|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 April, 2012

இதே நாள்...


  • சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம்
  • போர்ச்சுகல் விடுதலை தினம்(1974)
  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்(1874)
  • அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)

விட்டுக்கொடுங்கள்...

கூட்டுக்குடும்பம் என்பது இன்றைக்கு அறிதாகி வருகிறது. இதற்கு காரணம் நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற ஈகோதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும், விட்டுக்கொடுத்தலும் இருந்தால் இல்லறத்தில் ஒற்றுமை தழைத்தோங்கும் என்கின்றனர் முன்னோர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

புன்னகை முகம் உலகம் என்பது கண்ணாடி போன்றது. நம்முடைய முகத்தை அப்படியே பிரதிபலிக்கும். நாம் சிரித்தால் நம்மை சுற்றி உள்ளவர்கள் சிரிப்பார்கள். நாம் கடுமையாக நடந்து கொண்டால் அவர்களும் கடுமையாக நடந்து கொள்வார்கள். எனவே இன்முகத்துடன் முன் மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்.

குறை கூற வேண்டாம் கூட்டுக்குடும்பத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் ஒரு விசயம் ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குறை கூறுவது. எனவே கூறுவதை விட நடந்த தவறை உரியவரிடமே எடுத்துக் கூறலாம். சின்ன விசயங்களுக்கு கூட பாராட்டுங்கள் உங்கள் மேல் மதிப்பு அதிகரிக்கும். அதேபோல் எந்த விசயத்திற்கும் நன்றி தெரிவியுங்கள்.

உதவுங்கள் நல்லது எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே பிறருக்கு உதவுங்கள். அதேபோல் பிறருக்கு விட்டுக் கொடுப்பது. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது கூட்டுக்குடும்பத்தில் அவசியமான ஒன்று. தற்பெருமை பேசாமல் இருப்பது. தெளிவாகப் பேசுவது. நேர்மையாய் இருப்பது. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பதும் அவசியம்.

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் கூட்டுக்குடும்பத்தில் பொதுவாக நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள். இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். ஒரு பொழுதாவது ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள்.

தம்பதியர் ஒற்றுமை கூட்டுக்குடும்பத்தில் தம்பதியர்கள் கலந்து பேச அதிக நேரம் கிடைக்காதுதான். எனவே இரவில் உறங்குவதற்கு முன் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும் வண்ணம் எதிர் எதிரே படுக்கையிலோ அல்லாது தர்பை, மாம்பலகை போன்ற ஆசனங்களிலோ அமர்ந்து கொள்ள வேண்டும். எவ்வித உரையாடலும் இன்றி அமைதியாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமேனும் இந்த இல்லற பூஜையை நிகழ்த்தி வந்தால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெருக ஏதுவாகும். குடும்ப ஒற்றுமையை பேணிக் காக்கும் அற்புத வழிபாடு என்கின்றனர் முன்னோர்கள்.

யோசித்து பேசுங்கள் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கு முன்னர் இருவரும் கலந்து ஆலோசியுங்கள். வார்த்தைகளை பேசிவிட்டு யோசிப்பதை விட எந்த ஒரு வார்த்தையும் பேசும் முன் யோசித்து பேசுங்கள். சின்னச் சின்ன விசயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது தேவையற்றது. எனவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படுதை தவிர்க்கும். தெரியாமல் வார்த்தைகள் விழுந்துவிட்டால் உடனே மன்னிப்பு கேட்க தயங்கவேண்டாம். நாம் பேசும் விசயம் எதற்காக என்பதை இருவருமே உணர்ந்து கொண்டால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம். சண்டை எனில் தனிமையில் சண்டை போடுங்கள். தவறு உங்களுடையது எனில் தயங்காமல் காலில் விழுங்கள். தம்பதியரிடையே மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் ஒற்றுமையை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

இதே நாள்...


  • காம்பியா குடியரசு தினம்(1970)
  • தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கரான ஜி.யு.போப் பிறந்த தினம்(1820)
  • இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது(1993)
  • இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்(1973)
  • அமெரிக்காவின் முதல் செய்தித்தாளான தி போஸ்டன் நாளிதழ் வெளியிடப்பட்டது(1704)

சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி !


பெட்ரோலைப் போலவே டீசலின் விலையையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா இதனைத் தெரிவித்தார்.இதுவரை பெட்ரோலின் விலையை மட்டுமே சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து வருகிறது. அதுவும் எந்த மாநிலத்திலாவது தேர்தல் வந்துவிட்டால், பெட்ரோல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை.சமீபத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வந்ததால் விலையை ஏற்ற மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட நிலையிலும் கூட விலை உயர்வுக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.இதனால் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

அதே போல ஒரு லிட்டர் டீசலை விற்பதால் ரூ. 14 வரையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையால் ரூ. 300 வரையிலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயால் ரூ. 20 வரையிலும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றால் தினந்தோறும் ஏற்படும் ரூ. 573 கோடி நஷ்டத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசே மானியமாகத் தந்து வருகிறது.ஆனாலும், தொடர்ந்து இது போல கொடுத்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை என்றும் இதனாஸ் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெயின் விலைகளை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசை ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், சமையல் எரிவாயு- மண்ணெண்ணெய் விலையை உயர்த்தினால் ஓட்டுக்களில் பெரிய ஓட்டை விழும் என்று மத்திய அரசு அஞ்சுகிறது.

இதனால் டீசலின் விலையை மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், டீசல் விலை உயர்ந்தால் நாட்டில் எல்லா பொருட்களின் விலைவாசியும் உயரும் என்ற அச்சமும் மத்திய அரசிடம் உள்ளது.ஆனால், அரசை நடத்தவும் புதிய திட்டங்களை அமலாக்கவும் தேவைப்படும் நிதியைத் திரட்டவும், மாதந்தோறு டீசல் விற்பனையால் சந்தித்து வரும் பல்லாயிரம் கோடி ரூபாய் விரயத்தைத் தடுக்கவும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.இதனால் டீசல் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கொள்கைரீதியில் முடிவெடுத்துள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.அதே நேரத்தில் சமையல் கேஸ் விலையை மத்திய அரசே தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்றார்.

கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!


கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும். கோவிந்தாய நமஹ என்ற படத்தில் இப்பாடலை போட்டுள்ளனர். படு வேகமாக இந்தப் பாடல் பிரபலமாகியுள்ளது. இதுவரை யூடியூபில் பத்து லட்சம் ஹிட்டுகளுக்கு மேல் அடித்துள்ளதாம். படமும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

3 படம் போண்டியானதால், கொலவெறிப் பாடல் மீதான மோகமும் மங்கிப் போய் விட்டது. இதையடுத்து அந்த இடத்தை இந்த கோவிந்தாய நிரப்பும் என்று சொல்கிறார்கள்.இந்த ஆண்டின் மிகப் பிரபலமான கன்னடப் பாடலாக இது உருவெடுத்துள்ளதாம். இப்பாடலுக்கு இசையமைத்துள்ளவர் குருகிரண். படத்தை இயக்கியிருப்பவர் புதுமுகமான பவன் உடையார். சேத்தன் மற்றும் இந்து நாகராஜ் பாடலைப் பாடியுள்ளனர்.

திருகோணமலையில் 60 ஆண்டுகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு !

 இலங்கையில் தம்புள்ளப் பள்ளிவாசல் பெளத்த பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தால் சிறுபான்மையினர் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கு பகுதியில் திருகோணமலையில் 60 ஆண்டுகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மருத்துவமனை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விஷயங்களில் குறுக்கிடும் விவகாரமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.திருகோணமலை மருத்துவமனை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதியை விரிவுபடுத்த வேண்டும் என்று காரணம் கூறி விநாயகர் ஆலயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புனிதமான ஆசிரியை தொழிலை மறந்து இச்சைக்காக ஒரு மாணவனை...


மாணவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியை குமுது தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சென்னை ஐகோர்ட்டில் சவுகார்பேட்டை பி.கே.ஜி. 2 வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன்குமார். இவரது மூத்த மகன் ஆனந்தா (வயது 17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சவுகார்பேட்டையில் உள்ள மோதிலால் போர்மா சனாதன தர்மா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான்.அவன் படிக்கும் அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியையாக குமுது (37) பணியாற்றுகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 4 ந் தேதி பள்ளிக்குச் சென்ற ஆனந்தா மாயமாகிவிட்டான். ஆனந்தாவை ஆசிரியை குமுது கடத்திச் சென்றதாக யானைக்கவுனி போலீசில் தந்தை சரவணன்குமார் புகார் செய்தார்.

மேலும் சென்னை ஐகோர்ட்டில் சரவணன்குமார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அடுத்து, டெல்லி அருகே உள்ள குருகாவ் என்ற இடத்தில் வைத்து குமுதையும் ஆனந்தாவையும் போலீசார் பிடித்தனர். ஆள் கடத்தல் வழக்கில் குமுதுவை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். ஆனந்தா பெற்றோருடன் சென்றுவிட்டான்.இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் குமுது மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி பொன்.கலையரசன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:குமுது எந்த தவறையும் செய்யவில்லை என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அந்த மாணவன்தான் சொந்த விருப்பத்துடன் குமுதுவுடன் சென்றதாகவும், எனவே அது கடத்தல் குற்றத்தின் கீழ் வராது என்றும் குமுது சார்பில் வக்கீல் வாதிட்டார்.இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் 365 ஆகிய பிரிவுகளின்படி, 17 வயதுடைய மாணவனை சிறுவன் என்று கருத முடியாது என்றும் தெரிவித்தார். மனுதாரரின் வீடு சென்னையில் உள்ளது என்பதாலும், குழந்தையை கவனிக்க வேண்டியதிருப்பதாலும் குமுதுக்கு ஜாமீன் அளிக்க வேண்டுமென்று வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் தலைமை வக்கீல் எம்.எல்.ஜெகன், 11 ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியை டெல்லிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களை கடும்பாடுபட்டு போலீசார் பிடித்தனர். படிப்பில் ஆனந்தா தங்க மெடல் வாங்கியவன். இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் குமுதுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வாதிட்டார்.35 வயதுடையை இந்த ஆசிரியை தனக்கு கீழ் படிக்கும் விடலை பருவ மாணவனை, நெருக்கத்தை பயன்படுத்தி தவறாக உபயோகித்து இருக்கிறார். மாணவனின் மனநிலையை கணக்கிட்டு, அவனை பல நாட்களாக அவனது பெற்றோர் பள்ளிக்கு விடவில்லை.ஆனால் செய்முறைத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றபோதுதான் மாணவன் வீடு திரும்பவில்லை. 4.2.12 காணாமல் போன மாணவன் 15.3.12 அன்றுதான் குமுதுவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.மாணவனை தூண்டிவிட்டு, அவனை டெல்லிக்கு அழைத்துச் என்று ரகசியமாக வைத்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, புனிதமான ஆசிரியை தொழிலை மறந்துவிட்டு இச்சைக்காக ஒரு மாணவனை குமுது பயன்படுத்தியிருக்கிறார்.வழக்கு விசாரணை முடியவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எனவே ஆசிரியை குமுதுக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை?

1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

நன்றி: ஞாநி.

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்!

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்:

ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 

இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட இல்லாத மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இப்பழமொழி உணர்த்த வரும் கருத்துப்படி பார்த்தால் நல்லகாலம் என்பது அனைத்து வகையான மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது வரவே செய்யும் என்பதே. 

ஆனை போல பெரியவர்களானாலும் சரி, பூனை போல சிறியவர்களானாலும் சரி, நன்மை மட்டுமல்ல தீமையும் அனைவருக்கும் அவரவர் வினைப்படிதான் நடக்கும்.
இதைத்தான் ' தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று புறநானூற்றிலேயே கூறிவிட்டனர். ஆக, இக் கருத்து ஓரளவுக்குத் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்தினை நேரடியாகக் கூறாமல் ஆனையினையும் பூனையினையும் பயன்படுத்திக் கூறி இருப்பதன் தேவை என்ன?. இக்கருத்து உருவான பின்புலம் என்ன? இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அதற்கு முன்னர், மேற்காணும் கருத்தைத்தவிர, இணையத்தில் காணப்பட்ட வேறு சில கருத்துக்களைப் பற்றிக் காணலாம்.

கருத்து 2: 

இக் கருத்தினை முன்மொழிவோர், ஆனை என்பதனை ஆநெய் என்பதின் திரிபு என்றும் பூனை என்பதனை பூநெய் என்பதின் திரிபு என்றும் கொண்டு, இப்பழமொழியை 

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

என்று மாற்றிக் கொண்டு கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகின்றனர். 

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும். 

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர். 

இக் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பசுநெய் மட்டுமல்ல, கொழுப்பை உண்டாக்கும் பல எண்ணைப் பலகாரங்களையும் மாமிச உணவுகளையும் நாம் (கொழுப்பு என) அறிந்தே தான் உண்கிறோம். இருந்தாலும் அதனைக் குறைப்பதற்கு நாம் தேனையா உட்கொள்கிறோம்?. இல்லையே. மேலும் நெய்யும் தேனும் உணவுப்பொருட்களே. இதில் எதை அதிகம் உண்டாலும் சிக்கல் வரும். அதனால் தானே ' அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்று கூறினர் பெரியோர். எனவே இப்பழமொழி இங்கே உணவுப் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. 

கருத்து 3:

கருத்து 2 னைப் போலவே இதுவும் ஆநெய், பூநெய்யுடன் தொடர்புடையதே. ஆனால் சற்று மாறுபடுவது; ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இக் கருத்தின் படி, 

இறைவனுக்கு முதலில் பசுநெய்யால் முழுக்காட்டப்படும். அதன்பின்னர் தேனால் முழுக்காட்டப்படும். 

இக்கருத்தும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இறைவனுக்கு செய்யப்படும் முழுக்காட்டுதலைப் பழமொழியாகச் சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. மேலும் இறைவனுக்குப் பலவகையான முழுக்காட்டுதல்கள் உண்டு. எனவே இப்பழமொழி இங்கே இறைவனுடன் தொடர்புடையதாய் வரவில்லை என்பது தெளிவு. 

இனி, முதலாம் கருத்துக்கு அரணாக உள்ள இப் பழமொழியின் பின்புலம் பற்றிக் காண்போம்.

பழமொழியின் பின்புலம்:

பழமொழிகளிலே பலவகைகள் உண்டு. பழமொழிகள் கூறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் அவற்றை மருத்துவப் பழமொழி, வேளாண்மைப் பழமொழி, இலக்கியப் பழமொழி, வரலாற்றுப்பழமொழி என பலவகைகளாகப் பிரிக்கலாம். 

நாம் தலைப்பில் கண்ட பழமொழியானது ஒரு வேளாண்மைப் பழமொழி ஆகும். வேளாண்மையே மக்களின் அடிப்படைத் தொழில் என்பதால் இது தொடர்பாக பல பழமொழிகள் வழக்கில் எழுந்தன. அவற்றில் ஒரு சில பழமொழிகள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி: விக்கிகோட்.ஆர்க்)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது.
அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
ஆடிப் பட்டம் தேடி விதை.

மேலே கண்டதைப் போல, வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழிகள் பலவற்றுள்ளும், நமது தலைப்புப் பழமொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்பழமொழியானது வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். 

வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் விலங்கு 'எருது' என்பது அனைவருக்கும் தெரியும். உழவுமாடாகவும் வண்டி மாடாகவும் பெரிதும் பயன்படுவது எருதே ஆகும். பல நேரங்களில் விளைந்த நெற்கதிர்களை கதிரடிக்கவும் இவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தால், யானைகளையும் கதிரடிக்கப் பயன்படுத்துவர். இதன் அடிப்படையில் எழுந்தது தான் கீழ்க்காணும் பாடல்:

" மாடு கட்டிப் போரடித்தால் 
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை."

மிக அழகான இப் பாடலை இயற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தென்மதுரையில் உழவுத் தொழில் எவ்வளவு செழித்திருந்தது என்பது மட்டும் இப்பாடலின் மூலம் நன்கு தெரிகிறது. 

இப்படி யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர், பிரிந்த நெல்மணிகளைத் தனியாக எடுத்துத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பர். இப்போது தான் சிக்கல் துவங்குகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நெல்மணிகளைக் குறிவைத்து எலிகளின் பட்டாளம் படையெடுக்கத் துவங்குகின்றது. ஒவ்வொரு எலியும் தனக்குத் தேவையானதை விட ஐந்து மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டு செல்லுமாம். இதனடிப்படையில் தான்,

"அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி"

என்ற பழமொழியே எழுந்தது எனலாம். 

கூட்டம் கூட்டமாக இவை புகுந்து நெல்மணிகளைத் திருடிக் கொண்டு செல்வதை அப்படியே விட்டுவிட்டால், கிடங்கையே காலி செய்து விடும். எனவே இந்த எலிகளைக் கூண்டோடு ஒழிக்க, பூனைகளைக் கொண்டுவந்து தானியக் கிடங்குக்குள் வைப்பர். பூனைகளும் கிடங்கிற்குள் வருகின்ற எலிகளை வேட்டையாடித் தின்றுவிடும். 

இவ்வாறாக கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும் சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதருக்குத் தேவைப்பட்டது. இதைத்தான்,

யானைக்கொரு காலம் வந்தால்
பூனைக்குமொரு காலம் வரும்.

என்று கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். இப் பழமொழியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால்:

மிகப் பெரிய யானைகள் மட்டுமே பயன் தருபவை அல்ல.
மிகச் சிறிய பூனைகளும் தான். எனவே உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்.! ( நன்றி: திருவள்ளுவர்)

பார்த்ததில் பிடித்தது!

FAMOUS VIETNAMESE SNAKE WINE


தங்கம் விக்குற விலைல நகை வாங்கி கொடுங்கனு படுத்துற 


பொண்டாடிங்களுக்காக கணவர்கள் இனி கொள்ளையடிக்கத்தான் 


செய்யணும்..

இந்த சாதிவெறி புடிச்ச நாய்களை செருப்பால அடிச்சாதான் என்ன?


நல்ல வேளைடா.. இதையெல்லாம் பாக்க கூடாதுனு அந்த 


தாடிக்காரக்கெழவன் எப்பயோ செத்துப்போயிட்டான் போல.


எவ்ளோ எகத்தாளம்.. சாதிசங்க போஸ்டர்ல பெரியார் 


படத்தைப்போடுவானுங்க!


கருப்பு, வெள்ளை சிகப்புக்கு பதிலா சிகப்பு வெள்ளை கருப்புன்னு 


அடிச்சிருக்கும் அடேய் அப்ரசண்டிங்களா, முதல்ல கட்சி கொடி கலர் 


தெரிஞ்சிகிட்டு வந்து போஸ்டர் அடிங்க... அப்புறம் ஆத்தா முட்டி போட 


சொல்லுவாங்க..


விட்டா தமிழ்நாட்டுல வாழற எல்லாருமே வன்னியர்தானு 


சொல்லிடுவாய்ங்க போலருக்கே?


இந்த மருத்துவமாமாமணிகளோட தொல்லை தாங்கமுடியல யுவர் ஆனர்.. 


பூச்சி மருந்தடிச்சு கொல்லுங்க கனம் நீதிபதி அவர்களே...!


அட்சய திருதியில் தங்கம் வாங்கினால் தங்கம் குவியும் என்ற ஆசையில் 


பெருமுயற்சியில் ஒரு கிராம் நகை வாங்கி வெற்றி புன்னகையுடன் வீடு 


திரும்பியவள் அதிர்வடைகிறாள் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் 


சங்கிலியைக் காணோமென்று கூட்டத்தில் திருடியது தெரியாமல் .! உங்கள் 


உழைப்பை மட்டுமே முழுதாக நம்பினால் போதும்! எல்லா 


செல்வங்களையும் அது கொண்டுவரும்! வாழ்க்கை உங்கள் கைகளில்தான் 


உள்ளது.. இதை உணர்ந்தாலே போதும்! தேவையற்ற வதந்திகளை 


நம்பாதீர்கள்!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...