|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 September, 2011

பாம்பு மசாஜ்!


ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது பீகார்!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவை, பீகார் அரசு, பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளது.

பீகார் மாநிலத்தில், 2007ம் ஆண்டில், நீர்பாசனத்துறை செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ் சங்கர் வர்மா. அதே ஆண்டு ஜூலை 6ம் தேதி, சிவ்சங்கர் வர்மாவின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ. 1.43 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஒன்பது கிலோ தங்கக் கட்டிகள், ரூ. 17 லட்சம் ரொக்கம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான பங்கு மார்க்கெட் முதலீட்டுப் பத்திரங்கள், ரூ. 81 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் இதில் அடங்கும். இதையடுத்து, வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிவ் சங்கர் வர்மா உள்ளிட்ட அவரது உறவினர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, பீகார் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டில், வர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், பெய்லி சாலையில் உள்ள வர்மாவுக்குச் சொந்தமான மூன்று மாடி ஆடம்பர பங்களாவை, கடந்த 4 ம் தேதி, பீகார் அரசு பறிமுதல் செய்தது. இந்த கட்டடத்தை, மனித வளத்துறையிடம் அளித்து, அதை பள்ளிக்கட்டடமாக மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, பீகார் அமைச்சரவை கடந்த 6ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, ரூகான்பூரா குடிசைப் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம், பறிமுதல் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, நாட்டிலேயே முதன்முறையாக, பீகார் மாநிலத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களா பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போலித்தனமான வெற்றிகள் பஞ்சு அருணாசலம்!

தமிழ்சினிமாவில் போலித்தனமான வெற்றிகள் அதிகரித்து விட்டன என்று தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வேதனையுடன் கூறியுள்ளார். சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் `நந்தா நந்திதா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளர் கேயார் பெற்றுக்கொண்டார்.அதன் பின்னர் பஞ்சு அருணாசலம் பேசிய பேச்சு நச் ரகம். அவர் பேசும்போது, `முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும். ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 120 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. `அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். யார் திறமைசாலி என்பதில் பயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் வேதனையுடன் கூறியுள்ளார் ஷிவா நன்றி கூறினார். 

இதே நாள்...


  • வடகொரியா குடியரசு தினம்(1948)
  •  தஜிகிஸ்தான் விடுதலை நாள்(1991)
  •  தமிழ் எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்(1899)
  •  அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)
  •  கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • இந்த வார ராசி பலன் (9-9-2011 முதல் 15-9-2011 வரை)

    மேஷம்;

    பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.
    வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

    சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். மங்கல நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.

    வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். வரவுக்கேற்ற செலவும் உண்டு. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தி மகிழக்கூடும். குடும்பத்தார் அன்பாக இருப்பார்கள்.

    வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பண வரவு அதிகரிக்கும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

    மிதுனம்

    பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக முடியும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப் போடவும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

    வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.

    கடகம்

    பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உடல் நலம் மேம்படும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வசீகரப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

    வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

    சிம்மம்

    பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரியோர்கள் ஆசி கிடைக்கும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனமாக இருக்கவும். இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைக்கவும்.

    கன்னி

    பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தள்ளி போடுவது நல்லது. உடல் நலம் மேம்படும். வழக்குகள் சாதகமாக முடியும்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் பாசமாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யக்கூடும். பேச்சில் நிதானம் தேவை.

    வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

    துலாம்

    பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். பண வரவு தாமதமாகலாம்.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

    வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.

    விருச்சிகம்

    பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழக்கூடும். தபால் மூலம் நல்ல நல்ல செய்தி வரலாம்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.

    வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    தனுசு

    பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு வெளியூர் செல்ல திட்டமிடக்கூடும்.

    வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

    மகரம்

    பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். வரவுக்கேற்ற செலவும் உண்டு. முக்கிய நபர் ஒருவரை சந்தித்து அவரால் நன்மை அடையக்கூடும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.

    பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. குழந்தைகள் நலனில் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

    வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

    கும்பம்

    பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

    பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வீண் செலவுகளைக் குறைக்கவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும்.

    வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    மீனம்

    பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

    பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். குடும்பத்தார் ஒற்றுமை இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் புது தெம்பு பிறக்கும்.

    கனவாகி வரும் கண்ணாமூச்சி விளையாட்டு!

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வீட்டுப்பாடங்களை திணிப்பனாலும் விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது.

    ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.

    கிராமத்து விளையாட்டுக்கள்

    விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி,

    கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி இவை சிறுமியர்கள் மற்றும் குமரிப்பெண்களுக்கான விளையாட்டு. இளமைக்காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

    நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவற்றில் கண்ணாமூச்சி, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, சீப்பு விக்கிது. தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளில் தாய்ச்சி எனப்படும் தலைவர் ஒருவர் இடம் பெற்றிருப்பார்.

    மெல்லவந்து மெல்லப்போ, பூச்சொல்லி போன்ற விளையாட்டுகளில் இரு உத்திதார் இருக்கிறார்கள். இவை அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகள். குழுவாக பிரிந்து விளையாடும் சில விளையாட்டுக்களில் உத்திதாய்ச்சி எனப்படும் துணைத்தலைவர் இடம்பெற்றிருப்பார்.

    கண்ணாமூச்சி

    கண்ணாமூச்சி விளையாட்டில் தலைவராக கருதப்படுபவர், குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரை பட்டவர் என்று கூறுகின்றனர். அவரது கண்ணினை, தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தலைவரானவர்

    “கண்ணா மூச்சி ரேரே…

    காரே முட்டே ரே ரே …

    ஒருமுட்டையை தின்னுபுட்டு….

    ஊளை முட்டைய கொண்டுவா ….” என்று பாடுவார்.

    பாடல் முடிந்தவுடன் தலைவர் அந்த நபரின் கண்களைத் திறந்து விடுவார். ஒளிந்திருக்கும் குழந்தைகளை அந்த நபர் தேடிக்கொண்டு போகும் போது அவரிடம் சிக்கியவர் அவுட்டாகிறார். இதன் பின்னர் அவுட்டான நபரின் கண்கள் மூடப்படும். மீண்டும் விளையாட்டு தொடரும். தேடும் நபரிடம் அகப்படாமல் குழந்தைகள் அனைவரும் தலைவரை தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள். இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புறவிளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும்.

    சென்னை மாநகராட்சி எல்லைகள் விஸ்தரிப்பு- 200 வார்டுகளுடன் மெகா மாநகராட்சியானது!

    சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு 200 வார்டுகளுடன் கூடிய மெகா மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. புதிய விஸ்தரிக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள்,15 மண்டலங்கள் இருக்கும். இவற்றிந் விவரங்கள், வாக்குச் சாவடி விவரங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

    சென்னை மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை மேயர் சத்தியபாமா, ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,

    தற்போதைய சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது. இதில், 155 வார்டுகள் உள்ளன. இவை 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு இணையாக, சென்னை மாநகரத்தை மாற்றி அமைத்தால் தான் மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி பெற்று, அடிப்படை வசதிகளை மேலும் சிறப்பாக செய்ய முடியும்.

    இதை கருத்தில் கொண்டுதான் சென்னை மாநகராட்சியிலுள்ள 155 வார்டுகளை 107 வார்டுகளாக மாற்றி அமைத்தும், சென்னையை சுற்றியுள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 93 வார்டுகளாக மாற்றி மறுசீரமைத்து 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னை நகரம் 424 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டதாக இருக்கும்.

    விரிவாக்கம் செய்வதற்கான சட்டம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த வார்டுகள் மறு நிர்ணயம் செய்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த 200 வார்டுகள் விவரங்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கூட்டத்தில் அனுமதி பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், தற்போதுள்ள 10 மண்டலங்கள் 15 மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியான வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1,384 ஆண் வாக்குச் சாவடிகளும், 1,384 பெண் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,109 பொதுவான வாக்குச் சாவடிகள் என மொத்தம் 4,877 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    58 வார்டுகள் பெண்களுக்கு

    கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 200 வார்டுகளில் 26 வார்டுகள் தனி வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 174 வார்டுகளில் 33.33 சதவீத அடிப்படையில் 58 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 116 வார்டுகள் பொது வார்டுகளாகவும், 17 வார்டுகள் தனி வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 மாநகராட்சி மண்டலங்கள் விவரம்:

    மண்டலம்-1 திருவொற்றியூர் (1 முதல் 14 வார்டுகள்)
    மண்டலம்-2 மணலி (15 முதல் 21 வார்டுகள்)
    மண்டலம்-3 மாதவரம் (22 முதல் 33 வார்டுகள்)
    மண்டலம்-4 தண்டையார்பேட்டை (34 முதல் 48 வார்டுகள்)
    மண்டலம்-5 ராயபுரம் (49 முதல் 63 வார்டுகள்)
    மண்டலம்-6 திருவிகநகர் (64 முதல் 78 வார்டுகள்)
    மண்டலம்-7 அம்பத்தூர் (79 முதல் 93 வார்டுகள்)
    மண்டலம்-8 அண்ணாநகர் (94 முதல் 108 வார்டுகள்)
    மண்டலம்-9 தேனாம்பேட்டை (109 முதல் 126 வார்டுகள்)
    மண்டலம்-10 கோடம்பாக்கம் (127 முதல் 142 வார்டுகள்)
    மண்டலம்-11 வளசரவாக்கம் (143 முதல் 155 வார்டுகள்)
    மண்டலம்-12 ஆலந்தூர் (வார்டு 156 முதல் 169 வார்டுகள்)
    மண்டலம்-13 அடையாறு (170 முதல் 182 வார்டுகள்)
    மண்டலம்-14 பெருங்குடி (183 முதல் 191 வார்டுகள்),
    மண்டலம்-15 சோழிங்கநல்லூர் (192 முதல் 200 வார்டுகள்).

    சீனா... ஆண்டுதோறும் 2 மில்லியன் தற்கொலைகள்!

    சீனாவில் தற்கொலைகளின் எண்ணி்க்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

    இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை முயற்சிகள் சீனாவில் நடக்கின்றனவாம். இவர்களில் பெரும்பாலானோர் எப்படியாவது காப்பாற்றப்பட்டாலும், தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

    அதிக அளவு தற்கொலையில் ஈடுபடுவோர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டோர்தான் என்கிறது இந்த அறிக்கை. 75 சதவீத தற்கொலைகள் கிராமங்களில் நடப்பதாகவும், இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்தான் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில் இன்று செப்டம்பர் 9-ம் தேதி சீனாவில் தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...