|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 July, 2011

இதே நாள்...




  • துனீசியா குடியரசு தினம்(1957)
  •  காமன்வெல்த் விதிமுறைகள் தினம்
  •  இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)
  •  அஜினோமோட்டோ கண்டபிடிக்கப்பட்டது(1908)
  •  சோவியத் செய்தி நிறுவனம் டாஸ் நிறுவப்பட்டது(1925)

  • மீண்டும் ஒரு முறை நித்தி முகத்தை கிழித்த நக்கீரன் !


    இஸ்லாமிய எதிர்ப்புணர்வால் தாக்குதலை நடத்திய வாலிபர்!

    நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நார்வேயைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு காரணமாக இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. ஓஸ்லோவில் இவர் நடத்திய ஒரு குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 92 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக ஆண்ட்ரெஸ் பெஹ்ரிங் பிரேவிக் (32) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வலதுசாரிக் கொள்கைகளில் தீவிரமான இவர் இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்று தெரியவந்துள்ளது. இவர் தனது இன்டர்நெட் பிளாக்கில் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டுள்ளார். மேலும் நார்வே உள்பட ஐரோப்பிய நாடுகளில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்ப்பதாகவும், பல்வேறு இனங்கள் இணைந்து வாழ்வதை எதி்ர்ப்பதாகவும் தனது பிளாக்கில் இவர் கூறியுள்ளார்.

    ஐரோப்பாவில் இனப் போர் துவங்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஐரோப்பியர் அல்லாதவர்களும், கம்யூனிஸ்டுகளும் வெளியேற்றப்பட்டு ஐரோப்பா தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் இவர்.

    இவருக்கு வலதுசாரி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஓஸ்லோவில் இவர் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் முகாமை நடத்தியது அந் நாட்டு ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி அரசு என்பது குறிப்பிடத்தக்கது. இக் கூட்டத்தில் நார்வே பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் உரையாற்ற வர இருந்த நிலையில், போலீஸ் உடையில் வந்த பிரேவிக் துப்பாக்கிச் சூடு நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார்.

    முன்னதாக பிரேவிக் நடத்திய குண்டுவெடிப்பும் ஆளும் கட்சியை குறி வைத்தே இருந்தது. ஓஸ்லோவிலுள்ள பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்து அவர் நடத்திய குண்டுவெடிப்பில் 28 பேர் வரை பலியாயினர். இந்த இரு தாக்குதல்களிலும் பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
    Norway suspect sought 'Christian war' against Islam

    a Christian war to defend Europe against the threat of Muslim domination... And acquaintances described him as a gun-loving Norwegian obsessed with what he saw as the threats of multiculturalism and Muslim immigration.
    Thomas Hegghammer, a terrorism specialist at the Norwegian Defense Research Establishment, told the times that Breivik's manuscript, like the major Qaeda declarations, include...
    detailed accounts of the Crusades, a pronounced sense of historical grievance and calls for apocalyptic warfare to defeat the religious and cultural enemy.


    But despite Breivik's fears of cultural shifts, Muslims today are only 6% of the region's population -- and just 3% of the population in Norway, 34% of them immigrants, according to a massive study by the The Pew Forum on Religion & Public Life, released in January


    It found Muslims will be more than one-quarter of the Earth's population by 2030 -- but only 8% of the population in Europe and 6.5% of the population in Norway. The Future of the Global Muslim Population analyzed statistics from United Nations data and census material from more than 200 countries and studies by 50 international demographers, using birth rates, death rates, immigration and more, for the study.
    In Europe as a whole, the Muslim share of the population is expected to grow by nearly one-third over the next 20 years... rising to 8% in 2030. In absolute numbers, Europe's Muslim population is projected to grow from 44.1 million in 2010 to 58.2 million in 2030.
    The Pew Forum is now working on similar comprehensive population studies for other religious groups. But statistics don't shed any light on the confessed actions of Breivik. According to wire service reports:
    Foreign Minister Jonas Gahr Stoere told reporters that the attacks, believed to be the work of a man who has posted on Christian fundamentalist websites, showed you can't jump to conclusions about terror acts. He said most of the political violence that Norway has seen has come from the extreme right.
    So, I have a bundle of questions now.


    Who here knows exactly what's meant by Norwegian Christian fundamentalist? Should such terms be tossed about without definition? Is he a terrorist because he's Christian or a Christian who happens to be a terrorist or, if he's a terrorist, can he really be a Christian at all? And isn't that exactly the same points Muslims make about terrorists who claim to be Islamic?

    அழுத்தம் போக்கும் விரல் அழுத்தம் !

    மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு நம்பில் பலர் ஆளாகின்றனர். வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள்.

    இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வு காண்பது எளிது. மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியதாகும்

    அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றைப் பார்க்கலாம்.

    அழுத்தத்தின் அடையாளம் : மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

    மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்: உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை. பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

    புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல், பின் கழுத்தில் அழுத்தம் தருதல்,. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல் போன்றவைகளால் அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

    புன்னகையின் சக்தி: மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

    மனம் சொல்லும் மந்திரம்: நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

    எதையும் எழுதுங்கள்: மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

    காபியைக் குறையுங்கள்: காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

    அழுத்தம் போக்கும் நட்பு: மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

    கண்வலி போக்கும் நந்தியா வட்டை!

    காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப் பேசுவிழி நோய்கடமைப் பேர்ப்பதன்றி-யோசைதரு
    தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்று
    நந்தியா வட்டப் பூ நன்று.’

    என்று சங்க இலக்கியத்தில் நந்தியாவட்டை பற்றி பாடப்பெற்றுள்ளது.
    அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியாவட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை,மலர்,வேர்,வேர்பட்டை, கட்டை,போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: அமினோ அமிலங்கள்,கரிம அமிலங்கள்,அதிக அளவில் காணப்படுகின்றன.சிட்ரிக், ஒலியிக்அமிலங்கள்,டேபர்னோடோன்டைன்,பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.

    பார்வை கோளாறு குணமடையும்: இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது.
    நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும்.இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்

    நந்தியாவட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும். மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது.இதை நிறதிற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.

    நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் உறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

    பல் வலி நீக்கும்: நந்தியாவட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி,கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

    பிரபல பாடகி எமி ஒயின்ஹவுஸ் மர்ம சாவு!

    இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான பாடகி எமி ஒயின்ஹவுஸ் (27) அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அதிகளவில் போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் அவர் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

    வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் இவர் நேற்று பிணமாகக் கிடந்தார். எமி ஒயின்ஹாசுக்கு போதை மருந்து மற்றும் மதுப் பழக்கம் இருந்தது. அதற்காக மறுவாழ்வு மையத்தில் தங்கி பலமுறை சிகிச்சை பெற்றுள்ளார். ஹவுஸ் பேக் டூ பிளாக், சோல் உள்ளிட்ட பாப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்ற இவர் போதை பழக்கத்தால் சீரழிய ஆரம்பித்தார்.

    இங்கிலாந்தின் கார்ன்வெல் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, கடும் போதையில் பாடலையே மறந்துவிட்ட இவர், கூடியிருந்த ரசிகர்கள் மீது எச்சிலைத் துப்பிவிட்டு, இரும்பு மைக்கால் தன்னைத் தானே அடித்துக் கொண்டார். இன்னொரு நிகழ்ச்சியில் போதையில் தடுமாறி கீழே விழுந்தார்ய

    இது போன்ற செயல்களால் ரசிகர்களின் ஆதரவை இழந்து வந்தார். இறுதியாக கடந்த மாதம் பெல்கிரேட் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார். ஆனால், அங்கும் போதை மருந்து உட்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததால் வாந்தி எடுத்தார், நிகழ்ச்சியில் முறையாகப் பாடவும் இல்லை.

    இதைத் தொடர்ந்து அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று வீட்டில் பிணமாகக் கிடந்தார். 10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பாப் பாடல்கள் பாடி புகழ் பெற்ற இவர், பேக்டூ பிளாக் ஆல்பம் மூலம் உலகப் புகழ் பெற்றார். இந்த ஆல்பம் 5 கிரம்மி விருதுகளை வென்றது.

    பிளேக் பீல்டர் என்பவர் உதவியோடு பாப் இசை உலகில் கால் வைத்த எமி, பின்னர் அவரை விட்டுப் பிரிவதும் சேருவதுமாக இருந்தார். அவரைப் பிரிந்தபோதெல்லாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, போதைக்கு அடிமையானார். பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

    ஆனாலும், இவர்களிடையே நடுரோட்டில் கூட அடிதடி சண்டை நடந்து இருவருக்கும் ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது.

    இலங்கை வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி!

    இலங்கை தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வடக்குப் பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி உள்ளது.


    யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
    யாழ். மாவட்டத்தில் 48 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி இமெல்டா சுகுமார் அறிவித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என்று அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றது.


    வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.



    அரச தரப்பினரின் சட்டவிரோத செயல்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகிறது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.

    வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து இன்று கிடைத்த தகவலின் படி வடக்கில் 18 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி நெடுந்தீவு பிரதேச சபை தவிர்த்த ஏனையவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகின. 

    இதே நாள்...


  • பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1924)
  •  இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது(1991)
  •  சிலி நாட்டில் கொத்தடிமைகள் முறை ஒழிக்கப்பட்டது(1823)
  •  சோனியத் யூனியனில் உலகின் முதல் குழந்தைகள் ரயில் திறக்கப்பட்டது(1935)
  •  லிபியா, எகிப்து இடையேயான 4 நாள் போர் முடிவிற்கு வந்தது(1977)
  • தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது கருணாநிதி!


    தி.மு.க., என்ற எக்கு தூணை யாராலும், ஆட்டவோ, அசைக்கவோ முடியாது,'' என்று கருணாநிதி கூறினார்.
    கோவையில் நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என, எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல், எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளோம். யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை. இந்த உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.ஏனென்றால், நான், அன்பழகன் மற்றும் கட்சியினுடைய முன்னோடிகள் அனைவரும் புண்பட்டிருக்கிறோம். தி.மு.க.,வின் ஆற்றல் பெருகி மீண்டும் வருவோம். தேர்தல் வெற்றியைக் கணக்கிட்டு தி.மு.க.,வை ஆரம்பிக்கவில்லை. நமது இனம் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக துவக்கினோம். ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியைக் கொண்டு, அக்கட்சியினுடைய கொள்கையை நிர்ணயிக்க முடியாது. இருந்தாலும், இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கும் தோல்வி. அதனால், தி.மு.க.,வை அழித்து விட்டோம் என, முழங்கிக் கொண்டு உள்ளனர். தி.மு.க., சந்திக்காத தோல்வியே இல்லை. மீண்டும் நாம் ஆட்சி அமைக்கும் காலம் வராமல் போகாது. நமது லட்சியங்கள், கொள்கைகளுக்கு வெற்றி தரக்கூடிய வெற்றியைப் பெறுவோம்.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக இருக்கின்றனர். அப்படியிருந்தாலும், அரங்கு நிரம்பி வழிகின்ற அளவிற்கு செயற்குழுவுக்கு வந்துள்ளனர்.தி.மு.க., எக்கு கோட்டை. அதை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது. அண்ணாதுரை காலத்திலிருந்து எவ்வளவோ அக்கிரமங்களை, போட்டிகளை சந்தித்துள்ளோம். இன்றும் அதை எதிர்கொள்ள உள்ளோம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.


    சும்மா விட்ருவோமாய்யா...தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பேசிய சிலர், "2ஜி' ஊழலும், குடும்ப ஆட்சியும் தான், கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ஆவேசமாக பேசினர். முக்கிய தலைவர்களால், "2ஜி' குறித்து ஆழமாக பேச முடியவில்லை; காரணம், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியும் செயற்குழுவில் பங்கேற்றிருந்தார். வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், ""என்னை தேடப்படும் குற்றவாளியாக கருதிய போதும், கட்சி சார்பில், இதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. கட்சியை சேர்ந்த ஒவ்வொருவராக சிறைக்குள் தள்ளி வருகின்றனர். எங்களை பாதுகாக்க, கட்சி என்ன செய்தது. இதற்கெல்லாம் விரைவாக முடிவு எடுக்காவிட்டால், கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும்,'' என்றார்.கருணாநிதி, ""சும்மா விட்ருவோமாய்யா,'' என ஆறுதல் தெரிவித்தார்.வெளியே காத்திருந்த தொண்டர்கள் பேசுகையில், "கட்சியை பற்றி, அடிமட்ட தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்; மாவட்ட செயலர்களை அழைத்து, அவர்களிடம் கேட்காதீர்கள். குடும்ப ஆட்சி நடத்தி தானே தோற்றுப் போனோம்,'' என, ஆதங்க குரல் எழுப்பினர். கட்சி, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், இன்று நடக்கும் பொதுக்குழுவில், தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...