|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 April, 2014

களவு போன காவேரி!


குழந்தை திருமணங்கள் நடைபெறும் 5 நாடுகளில் இந்தியாவும்!

குழந்தை திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் அதிக அளவு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.இந்தியாவின் சமூக பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.  உலக அளவில் குழந்தை திருமணம் அதிக அளவு நடக்கும் 5 நாடுகளை லண்டனை சேர்ந்த ஒரு பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது இதில் இந்தியாவுக்கு 5-வது இடம். அந்த நாடுகள் விவரம் வருமாறு:-
நைஜர்
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் படி (UNFPA) ) நைஜர் நாட்டில்  உலகில் குழந்தை திருமணம் அதிக சதவீதத்தில் (75%) உள்ளது. நைஜர் நாட்டில் 3ல் ஒரு பெண்ணுக்கு 15 வயதிற்குள் திருமணம் செய்துவைக்கபடுகிறது.20 முதல் 24 வயதிற்குட்பட்ட பெண்களில் 75 சதவீதம் பேர் 18 வயதை அடையும் முன் திருமணம் செய்து வைக்கபட்டு உள்ளனர். 7 வயது சிறுமிகள் அங்கு மணப்பெண்களாக  விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.அங்கு அதிக அளவு குழந்தை திருமணம் நடைபெற பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக உணவு பற்றாக்குறை ஒரு காரணமாகும் என  வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த  பாத்திமா சூசானா தெரிவித்து உள்ளார்.
சாட்
இந்த நாட்டில் 4 ல் 3 பெண்கள் தங்கள் 18 வயது பிறந்தநாளை நெருங்குவதற்கு முன் திருமணம் செய்துவைக்கபடுகின்றனர், இங்குள்ள அனைத்து சமூகத்தினரிடமும் இந்த பழக்கம் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க கலாச்சார பாரம்பரியம் .மோதல் ,கல்வியின்மை, பொருளாதார சிக்கல், அதிக அளவு குழந்தை பெற்று கொள்ளுதல்  போன்றவற்றால் நிகழ்வதாக போர்டு ஃபவுண்டேஷன் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
மாலவி
 இந்த நாட்டு அரசின் புள்ளிவிவரப்படி   பெண்களில் பாதி சதவீதத்தினர் 18 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கபடுகின்றனர்.சில  சிறுமிகள் 9- 10 வயதிற்குள்ளாக திருமணத்திற்கு வற்புறுத்தப்படுகிறார்கள்.என மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.பெரும் பாலும் வரதட்சணை பணம் பெறுவதற்காகவும் , வறுமையில் இருந்து விடுபடவும் இங்கு குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகின்றன.பாதுகாப்பு இல்லாத செக்ஸ் மூலம் சிறுவயதியில் கர்ப்பமாவதும், பெற்றோர்கள் உணவுக்காகவும் பணத்திற்காகவும் சிறுமிகளை திருமணத்திற்கு தூண்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.
வங்காள தேசம்
யுனிசெப் அறிக்கை வங்காளதேசத்தில்  20 முதல்-24 வயது பெண்களில்  3ல் ஒரு பகுதியினர்  15 வயதிற்குள் திருமணம் செய்துவைக்கபடுகின்றனர். மூன்றில் 2 பங்கினர் 18 வயதிற்குள் திருமணம் செய்துவைக்கபட்டு உள்ளனர் என கூறுகிறது. குழந்தை திருமண தடுப்பு சட்டம் (1929) கீழ்  பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதிற்குள்ளும் திருமணம் முடிப்பது சட்டபடி குற்றமாகும்  . இதற்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனையும், 775 ரூபாய் அபராதமும் விதிக்கபடுகிறது.
இந்தியா
இந்தியாவில் 47 சதவீத பெண்கள்  குறைந்தபட்ச வயதில் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை  ஆணையம் தெரிவித்து உள்ளது. வட மாநிலங்களான பீகாரில்  அதிக அளவாக 68 சதவீதம்  குழந்தை திருமணம் நடைபெறுகிறது.  ஜார்கண்ட் 55.7 சதவீதமும், ராஜஸ்தானில் 57.6 சத்வீதமும், உத்தரபிரதேசத்தில் 54.9 சதவீதமும், மேற்குவங்காளத்தில் 54.8 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 53.8 சதவீதமும் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. குழந்தை திருமணத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இருக்கிறது என்றாலும்  சில நேரங்களில் இங்கு மத அடையாளங்கள் மையப்படுத்தப்படுகின்றன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...