|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 September, 2011

ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தியே தீர வேண்டும் ஐ.நா. பிரதிநிதிகளிடம் தமிழ் அமைப்புகள்!

சென்னை அடையாறில் ஐ.நா.சபையின் ஓர் அங்கமான யூனிசெப் அமைப்பு உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை பல்வேறு தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வந்தனர். அங்கிருந்த ஐ.ந்ô. பிரதிநிதிகளிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, இலங்கையில் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும், அங்குள்ள கொடிய சித்ரவதை சிறைகளில் உள்ள இளைஞர்களையும் விடுவித்து அவரவர் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அங்கு கவுரவமான வாழ்க்கையைத் தொடங்க உரிய நடவடிக்கையை ஐ.நா. எடுக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களர்களை வெளியேற்ற வேண்டும். அங்கு நடந்த போர்க்குற்றங்களை அந்த நாட்டு அரசே விசாரித்தால் நீதி கிடைக்காது. சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். சேனல் 4 மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் வெளியிட்ட ஆதாரங்களை இந்த விசாரணைக்கு உரிய ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவேண்டும்.

மேற்கண்ட இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு வெளியேற்றாதபடி, ஐ.நா. சபை பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு கேபிளில் கட்டண சேனல்கள் ஒளிபரப்பு துவங்கியது!


அரசு கேபிளில், நேற்று முதல், "விஜய், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், டைம்ஸ் நவ்' உட்பட, பல்வேறு கட்டண சேனல்களும் ஒளிபரப்பப்பட்டன.

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அரசு கேபிள், "டிவி' நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, ஒளிபரப்பு சேவையை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2ம் தேதி, அரசு கேபிள், "டிவி' நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மாதம், 70 ரூபாய் கட்டணத்தில், 90 சேனல்களை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கட்டண சேனல்களும் ஒளிபரப்பாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இலவச சேனல்களுடன், நேற்று முதல், பல்வேறு கட்டண சேனல்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: செவ்வாய்க் கிழமை(நேற்று) முதல், விஜய், ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளானட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏ.எக்ஸ்.என்., எச்.பி.ஓ., - நேஷனல் ஜியாகிரபிக், என்.டி.டி.வி., - சி.என்.என்., டைம்ஸ் நவ், ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட, பல்வேறு கட்டண சேனல்களும், எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அரசு கேபிள், "டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும், மாதம், 70 ரூபாய் கட்டணத்தில் அனைத்து சேனல்களையும் பார்க்கலாம். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதே நாள்...


  • உலக அமைதி தினம்
  •  ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
  •  பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது(1792)
  •  பர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(2004)
  • ஒரே இரவில் 8 பெண்களுடன்...

    பெர்லுஸ்கோனியின் பெட்ரூம் கதைகள் என்ற பெயரில் எப்போது ஹாலிவுட்டில் படம் எடுக்கப் போகிறார்கள் என்று தெரியில்லை. அந்தஅளவுக்கு பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டக் கோலாகலங்கள் குறித்த லீலைகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பெர்லுஸ்கோனி ஒரே இரவில் 8 பேருடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்களை அழைத்து வர அரசு செலவில் விமானத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பெர்லுஸ்கோனியைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள்தான் இப்படியெல்லாம் புகார் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின்.

    இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோனி. இவருக்கு வயது 74 ஆகி விட்டது. ஆனாலும், இன்னும் அடங்கவில்லை இவரது காமக்களியாட்டங்கள். பெண்களுடன் கும்மாளமிடுவதுதான் இவரது முக்கிய வேலையாக உள்ளது. பிறகுதான் பிரதமர் பதவியெல்லாம் என்பது போலாகி விட்டது இவரது லீலைகள். இவர் மீது பல செக்ஸ் புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் விசாரணைகளும் நடந்து வருகின்றன. விசாரணைகளின்போது வெளியாகும் தகவல்கள் பெர்லுஸ்கோனியைப் பற்றி அனைவரும் வியந்து வெளிறிப் போகும் அளவுக்கு உள்ளன.

    இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு விபசார புரோக்கரான தராந்தினி என்பவர் பெரிய வியாபாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகளின் டேப்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பெர்லுஸ்கோனி குறித்து திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. எல்லாமே பொம்பளை மேட்டர் பற்றித்தான்.

    ஒருமுறை 11 பெண்களை பெர்லுஸ்கோனிக்காக ஏற்பாடு செய்திருந்தாராம் தராந்தினி. ஆனால் அத்தனை பேருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய் விட்டதாக வருத்தப்பட்டு தராந்தினியிடம் கூறியுள்ளார் பெர்லுஸ்கோனி. இதுகுறித்து பெர்லுஸ்கோனி கூறுகையில், நேற்று இரவு எனது பெட்ரூக்கு வெளியே பெரிய கியூவே காத்திருந்தது. 11 பேர் வந்திருந்தனர். ஆனால் என்னால் எட்டு பேருடன்தான் இருக்க முடிந்தது. காரணம், படுக்கை அறை நிரம்பி வழிந்தது. அதற்கு மேல் யாரையும் உள்ளே அழைக்க முடியாத நிலை. எனது திறமை குறித்து காலையில்தான் என்னால் முழுமையாக உணர முடிந்தது என்று கூறியுள்ளார் பெர்லுஸ்கோனி.

    அத்தோடு நில்லாமல் இங்கிலாந்து (முன்னாள்) பிரதமர் கார்டன் பிரவுன், போப்பாண்டவர் என பல உலகத் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திக்கவுள்ளதால், கொஞ்ச நாளைக்கு பார்ட்டி யாரையும் அனுப்ப வேண்டாம் என்றும் அந்த புரோக்கரிடம் கேட்டுக் கொண்டுள்ளார் பெர்லுஸ்கோனி.

    பெர்லுஸ்கோனியின் இந்தப் பளிச் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது, அதிர வைத்துள்ளது. அத்தோடு நின்றாரா பெர்லுஸ்கோனி?, அதுதான் இல்லை. தனக்குத் தேவைப்படும் அழகிகளை அழைத்து வர அரசு செலவில் விமானங்களையே அனுப்பி வைத்து என்ஜாய் செய்துள்ளார். மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்கு பெண்களை வர வைத்து பின்னர் அவர்களுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளார்.இதற்கான செலவுகளை அரசு கஜானாவில் இருந்து செலவி்ட்டதாக தெரிகிறது.

    இந்த தகவல்கள் அடங்கிய டேப்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தராந்தினி, மாஜிஸ்திரேட் மற்றும் சில முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் கூட பெண்களை அனுப்பி வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. உடனடியாக பெர்லுஸ்கோனி விலக வேண்டும் என்று அவை கோரியுள்ளன. ஆனால் பெர்லுஸ்கோனி படு கூலாக இதுகுறித்துக் கூறுகையில், எனது தனிப்பட்ட வாழ்க்கை நன்றாகவும் இருக்கலாம், அசிங்கமாகவும் இருக்கலாம். ஆனால் அது எனது தனிப்பட்ட வாழ்க்கை, நான் மட்டுமே சம்பந்தப்பட்டது. அது குறித்து யாரும் கவலைப்பட முடியாது என்று கூறியுள்ளார்.

    இத்தாலியின் இந்த மதன காமராஜனின் லீலைகள் உலுக்கியெடுத்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக ரஷ்யாவிலிருந்து ஒரு குரல் கிளம்பியுள்ளது. அது சாட்சாத் புடின்தான். இதுகுறித்து அவர் கூறுகையில், எல்லோருக்கும் பெர்லுஸ்கோனி மீது பொறாமை. அதனால்தான் புகார் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் புடின்.

    ஒரு வேளை புடின் 'புற்று'க்குள்ளும் இதுபோல ஏதாவது இருக்குமோ...?

    நோய்களை உருவாக்கும் 'நான் ஸ்டிக்!

    மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.

    ஒட்டவே ஒட்டாது: நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்பைச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

    கொழுப்பு சத்து அதிகரிக்கும்: உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

    விலை கொடுத்து வாங்கப்படும் நோய்கள் மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலருக்கும் மறுபடியும் மண் சட்டி சமையலுக்கே திரும்ப வேண்டும் என்று ஆசை வருவது நியாயம்தான்.

    இயற்கைக்கு மாறான செக்ஸ் கணவனை கொன்ற மனைவி !


    இயற்கைக்கு மாறான முறையில் செக்ஸ் உறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவனின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்த பெண் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். மத்திய பிரதேச மாநிலம் பித்தல் மாவட்டத்தில் உள்ள சார்னி நகரில் வசித்து வந்தவர் ராம்சந்திரன். இவரது மனைவி அனிதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராம்சந்திரன் விகாரமான செக்ஸ் உறவு கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.

    ராம்சந்திரனின் மொபைல்போனில் இருந்த சில இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு முறை காட்சிகளை காட்டி அதை போல உறவு கொள்ள மனைவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு சம்மதிக்காத அனிதாவை அடித்த துன்புறுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்றும் இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வருமாறு அனிதாவை, ராம்சந்திரன் வற்புறுத்தி உள்ளார்.

    வழக்கம் போல அதற்கு அனிதா சம்மதிக்கவில்லை. இதையடுத்து அனிதாவை அடித்து துன்புறுத்திய போது அவரிடமிருந்து தப்ப அருகில் கிடைத்த கல்லால் ராம்சந்திரன் தலையில் கோபம் தீர தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராம்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அதன்பின் கணவனை கொலை செய்ததாக கூறி, அருகில் உள்ள பத்தக்ஹீடா போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் சென்ற அனிதா சரணடைந்தார். ராம்சந்திரன் தன்னை துன்புறுத்திய முறைகளை விளக்கும் மொபைல் படங்களையும் அனிதா, போலீசாரிடம் சாட்சிக்காக ஒப்படைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராம்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொலை வழக்கு-டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது மத்திய அரசு!

    சென்னையில் வாலிபர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு அரசு முறை பயணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடக்கோரி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.

    அதில், சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் 1994ல் டக்ளசுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே அவரை உடனடியாக கைது செய்யுமாறு சென்னை போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கு மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கான வெளியுறவுத்துறை துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,

    கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுக்கு எதிரானதாகும்.

    ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.

    வெள்ளத்தில் மிதக்கும் சென்னை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நி!லை

    விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவ மழைக் காலம் தற்போது மீண்டும் வேகம் பிடித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் இதனால் மழை வலுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது.

    சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வியாசர்பாடி, தங்கச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 58 மில்லி மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 45 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    சரியான வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக வியாசர்பாடி பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனை அருகில் மழை நீர் குளம்போல தேங்கியதால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

    மையிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். மழையினால் கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. காலை நேரத்திலும் மழை பெய்ததால் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    காற்றழுத்தத் தாழ்வு நிலை: இந் நிலையில் வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஒரிஸ்ஸா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை முதல் சென்னை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது. இன்றிரவு அந்த காற்றழுத்தம் தமிழகம்- ஆந்திரா கடலோரத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் சென்னையில் இன்றிரவு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு திசை நோக்கி மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் 70 மி.மீ. அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    வட மாவட்டங்களில் நல்ல மழை: சென்னை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    பள்ளிகளுக்கு விடுமுறை: இன்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்கிறது: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 11,872 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    22வயது இளம்பெண்ணை துரத்தி துரத்தி கற்பழிக்க முயற்சி!



    விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார்.   அரசு மருத்துவராக இருக்கும் இவர் இந்த தனியா மருத்துவமனையை நடத்தி வருகிறார்.  இந்த மருத்துவமனையுடன் மருந்துக்கடையும் உள்ளது.  இதையும் இவரே நடத்திவருகிறார்.ராதாகிருஷ்ணனின் இரண்டாவது மனைவியின் மாமா ராஜசேகர் (வயது 70) .  இவர்தான் இந்த மருத்துவமனையின் மேற்பார்வையாளர்.  திருவண்ணைநல்லூருக்கு பக்கத்தில் உள்ள ஏனாதிமங்களத்தை சேர்ந்த சரண்யா( 22), இந்த மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.  

    எழுபது வயது ராஜசேகர்,  இந்த இளம்பெண்ணிடம் நீண்டநாளாக சில்மிஷம் செய்து வந்துள்ளார்.   பொறுமையிழந்த சரண்யா,  வீட்டில் அம்மாவிடம் முறையிட்டுள்ளார்.  அவர் வயசானவர், தப்பான எண்ணத்தில் எல்லாம் அப்படி செய்யமாட்டார்.  பேத்தி என்கிற முறையில் உன்னிடம் விளையாடியிருப்பார் என்று மகளுக்கு ஆறுதல் கூறி தொடர்ந்து அதே மருத்துவமனைக்கு வேலைக்கு அனுப்பினர். ராஜசேகர், தொடர்ந்து சரண்யாவிடம் விளையாடினார்.  பேத்தியிடம் தாத்தா செய்யும் விளையாட்டு அல்ல இது என்பதை உணர்ந்தார் சரண்யா.  அந்த அளவிற்கு ராஜசேகரின் சில்மிஷ விளையாட்டு அதிகமாகிக் கொண்டிருந்திருக்கிறது.

    மீண்டும் வீட்டில் முறையிட்டிருக்கிறார் சரண்யா.   கொஞ்ச நாள் பொறூமையாக இரு.  அதற்குள் உனக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறேன்.  அதுவரை வேலைக்கு சென்றூவா என்று அனுப்பியுள்ளனர்.   தினமும் ராஜசேகரிடம் இருந்து தப்பித்து வருவதே சரண்யாவுக்கு பெரும் வேலையாக இருந்திருக்கிறது.   இந்நிலையில் திருவண்ணாமலையில் சரண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.  நேற்று சரண்யாவின் அம்மா,   நீ வேலைக்கு போய், எல்லோரிடமும் இனி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வா என்று அனுப்பியிருக்கிறார்.

    சரண்யாவும் மருத்துவமனைக்கு வந்து எல்லோரிடம் தனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.  அதனால் இனி வேலைக்கு வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று இத்தனை நாளூம் காத்திருந்த ராஜசேகருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.   இனி சரண்யா வரமாட்டாள். அதனால் இன்று எப்படியாவது ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சரண்யாவை வலுக்கட்டாயப்படுத்தியிருக்கிறார். 

    அவள் மறுக்கவே, இவர் பிடிவாதம் செய்யவே, தள்ளிவிட்டு ஓடியிருக்கிறாள்.   மருத்துவமனைக்குள்ளேயே துரத்தி துரத்தி கற்பழிக்க முயற்சித்திருக்கிறார் ராஜசேகர்.  கடைசி வரை முயற்சித்தும் ஆசைக்கு இணங்கவில்லையே என்கிற ஆத்திரம் ஒருபக்கம்,  வெளியே விட்டால் இதை சொல்லி நம் மானத்தை வாங்கிவிடுவாள் சரண்யா என்கிற கலக்கம் ஒரு பக்கம் ராஜசேகரை வெறிபிடிக்க வைத்தது.மருத்துவமனையில் இருந்து கத்தியை எடுத்து துரத்தி துரத்தி சரண்யாவை குத்தி ரத்த வெள்ளத்தில் சாயத்தார்(ன்) ராஜசேகர்.  அதன் பின்னர் ஏதேதோ மாத்திரைகளை விழுங்கிவிட்டு தானும் உயிருக்கு போராடுவது போல் நாடகம் ஆடினார் ராஜசேகர்.

    சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர்.
    சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.சரண்யா திருடிவிட்டாள்.  அதனால்தான் கத்தியால் குத்தினேன் என்று கூறியுள்ளார் ராஜசேகர்.   திருவிட்டாள் என்று புகார் செய்ய வேண்டியதுதானே.   அதற்கு ஏன் குத்தினாய் என்று இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விக்கு ராஜசேகரிடமிருந்து பதில் இல்லை.

    ஒரு அப்பாவி இளம்பெண் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியும் இல்லை ராஜசேகரின் முகத்தில். 

    வரும் 2013-2014-ம் ஆண்டில் உலகப்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, ஜப்பானை மிஞ்சிவிடும் என ஆய்வறிக்கை !

     வரும் 2013-2014-ம் ஆண்டில் உலகப்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, ஜப்பானை மிஞ்சிவிடும் என ஆய்வறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டு்ள்ளது. இந்தாண்டு மார்ச் நிலவரப்படி உலகப்‌பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு ‌மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறனில் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளதே இதற்கு காரணம். இந்நிலையில் கிரிசில் என்ற பொருளாதார ஆய்வமைப்பின் தலைவரும் பொருளாதார நிபுணருமான சுனில்சின்ஹா கூறியதாவது: கடந்த நவம்பரில் ஜப்பான் , சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகப்பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் இருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் 7 முதல் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு ஜப்பான் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தது. எனினும் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் அதன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் வரும் 2013-2014-ம் ஆண்டில் இந்தியா ஜப்பானை மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் கூறினார்,.

    கவர்ச்சியால் மயக்கி பணம் பறிக்க முயன்றார்! சோனா!

    மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை நான் கடுமையாக எச்சரிக்கை செய்தேன். அதனால்தான் என் மீது அவர் பொய் புகார் கொடுத்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் எஸ்..பி.பி.சரண் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார். சோனா பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தன்னை போலீசார் எந்நேரமும் கைது செய்யலாம் என கருதிய எஸ்.பி.பி.சரண், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். சமுதாயத்தில் மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நான். `மங்காத்தா படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்த தொடங்கினோம். நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக்கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களை தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்னையில் சிக்கினார்.

    சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்து கொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது. அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன். அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என் மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. என்னை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துவிட்டனர். நான் தவறு செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும், என்று சரண் கூறியுள்ளார்.

    இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். அரசு தரப்பு வக்கீல் பாலசுப்பிரமணியம், மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார்.  போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (20ம்தேதி) நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

    இணையதள காதலால் விபரீதம்: எம்பிஏ மாணவி தற்கொலை!

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி முர்மு. இவருக்கு வயது 22. இவர் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், சில நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் உள்ள தனது அறையில் முடங்கி கிடந்தார். 19.09.2011 அன்று மாலை அவரது தோழிகள் வந்து பார்த்தபோது, அறையின் கதவு பூட்டிக்கிடந்தது. பல முறை தட்டியும் திறக்காததால், காவலாளிகள் கதை உடைத்தனர். உள்ளே மாலினி முர்மு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இணையதளத்தின் மூலம் அவர் வாலிபர் ஒருவரை தீவிரமாக காதலித்ததும், அவருடனான உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரத்தியின் காரணமாகவே, மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தற்கொலைக்கு முன்பு அந்த வாலிபருக்கு இணையதளம் மூலம் மாலினி எழுதியுள்ள கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் ஐஐஎம் கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாலினியின் பெற்றோரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை பெற்றுக்கொள்ளுவதற்காக மாணவியின் பெற்றோர் ஜார்க்கண்டில் இருந்து பெங்களூருக்கு வந்தனர்.தற்கொலைக்கான காரணத்தை தனது லேப்டாப்பில் மாலினி குறித்துவைத்துள்ளார். தனது நண்பர் தன்னைவிட்டு பிரிந்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மாலினி அந்த அறையில் வேறு மாணவிகளின் துணை இல்லாமல் தனியாகத்தான் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெங்களூரில்தான் அவரது நண்பரும் இருந்துள்ளார் என்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அவர்கள் பிரிந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் மூலம் போலீசார் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

    ஃபேஸ்புக்கில் அந்த நண்பர் மாலினியைப் பிரிவது குறித்து கருத்து தெரிவிக்கையில், என்னுடைய கேர்ள்ஃபிரண்டை விட்டு விலகிவிட்டேன். இன்று சுதந்திரமான நாளாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஐஐஎம் அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நண்பர் பிரிந்ததால் ஐஐஎம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ஆண்டுக்கணக்கில் அரியர்ஸ் வைத்துள்ள தனித் தேர்வர்களுக்கு சிக்கல்!


    ஆண்டுக்கணக்கில், அரியர்ஸ் வைத்துள்ள, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற, அடுத்த ஆண்டு செப்டம்பர் தேர்வு வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. இந்த கால கட்டத்திற்குள் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், புதிதாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்துள்ளன. பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேரடியாக சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு எழுதுவர்.

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி அமலானதன் காரணமாக, 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தனித்தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 75 ஆயிரம் முதல், 90 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஆண்டுக்கணக்கில், &'அரியர்ஸ்&' வைத்துள்ளனர். இதனால், தனித்தேர்வு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    இந்த மாணவர்கள், 2012, செப்டம்பரில் நடைபெறும் தேர்வுக்குள், &'அரியர்ஸ்&' பேப்பரில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதாவது, தேர்வுத்துறை விதிமுறைப்படி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்வு மற்றும் அதன்பின் செப்டம்பரில் நடைபெறும் தனித்தேர்வு ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத முடியும்.செப்டம்பர் 21 ம் தேதி துவங்கும் தனித்தேர்வை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் எழுதலாம். அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், 2012 செப்டம்பருக்குள், தோல்வி அடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில், 2013 மார்ச்சில் நடைபெறும் தேர்வை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுத வேண்டியிருக்கும். தேர்ச்சி அடைந்த பாடங்கள் உட்பட, ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வெழுத வேண்டும். பல ஆண்டுகளாக, பழைய பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, திடீரென புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதுவது, தனித்தேர்வு மாணவர்களுக்கு பெரிதும் சிரமமாக இருக்கும். இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வுத்துறை விதிமுறைப்படி, 2012, செப்டம்பர் தேர்வு வரை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதலாம். அதன்பிறகும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத வேண்டுமெனில், தமிழக அரசின் அனுமதி தேவை. அதிகமான மாணவர்கள், &'அரியர்ஸ்&' வைத்திருந்தால், அவர்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கக்கோரி, அரசிடம் தேர்வுத்துறை அனுமதி கேட்கலாம். அரசு அனுமதித்தால், கூடுதலாக ஒரு பருவமோ அல்லது இரு பருவ தேர்வுகளுக்கோ மாணவர்கள் அனுமதிக்கப்படலாம். அரசு அனுமதி மறுத்தால், புதிய பாடத் திட்டத்தின் கீழ், அனைத்து தேர்வுகளையும் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை.
    இவ்வாறு அவர் கூறினார்.


    10ம் வகுப்பில் 77 ஆயிரம் பேர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுகள், செப்டம்பர் 21 ம் தேதி துவங்குகின்றன. அக்டோபர் 1ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வை, 48 ஆயிரத்து, 696 மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, 76 ஆயிரத்து, 828 மாணவர்களும் எழுதுகின்றனர்.

    சாக்கடலில் ஒட்டுத் துணியின்றி 1000 பேரை வைத்து ஒரு 'போட்டோ ஷூட்'!






    நிர்வாண புகைப்படம் எடுப்பதில் பிரபலமான ஸ்பென்சர் ட்யூனிக் என்ற புகைப்படக் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேலின் சாக்கடலில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டுத் துணியில்லாமல் கடலில் இறங்கி போஸ் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இவர்கள் அத்தனை பேரும் இஸ்ரேலியர்கள் ஆவர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் 18 வயது முதல் 77 வயது வரையிலான ஆண், பெண்கள் கலந்து கொண்டு ட்யூனிக்குக்கு போஸ் கொடுத்தனர். நீரில் மிதந்தபடியும், நீருக்குள் நின்றபடி கைகளை மேலே உயர்த்தியபடியும், விதம் விதமாக இவர்கள் போஸ் கொடுத்தனர்.

    ட்யூனிக் வேண்டுகோளை ஏற்று இவர்கள் அதிகாலை 1 மணிக்கே கடலுக்கு அருகே வந்து கூடி விட்டனர். பின்னர் உடைகளைக் களைந்த அவர்கள் கடலில் இறங்கி போஸ் கொடுக்கத் தயாரானார்கள். ட்யூனிக் சூரிய உதயம் ஆரம்பமானவுடன் கடலில் இறங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனால் அனைவரும் சூரியனின் வருகைக்காக காத்திருந்தனர்.

    சூரிய உதயம் தொடங்கியதும் அத்தனை பேரையும் கடலில் இறங்கி மிதக்குமாறு கூறினார் ட்யூனிக். அதன்படி அனைவரும் கடலில் மிதந்தனர். அதை புகைப்படம் எடுத்துத் தள்ளினார் ட்யூனிக். அடுத்து ஒரு தீவு போன்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்துப் படம் பிடித்தார் ட்யூனிக். படப்பிடிப்பு நடைபெறும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மதவாதிகள் பிரச்சினை செய்யலாம் என்பதால் இந்த ஏற்பாடு. ட்யூனிக்கே ஒரு யூத அமெரிக்கர்தான். இவர் மனிதர்களை நிர்வாண கோலத்தில் பல வித்தியாசமான போஸ்களில் புகைப்படம் எடுக்கும் கலைஞர் ஆவர்.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஹாலந்து மற்றும் ஆஸ்திரியாவிலும் இதுபோன்ற நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளார் ட்யூனிக். 1992ல் இருந்து இந்த வேலையில் இவர் ஈடுபட்டு வருகிறார். புகைப்படமாக மட்டுமல்லாமல் வீடியோவையும் அவர் உருவாக்கி வருகிறார்.

    இவர் எடுத்த மிகப் பெரிய நிர்வாண புகைப்பட போஸ் நிகழ்ச்சி 2007ல் மெக்கிசோ சிட்டியில் நடந்தது. அதில் 18,000 பேர் பங்கேற்றனர்.

    22 கோடி நானோ!


    டாடா குரூப் திங்களன்று   நானோ கார் ஒன்றை  அறிமுகம் செய்தது.  இந்த கார் தங்கம் மற்றும் வெள்ளியால்   உருவாக்கப்பட்டுள்ளது. விலையுயர்ந்த கற்களும்  பதிக்கப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு   ரூ .22 கோடி.
     
    ஆனால், இந்த கார்  விற்பனைக்கு அல்ல.  மதிப்புமிக்க முழுமையான  நானோ கார்  கோல்ட் ப்ளஸ்   ஜூவல்லரி, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ்,  டாடா குரூப் நிறுவனத்தின்  ஒரு தனிப்பட்ட வர்த்தக மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...