|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 August, 2011

உள்ளூர் சேனல்களை முறைப்படுத்த தமிழக அரசு அதிரடி!

மாநிலம் முழுவதும் புற்றீசல்போல் பெருகியுள்ள உள்ளூர் "டிவி' சேனல்களை முறைப்படுத்த, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, 860 சேனல்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அரசு கேபிள், "டிவி' செயல்பட நடவடிக்கை எடுத்து வருவதால், லைசென்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வரும் உள்ளூர் சேனல்களை முறைப்படுத்துவதற்காக, அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. கேபிள் மற்றும் "டிடிஎச்' மூலம், ஏராளமான "டிவி' சேனல்கள் இயங்கி வருகின்றன.

இது மட்டுமின்றி, உள்ளூர் சேனல்களும் அதிகளவில் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட பகுதியில் மட்டும், உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு இருக்கும். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுடன், குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், அதை சார்ந்த விளம்பரங்களையும் பெற்று ஒளிபரப்பி வருகின்றனர்.மாநிலம் முழுவதும், 860 உள்ளூர் சேனல்கள் இயங்கி வருகின்றன. உள்ளூர் சேனல் ஆரம்பிக்க வேண்டுமெனில், "போஸ்டல் லைசென்ஸ்' மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வினியோக உரிமையை பெற்றுள்ள ஏஜன்சியிடம் இருந்து, உரிமமும் பெற்றிருக்க வேண்டும். இந்த உரிமம், பல ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளூர் தனியார் "டிவி' சேனல் உரிமையாளர் நலச்சங்கத்திடம் இருந்து வருகிறது. உள்ளூர் சேனல் துவக்க நினைப்பவர்கள், இந்த சங்கத்திடம் இருந்து உரிமம் பெற வேண்டும்.

ஆனால், கேபிள் "டிவி' சேவை வழங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டாயத்தால், பெரும்பாலான உள்ளூர் சேனல்களை நடத்துவோர், அந்நிறுவனத்திடம் இருந்து உரிமம் வாங்கியுள்ளனர். இதற்காக, ஒவ்வொரு உள்ளூர் சேனலிடமும் மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அந்நிறுவனம் வசூலித்து வந்தது. கோவை போன்ற இடங்களில் லட்சக்கணக்கில் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த உள்ளூர் சேனல்களால் அரசுக்கு எந்தவித வருவாயும் வராத நிலையில், வருமானம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கே சென்ற நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்திற்கு உயிர் கொடுத்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, "டிவி' சேனல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் அனைத்தையும், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, உள்ளூர் சேனல்களை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் சேனல்களை இழுத்து மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்துவதால், முறையான ஆவணங்கள் இல்லாமல் உள்ளூர் சேனலை நடத்தி வந்தவர்கள், அவர்களாகவே முன்வந்து சேனலை மூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 860 உள்ளூர் "டிவி' சேனல்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
 
இது குறித்து, தமிழ்நாடு உள்ளூர் தனியார் "டிவி' சேனல் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ஜீவா கூறியதாவது:உள்ளூர் "டிவி' சேனல் துவங்க வேண்டுமெனில், தபால் அலுவலகங்களில் 500 ரூபாய் செலுத்தி, "போஸ்டல் லைசென்ஸ்' பெற வேண்டும். இரண்டாவதாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உரிமையை பெற்றுள்ள ஏஜன்சியிடம் இருந்து, ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களும் இருந்தால் தான், உள்ளூர் "டிவி' சேனலை ஒளிபரப்ப முடியும். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து, எங்களது சங்கம் தான் உரிமை வாங்கியுள்ளது. பல ஆண்டுகளாகவே, இந்த உரிமத்தை நாங்கள் தான் வாங்கி வருகிறோம்.முந்தைய ஆட்சிக் காலத்தில், "டிவி' சேவை வழங்கும் ஒரு நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்தியது. எங்களிடம் தான் ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தி, உள்ளூர் சேனல்களிடம், இடத்திற்கு தகுந்தாற்போல் மாதத்திற்கு ஒரு தொகையை வசூலித்துக்கொண்டு, உரிமையை வழங்கியது.தற்போதைய அ.தி.மு.க., அரசு, அரசு கேபிள் "டிவி' சேவையை வழங்க இருப்பதால், உள்ளூர் சேனல்களை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக, 860 உள்ளூர் சேனல்கள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு, உள்ளூர் சேனல்களை முறைப்படுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் விதிமுறைகளுக்குள் உள்ளூர் "டிவி' சேனல்களை கொண்டுவரும்போது, ஏற்கனவே உள்ளூர் சேனல்களை நடத்தி வந்தவர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூர் சேனல்கள் மூலம், அரசுக்கு இதுவரை வருவாய் இல்லை. அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் மூலம், சேவை வழங்குவதன் மூலம், உள்ளூர் "டிவி' சேனல்கள் மூலம், 200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு ஜீவா கூறினார். தமிழ்நாடு கேபிள் "டிவி' உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் காயல் இளவரசும், உள்ளூர் "டிவி' சேனல்களை முறைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதே நாள்...

  • சைப்ரஸ் விடுதலை தினம்(1960)
  •  பராகுவே சிறுவர் தினம்
  •  இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)
  •  ஜன்கர்ஸ் ஜூ 287 என்ற முதல் விமானம் இயக்கப்ட்டது(1944)
  •  வண்ணம் மற்றும் சத்தத்துடனான முதல் கார்டூன் யூப்லிவர்க்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது(1930)

NEEYA NAANA தமிழ் வளர்ப்பு...! PART 2


NEEYA NAANA தமிழ் வளர்ப்பு...! PART 1




நகைச்சுவை குறும்படம்!



வியக்க வைக்கும் சர்கஸ்!


பல்நோய் தீர்க்கும் மகிழம்பட்டை!

புனித மரமாக போற்றப்படும் மகிழமரம் தென்னிந்திய வனப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. உயரமான இந்த மரம் இந்தியாவின் வெப்பமான பகுதிகளின் வளர்க்கப்படுகிறது. மகிழ மரத்தின் மலர்கள் சக்கர வடிவத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியமான சீவகசிந்தாமணியில் “ஓடுதேர்க்கான் வகுளம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:வகுளத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக அமைபவை குர்சிடால், குர்சிடின், அமினோஅமிலங்கள், டி.குளுக்கோஸ், லுபியோல், பெட்டுலினிக் அமிலம் போன்றவை.

இம்மரம் அடர்த்தியான இலைகளையும் மனங்கவரும் இனிய மணமுடைய கொத்தான வெண்மலர்களையும் கொண்டது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.

காமம் பெருக்கும் மலர்கள்: மணமிக்க மலர்களில் இருந்து வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தனமர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம்.

மலர்களின் பொடி மூக்குப்பொடியாக உள்ளிழுக்கப்பட்டு தலைவலி போக்க உதவுகிறது. பூ தாது வெப்பமகற்றும், காமம் பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். பட்டை, சத்து மருந்தாகவும் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோல்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.

நறுமணம் மிக்க மகிழமரத்தின் பூக்களை நுகர்ந்தலே சளி வெளியேறும், தலைவலி குணமடையும், உற்சாகம் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மகிழம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல பயன்படுத்தலாம்.

கருவை பாதுகாக்கும்:பெண்களின் கருத்தரித்தலை ஊக்குவிக்கும். 10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து தினம் 50 மில்லி காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். பழத்தை சாறுபிழிந்து குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும்.

கனிகள் தொடர் வயிற்றுப் போக்கினை தடுக்கும். விதைகள் வயிற்றுப்போக்கினை தூண்டக்கூடியது. குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க வல்லது. மலர்கள் கனிகளுடன் சேர்ந்து சதை இருக்கிப் பொருளாக புண்களைக் குணப்படுத்துகிறது.

பல்நோய் குணமடையும்:மகிழம்பூ கசாய நீர் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதனைக் கொண்டு வாய்க்கொப்பளிக்க பற்களும், ஈறுகளும் கெட்டிப்படும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.

கண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க மகிழமரத்தின் விதைகள் பயன்படுகின்றன. விதையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வயிற்று வலியை குணப்படுத்துகிறது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாகிறது. விதைகளை பவுடராக்கி அதில் தேன், நெய் கலந்து சாப்பிட உடலுக்கு வலு கிடைக்கும். மகிழமரத்தின் வேரை விழுதுபோல அரைத்து வினிகரில் கலந்து வீக்கத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.

பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே

ஓட்டுந் திரைவாய் ஒற்றியூரே. என்று மகிழ மரத்தின் பெருமையை சுந்தரர் பாடியுள்ளார். திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருஇராமனதீச்சரம், திருநீடூர் முதலிய சிவத் தலங்களில் மகிழமரம் தலமரமாக உள்ளது. திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை போன்ற திருத்தலங்களில் மகிழம்பூ இறைவழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தம், சமண சமயத்தவரும் இதனை புனித மரமாக போற்றுகின்றனர்.

மறக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார். இராமநாதபுரம் மாமன்னர் செல்ல முத்து சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ம் ஆண்டு ஒரே பெண் வாரிசாக பிறந்தவர் தான் இந்த வேலுநாச்சியார்.

ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.

ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.

அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார். விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.

அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.

1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.1790ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியானார்.

1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கியவர் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார். முன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.

இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. வீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.

குழந்தைகளின் காதுகளை செவிடாக்கும் கிகரெட் புகை!

புகைப்பிடிப்பதால் புற்று நோய், ரத்தம் சம்பந்தமான நோய், இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் பிறர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகம் அறிவியல் துறை மாணவர்களின் உதவியுடன் சிகரெட் புகையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த புதிய ஆய்வை மேற்கொண்டது. அதில் 12 முதல் 19 வயது வரையிலானவர்கள் ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வந்தன.

சுவாசிப்பதால் ஆபத்து: சிகரெட் பிடிப்பவர்களை விட அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்தது.

சுவாசிக்கப்படும் சிகரெட் புகை, மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று காதின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியை கிரகிக்கும் மெல்லிய உறுப்பை சேதப்படுத்துகிறது. இதனால் ஒலியை வாங்கும் திறன் அந்த உறுப்பு இழப்பதால் செவிட்டு தன்மை உண்டாகிறது. மேலும் அடுத்தவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் சக்தி குறைவதுடன் படிப்பில் நாட்டம் இல்லாமை, அடங்காத்தன்மை போன்ற குறைபாடுகள் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோர், குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வசியம் உண்டாக்கும் காமவர்த்தினி !

தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும் தொட்டாற்சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொடுகின்ற போடு அதனுள் இருக்கும் சக்தி மின்சாரம் போல நம்முள் பாயும். நாற்பத்தெட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதிகரித்து சிற்றின்பத்தை ஊட்டுவதால் காமவர்த்தினி என்றும் அழைக்கின்றனர்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டிரால், பினிடால்,நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. விதைகள் மியூசிலேஜ் கொண்டவை. இதில் குளுக்கோனிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன.

மாந்தீரிக மூலிகை: தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.

“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.” என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர்.

சிறுநீர் கோளாறுகளை போக்கும்: ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புதர்ச்செடியின் தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடியவை. இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை.

இலைகளின் சாறு சைனஸ்,மூலநோய், புண் புரைகளுக்கு மருந்தாகிறது. பசை சுரப்பிகளின் வீக்கம் மற்றும் விரை வீக்கத்திற்கு மேல் பூச்சாகிறது. வேர் சிறுநீர் உறுப்பு கோளாறுகளை போக்கும். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

ஆண்மை பெருகும்: பத்து முதல் இருபது நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள சிற்றின்பம் பெருகும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுத்து வர நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர அவை விரைவில் ஆறும். இதன் இலையை மெழுகு போல் அரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத புண்களில் வைத்து கட்டிவைக்க ஆறிவரும்.

வசியம் உண்டாகும்: வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது. தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்.

வணக்கதிற்குரிய தெய்வங்கள்!

இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது. கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர்.

சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது.தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம்.

ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி.

அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர்.

இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும்.அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம்.

இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன். அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் . தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.

அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான். ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.

ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை. எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை. ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.

புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவனின் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன். இரு சமூகங்களின் காவல் தெய்வங்களாக இன்று மாறி நிற்கிறார்கள் தாயகத்திற்காகப் போராடிய பூலித்தேவனும், ஒண்டி வீரனும்.

கைது நடவடிக்கைக்குப் பயந்து மு.க.அழகிரி மனைவி காந்தி டெல்லியிலேயே முகாம்!

தமிழக போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தால் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.மதுரை அருகே உத்தங்குடியில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை காந்தி அழகிரி முறைகேடாக வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி அழகிரியின் பெயரில் தற்போது நிலம் இல்லை என்றும் வேறு ஒருவருக்கு அவர் பவர் கொடுத்துள்ளதாகவும், இதனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு காந்தியைக் கைது செய்ய முடியாது என்று சட்ட நிபுணர்கள் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனால் காந்தி அழகிரியைக் கைது செய்வதை போலீஸார் நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறது. இருப்பினும் காந்தி அழகிரிக்கு எதிரான ஆதாரங்களை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.இந்தப் புகார் கிளம்பியதுமே மு.க.அழகிரியுடன் டெல்லிக்குப் போய் விட்டார் காந்தி. தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார். கைது நடவடிக்கைக்குப் பயந்தே அவர் டெல்லியில் தொடர்ந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த மு.க.அழகிரியின் கூட்டாளிகள் பலரும் குறிப்பாக பொட்டு சுரேஷ், தளபதி, அட்டாக் பாண்டி என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகிரி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். முதலில் காந்தி அழகிரியைக் கைது செய்து விட்டு இறுதியாக அழகிரி பக்கம் காவல்துறையின் பார்வை திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து மதுரையி்ல பரபரப்பு நிலவுகிறது.

காந்தி அழகிரியை டெல்லியிலும் தமிழக போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதற்காக சிபிசிஐடி போலீஸ் குழு ஒன்று டெல்லியில் முகாமிட்டுள்ளது. அழகிரி வீடு அமைந்துள்ள காமராஜ் மார்க் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேர் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த மத்திய போலீஸ் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் தமிழக போலீஸார் என்று தெரிய வந்தது.

ஆகஸ்ட் 8ம் தேதி திஹார் சிறைக்குச் சென்ற காந்தி அழகிரி அங்கு கனிமொழியை சந்தித்துப் பேசினார். அதுகுறித்த தகவலை திஹார் சிறையில் உள்ள தமிழக ஆயுதப் படை போலீஸார் சென்னைக்குத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கோவில் நிலத்தை காந்தி அழகிரிக்குக் கொடுத்தவராக கூறப்படும் லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர். இதையடுத்து அடுத்து காந்தி அழகிரிதான் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த வார ராசி பலன்...

மேஷம்:
பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். சுப காரியங்கள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்த பயணங்களால் வருமானம் உண்டு. அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.

ரிஷபம்:
பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். கடிதம் மூலம் முக்கிய தகவல் வரும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். மனம் நிம்மதியாக இருக்கும். குழந்தைகள் நலனில் கவனம் தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் பேச்சைக் குறைக்கவும். உங்கள் பொறுப்பில் உள்ள பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

மிதுனம்:
பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று நடக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழ்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும்.

கடகம்:
பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைக்கவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்தி மகிழ்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்:
பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மனம் தெளிவாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பண வரவு சீராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். உறவினர்கள் அன்போடு பழகுவார்கள்.வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டக்கூடும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு அதிகரிக்கும்.

கன்னி:
பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பம் முன்னேற்றகரமான வழியில் செல்லும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். எதிர்பார்த்த இடமாற்றம் பெற உயர் அதிகாரிகள் உதவுவார்கள். வேலைகளை திருப்திகரமாக செய்து முடிப்பீர்கள்.

துலாம்:
பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் மேம்படும். நீண்ட காலமாக எதிர்பார்த்த முக்கிய தகவல் வந்து சேரும்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

விருச்சிகம்:
பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தீயவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கடன் தொல்லைகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

தனுசு:
பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். வரவுக்கேற்ற செலவும் உண்டு. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். மனம் நிம்மதியாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு அதிக ஆதாயமுள்ள வேலை கிடைக்கக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

மகரம்:
பொது: லாபகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு செல்வாக்கான பணி கிடைக்கலாம். சிலருக்கு விருப்ப ஓய்வு கிடைக்கலாம். சக ஊழி்யர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கும்பம்:
பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். சேமிப்பில் கவனம் தேவை. சிலருக்கு புதிய வீட்டுக்கு மாறும் யோகம் உண்டு. உடல் நலம் மேம்படும். சுபச் செய்திகாளால் மனம் மகிழக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பெரியோர் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சகோதர வழி உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு பெற்று மகிழக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.

மீனம்:
பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. மனம் மகிழும் செய்தி வீடு தேடி வரக்கூடும். உடன் பிறப்புகளுடன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சக ஊழியர்கள் பாராமுகமாகவே இருப்பார்கள்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?

செவ்வாய் தோஷம். இதைக் கேட்டவுடன் அலறுபவர்கள் பலர். காரணம், கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷம் இது.ஆனால் செவ்வாய் தோஷம் என்றாலே சிக்கல்தானா, உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பது குறித்து முழுமையான ஜோதிட தகவல்களை அறிந்து கொள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் சக்தி கிருஷ்ணகுமாரை சந்தித்து பேசினோம்.

அவர் கூறியதாவது: லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது. ஆனால் இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.

மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம், அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

2 -  இடம் மிதுனம், அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமில்லை.  

4 - ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.

7 - ம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.

8 - ம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை

காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் அங்காரகன் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷமில்லை.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற காட்டுமிராண்டித்தனம் திருமாவளவன்!


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்திருந்த கருணை மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் அவர்கள் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து தூக்கிலிடப்படலாம் என்கிற அச்சம் பரவியுள்ளது.  

20 ஆண்டுகள் என்பது ஆயுட்காலத் தண்டனையைவிடக் கூடுதலான தண்டனையாகும்.  மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் என்கிற முடிவானது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்கிற நிலையாக உள்ளது.  இதுவே சட்டவிரோதமாகும். உலகளவில் மரண தண்டனையே கூடாது என்கிற கருத்து வலுப்பெற்று வருகிறது.  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.  ஆனால் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் இந்தியாவில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டுவது வியப்பாக உள்ளது.  


பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட சுமார் 44 பேருக்கான மரண தண்டனையை விலக்கிக் கொள்வதற்கான கருணை மனு குடியரசுத் தலைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

மேலும் கருணை மனு விண்ணப்பிக்காமல் மரண தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 286 பேர் காத்திருப்பதாகவும் தெரிகிறது.  ஒட்டுமொத்தத்தில் இந்தியா முழுவதும் சுமார் 330 பேர் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலை உள்ளது.

ஒரு ஜனநாயக நாடு இவ்வளவு பேரையும் தூக்கிலிட்டுக் கொல்லப் போகிறதா என்கிற கேள்வி எழுகிறது.  கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற காட்டுமிராண்டித் தனமான தண்டனைக் கொள்கையிலிருந்து விலகி குற்றவாளிகளைத் திருத்துவது என்கிற தண்டனைக் கொள்கையை ஏற்றுச் செயல்படுவதற்கு உலகில் எண்ணற்ற நாடுகள் முன்வந்துள்ளன. 

இன்னும் இந்தியா தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாதது பழமை வாதங்களின் பிடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.  இந்திய அரசு தமது தண்டனைக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொலைக் குற்றத்திற்கு தண்டனை வேண்டும்! ஆனால் கொலையே தண்டனை என்பது காட்டுமிராண்டித் தனமாகும். ஆகவே மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும். 

அத்துடன் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதே காரணங்களுக்காக சாந்தன், முருகன் என்கிற ஈழத் தமிழ் இளைஞர்களையும், ஒரு ‘பேட்டரி’ வாங்குவதற்கு உதவி செய்த குற்றத்திற்காக பேரறிவாளன் என்கிற தமிழ்நாட்டு இளைஞரையும் தூக்கிலிடுவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும். 

எனவே இந்திய அரசு இம்மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக்கொள்ளவும், 20 ஆண்டு காலச் சிறைவாழ்வை தண்டனைக் காலமாகக் கருதி அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி 19-8-2011 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் சென்னையில் எனது (தொல். திருமாவளவன்) தலைமையிலும், 22-8-2011 அன்று பிற மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  இவ்வார்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.  

திருச்சி ஆர்.டி.ஓ.வுக்கு கல்பனா சாவ்லா விருது!


பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று சுதந்திர தின விழாவில் விருதுகளை வழங்கினார். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதா பெற்றார்.
 
இவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தொண்டாற்றிய ஆவடியை சேர்ந்த டாக்டர் துரைசாமி, திருச்சி மன்னார்புரம் விழிஇழந்த மகளிர் மறுவாழ்வு இல்லத்தை சேர்ந்த பிரியாதியோடர், பாளையங்கோட்டை பிஷப் ஜார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி சார்பில் அதன் தலைவர் சந்திரசேகரன், அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த திருச்சி தனியார் நிறுவனத்தை சேர்ந்த பொன்னுதுரை, தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் தேன் மொழி ஆகியோருக்கு பதக்கம், சான்றிதழ், ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவை வழங்கப்பட்டது.
 
மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனங்களான வேலூர் மாவட்டம் அரியூர் கிராம வளர்ச்சி தொண்டு நிறுவன தலைவர் மணியன் புதுக்கோட்டை ரெகோ திட்ட இயக்குனர் பரிபூரணலில்லி ஆகியோருக்கும் பதக்கம், சான்றிதழ், காசோலை ஆகியவை வழங்கப்பட்டன. 

டி ராஜேந்தர் பேட்டி!


திருநின்றவூரில் ரசிகர்கள் கட்டிய எம்.ஜி.ஆர். கோவில் இன்று கும்பாபிஷேகம்!

















நடிகராக இருந்து முதல்- அமைச்சர் ஆனவர் எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன் என அவர் நடித்த ஏராளமான படங்கள் வெற்றி விழாக்களை கண்டன.
சென்னையில் இன்றும் அவரின் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் பெரும்கூட்டமாக திரள்கிறார்கள். இப்போதும் ரசிகர்கள் இதயங்களில் அவர் வாழ்கிறார். எம்.ஜி.ஆருக்கு தற்போது கோவில் கட்டப்பட்டு உள்ளது.
 
சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் சாலையில் இக்கோவில் நிர்மானிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
 
கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 1600 சதுரஅடி பரப்பளவில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21 1/2 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. இதில் 1 1/2 லட்சம் ரூபாய் ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டன என்றார். எம்.ஜி.ஆர். கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. அதிகாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. புரோகிதர்கள் வேதமந்திரம் ஓதினர்.பின்னர் கலசங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

மங்காத்தா இம்மாதம் 30-ம் தேதி ரிலீஸ்!


அஜீத்தின் 50-வது படம் என்பதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மங்காத்தா படம் பற்றி வெங்கட்பிரபு கூறியதாவது:-
"மங்காத்தா" படத்தில் அஜீத் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். 5 முக்கிய கேரக்டர்கள் உள்ளன. அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப கெட்டவன். அந்த கேரக்டரில் அஜீத் வருகிறார்.  எனது படங்களின் கதை சுருக்கம் கிரிக்கெட்டுக்கும் தொடர்பு இருக்கும். "சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களை சொல்லி உள்ளேன்.
அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம்.   இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார்.  வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு வெங்கட் பிரபு 

அந்த குடியே சொல்லி கேட்கமாட்டோம் இந்த குடி (கோக்) கேட்ருவோம என்ன?


ஆனந்த சுதந்திரம்...


டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் மிகுந்த தொலைநோக்குடன் இந்தியாவின் இன்றைய நிலை குறித்து சிந்தித்ததுடன் அதை பதிவும் செய்திருக்கிறார்.இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றிய அறிஞர் அம்பேத்கார், இன்றைய இந்தியாவின் நிலை குறித்து தமது ஐயங்களை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

“1950 ஜனவரி 26ம் தேதி முதல் இந்தியா மக்களாட்சி நாடாக செயல்பட தொடங்கும். அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் அரசு செயல்படத் தொடங்கும். அந்த நாளில் முரண்பாடுகளோடு கூடிய வாழ்விற்குள் நாம் நுழைய இருக்கிறோம். நம்மிடம் அரசியல் ரீதியான சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக – பொருளாதார ரீதியான சமத்துவம் இருக்காது. அதற்கு பதிலாக சமூக – பொருளாதார நிலையில் இந்தியர்களிடம் ஏராளமான முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.”

“எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு சமூக – பொருளாதார முரண்பாடுகளோடும், ஏற்றத்தாழ்வுகளோடும் நம்மால் வாழ முடியும்? சமூக – பொருளாதார நிலைகளில் சமத்துவத்தை எவ்வளவு நாட்களுக்கு மறுக்க முடியும்? சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்று மாமேதை அம்பேத்கார் தீர்க்கதரிசனத்துடன் இன்றைய இந்தியாவின் நிலையை அன்றே முன்னறிவித்தார்.

இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் தொகுத்தார். இந்த நெறிமுறைகளை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார்கள் என்று நம்பினார். எனினும் பிறந்து சில காலமே ஆன இந்திய குடியரசின் தோள்களில் கூடுதல் சுமையை ஒரேயடியாக சுமத்தக்கூடாது என்ற அடிப்படையில், “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை”களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு எதனையும் அவர் விதிக்க விரும்பவில்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு உடனடியாக வலியுறுத்தி குடிமக்கள் வழக்கு தொடுப்பதற்கும் வகையில்லாத நிலையில் இந்த அத்தியாயத்தை படைத்தளித்தார். ஆனாலும் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை அம்ல்படுத்தாமல் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அம்பேத்கார் எச்சரித்தார்.

இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி அம்பேத்கார் கொண்டிருந்த ஐயம் நியாயமானதே என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுதல்; இவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தல்; ஏழை, பாமர, உழைக்கும் மக்களை ஏமாற்றி, அவர்களின் உடைமைகளை, உழைப்பை சுரண்டுதல்; தொழிலாளர்கள், பணியாளர்களின் உடல் நலம் குறித்து அக்கறையற்று இருத்தல்; குழந்தைகளுக்கு கல்வி மறுத்து அவர்களையும் உடல் உழைப்பு தொழிலாளிகளாக்குதல்; கல்வி, வேலை வாய்ப்பை மறுத்தல்; தொழிற்சாலை நிர்வாகத்திலிருந்து தொழிலாளர்களை அகற்றுதல்; பட்டியல் இனமக்களையும், பழங்குடியினரையும் ஏமாற்றி வஞ்சித்து சமூக அநீதி புரிதல்; சுயச்சார்பு வேளாண்மையை திட்டமிட்டு அழித்து இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்குதல்; சுற்றுச்சூழலை, வனங்களை, வன உயிரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை திட்டமிட்டு அழித்தல்; சுயேச்சையாக செயல்படவேண்டிய நீதித்துறையை அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாற்றியமைத்தல் ஆகிய மக்கள் விரோத பணிகளையே இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி இனத்தவரும், பட்டியல் இனத்தவருமே

சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஓரிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை மற்றும் வனப்பகுதிகளில் இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, சிலிகா, கிரானைட் போன்ற அரிய கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இயற்கை வளங்களை சூறையாடும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

இப்பகுதி மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து தராத அரசு அமைப்புகள் இம்மக்களின் வாழ்வுரிமையை பறித்தெடுப்பதில் முனைந்து நிற்கின்றன.இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும். “இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.

இறையாண்மை கொண்ட இந்திய அரசின் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்சொன்ன கருத்துகளை, ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார்.மாவோயிஸ்ட்களால் வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் கடந்த 2010 ஜூலை 14ம் தேதி டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருவாளர் மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மாற்றுவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகள் எதுவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக ஆயுதப்படைகளை அதிகரிக்கும் போக்கே நிலவி வருகிறது.

இந்திய சுதந்திர போராளிகளின் கனவுகளை, அம்பேத்காரின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, தீவிரவாதத்திற்கு வித்திட்டு, நீர் வார்த்து, உரமிட்டு வளர்த்தவர்கள் அதற்கான காரணங்களை அறிந்தும், அது குறித்து முழுமையா ஆய்வு செய்யாமல் கலைந்து சென்றனர். 

ஒரிஸா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வளம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கடந்த 1987ம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்தியாவின் நவரத்தினங்கள் என்று கூறப்படும் மிகச்சிறந்த நிறுவனங்களி்ல் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்திடம் இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று குடியிருப்பு வசதிகள், சாலை போன்ற அடிப்படை வசதிகள், கல்வி – மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள், விவசாயத்தை புறக்கணிக்க நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது நிலங்களில் புழங்கும் உரிமை ஆயுத முனையில் பறித்தெடுக்கப்பட்டது. அத்துமீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

ஆனால் அரசு வாக்குறுதி வழங்கியபடி இழப்பீடோ, மற்ற வசதிகளோ இந்த கட்டுரை எழுதப்படும் இன்றுவரை செய்து தரப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரங்களை தியாகம் செய்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்ற அம்மக்கள் ஒரிஸா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மிக நீண்டகாலம் நடைபெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரிஸா உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் வாழ்விழந்து தவித்த அம்மக்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்.

இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த கடந்த 2010 ஜூலை 19ம் தேதியன்று தீர்ப்பளித்தது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அம்பேத்காரின் கருத்துகளுடன் தீர்ப்பை ஆரம்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃடாப் ஆலம் மற்றும் பி. எஸ். சவுகான் ஆகியோர் ஒரிஸா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

இலட்ச கணக்கான இந்தியர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பறித்து இந்திய அரசு உருவாக்குவதாக கூறும் துர்வளர்ச்சி காரணமாக, குடிமக்களுக்கு வளர்ச்சி என்ற சொல்லே வெறுக்கக்கூடியதாக, அச்சமூட்டக்கூடியதாக மாறிவிட்டதை நீதிபதிகள் இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அரசின் இவ்வாறான ஒவ்வொரு பொறுப்பற்ற செயல்பாடும் தீவிரவாத அரசியலுக்கும், புரட்சிகர செயல்பாடுகளுக்கும் வித்திடுவதையும் நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

மாபெரும் தொழில்திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப்படும் மக்களுக்கு தேவையான சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படும் அவலத்தையும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு சமூக அவலத்தை விமரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான காரணத்தையோ, தீர்வுகளையோ முழுமையாக விவாத்தித்தார்களா என்பது கேள்வியே

மாமேதை அம்பேத்காரின் தீர்க்கதரிசனம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் நாட்டில் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால் இவற்றை திரும்பியும் பாராமல் தீவிரவாதிகளை ஒடுக்கவதற்காக பசுமை வேட்டை போன்ற ஆட்கொல்லித் தீர்வுகளை அரசு அமைப்புகள் முன்வைக்கின்றன.

இந்த அவலச் சூழலில் இந்தியாவின் 65வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. சுயேச்சையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டிய பத்திரிகைத்துறையும், நீதித்துறையும் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களும் ஏதோவொரு சுரண்டலுக்கு ஆளாகியே வாழ்ந்து வருகின்றனர். இதுதான் ஆனந்த சுதந்திரமா? இதற்குத்தான் சுதந்திரப் போராளிகள் ஆசைப்பட்டனரா? சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்குவதில் குடிமக்களுக்கு பங்கு உள்ளதா?


இந்தியாவின் இன்றைய அவல நிலையை மாற்றுவதில் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் பங்குள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மனித உரிமைப் பார்வையில் கற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுமே இன்றைய தேவை. இது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மிகமுக்கிய தேவையாகும்.இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும். “இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.


திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் !


மயிலாடுதுறை ஒர் விளக்கம் T.R...


நம்ம ஊர் சப்பாத்தி...


பூனைக்கு முதலில் யார் மணிகட்டுறது இதுதான் நம்ப பிரச்னை!


இந்தநாள் ....


பசி- குரும்படம் ...!


விஜய் na mass...............


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...