|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 May, 2012

இதே நாள்...

.
  • உலக செஞ்சிலுவை தினம்
  • தென்கொரியா பெற்றோர் தினம்
  • செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த தினம்(1828)
  • ஜான் பெம்பர்ட்டன், கொக்ககோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை      கண்டுபிடித்தார்(1886)

ஆலங்குடியில் குரு பெயர்ச்சி.

ஆலங்குடியில் வரும் 17ம் தேதி நடைபெறும் குரு பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேவுள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நந்தன வருடத்தில், வைகாசி மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை (17 -05- 2012) இரவு 6.27 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகின்றார்.இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது, கோவில் முன்பு தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், ஆலய வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் குழு இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும், சாலை வசதி, தற்காலிக கழிப்பிட வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த வசதிகளில் குறைபாடு ஏதும் இருப்பின் பொது மக்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நடராஜனிடம் கீழ் கண்ட தொலை பேசி எண்களில் 04366 - 223344, 224738, 225142 முறையிடலாம்.

மச்சம் அதிகமா நீங்கள் ஆரோக்கியமானவர்கள்

மச்சம் உடம்பில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள், அதுவும் மச்சம் முகத்தில் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது என்பர், ஆனால் மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப அதிர்ஸ்டசாலி என்பதை விட நீங்கள் ஆரோக்கியசாலிதான்.

கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு!

எம்.ஐ.டி மாணவர்கள் நடத்திய ஆய்வில் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன். மனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான் வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள். நாம் உபயோகிக்கும் படுக்கையும் நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது. எனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு சவுகரியமானதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பழசு வேண்டாம் படுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். தலையையும், கழுத்தையும் தலையணை பாலம்போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.

மனம் கவரும் நிறங்கள் படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல! படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.சீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.

மின்னணு சாதனங்கள் படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்ப துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.

காதல் திருமணங்களில் விவாகரத்து அதிகம்.

காதல் திருமணங்களில்தான் விவகாரத்து விகிதம் அதிகமாக உள்ளது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த பிரதாப் போசாலே என்பவர் தனது மனைவி எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது மும்பை உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.மேலும் மனைவிக்கு எச்ஐவி இருப்பதாக தவறான தகவலைக் கூறியதற்காக அவருக்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. உண்மையான காதலுக்கு முடிவேது...சினிமா பார்த்து அதன் மூலம் வரும் காதலுக்கு கோர்ட் தரும் தீர்பே முடிவு.

தமிழகத்தில் புதிதாக 9 வட்டங்கள்.

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள வருவாய் வட்டங்களை பிரித்து புதிதாக 9 வட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், கட்டுக்கோப்பான சமுதாய முன்னேற்றம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதிலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது, மக்களை நாடிச் சென்று உதவிக் கரம் நீட்டுவதிலும், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளில் மக்களுடன் இணைந்து செயல்படுவதிலும் வருவாய்த் துறை முக்கியப் பங்காற்றுவதுடன், நிர்வாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கி வருகிறது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், புதிய மாவட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிருவாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் நடவடிக்கைகள் எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்படுகின்றன.மக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் வருவாய்த் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், தற்போதைய மக்கள் தொகையின் எண்ணிக்கை, மக்களின் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, வருவாய் வட்டங்களை சீரமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.


இதன்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தினை பிரித்து திருப்புவனத்தில் ஒரு புதிய வட்டமும்; திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தினை பிரித்து கலசப்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும்; பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தினை பிரித்து ஆலத்தூரில் ஒரு புதிய வட்டமும்; கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தினை பிரித்து கிணத்துக்கடவில் ஒரு புதிய வட்டமும்; காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தினை பிரித்து திருப்போரூரில் ஒரு புதிய வட்டமும்; கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தினை பிரித்து அன்னூரில்  ஒரு புதிய வட்டமும்; விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சங்கராபுரம் வட்டங்களை சீரமைத்து புதியதாக சின்னசேலத்தில் ஒரு வட்டமும்; ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களை சீரமைத்து அந்தியூரில் ஒரு புதிய வட்டமும்;  நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மற்றும் ராசிபுரம் வட்டங்களை சீரமைத்து கொல்லிமலையில் ஒரு புதிய வட்டமும்; ஆக மொத்தம் 9 வட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படும். இது தவிர, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 62 வருவாய் வட்டங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, காலவிரயம் இன்றி மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும்,  வட்டாட்சியர் அலுவலகம் திறம்பட செயல்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, நான்கு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகையினைக் கொண்ட வருவாய் வட்டங்களைப் பிரிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்  கொள்கிறேன்.இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மக்கள் தொகை, பரப்பளவு, வருவாய் கிராமங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அரசுக்கு பரிந்துரை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரைக் கொண்ட ஒரு அலுவலர் குழு அமைக்கப்படும். இக்குழு இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும்.இக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து அரசு தக்க முடிவினை அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் பல்வேறு உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், அரசு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கும், உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறுவதற்கும் தேவைப்படும் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்  ஆகியவற்றை பெறுவதில் ஏற்படுகின்ற நடைமுறை கால தாமதத்தைக் கருத்தில் கொண்டு, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறாம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம்  மாணவ மாணவியர் பயன் பெறுவர்.மேலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அதன் பின்னர் உரிய நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பொருட்டு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்பதையும், இந்த நிலையம் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி நிலையமாகவும் செயல்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிவிப்பில் 

Satyamev Jayate


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...