பையன் வரவர நல்லா காமெடி பண்றான்ல?''னுதான் கமென்ட்ஸ் வரும்.
இந்த ஹீரோ வாங்கிக் கொடுக்கிற ஓசி தம்முக்கும் ஒண்ணேகால் ரூபா டீக்கும் நாள் பூரா நாயைவிடக் கேவலமா அவங்க கூடவே டிராவல் பண்ணனும். மொத்தத்துல ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருக்கிறவங்க வெட்கம், மானம், ரோஷம், காதல் ஏன் சில நேரம் ஏ.டி.எம்-மையும் கூட அடகு வெச்சிட்டுத்தான் பொழப்பை நடத்தணும்.
இதாவது பரவாயில்லைங்க, பல படங்களில் ஹீரோவை வில்லனோ, வில்லனோட அடியாளோ கத்தியால குத்த வர்றப்போ, சடார்னு குறுக்கே பாய்ஞ்சு, சதக்குனு கத்திக் குத்தை வயித்துல வாங்கணும். இதுக்கெல்லாம் என்ன தியாகி பென்ஷனா தருவாய்ங்க?
''ஃப்ரெண்டு கேரக்டர், அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்லாம் வேணாம். லேட்டானாலும் பரவாயில்லை. நடிச்சா ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான்''னு ஒருத்தர் சொன்னாரே, காரணம் இப்போ புரியுதா?

முடிந்தது மாருதி 800 சகாப்தம்!


இந்தியர்களின் கார்விருப்பத்தை நிறைவு செய்த மாருதி 800 வகை கார் உற்பத்தியைநிறுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறிய வகை கார்களை உற்பத்தி செய்யும் விதமாக ஜப்பான் நாட்டை சோ்ந்த சுசூகி நிறுவனத்துடன் இணைந்து மாருதி 800 கார்கள் தயாரிக்கப்பட்டன. கடந்த 1980-ம் ஆண்டுகளில் அதன் விலை 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதன்விலை ரூ.2.35 லட்சமாகும் எத்தனை சிறியவகை கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் இந்த மாருதி 800 வகை கார்களை விரும்பியவர்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இதன் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தப் போவதாகவும், இந்த வகை கார்களுக்கான உதிரி பாகங்கள் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள்வரை மட்டுமே சந்தையில் விற்பனை செய்யப்படும் என மாருதி சுசூகி நிர்வாக இயக்குனர் சி.வி.ராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டின் ஐதராபாத் பெங்களூரு, கான்பூர், புனே உள்ளிட்ட 13 நகரங்களில் மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவை தற்போது முற்றிலும் நிறுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஆல்டோ, வேகன், ஸ்விப்ட் போன்ற பிராண்டுகளின் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியை அதிகரி்க்கச்செய்யவும் விற்பனையை அதி்கரிக்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மாருதிசுசூகி டீலர்களிடம் எத்தனை 800 வகை கார்கள் உள்ளன என்றும் தெளிவாக கூறமுடியாது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3 முதல்4சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறியவகை கார்களுக்கு முன்னோடி: தற்போது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10, ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800 மட்டுமே. மேலும் நடுத்தர மக்களிடம் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதும் இவையே. குறைந்த அளவே காசு இருந்தால் போதும். கார் வாங்க வேண்டிய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை ஈடுகட்டியது மாருதி 800 என்றால் மிகையில்லை.

எரிப்பதும்,எரிவதும் நியாயமா.?

சாதி மதம் பாராமல்,நேரம் காலம் பார்க்காமல்,மழை,வெயிலை பொருட்படுத்தாமல் ஏழை,எளியவர்களை நாளெல்லாம் சுமந்து செல்லும் என்னை ஏன் உங்களது கோபத்திற்கு ஆளாக்கி தீயால் எரிக்கிறீர்கள்,கல்லால் எரிக்கிறீர்கள்...என்று பஸ்சே பேசுவது போல சென்னை தாம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை கவர்ந்துள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...