|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2012

சூரிய ஒளியில நடங்க ஆண்மை அதிகரிக்கும்...

சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்து ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மை குறைபாட்டை நீக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மகப்பேறின்மையால் தவிக்கும் தம்பதியர் சூரிய ஒளியில் நடந்தாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஏசி அறைக்கும் அடைபட்டு கிடக்கும் வாழ்க்கை. சூரிய ஒளி பட்டலே அலர்ஜி என எண்ணும் இளைய தலைமுறையினர் இன்றைய சூழலில் அதிகரித்து வருகிறது. இதனால் உடலிற்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைக்காமல் ஆண்மை குறைவு போன்றவற்றால் அல்லாட நேரிடுகிறது.

அடைபட்டு கிடக்கும் ஆண்கள் விடுமுறை நாட்களில் கூட வெளியில் செல்லாமல் தொலைக்காட்சி முன்பும், கணினியிலும் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது இன்றைய பல இளைஞர்களின் வாழ்க்கை. இவ்வாறு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்றில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

‘வைட்டமின் டி’ தரும் சூரியன் டென்மார்க்கைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்விலும் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பேரின்மையால் தவித்தவர்களுக்கு வைட்டமின் டி சத்தினை அளித்ததன் மூலம் அவர்களுக்கு மலடுத்தன்மை நீங்கியது தெரியவந்தது. வைட்டமின் டி ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியல் அளவையும் விந்தணுவில் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரின்மையை தடுக்க வைட்டமின் டி அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.

குழந்தை பாக்கியம் தரும் தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. இதனால் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. எனவே விந்தணு வலு இழந்தவர்கள் காலார சூரிய ஒளியில் நடக்கலாம். சந்தோசமாய் சூரியக்குளியல் நடத்தலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆய்வில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும், பல மடங்கு மேம்பட்டுள்ளதாக தெரிவித்தனர் ஆய்வை மேற்கொண்ட கிளார்க். 35 சதவிகித தம்பதியர் குழந்தையின்மை சிக்கல் தீர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டெஸ்டோரோன் அதிகரிப்பு இதே கருத்தை மையமாக கொண்டு ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் சுரப்பை தூண்டுவதற்கு வைட்டமின் டி அதிக அளவில் தேவைப்படுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அலுவலக அறைக்குள்ளேயே அடைபட்டு கிடப்பவர்கள் எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும். இந்த ஆய்வு முடிவு டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பீகார் அமைச்சர்களை விட மனைவிமார்கள்தான் பணக்காரர்கள்!

பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே உள்ளிட்ட பல அமைச்சர்களை விட அவர்களின் மனைவிமார்கள் பணக்காரர்களாக உள்ளனர்.31-12-2011 அன்றுடன் முடிவடைந்த ஆண்டுக் கணக்கின்படி தங்களுக்கு உள்ள அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை பீகார் மாநில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங், கட்டுமானத் துறை அமைச்சர் தாமோதர் ரௌத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிதிஷ் மிஷ்ரா, நீர் வள அமைச்சர் விஜய் குமார் சவுதரி ஆகியோரைவிட அவர்களின் மனைவிகள் பணக்காரர்களாக உள்ளனர்.நரேந்திர சிங்கிடம் ரூ.25.50 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவரது மனைவி சகர்மணி தேவியிடம் ரூ.27.42 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன.

இதே போன்று சுகாதாரத் துறை அமைச்சர் சௌபேயிடம் ரூ.61.24 லட்சம் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவரது மனைவி நீதாவிடம் ரூ.94.99 லட்சம் சொத்துக்கள் உள்ளன. அதாவது அமைச்சரை விட அவரது மனைவியிடம் ரூ.30 லட்சம் கூடுதலாக உள்ளது.நிதித்துறையை கவனிக்கும் துணை முதல்வர் மோடியிடம் ரூ.25.78 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், அவரது மனைவி ஜேஎஸ் மோடியிடம் ரூ.29.84 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் உள்ளன.

பீகார் மாநில முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர் விஜய் குமார் சௌபேயிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், அவரது மனையிடம் ரூ.20.28 லட்சம மதி்ப்புள்ள அசையும் சொத்துக்களும் உள்ளன. சுற்றுலாத் துறை அமைச்சர் சுனில் குமார் பின்டுவிடம் ரூ.20.09 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், அவரது மனைவியிடம் ரூ.40.45 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களும் உள்ளன. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஹித் அலி கானும், நரேந்திர சிங்கும் தங்கள் குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்படவில்லை என்று கூறி அதன் விவரங்களை வெளியிடவில்லை.

நிதிஷ் குமார் அமைச்சரவையில் உள்ள 3 பெண் அமைச்சர்களான பர்வீன் அமானுல்லா(சமூக நலத்துறை), ராணி(தொழில்துறை) மற்றும் சுக்தா பாண்டே(கலை மற்றும் கலாச்சாரம்) ஆகியோரும் தங்கள் கணவன்மார்களைவிட அதிக சொத்துக்கள் வைத்துள்ளனர்.நில சீர்திருத்தம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ரமாய் ராமிடம் ரூ.1.25 கோடி மதி்பபுள்ள சொத்துக்களும், மோடியிடம் ரூ.1.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது மகனிடம் ரூ.1.62 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன.

Tamil Actress Shriya Saran Latest Photoshoot.


பார்த்தால் பசி தீரும் படத்தின் 50வது ஆண்டு விழா









 மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பார்த்தால் பசி தீரும் படத்தின் பொன் விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. 1962-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி ஆகியோர் நடிப்பில், பீங் சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் "பார்த்தால் பசி தீரும்". இந்த படத்தின் 50வது ஆண்டு விழாவை   நடிகர் திலகம் பிலிம் சொசைட்டி மற்றும் பாரத் கலாசார் இணைந்து நடத்தியது. இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் சவுகார் ஜானகி, சச்சு, எம்.என்.ராஜம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ், வசன கர்த்தா ஆரூர் தாஸ், இசையமைப்பாளர் ராமமூர்த்தி, பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்த்தால் பசி தீரும் படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது கருணாநிதி!

 தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில், மத்திய அரசு தாமதத்துடன் நடந்துகொள்கிறது என்றும், விளைவுகள் விபரீதமாகும் முன்னர் தாமதமின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில்...இலங்கையில் உள்ள மீனவர்களாலும், சிங்களவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டதாக வருகின்ற செய்திகள் - மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் இலங்கை சென்று அமைதியை ஏற்படுத்தி விட்டேன் என்றும், இனி தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் எத்தகைய தொந்தரவும் இருக்காது என்றும் உறுதியளித்து விட்டு, திரும்பியுள்ள சூழ்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இலங்கை சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும், தமிழக மீனவர்களைக் கொடுமையாகத் தாக்கி, அராஜகம் புரிந்துள்ளனர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த கொதிப்பேற்றும் செய்தியாகும். அமைதி திரும்பும் என்று மத்திய அமைச்சர் கூறுவதும் அப்படி அவர் சொன்ன வாசகங்கள் கடல் காற்றிலேயே கரைந்து  போவதும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகின்ற காரணத்தால், இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு உடனடியாக இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும், தாமதிக்காமல் தலையிட வேண்டும்.  தாமதத்தையும்பொறுத்துக் கொண்டு தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் மற்றும் சிங்கள  ராணுவத்தினரால் தாக்கப்படுகின்ற கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாதென்று எச்சரிக்கின்றேன்.- இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி எச்சரிக்கை

நடுக்கடலில் அராஜகம் தமிழக மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை நேற்று இரவு இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து வெறித்தனமாக தாக்கியுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினர் ஒருபக்கம் தமிழக மீனவர்களை விரட்டியடிக்க மறுபக்கம் தப்பி வந்த மீனவர்களை இலங்கை மீனவர்கள் சூழ்ந்து கொண்டு பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் இவ்வளவு அநியாயங்கள் நடந்தும் கூட சாட்டிலைட், ரேடார் என சகல வசதிகளையும் கொண்ட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ இதுகுறித்து கண்டு கொள்ளாமல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், இந்தியாவைச் சேர்ந்த மீனவர்களைக் காக்க முயலாதது பெரும் வருத்தத்தையும், வேதனையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரும், இலங்கையைச் சேர்ந்த மீனவர்களும் - இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதுதான் வேதனையானது - தாக்கி வருகின்றனர். இதைத் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ இந்திய அரசு முனைப்பான நடவடிக்கை எதையும் எடுக்காமல் வாயை மூடிக்கொண்டுள்ளது.இதனால் திமிரெடுத்த இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி அடித்து விரட்டி வருகின்றனர்.நேற்று முன்தினம்தான் கற்களை வீசி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டியடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

682 விசைப் படகுகளில் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக்ச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர்.இதையடுத்து தப்பி வந்த மீனவர்களை திடீரென இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசி தமிழக மீனவர்களைத் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் அங்கிருந்து தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் இணைந்து நடத்திய இந்த வெறித்தனமான தாக்குதலால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பதட்டமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

என்ன செய்கிறது இந்திய அரசு?

 இப்படித்தான் தாக்குவது என்ற வரைமுறையே இல்லாமல் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது இலங்கைக் கடற்படை. மேலும், இலங்கை மீனவர்களும் சேர்ந்து கொண்டு தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் தமிழக மீனவர்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது தமிழக மீனவர்களை குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

அத்தனை பேரும் ஈழத் தமிழர்களின் அவலம், தவிப்பு குறித்து நிறையப் பேசி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில், ராமேஸ்வரம் பகுதியிலும், நாகப்பட்டினம் பகுதியிலும் வாழ்ந்து வரும் தமிழர்களின், குறிப்பாக மீனவர்களின் பரிதாப நிலை குறித்து அக்கறை காட்ட யாருமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கிட்டத்தட்ட தினசரி அடிபட்டு சாகும் நிலையில் உள்ளனர் இந்த மீனவர்கள். இவர்களுக்காக உரத்த குரல் கொடுக்க ஒருவரும் இல்லை என்பதே நிதர்சனம். ஈழத் தமிழர்களுக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். தமிழகத்திலோ போராட்டங்கள் பல வெடித்தன. ஆனால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கோ, மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒரு போராட்டம் கூட நடந்ததில்லை.

யாராவது ஒரு மீனவர் கொல்லப்பட்டாலோ அல்லது தாக்குதல் நடந்தாலோ அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து கடும் கண்டனம் தெரிவிக்கின்றன, முதல்வராக இருப்பவர் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவார். நிவாரணத் தொகை கொடுப்பார்கள், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவார்கள். அத்தோடு அந்தப் பிரச்சினை முடிந்து போய் விடும்.ஆனால் மறு நாளே மீண்டும் இலங்கைக் கடற்படைக் காடையர்கள் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவார்கள், பிடித்துச் செல்வார்கள். இது தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை போல முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.இதற்கெல்லாம் ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான் என்று மீனவர்கள் உறுபதிபடக் கூறுகிறார்கள். நாங்கள் வாழ வேண்டுமானால் கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று அவர்கள் பரிதாபமாக கூறுகிறார்கள்.

சமீப காலமாக இலங்கைக் கடற்படையினர் கற்களை வீசியும் கேவலமாக தாக்கி வருகிறார்கள். கச்சத்தீவுதான் என்றில்லாமல் சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகில் மீன்பிடித்தாலும் கூட வந்து தாக்குகிறார்கள். இதை இதுவரை ஒருபோதும் இந்தியக் கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தட்டிக் கேட்டதில்லை, தடுத்ததில்லை. மாறாக, இவர்கள் ஏன் போய் மீன் பிடிக்கிறார்கள் என்று அடிப்படையே இல்லாமல் பேசுகிறார்கள். தமிழக மீனவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குறியில் தொக்கி நிற்கின்றன. ஆதரவுக்கு யாரும் இல்லாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எத்தனை முறைதான் நாங்களும் ஸ்டிரைக் செய்வது, போராடுவது என்று விரக்தியுடன் கேட்கிறார்கள் இந்த மீனவர்கள்.

கச்சத்தீவு பகுதி பாரம்பரியமாக தமிழகத்தின் பகுதியாகும், தமிழர்களின் பூமியாகும். இங்கு மீன்பிடிக்காதே என்று கூறினால் எப்படி அதை ஏற்க முடியும் என்பது மீனவர்களின் கேள்வி. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது வரலாற்றுத் தவறு என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இந்தத் தவறை செய்தவர்கள் இப்போதாவது அதற்கு வருந்த வேண்டும், மீண்டும கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும், எங்களை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்று மீனவர்கள் உரத்த குரலில் கோருகின்றனர். சமீப காலமாக தாக்குதல்கள் தொடர்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தாதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறது சிங்களக் கடற்படை. சுட்டால்தானே பிரச்சினை, எனவே அதைத் தவிர வேறு எது செய்தாலும் தவறில்லை என்ற எண்ணத்திற்கு இலங்கைக் கடற்படை வந்து விட்டது போலத் தெரிகிறது.கல்வீசித் தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, மீன்பிடி வலைகலை அறுத்தெறிவது, அடிப்பது, சிறை பிடிப்பது என அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. பிடித்த மீன்களையும் கூட திருடிக் கொண்டு போய் விடுகிறது சிங்களக் கூட்டம்.

கச்சத்தீவில் மீனவர்கள் ஓய்வெடுக்கலாம், மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்று இந்தியா, இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தாலும் அது இதுவரை ஒருமுறை கூட அமல்படுத்தப்படவில்லை. அந்தப் பக்கம் வந்தாலே கூட இலங்கைப் படை தமிழக மீனவர்களைத் தாக்குகிறது. பிறகு எதற்கு இந்த ஒப்பந்தம் என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது உலகமே பார்த்தது. அப்படி இருக்கையில், நமது எல்லைப் பகுதியில், இலங்கைக் கடற்படையும், சிங்கள மீனவர்களும் தொடர்ந்து நமது நாட்டு மீனவர்களைத் தாக்கும்போது அதை ஏன் இந்தியக் கடற்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் புரியவில்லை. ஒரு வேளை நாளை தீவிரவாதக் கூட்டம் ஒன்று தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை ரூபத்தில் வந்து தாக்கி ஊடுறுவினாலும் கூட நமது படையினர் வேடிக்கை பார்ப்பார்களா என்று கேட்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் மறு வாழ்வுக்காகவும், இலங்கைத் தமிழ்ப் பகுதிகளின் மறு சீரமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் பணத்தைக் கொட்டுகிறது இந்திய அரசு. இதுதொடர்பாக இந்திய அரசுத் தரப்பில் பலரும் இலங்கைக்குப் படையெடுத்துப் போய் பார்த்து வருகின்றனர். ஆனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நலன் குறித்து ஒரு துரும்பைக் கூட மத்திய அரசு எடுத்துப் போட முன்வராதது ஏன் என்பதுதான் புரியவில்லை.சீனாவையும், பாகிஸ்தானையும் காட்டி இலங்கை மிரட்டுகிறதாம், இதற்காக இலங்கையை தாஜா செய்ய அது என்ன செய்தாலும் இந்திய அரசு தட்டிக் கேட்காதாம். இதற்காக நமது நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை படையினர் என்ன செய்தாலும் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோமாம். இந்திய அரசின் இந்த லாஜிக் சற்றும் புரியவில்லை.

4 வயது சிறுமியை 2 ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் வழக்கு சிபிஐ விசாரணைக்கு...

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில் உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில்தான் பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர். இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.

ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால் கடலூரைச் சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியை மீது வழ்ககுப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அது எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வழ்ககில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பெற்றோர் மற்றும் மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழ்ககு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து இன்னும் 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை 10 ஆண்டுகளாக பாத்ரூமில் அடைத்து வைத்து...


பாலஸ்தீனத்தில் ஒரு சிறுமியை 10 ஆண்டுகளாக பாத்ரூமில் அடைத்து வைத்து துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். பாலஸ்தீனம் மேற்குக்கரையில் உள்ள குவால்கிவ்லியா என்ற பகுதியை சேர்ந்தவர் ஹசன் மெல்கம். இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர் . இவர் தனது மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதை அடுத்து தனது மகளாக பாரா மெல்கமை தன்னோடு வைத்து கொண்டார். எனவே இந்த பெண்ணை வெளியே விடாமல் ஒரு சிறிய பாத்ரூமுக்குள் அடைத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 11. இரவு நேரத்தில் மட்டும் பாத்ரூமில் இருந்து வெளியே வர அனுமதிப்பார். ஆனாலும் வீட்டை விட்டு வெளியே போக முடியாது. இந்த தகவல்எப்படியோ 10 ஆண்டுகள் கழித்து போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் சோதனையிட்டு பாராவை மீட்டனர். இது குறித்து பாரா கூறுகையில் : நான் 10 ஆண்டுகளாக வெளி உலகை பார்க்கவில்லை. எனது அப்பா எனது முடியை அகற்றி விடுவார். அவ்வப்போது இரும்பு கம்பியால் அடிப்பார். என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தை காண்பேன் என்ற நம்பிக்கை இருந்தது . இனிமேல் தான் என் வாழ்க்கை துவங்குகிறது, எனது தந்தையை நான் வெறுக்க மாட்டேன் . அதே நேரத்தில் அவர் செய்த செயலை தான் நான்‌ வெறுக்கிறேன். ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை . அவ்வாறு இருந்தோமே என்ற கவலை எனக்கு இப்போது இல்லை என்றார் கண்ணீர் மல்க.

நேதாஜி தமிழனாக பிறக்கவே விரும்பினார் தமிழருவி மணியன்!

நாடு முழுவதும் இந்திய விடுதலைப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நாமக்கல் நகரில், நேதாஜியின் முழு உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவர் லட்சுமிகாந்தன் பாரதி நேதாஜியின் சிலையை திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியன் பேசும்போது,இந்தியாவின் சுதந்திரத்துக்கு காந்தியடிகள் அறவழியில் போராடினார், நேதாஜி இராணுவ ரீதியில் போராடினார். ஆனால், இருவரின் நோக்கமும் ஒன்று தான். சுதந்திர இந்தியாவை பார்க்கவேண்டும் என்று அவர்கள் இருவருமே ஆசைப்பட்டனர்.

சிறந்த கல்வியாளரான நேதாஜி, மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காகவே ஐ.சி.எஸ் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அகில இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்து வெற்றியும் பெற்றார். ஆனால், அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவை மீட்பது தான் முதல் வேலை என்று முடிவு செய்த நேதாஜி ஆங்கில அரசின் கீழ் பணியாற்ற கூடாது என்ற நோக்கத்தில் வேலைக்கு செல்லாமல் காந்தியடிகளை சந்தித்து இந்திய விடுதலைப் போரில் கலந்து கொண்டார். 1920 ம் வருடம் முதல், 1940 ம் வருடம் வரையில் 11 முறை சிறைக்கு சென்றுள்ளார் நேதாஜி. பல ஆண்டுகள் காந்தியுடன் இருந்து போராடினார், கடைசியில் காந்திய வழியில் போராடினால், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்காது என்று முடிவெடுத்த நேதாஜி ஆயுதப்போருக்கு சென்றார். அப்போது அவருக்கு தோள் கொடுத்து நின்றவர்கள் தமிழர்கள்தான்.

நேதாஜி நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய பெரும்பாலான வீரர்கள் தமிழர்கள், அதன் தளபதிகளில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். நேதாஜி அவர்கள் மூன்று மொழிகளில் பத்திரிகை நடத்தினார். அந்த பத்திரிகைகள் ஆங்கிலம், இந்துஸ்தானி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. அப்படியானால், நேதாஜி எந்த அளவுக்கு தமிழுக்கும், தமிழர்களுக்கும் முக்கியம் கொடுத்துள்ளார் என்பது உங்களுக்கு புரியவேண்டும்.இந்திய விடுதலை போரில் தமிழர்களின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்த நேதாஜி, எனக்கு அடுத்த முறை பிறப்பு இருக்குமானால், தமிழனாக பிறக்கவே விரும்புகிறேன் என்று அறிவித்தார். இந்திய விடுதலையில் தமிழர்களின் பங்கு பெரியது, விடுதலை போரில் நேதாஜியுடன் ஆயுதம் தங்கி போராடியவர்கள் அதிகம் பேர் தமிழர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்றார் தமிழருவிமணியன்.

ஆடு, மாடுகளுக்கு அரிசி உணவு கொடுப்பது மிகவும் ஆபத்தானது!

ஆடு, மாடுகளுக்கு அரிசியிலான மாவு, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளை தரக்கூடாது என கால்நடை மருத்துவர் எச்சரித்துள்ளார். தற்போதைய பனிக்காலத்தில் கால்நடைகளுக்கும் மனிதர்களை போல் சளி பிரச்னை ஏற் பட வாய்ப்புகள் அதிகம். எனவே ஆடு, மாடு உள் ளிட்ட கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை இரவு வேளைகளில் வெட்டவெளியில் கட்டிப் போடாமல் கொட்டகை அமைத்து கட்டிப் போட வேண்டும். சளி ஏற்பட்டால் வாய்பகுதியில் புண்கள் உருவாகி இலை, தழைகளை உண்ண முடியாமல் திணறும். வயிற்றோட்டம் ஏற்பட்டு தொடர் கழிச்சல் உண்டாகும். அந்த நேரங்களில் இவைகளுக்கு தண்ணீர்சத்து குறையும். நீர் சத்து குறைந்தால் ஓரிரு நாட்களில் அவை உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சமயங்களில் அவற்றை பட்டினி போடக்கூடாது.  கஞ்சி தண்ணீர் அடிக்கடி கொடுத்து வரவேண்டும். மேலும் குளுக்கோஸ் தண்ணீரும் கொடுத்தால் நீர்சத்து குறையாது. எண்ரேசீன் சொட்டுமருந்து கொடுக்கலாம். பொதுவாக ஆடு, மாடுகளுக்கு கழிச்சல் ஏற்பட காரணமே அரிசி வகை உணவுகள் தான். அரிசி மாவு, சர்க்கரை பொங்கல், கேசரி உள் ளிட்ட இனிப்பு வகைகளும் தரக்கூடாது. 

அப்படி கொடுத்தால் வயிற்றில் புளிப்புத்தன்மை அதிகரித்து அவை இறந்து போய் விடும். அதே நேரத்தில் கோதுமை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களை கொடுக்கலாம். தை பொங்கல் நேரத்தில் ஏராளமானோர் ஆடு, மாடுகளுக்கு சர்க்கரை பொங்கல் தருவது வழக்கம். எனவே அந்த நேரத்தில் கால்நடைகள் உயிரிழப்பது அதிகரிக்கிறது. தற்போது அரசு இலவச ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. இவற்றை பயனாளிகள் தங்கள் சொத்தாக நினைத்து பராமரிக்க வேண்டும். பராமரி ப்பின்மை, கவனக்குறைவு போன்றவையே கால்நடைகள் உயிரிழக்க முக்கிய காரணங்களாக அமைகின்றன.  எனவே கால்நடைகளை நல்ல முறையில் பராமரித்து கால்நடை மருத்துவர்களுக்கு கூடுதல் ஒத்துழைப்பு தரவேண்டும்

Mambattiyan. MOVIE ONLINE


அலிபாபாவும் 40 திருடர்களும் MOVIE


Perumaan Tamil movie mp3


பார்த்ததில் பிடித்தது...


 நம் அடையாளத்தை தொலைத்து விட்டு அடுத்தவனிடம் அடிமையாய் நிற்கிறோம் என எடுத்து சொன்ன கோபிநாத்துக்கு பாராட்டுக்கள்...

விஷால் மீது நடிகை ராதிகா ரூ 9 கோடி மோசடி புகார்!


 வெடி பட விவகாரத்தில் ரூ 9 கோடி செக் மோசடி செய்து விட்டதாக நடிகர் விஷால் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதிகா. விஷால் - சமீராரெட்டி ஜோடியாக நடித்த படம் வெடி. ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். பிரபுதேவா இயக்கினார். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந் நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும். அதில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்துள்ளார். அந்த புகார் மனுவில், "விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்து கொடுக்கும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ.9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார். 



அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணமின்றி திரும்பி வந்து விட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விஷாலிடம் விசாரணை நடத்த நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் முடிவு செய்துள்ளது. ராதிகாவின் கணவர் சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராகவும், சகோதரர் ராதாரவி சங்கத்தின் செயலாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...