|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 October, 2011

வெற்றி, தோல்வியின் ஆதாரம் சுய பிம்பம்!


சுய பிம்பம் என்பது ஒரு குழந்தையின் மனநல உருவாக்கத்தில் முக்கியமானது. பொதுவாக, ஒவ்வொரு மனிதனுக்குமே சுய பிம்பம் என்பது முக்கியமானது. ஒரு குழந்தையின் சுய பிம்பத்தை நேர்மறையாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. ஒரு குழந்தைக்கு, தான் உருவாகும் காலகட்டத்தில், நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு குழந்தை எதிர்காலத்தில் வெற்றிகரமான மனிதனாக உருவாகுமா? இல்லையா? என்பதை, அந்தக் குழந்தையின் இளம் வயது சுய பிம்பமே முடிவு செய்கிறது. ஒரு கண்ணாடியின் முன்பாக ஒரு குழந்தை நின்று தன் உருவத்தை உத்துப் பார்க்கையில், தன்னைப் பற்றிய ஒரு சுய பிம்பம் அந்தக் குழந்தையின் நினைவுக்கு வருகிறது. அந்த சுய பிம்பத்தில் தன்னம்பிக்கையும், நேர்மறை எண்ணமும் நிறைந்திருக்க வேண்டும். அதை உருவாக்குவதில்தான் பெற்றோரின் கடமை நிறைந்துள்ளது.

Separate but Equal என்ற ஆங்கிலப் படத்தில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி உண்டு. கறுப்பின குழந்தைகளைக் கொண்ட ஒரு குழுவிடம், 2 பொம்மைகள் தரப்படும். அவற்றில் ஒன்று கறுப்பு பொம்மை மற்றது வெள்ளை பொம்மை. அந்த 2 பொம்மைகளில் எது அழகான பொம்மை என்று அந்தக் குழந்தைகளிடம் கேட்கப்படுகையில், அந்த கறுப்பின குழந்தைகள் அனைத்துமே, கொஞ்சமும் யோசிக்காமல் வெள்ளை பொம்மையையே அழகான பொம்மை என்று தேர்ந்தெடுக்கும். தன் இனத்தாரை ஒடுக்கும் ஒரு இனத்தாரின் நிறமே அழகானது என்று அந்தக் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்தக் குழந்தைகளின் சுய பிம்பம் சிதைக்கப்பட்டுள்ளது. தான் ஒரு அழகற்ற, முக்கியத்துவமற்ற மற்றும் தாழ்வான பிறவி என்ற எண்ணம் கறுப்பினக் குழந்தைக்குள் உண்டாக்கப்பட்டுள்ளது. கறுப்பர் - வெள்ளையர் இனப் பிரச்சினையின் சமூக தாக்கம், ஒரு குழந்தையின் சுய பிம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு எதிர்மறை சிந்தனை, அதாவது தாழ்வு மனப்பான்மை. ஒரு குழந்தையின் சுய பிம்பத்தில் நேர்மறை சிந்தனைகளை செலுத்துவதற்கு பெற்றோர்கள் பழகிக் கொள்ள வேண்டும். தனது குழந்தை ஒரு,
* அதிமேதாவி
* சாதனையாளர்
* எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவர்
* படிப்பில் சுட்டி
* விளையாட்டில் திறமைசாலி
* சுய சிந்தனையாளர் மற்றும் கடின உழைப்பாளி
* உதவி மனப்பான்மை கொண்டவர் மற்றும் பண்பாளி
* நட்புடன் பழகுபவர் மற்றும் அன்பானவர்
* பலரின் மத்தியில் நன்கு அறிமுகமானவர்
* பார்ப்பதற்கு அழகானவர்
* எங்கு சென்றாலும் சந்தோஷமாக இருப்பார் மற்றும் பிறரையும் சந்தோஷப்படுத்துபவர்

என்ற சிந்தனைகள் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களையே குழந்தையிடமும் ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் சுய பிம்பம் தேர்ச்சி பெறும். உங்கள் குழந்தைக்கு நீங்கள் பலவிதமான இலக்குகளை நிர்ணயிக்கலாம். ஆனால் அந்த இலக்கானது, அடையக்கூடிய அளவில் இருப்பது முக்கியமானது. ஒரு அடைய முடியாத இலக்கை நிர்ணயித்து,அதன்பால் குழந்தையை ஊக்கப்படுத்தி, தோல்வியடையும்போது, உங்கள் குழந்தையின் மனநிலை எதிர்மறையான விளைவுகளுக்கு சென்றுவிடும். தான் எதிலுமே தோற்கக் கூடியவர் மற்றும் தன்னால் எதுவுமே இயலாது என்ற எண்ணத்திற்கு சென்று, எந்த செயலிலும் நம்பிக்கையுடன் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். எனவே, இலக்கு நிர்ணயிக்கும் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. சில பெற்றோர்கள் இவ்வாறு கூறுவார்கள், "நான் என் குழந்தையை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினேன், தேவையான புத்தகங்களை வாங்கி கொடுத்தேன், உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் வெற்றிபெறவில்லை. அதன் திறமை அவ்வளவுதான்" என்பர். ஆனால் அத்தகைய பெற்றோரின் கருத்து தவறு.

ஏனெனில், வேண்டியதை செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது மட்டுமே பெற்றோரின் கடமையல்ல. குழந்தையிடம் அன்பும், ஆதரவும் காட்டி, அவர்களின் சுய பிம்பத்தை சிறப்பான முறையில் வார்த்தெடுக்க வேண்டும். தங்களுடைய சொந்த விருப்பங்களை குழந்தையிடம் திணிப்பது மாபெரும் தவறு. ஒரு குழந்தைக்கு எந்த விஷயத்தில் இயல்பான விருப்பமோ, அதை நோக்கி குழந்தையின் சுய பிம்பத்தை உருவாக்க வேண்டும். குழந்தையைப் பற்றி நேர்மறையாக நினைப்பதை, குழந்தையின் மனதிலும் பதிய வைக்க வேண்டும். ஒரு குழந்தையை வெற்றிகரமான முறையில் வளர்ப்பதைவிட, இந்த உலகத்தில் பெரிய சாதனை எதுவுமே இல்லை என்று சொல்லலாம். வளர்க்கும்போதே முறையாக வளர்த்துவிட்டால், பிற்காலத்தில் பிரச்சினையைப் பற்றி சிந்திக்க வேண்டியதேயில்லை.
உங்களுக்கும் நிம்மதி! உங்கள் பிள்ளைக்கும் நிம்மதி! 

இதே நாள்...


  • துருக்கி குடியரசு தினம்(1923)
  •  தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
  •  கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆர்மபித்தது(1950)
  •  சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)
  • ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளிய சாம்சங் !

    ஸ்மார்ட்போன் விற்பனையில் அதன் தாய் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப விரிவாக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளில், ஆப்பிள் நிறுவனத்திற்கும், சாம்சங் நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம். இதுகுறி்த்து, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி சர்வதேச அளவில் கருத்துக்கணிப்பை நடத்தி வரும் ஸ்ட்ரேட்டஜி அனாலிடிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள மின்-அஞ்சல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின் நான்காம் மற்றும் இறுதி காலாண்டில், சாம்சங் நிறுவனம், 27.8 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது சர்வதேச அளவில், 23.8 சதவீதம் என்றும், ஆப்பிள் நிறுவனம் 17.1 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது சதவீதத்தின் அடிப்படையில் 14.6 சதவீதம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத துவக்கத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 4எஸ்ஸை அறிமுகப்படுத்தியது. அந்த ஒரு காலாண்டில் மட்டும் விற்பனையின் உச்சத்தில் ஆப்பிள் நிறுவனம் இருந்தது. அதனைத் தொடர்ந்து, நோக்கியா நிறுவனம், எஸ்பூ ஸ்மார்ட்போனையும், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட்போன்களையும், சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை அறிமுகப்படுத்தியது. முன்னணி நிறுவனங்கள், தொடர்ந்து புதுமைகளை அறிமுகப்படுத்திய வண்ணம் இருந்தபோதிலும், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்‌போன்கள் மற்றும் டேப்லெட்களின் விற்பனை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்தது. சர்வதேச அளவில், அனைத்து பிரிவுகளிலும் பயன்படும் வகையில், எளிதாகவும் அதேசமயம் மிக விரைவாகவும் செயல்படும் வகையில், கேலக்ஸி மற்றும் டேப்லெட் பிசிக்கள் உள்ளதன் காரணத்தினாலேயே இதன் விற்பனை அமோகமாக உள்ளதாக சீனாவின் பீஜிங்கை தலை‌மையிடமாகக் கொண்டு இயங்கும் ஐடீசி ஆய்வு மையத்தின் உயர் அதிகாரி டி.இசட். வாங் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு‌டன் ஒப்பிடுகையில், சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்கள் விற்பனை 44 சதவீதம் அதிகரித்து 117 மில்லியன் என்ற அளவில் உள்ளதாகவும், அதேசமயத்தில், கடந்த ஆண்டில் 32.7 சதவீதமாக இருந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களளின் விற்பனை, நடப்பு ஆண்டில் 14.4 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தினமும் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும்!


    இடைவெளி விடாமல் தினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. கணவன்-மனைவி இடையே திருமணமான சில நாட்களுக்கு செக்ஸ் உறவு மிக அதிகளவில் இருப்பது வழக்கம். பின்னர் சிறிது சிறிதாக உறவு கொள்ளும் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், செக்ஸ் உறவு என்றால் இவ்வளவுதானா என்ற அலுப்பும் சலிப்பும்தான்.

    தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களை எல்லாம் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர். அதற்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர். 

    இதனால் மாதவிடாய் நாட்கள் உட்பட இடைவெளிகளை இதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா டாக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் கூறுகையில், "நாட்கள் இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது.

    தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் செக்ஸ் உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.

    ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது," என்றார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக - ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!


    இந்தப் போர்க்குற்றவாளியை கைது செய்து கூண்டிலேற்றுங்கள் என்று கோரி ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலிய தலைநகர் பெர்த்தில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் மகாராணியாக உள்ள பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்த் நகரில் தமிழர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவில் வாழும் வெவ்வேறு இனக்குழுக்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தன.  இதில் தமிழ் பிரமுகர்கள் யோகன் தர்மா, அஜந்தி போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "இந்தப் போர்க்குற்றவாளியை கைது செய்து கூண்டிலேற்றுங்கள்," "போர் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?" என்றெல்லாம் கோஷமிட்டனர். 

    மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் அல்ல- முள்ளுக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டியவர் என்று போராட்டத்தில் பங்கேற்ற யோகன் தர்மா குறிப்பிட்டார். ஈழப் போரில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 79பேரை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். தயவுசெய்து ஆஸ்திரேலிய அரசு ராஜபக்சேவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நாடு திரும்பிப் போக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்றும், அங்கு அமைதி திரும்பி மக்களின் சுதந்திரமும், தனி ஈழத்துக்கான உறுதியும் கிடைக்கும் வரை சேர்க்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைச் செய்யும் அதிகாரம் காமன்வெல்த்துக்கு உள்ளதாகக் கூறிய அஜந்தி, ஏற்கெனவே பாகிஸ்தான், பிஜி, நைஜீரியா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளை நீக்கிய சம்பவத்தை நினைவூட்டினார்.

    கருணாநிதியை மீறிச் செயல்படும் சக்தியாக ஸ்டாலின் பரிதி இளம்வழுதி!

    கருணாநிதியை மீறிச் செயல்படும் சக்தியாக மு.க. ஸ்டாலின் உள்ளார் என்று முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி குற்றஞ்சாட்டினார். உள்கட்சி ஜனநாயகத்தில் தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜிநாமா செய்வதாக அக்டோபர் 8-ம் தேதி கருணாநிதிக்கு பரிதி இளம்வழுதி கடிதம் எழுதியிருந்தார். இந்த ராஜிநாமாக் கடிதம் திமுக தலைமையால் ஏற்கப்பட்டு வியாழக்கிழமை துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு வி.பி. துரைசாமி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை பரிதி இளம்வழுதி 

    செய்தியாளர்களிடம் கூறியது: துணைப் பொதுச்செயலாளராக வி.பி. துரைசாமி நியமிக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. துரைசாமிக்கும், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆ. கிருஷ்ணசாமிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் இந்த முடிவை கருணாநிதி மனப்பூர்வமாக எடுத்திருக்க மாட்டார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். கருணாநிதியை மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.வட சென்னை மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். இந்தப் பதவியின் மூலமும், சொற்பொழிவாளராக தொடர்ந்து திமுகவுக்காகப் பணியாற்றுவேன். சட்டப்பேரவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தோற்க வேண்டும் என்று செயல்பட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் புகார் மனு அளித்தேன். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அவர்கள் சேர்க்கப்பட்டபோது என்னைக் கேட்கவில்லை. குற்றம் சாட்டிய என்னையும், குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர்களையும் விசாரித்து ஒரு நீதிபதியாகத்தான் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செயல்படாமல் மீண்டும் அவர்களைக் கட்சியில் சேர்த்துள்ளனர். இது சிறிய விவகாரம் இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினரின் மனக்குமுறலுக்கு இதை ஒரு பதமாகக் கொள்ளலாம். ஸ்டாலின் சந்திக்கவில்லை: இந்த விவகாரம் தொடர்பாக நான்கு முறை மு.க.ஸ்டாலினைச் சந்திக்க முயற்சித்தேன். அவர் சந்திக்க மறுத்துவிட்டார். இப்படிச் சந்திக்காததிலிருந்தே ஸ்டாலின்தான் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்பது புரியும். கருணாநிதியை இன்னும் சந்திக்க முயற்சிக்கவில்லை. இப்போது கருணாநிதியை மீறிய செயல்பாடு கட்சியில் அதிகரித்து இருக்கிறது. இப்படிச் செயல்படும் சக்தியாக ஸ்டாலின் இருக்கிறார்.தலைமை தாங்குவேன்: கட்சியில் கோஷ்டிப்பூசல் இருப்பது உங்களுக்கே தெரியும். தேவைப்பட்டால் தமிழகம் முழுவதும் மனக்குமுறலோடு உள்ளவர்களுக்காகத் தலைமையும் தாங்குவேன்.


    வழக்குகளுக்குப் பயந்துகொண்டுதான் இதுபோன்ற நிலைப்பாட்டை நான் எடுத்திருப்பதாகச் சொல்வதைக் கேட்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. 1991-ம் ஆம் ஆண்டு தனியொருவனாக சட்டப்பேரவையில் செயல்பட்டதை எல்லோரும் அறிவார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் என் மீதுதான் முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்குகளுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.என்னுடைய ராஜிநாமா கடிதத்தை கருணாநிதிக்கும், அண்ணா அறிவாலயத்திற்கும்தான் அனுப்பினேன். இது எப்படி பத்திரிகை அலுவலகங்களுக்குப் போனது என்று எனக்குத் தெரியாது.தலைவராக ஸ்டாலின்: கருணாநிதியே, ""திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை'' என்று கூறியுள்ளார். இதனால் தேர்ந்தெடுக்கப்படும் யாரையும் தலைவராகக் கொள்வேன் என்றார் பரிதி இளம்வழுதி. திமுக கவுன்சிலர் து. களரிமுத்து உள்பட பல ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.



    யாரும் மீறிச் செயல்படவில்லை டி.கே.எஸ்.இளங்கோவன்: திமுக தலைவர் கருணாநிதியை மீறி யாரும் செயல்படவில்லை என்று மக்களவை உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: கருணாநிதி தினமும் அறிவாலயம் வருகிறார். மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து உறுப்பினர்களும் அவரது ஆலோசனையின்படிதான் செயல்படுகிறோம். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் பரிதி இளம்வழுதி. அவர் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து, தனது மனக்குறையைத் தெரிவிக்கலாம். அதற்கேற்ப தனது முடிவை கருணாநிதி தெரிவித்திருப்பார். அதை விடுத்து பரிதி இளம்வழுதி ஏன் பத்திரிகைகளை நாடினார் எனத் தெரியவில்லை என்றார் டி.கே.எஸ்.இளங்கோவன்.



    பரிதி இளம்வழுதி கண்ணீர்: பரிதி இளம்வழுதி திமுகவை விட்டு விலகமாட்டார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை எழும்பூர் பகுதியில் தனது ஆதரவாளர்களோடு பேசிக்கொண்டிருந்தார் பரிதி. அப்போது, ""எதை இழந்தாலும் திமுகவை விட்டு வெளியேறாதே, வீடுகளுக்கு பத்து பாத்திரங்கள் தேய்த்தாவது உன்னைக் காப்பாற்றுகிறேன்; கருணாநிதிதான் உன் தலைவர்'' என்று தனது தாயார் கண்ணம்மா கூறியதாக ஆதரவாளர்களிடம் சொல்லி அழுதுள்ளார் பரிதி. 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...