|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 October, 2011

கவர்ந்திழுக்கும் அமெரிக்கா!


படிப்பிற்காக, இந்திய மாணவர்களை கவர்ந்திழுக்கும் வெளிநாடுகளில் முதன்மையான இடத்தை அமெரிக்காவே இப்போதும் தக்க வைத்துள்ளது. அதற்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. கல்வி கற்பித்தலுக்கான இயல்பான சூழ்நிலை, பரந்த அனுபவம், சிறப்பான கல்வித்திட்டம் போன்றவை முக்கிய காரணங்கள். மேலும், இன்று உலகளவில் சிறந்தப் பல்கலைகளாக பட்டியலிடப்பட்டுள்ள 100 பல்கலைக்கழகங்களில் சுமார் 60% பல்கலைகள் அமெரிக்காவில் உள்ளதும் மாணவர்கள் அதை நோக்கிப் படையெடுப்பதற்கு முக்கிய காரணம். எனவேதான், அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்தாலும், அந்நாட்டை நோக்கி படிப்பதற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் எழுச்சிக் குறையவில்லை. அந்நாட்டு கல்விச் சூழலானது, சுதந்திரம், நடைமுறை மற்றும் அறிவுப்பூர்வமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எல்லாம் சில குறிப்பிட்ட ஆலோசனை மையங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கல்விக்கான அமைப்புகள் கூறுபவை.

மாற்று வாய்ப்புகள்; சமூக கல்லூரிகள்(Community colleges)
அமெரிக்காவில், 4,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை, சமூக(Community) கல்லூரிகள், தனியார் மற்றும் பொது பல்கலைகள் என்று மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இளநிலைப் பட்டப்படிப்பானது அமெரிக்காவில் 4 வருடங்களைக் கொண்டதாகும். பல இந்திய மாணவர்கள் மத்தியில் இந்த 4 வருட படிப்புதான் முன்னுரிமை பெற்றுள்ளது. இந்தப் படிப்பைத் தவிர்த்து வேறொரு முறையும் உள்ளது. அது, அறிவியல் மற்றும் கலைத்துறையில் துணைநிலைப் பட்டம் பெறுவதாகும். 2 வருட காலஅளவைக் கொண்ட இந்த துணைநிலைப் பட்டத்தை, சமூக கல்லூரிகள் வழங்குகின்றன. வெளிநாட்டில் அதிகப் பணம் செலவழிக்க இயலாத மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று வழியாகும். மேலும், வேறுபல தனியார் மற்றும் பொது கல்வி நிறுவனங்களைவிட, இந்த சமூக கல்லூரிகளில் கட்டணம் குறைவு.

சமூக கல்லூரிகளில் இடம்பெறுவதற்கு குறைந்த காலமே ஆகும் மற்றும் இதற்கான போட்டியும் குறைவு. சமூகக் கல்லூரிகளில் 2 வருட படிப்பை முடித்துவிட்டு, தமக்கான ஒரு வேலையையும் மாணவர்கள் தேடிக் கொள்ளலாம் அல்லது 4 வருட இளநிலைப் படிப்பில் நேராக 3ம் வருடத்திலும் சேரலாம். பல சமூகக் கல்லூரிகள், வேறு அமெரிக்க கல்வி நிறுவனங்களில் எளிதாக இடம்பெறும் வகையிலான படிப்புகளை வழங்குகின்றன.
மேலும், தொலைநிலைக் கல்வி முறையிலும் மாணவர்கள் பட்டம் பெற முடியும். ஆனால், இந்திய கல்வி நிறுவனங்களில் தொலைநிலைப் படிப்பை மேற்கொள்வதோடு ஒப்பிடுகையில் இது மிகவும் செலவு மிகுந்தது. ஒரு கல்லூரி மற்றும் படிப்பை அமெரிக்காவில் தேர்வு செய்யும் முன்பாக, அவற்றின் அங்கீகாரத்தை பற்றி நன்கு தெரிந்துகொள்ள மாணவர்கள் ஒருபோதும் தவறிவிடக்கூடாது.

சேர்க்கைக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்தப் பல்கலை அல்லது கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கை நடைமுறைகள் தொடங்குவதற்கு 14 முதல் 18 மாதங்கள் முன்பாகவே, ஒரு மாணவர் அதற்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துவிட வேண்டும். கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, ஒரு வருடத்திற்கான செலவு $18,000 முதல் $50,000 வரை செலவாகும். மிகவும் விரும்பப்படும் படிப்புகளாக பொறியியல், கணிப்பொறி அறிவியல் மற்றும் பயோ டெக்னாலஜி போன்றவை உள்ளன. அதேசமயம், வான்வெளி பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் சிவில் ஆகிய துறைகளில் சிறப்பு படிப்பை மேற்கொண்டவர்களுக்கு கிராக்கி உள்ளது.

சேர்க்கை முறை அமெரிக்க கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, மாணவரின் கல்வி ஆவணங்கள் முக்கியமானவை. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தமக்கென தனி நடைமுறையைக் கொண்டவை. இளநிலை பட்டப்படிப்பில் சேர, 9 மற்றும் 12ம் வகுப்புகளின் சான்றிதழ்கள் மற்றும் செயல்பாடுகள் சரிபார்க்கப்படும். முதுநிலை படிப்பில் சேர 4வருட இளநிலைப் படிப்பின் சான்றிதழ்கள் மற்றும் செயல்பாடுகள் சரிபார்க்கப்படும். தரமுள்ள தேர்வு மதிப்பெண்கள், டோபல்(TOEFL) தேர்வு மதிப்பெண்கள், படிப்பைத் தவிர இதர திறன் போட்டிகளில் மாணவர்கள் பெற்ற நற்சான்று ஆவணங்கள், பரிந்துரைக் கடிதங்கள் போன்றவை, அமெரிக்க கல்வி நிறுவனங்களில் இடம் பிடிக்க உதவும் சில முக்கிய அம்சங்கள்.

நிதி உதவிகள் மற்றும் உதவித்தொகைகள் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை பெறுவது என்பது அதிக போட்டிகள் நிறைந்த விஷயம். முழு அளவிலான அல்லது பகுதியளவிலான நிதி உதவிகள் கிடைக்கும். பகுதியளவு நிதி உதவுகள் ஒரு மாணவரின் கல்வி செயல்பாட்டை வைத்து வழங்கப்படுகின்றன.

இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகள் தேவையான இன்டர்ன்ஷிப் -ஐ முடிக்க, ஒரு மாணவர், பாடத்திட்ட பிராக்டிகல் பயிற்சி(CPT) அங்கீகாரத்தையும், விருப்ப பிராக்டிகல் பயிற்சி(OPT) அங்கீகாரத்தையும், தனது படிப்பு முடிந்தபிறகு பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், படிப்பிற்கு பிறகான காலகட்டத்தில் 12 மாதங்கள் வரை அந்நாட்டில் பணிபுரிய முடியும். அதேசமயம், மாணவர்கள் 17 மாதங்கள் நீட்டிப்பையும் பெற முடியும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டங்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அமெரிக்கப் பட்டங்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக, இந்தியா, சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நல்ல பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
அமெரிக்க கல்வி குறித்து பலவித விபரங்களை அறிந்து கொள்வதற்கான சில வலைத்தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதே நாள்...


  • பிஜி குடியரசானது(1987)
  •  ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
  •  தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்(1889)
  •  முதலாவது பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)
  • அரையிறுதிக்கு பெங்களூரு அணி!


    சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு பெங்களூரு அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு, கடைசி பந்தில் சிக்சர் அடித்து, வெற்றி பெறச் செய்தார் அருண் கார்த்திக். தோல்வியடைந்த தெற்கு ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரின் கடைசி லீக் போட்டி, நேற்று பெங்களூருவில் நடந்தது. இதில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. "டாஸ் வென்ற கிளிங்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.



    நல்ல துவக்கம்: தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஹாரிஸ், கிளிங்கர் ஜோடி இணைந்து "சூப்பர் துவக்கம் கொடுத்தது. அரவிந்த், நான்ஸ் ஓவர்களில் ஹாரிஸ், தலா மூன்று பவுண்டரி விளாசி ஸ்கோர் "ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அரவிந்த்தின் அடுத்த ஓவரை, ஹாரிஸ் (தொடர்ந்து 4 பவுண்டரி) மீண்டும் பதம் பார்க்க, ஸ்கோர் 4.3 ஓவரில் 50ஐ தாண்டியது. கிளிங்கர் (7) ஏமாற்றினார்.



    பெர்குசன் அதிரடி:ஹாரிசுடன் சேர்ந்த பெர்குசனும் அதிரடியில் மிரட்டினார். அரவிந்த் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த இவர், நான்ஸ், பட்கல் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்த நிலையில், பெர்குசன் (70) அவுட்டானார்.



    ஹாரிஸ் சதம்: மறுமுனையில் தொடர்ந்து அசத்திய ஹாரிஸ், சர்வதேச "டுவென்டி-20 அரங்கில் முதல் சதத்தை எட்டினார். அரவிந்த் வீசிய 20 வது ஓவரில் மட்டும், 5 பவுண்டரி அடிக்கப்பட, 20 ஓவரில் தெற்கு ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் குவித்தது. ஹாரிஸ் (61 பந்து, 108 ரன்கள்), கிறிஸ்டியன் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.



    கெய்ல் ஏமாற்றம்: இந்த போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில், இமாலய இலக்கை விரட்டியது பெங்களூரு அணி. கெய்ல், தில்ஷன் ஜோடி துவக்கத்தில் இருந்தே அதிரடியில் அசத்த, 4.4 ஓவரில் ஸ்கோர் 50 ஐ எட்டியது. மூன்று சிக்சர் அடித்த திருப்தியுடன் கெய்ல் (26) திரும்பினார். 



    கோஹ்லி மிரட்டல்: பின் தில்ஷனுடன் விராத் கோஹ்லி இணைந்தார். கிறிஸ்டியன், ஓ பிரையன், ரிச்சர்ட்சன் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி, அதிரடியாக ரன்கள் சேர்த்தார் கோஹ்லி. இதனால் 10.2 ஓவரில் அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. ஹாரிசின் பந்தில் சிக்சர் அடித்த விராத் கோஹ்லி, அரைசதம் கடந்தார்.



    தில்ஷன் விளாசல்: தன்பங்கிற்கு விளாசலைத் தொடர்ந்த தில்ஷன், அரைசதம் அடித்தார். இந்த ஜோடி ஹாரிசின் ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட, 25 ரன்கள் எடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 53 பந்தில் 100 ரன்கள் சேர்த்த நிலையில், விராத் கோஹ்லி (36 பந்து, 70 ரன்கள், 6 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாக, பெங்களூரு அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. சவுரப் திவாரி (9), அகர்வால் (6) நீடிக்கவில்லை. 12 பந்தில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலையில், டெய்ட்டின் ஓவரில் தில்ஷன் (74), வெட்டோரி (8), பட்கல் (1) வரிசையாக வெளியேற, கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.



    அருண் "சிக்சர்: கிறிஸ்டியன் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில், ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் சையது (2) ரன் அவுட்டானார். 3வது பந்தில் பவுண்டரி அடித்தார் அரவிந்த். கடைசி 3 பந்தில் 9 ரன் தேவைப்பட்டது. 4, 5வது பந்தில் 3 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. பந்தை எதிர்கொண்ட அருண் கார்த்திக், எவ்வித பதட்டமும் இல்லாமல், அதை சிக்சருக்கு அனுப்ப, பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் "திரில் வெற்றி பெற்றது. தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக இலக்கை "சேஸ் செய்து அசத்திய அணி என்ற பெருமையையும் பெங்களூரு தட்டிச் சென்றது.

    அரையிறுதியில் மோதுவது யார்
    சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரில், நாளை முதல் அரையிறுதி போட்டிகள் துவங்குகின்றன. இதன் விவரம்: தேதி    போட்டி    அணிகள்    இடம்    நேரம்
    1. அக்., 7, முதல் அரையிறுதி  பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்-நியூ சவுத்வேல்ஸ்    பெங்களூரு    இரவு 8 மணி
    2. அக்., 8 இரண்டாவது அரையிறுதி    மும்பை  இந்தியன்ஸ்-சாமர்சட்   சென்னை    இரவு 8 மணி

    விஜயதசமி கொண்டாடுவது ஏன்?


    பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் "மகிஷாசுரமர்த்தினி' என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

    சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை "ஆதிபராசக்தி' என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது "பவானி' என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது "மகாவிஷ்ணு' என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது "காளி' என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது "துர்கா' என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.

    அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்..: முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் "தேவி சூக்தம்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு "சாக்தம்' என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.

    விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.


    முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம். 

    ஒழுக்கத்திருநாள்:
    சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

    வெற்றிக்குரிய தசமி திதி :
    எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை "அட்சர அப்யாசம்' என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

    எங்கள் வாழ்வில் வெற்றி குவியட்டும்: விஜயதசமி பிரார்த்தனை:
    வெற்றிநாளான விஜயதசமி நாளில்பராசக்தியின் அருள் பெறும் விதத்தில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாலை வேளையில் இதைப் பாராயணம் செய்து அம்பிகையின் அருள் பெறுங்கள்.

    * மலையரசனின் மகளே! உயிர்கள் வாழ அருள்புரிபவளே! விஷ்ணுவின் அம்சமாகத் திகழ்பவளே! அர்ஜுனனால் துதிக்கப்பட்டவளே! நீலகண்டப்பெருமானின் மனைவியே! உலகமாகிய பெரிய குடும்பத்தைக் காப்பவளே! மனநிறைவைத் தருபவளே! மகிஷாசுரமர்த்தினியே! அழகான ஜடை கொண்டவளே! பர்வத குமாரியே! உன் திருவடியைவணங்குகிறேன்.

    * பக்தர்கள் வேண்டும் வரம் அருள்பவளே! அசுரர்களை அழிப்பவளே! மூவுலகங்களையும் காப்பவளே! சிவபெருமானிடம் விருப்பம் கொண்டவளே! தைரியமும், கோபமும் குணமாகக் கொண்டவளே! என்றும் இளமை கொண்ட கன்னியே! உன் திருப்பாதத்தை என் தலைமேல் தாங்குகிறேன்.

    * உலகின் நாயகியே! தாயாக காப்பவளே! சிரிப்பில் விருப்பம் கொண்டவளே! கடம்பவனத்தில் இருப்பவளே! மலைகளின் அரசனான இமாலாயத்தின் உச்சியில் ஸ்ரீசக்ர பீடத்தில் இருப்பவளே! கைடபரை முறியடித்தவளே! உன் திருவடியைப் போற்றுகிறேன். 

    * சதகண்டம் என்னும் ஆயுதத்தால் ருண்டாசுரனைத் அழித்தவளே! கஜாசுரனின் துதிக்கையை துண்டித்தவளே! சாமர்த்தியம் மிக்க சிங்க வாகனம் உடையவளே! 
    முண்டாசுரனை வென்றவளே! உன் கமலச் செவ்வடிகளில் விழுந்து பணிகிறேன்.

    * பாவம், தீய எண்ணம் கொண்ட எதிரிகளை அழித்தவளே! சரணாகதி அடைந்தவருக்கு அபயம் அளிப்பவளே! சூலாயுதம் தாங்கியவளே! ரக்தபீஜன், சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளே! உன் திருவடி நிழல் உலகெங்கும் வியாபிக்கட்டும். 

    *தும்தும் என்ற நாதத்துடன் வருபவளே! பகைவர்களின் தலையை சதுரங்கக்காய் போல பந்தாடுபவளே! ஜயஜய என்ற கோஷத்துடன் துதிக்கப்படுபவளே! தேவலோக பாரிஜாத மலரைப் போல ஒளி கொண்டவளே! பாற்கடலில் பிறந்த சந்திரன் போல குளிர்ச்சி மிக்கவளே! உன் பொற்பாதங்களில் தண்டனிடுகிறேன். 

    * பெண்கள் விரும்பும் பேரழகு கொண்டவளே! ராஜகுமாரியே! சுமங்கலிப் பெண்களால் சூழப்படுபவளே! தாமரை மலர் போன்ற நெற்றி கொண்டவளே! கலைக்கு இருப்பிடமாகத் திகழ்பவளே! வண்டுகள் பாடும் நறுமலர்கள் சூடியவளே! பட்டுபீதாம்பரம் அணிந்தவளே! உன் மலர் பாதங்களில் முகம் புதைக்கிறேன். 

    * போர்வீரனாக விளங்கும் கார்த்திகேயனை புத்திரனாகப் பெற்றவளே! ஞானியர் நாடும் சமாதி நிலையில் விருப்பம் கொண்டவளே! கருணைக்கு இருப்பிடமான தேவியே! கோடி சூரியர்களால் வணங்கப்படுபவளே! கிடைத்தற்கரிய உன் திருவடியைக் கண் கொட்டாமல் காண்கிறேன்.

    * அம்மா! உனது திருவடியை வணங்கும் பேறு பெற்ற நாங்கள் கல்விக்கலைகளிலும், செல்வத்திலும் சிறந்து விளங்க அருள் செய். பரம கருணையால் உலகிற்கெல்லாம் தாயாக விளங்குபவளே! உனக்கு எது விருப்பமோ அதை எனக்குச் செய்தருள்வாயாக. பர்வதராஜ குமாரியே! எங்கள் வாழ்வில் வெற்றி குவிய உன்னைப் போற்றி வணங்குகிறேன். 

    தேர்தலில் ஒதுக்கீடு எதற்கு? விஜயகாந்த்!


    தேர்தல்களில் ஒதுக்கீடு செய்து மக்களை ஏன் பிரிக்கிறார்கள்? 'என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

    திருப்புத்தூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, விஜயகாந்த் பேசியதாவது:""ஜாதி சாப்பாடு போடாது. உங்கள் மூச்சில் என்ன ஜாதியா வருகிறது? எல்லோரும் ஒன்றாக இருந்து தானே என் பேச்சுக் கேட்கிறீர்கள். இந்த தனி,பொது என்பதெல்லாம் தேவையில்லாதது. நீங்களாக மக்களை பிரிக்காதீர்கள். யார் பிரிக்க சொன்னது? நான் மனசாட்சிப்படிபேசுகிறேன்.யாரும் பிறக்கையிலேயே இந்த ஜாதி வேண்டும் என்று கேட்பதில்லை. இது வரை ஜெயித்தவர்கள் எல்லாம்நல்லது செய்திருந்தால் என் பேச்சை ஏன் கேட்க வரப் போகிறீர்கள். எனக்கும் ஒரு வாய்ப்தைத் தாருங்கள் என்று கெஞ்சிக் கேட்கிறேன். என் கட்சியினர் வெற்றி பெற்றால் நல்லது செய்யும் வரை அவர்களை விடமாட்டேன். "ஞாபக மறதி' என்று கூறும் சிதம்பரம் காங்., கட்சியைக் காட்டிக் கொடுக்கிறாரா?இவ்வாறு விஜயகாந்த்.

    டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை!


    டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்க வேண்டுமென்ற பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம், இங்கு விலையைக் கூட்டும் எண்ணெய் நிறுவனங்கள், அது குறையும் போது சத்தமே காட்டுவதில்லை. பெட்ரோல், டீசலை அடுத்து, இந்த எண்ணெய் நிறுவனங்களின் பார்வை, காஸ் சிலிண்டர்களின் மீது திரும்பியுள்ளது. காஸ் சிலிண்டர் மானியத்தை குறைப்பதற்கான வேலைகளில் இவை இறங்கியுள்ளன.இதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்த எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த கணக்கெடுப்பு விபரங்கள் தரப்பட்டு, அதன்பேரில் அந்த குழுவும் மத்திய அமைச்சரவைக்கு சில கருத்துருக்களை அனுப்பியிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அத்தனையும் "பகீர்' ரகமாகவுள்ளன.

    காஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் ஒருவருக்கு சொந்தமாக வீடு அல்லது டூ வீலர் இருந்தால், அவருக்கு ஆண்டுக்கு நான்கு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் தர வேண்டுமென்பது, இந்த குழுவின் முதல் பரிந்துரை; ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சிலிண்டரே தரக்கூடாது என்பது அடுத்த யோசனை.

    இதன்படி, டூ வீலர் அல்லது சொந்தமாக குடிசை வீடு வைத்துள்ள ஒருவரின் குடும்பத்துக்கு, ஆண்டுக்கு 4 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும்; அதற்கு மேல் தேவைப்பட்டால், ஒரு சிலிண்டரை 645 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும் என்கிறது குழுவின் பரிந்துரை. இது அமலுக்கு வரும்போது, இந்த விலை 700லிருந்து 900 ரூபாய் வரை அதிகரிக்கலாம்.இன்றைய நிலையில், நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள சாதாரண விவசாயி, கட்டுமானத் தொழிலாளி, கூலித்தொழிலாளிகள் அனைவருமே தங்களது வேலைக்காக சொந்தமாக "டூ வீலர்'கள் வைத்துள்ளனர் என்பதே உண்மை.

    அதேபோல, பெரு நகரங்களில் 50 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளம் என்பது மிகச் சாதாரணமாகி விட்டதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த சம்பளம் வாங்கினாலும், நகரங்களில் உள்ள செலவுக்கு அந்த குடும்பத்தால் வசதியாக வாழவோ, பெரிதாகச் சேமிக்கவோ முடியாது என்பதும் நிஜம். அதனால், இந்த 2 பரிந்துரைகளுக்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புவது நிச்சயம்.

    இந்த பரிந்துரைகளைவிட, நிலைக்குழு கூறியுள்ள ஒரு தகவல், எல்லோரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. பெரும்பாலான வீடுகளில், ஆண்டுக்கு 20லிருந்து 30 காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக அந்த குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. உண்மையில், எந்த குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் கிடைப்பதேயில்லை என்பதே யதார்த்தம்.நிலைக்குழு பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதாக தகவல் பரவியுள்ள நிலையில், இதனை அமல்படுத்தக்கூடாது என்று மனுப்போரைத் துவக்கியுள்ளது கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு. பிரதமருக்கு இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன் அனுப்பியுள்ள கடிதம், 3 விஷயங்களை வலியுறுத்தியுள்ளது.

    அதில் "மானிய விலை சிலிண்டர் கட்டுப்பாடு பட்டியலில் டூவீலர்தாரரை நீக்க வேண்டும்; மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்க்கு மானிய விலை சிலிண்டர்க்கு கட்டுப்பாடு விதிக்கலாம்; ஆண்டுக்கு 4 மானிய விலை சிலிண்டர் என்பதை 12 ஆக உயர்த்தலாம்; நிலைக்குழு தகவல்படி, பார்த்தாலும் அதில் 18 சிலிண்டர்கள் குறையும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கதிர்மதியோன் கூறுகையில்,  இன்றைய நிலையில் டூவீலர் வைத்திருப்பவரை "பணக்காரர்' என்று பார்லிமென்ட் நிலைக்குழு பட்டியலிடுவது, வேடிக்கையானது. கார் வைத்திருப்பவரை அந்த பிரிவில் கொண்டு வந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். குடும்ப நபர்களின் எண்ணிக்கையை வைத்து மானிய விலை காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம்,'' என்றார்.

    கோவையிலிருந்து மட்டுமின்றி, தேசம் முழுவதிலிருந்தும் இதேபோன்ற கோரிக்கைகள் குவிந்துள்ளன. அதனால், இந்த பரிந்துரை அப்படியே நடைமுறைப்படுத்தப்படுவது சந்தேகமே. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், ஊழலுக்கு எதிராக தேசமே திரண்டது போல இதற்கும் நாடு தழுவிய எதிர்ப்பு, காங்கிரஸ் அரசுக்கு எதிராகக்கிளம்புவது உறுதி.

    எல்லாமே கொள்ளை!   பெரும்பாலான குடும்பங்களில் ஆண்டுக்கு 20லிருந்து 30 காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக நிலைக்குழு சொன்ன தகவல், ஓர் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 12 காஸ் சிலிண்டர்கள் மட்டுமே தரப்படுகின்றன; மீதமுள்ள 18 காஸ் சிலிண்டர்களும் நுகர்வோர் பெயர்களில் காஸ் டீலர்களால் அல்லது அவர்களின் ஆட்களால் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன என்பதே அந்த உண்மை.

    நிம்மதி தேடி இந்தியா வந்த ஸ்டீவ் ஜாப்ஸ்!


    ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நிறுவனத்தை துவக்க இந்தியா ஒரு முக்கிய காரணியாக இருந்த சுவாரசியமான தகவல் இதோ.. மூன்று ஆப்பிள்கள் உலகையே மாற்றியுள்ளன. ஒன்று ஏவாளின் கையில் கிடைத்த ஆப்பிள். இரண்டாவது நியூட்டனின் கையில் கிடைத்தது. மற்றொன்று தான் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் ஆப்பிள் தயாரிப்புகள். இன்றைய நிலையில், சமூக வலைதளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ் புக் போன்ற இணையங்களில் பரவிக்கிடக்கும் குறுந்தகவல் இது தான்.

    உலகை புரட்டிப்போட்ட ஆப்பிள் தயாரிப்பு நாயகனின் ஆரம்ப கட்ட வாழ்க்கையில் இந்தியா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது நிச்சயம் உங்களுக்கு வியப்பை அளிக்கும். 73ம் ஆண்டில், தனது 18வது வயதில் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, தனது நண்பர் டான் கோட்டிக்குடன் மனநிம்மதி தேடி, இந்தியா வந்தார் ஜாப்ஸ். அப்போது தாங்கள் எங்கு தங்கி மன நிம்மதி பெறப்போகிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இந்தியா குறித்தும், அந்நாட்டின் வளமான தெய்வீகத்தன்மை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட போதனைகளுக்கும், இந்தியாவின் உண்மை நிலை (?)க்கும் உள்ள முரண்பாடுகளை கண்ட ஜாப்ஸ், மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிச்செல்வதென முடிவு செய்தார். அவர் தேடி வந்த நிர்வாணா (அ) மன நிம்மதி அவருக்கு கிடைக்க வில்லை.

    ஜாப்ஸ் தனது சுயசரிதையான தி லிட்டில் கிங்டம்: தி பிரைவேட் ஸ்டோரி ஆப் ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். முதன் முதலாக நான் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்து உணர ஆரம்பித்தேன். இவ்வுலகை மேம்படுத்த அவர் கார்ல் மார்க்சை விட கரோலி பாபாவை விட, எடிசன் நிறைய செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். கரோலி பாபா என்பவர் ஸ்டீவ் ஜாப்சின் குரு. ஆன்மீக மார்க்கத்திற்கு திரும்பவிருந்த ஜாப்சை அறிவியல் மார்க்கத்திற்கு திருப்பியது இந்தியா. ஜாப்ஸ்க்கு தேவையான மனநிம்மதி இந்தியாவில் கிடைத்திருக்குமானால், உலகம் தனது மூன்றாவது ஆப்பிளை இழந்திருக்கும். இந்தியாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியா திரும்பிய ஸ்டீவ் முதற்காரியமாக ஆரம்பித்தது தான் ஆப்பிள் நிறுவனம்.

    எத்தனையோ ஞானிகளை உருவாக்கிய இந்த இந்திய மண் தான், இன்று ஐ-பொருட்களின் தாயகமான ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கவும் காரணமாக அமைந்துள்ளது. அதற்கு கைமாறாகத்தான் என்னவோ, ஸ்டீவ் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விலை குறைந்த லேப் டாப்பான ஆகாஷை வெளியிட்டுள்ளது இந்தியா

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...