|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2013

புத்த பிட்சு தாக்குதல்!


அசிங்கத்தின் ஊத்தப்பயல் ராஜபக்‌ஷே!


குடும்ப வன்முறை புகார் சென்னை No 1


மாநில அளவில், குடும்ப வன்முறை தொடர்பான புகார் பதிவில், சென்னை முதலிடத்திலும். ஈரோடு மாவட்டம், இரண்டாவது இடத்திலும் உள்ளன.பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்க, மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையம் , மாவட்ட சமூக நல அலுவலர், நீதித்துறை நடுவர் ஆகியோரிடம், பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். மாநிலம் முழுவதும், 5 ஆண்டுகளில், சமூகநல பாதுகாப்பு அலுவலர்களிடம் கொடுக்கப்பட்ட புகாரில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.குடும்ப வன்முறை, கணவன் மற்றும் அவரது குடும்பாத்தார் மீது புகார், வரதட்சணை கொடுமை தொடர்பாக, 2,300 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 இதில், 2,050 புகார்கள் தீர்வு காணப்பட்டு, தம்பதிகளுக்கு கவுன்சலிங் வழங்கி, சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது.குடும்ப வன்முறை புகார் பதிவில், ஈரோடு மாவட்டம், இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 1,158 புகார்கள் பெறப்பட்டு, 730 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.இதுகுறித்து, சமூக நல அலுவலர் ஒருவர் கூறியதாவது:பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளால், பாதிக்கப்படும் பெண்கள் எங்களை அணுகினால், சட்ட உதவிகளை பெறமுடியும். பாதிக்கப்படும் பெண்களுக்கு, மனநல அலுவலர், சமூக ஆர்வலர்கள் முறையான கவுன்சலிங் கொடுத்து வருகின்றனர்.

கோழைகளின் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

ஏப்பா படிக்கிற காலத்துல எதுக்கு போராட்டம்!!??

இப்போதான் படிச்சு முடிச்ச வேலைல சேராம எதுக்கு போராட்டம்!!!??

இப்போதான் உருப்படியா வேலைல சேர்ந்திருக்க இப்போ என்ன 


போராட்டம் வேண்டி கிடக்கு!!!???
காலாகாலத்தில கல்யாணம் பண்ணாம என்ன போராட்டம் 


வேண்டிக்கிடக்கு???

உன்னை நம்பி ஒரு பொண்ணு வேற வந்திட்டா இனி என்ன 


போராட்டம்!!??

புள்ளைகுட்டிகளை படிக்க வைப்பா அதவிட்டுட்டு போராட்டம் அது 


இதுன்னு!!?

வயசான காலத்தில சும்மா கெடக்காம என்ன போராட்டம் வேண்டி 


கிடக்கு!!??

கோழைகளின் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்....புறம் 


தள்ளுங்கள்......ஓயாத அலை, அணையாத தீ !

உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன்!


தொடர்ந்து 4 வது நாளாக உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் , தங்களது உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு போராட்டதின் வடிவத்தை இப்பொழுது மாற்றி அமைத்துள்ளனர் , மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து மூடியும் , மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயிலை மறித்து போராடுவதன் மூலம் தான் மத்திய காங்கிரஸ் அரசு தன மௌனத்தை கலைக்கும் என்றால் அதை செய்வதை தவிர வேற வழியில்லை ,

தமிழக மீனவன் கேட்பதற்கும் பதில் இல்லை,
தமிழக மாணவன் கேட்பதற்கும் பதில் இல்லை.,

மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை, 
நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது. 
( எவனாவது நீ ஆயுதம் எடுப்பியா என்று கேட்பவன்
என் எதிரில் உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன் இது சத்தியம் )

ஐந்தாம் கட்ட ஈழப்போர்....!!!

எங்கு தொடங்கும் என்றா கேட்டாய்? தமிழ்நாட்டின் தற்போதைய எழுச்சி தான் அது. ஒன்றல்ல, இரண்டல்ல.... ஏழரைக் கோடிக்குமேல்.. இங்குள்ள மாணவர்களை விட சிங்களவனின் மக்கட்தொகை குறைவு , அழிக்க நினைத்தால் அழிந்தே போவாய்......!!! —

ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி..வென்றால் ரூ.1 லட்சம்!


இந்திய அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் உதவும் விதமாக ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கவுள்ளது. இதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் டெவலப்மன்ட் என்ற போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான கடைசிநாளாக மார்ச் 31, 2013ஐ நிர்ணயித்துள்ளது அரசு! எம்-கவர்னன்ஸ் என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்படும் போட்டிக்கு பின்வரும் பிரிவுகளில் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை உருவாக்கவேண்டும்.
அரசு சேவைகள்,
கல்வி தொடர்பானவை,
சமூக வலைத்தளம்,
இ - ஹெல்த்
போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியிடப்படும். வெற்றி பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும். 2ஆம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள, அரசாங்க இணையதளம். http://appscontest.mgov.gov.in/mainpage.jsp செல்க. வெற்றிபெற வாழ்த்துக்கள். நண்பர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள், மற்றவர்க்கும் பயன்படட்டும்.


இப்படியும் பெண்கள்?


இரு குழந்தைகளின் தாயான மகள் வேறொருவருடன் ஓட்டம் அவமானத்தில் தாய் தற்கொலை!

இரு குழந்தைகளின் தாயான, தனது மகள் வேறொரு நபருடன் ஓடிவிட்ட அவமானம் தாங்காமல் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம்-திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் மலையாண்டி மனைவி அம்மாபொன்னு (50). இவரது மகள் கலாவதி. ஏற்கனவே திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் தாயான கலாவதி சமீபத்தில் வேறொரு நபருடன் ஓடிவிட்டார். துக்கத்துடன் அவமானமும் தாக்க, அம்மாபொன்னு 4 நாட்களுக்கு முன்னர் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், சுகமடைந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டிற்கு வந்த அம்மாபொன்னு, துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணுக்கு 5 கணவர்கள்... ஒரே வீட்டில் குடித்தனம்?
அண்ணன் தம்பிகள் 5 பேரை திரௌபதி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பற்றி இதிகாசமான மகாபாரதத்தில் படித்திருப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு பெண் 5 கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் பெயர் ரஜோ வர்மா. 21 வயதாகும் அவர் தனது 5 கணவர்களுடன் டேராடூன் அருகே உள்ள கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைக்கு தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லையாம். இது பழங்காலமுறை என்றும் கூறும் ரஜோ, தனது தாயார் அண்ணன் தம்பிகள் மூன்று பேரை திருமணம் செய்து கொண்டு மனைவியாக வாழ்ந்தார். தனக்கும் அதுபோல ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. என்கிறார் பெருமையாக! எங்களுடைய ஒரே அறை கொண்ட வீடுதான். பெட் கிடையாது, தரையில்தான் படுத்து உறங்குவோம். எங்களுக்குள் எந்த வித பொறாமையோ போட்டியோ கிடையாது என்கிறார் அந்தப் பெண். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சந்தேசாமாகவே வாழ்க்கிறோம் என்றும் கூறுகிறார் இந்த நவீன திரௌபதி.

3 குழந்தைகளின் தாய்… குடும்பத்தைக் காக்க சுமை தூக்கும் சோகம்.

வடமேற்கு ரயில்வேயில் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்தவர் மகாதேவ். இவருக்கு மஞ்சு தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மகாதேவ் உடல் நலக் குறைவால் திடீரென மரணமடைந்துவிட்டார். கணவரின் இறப்புக்குப் பின்னர் பிழைப்புக்கு என்ன செய்வது என தெரியாமல் விழித்திருக்கிறார் மஞ்சு. கணவர் பார்த்த போர்ட்டர் வேலையை தான் பார்க்கலாம் என்ற தோன்றவே, அதிகாரிகளைப் போய் பார்த்திருக்கிறார். தனது நிலைமையை சொல்லி கணவன் பார்த்த வேலையை தனக்கு கொடுக்கும்படி கேட்டார். அதிகாரிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார் மஞ்சு தேவி. ராஜஸ்தானின் ஒரே பெண் போர்ட்டர் என்பதால் பிரபலமாகி வருகிறார் மஞ்சு தேவி. ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளும் பெண் போர்ட்டரை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்துப் போய், அதன்பிறகு அவரிடம் தங்கள் பைகளை தூக்கிக் கொண்டு வரும் வேலையைத் தருகிறார்கள். இந்த பணி பற்றி கூறும் மஞ்சு தேவி, கணவர் திடீரென இறந்து விட்டார். எனக்கு படிப்பறிவு கிடையாது. அதனால் கணவன் செய்த போர்ட்டர் வேலையை செய்ய முடிவு செய்தேன். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் எனக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. கணவரின் நண்பர்கள்தான் அந்த யோசனையை சொன்னார்கள். அவர்களே அதற்கு ஏற்பாடும் செய்தார்கள் என்றார். 3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்த ரயில்வே அதிகாரிகளும் எனது கணவனின் போர்ட்டர் லைசன்ஸை எனக்கு கொடுத்தார்கள். இந்த தொழிலில் ஆண்கள்தான் அதிகம். நான் ஒருத்திதான் பெண். இருந்தாலும் சக போர்ட்டர்கள் உதவியால் வேலை கஷ்டம் தெரியவில்லை எனக் கூறுகிறார் மஞ்சு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...