|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 November, 2011

இந்த வார ராசி பலன்(4-11-11 முதல் 10-11-11 வரை)


மேஷம்: பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் மேம்படும். வீண் செலவைக் குறைக்கவும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். சக ஊழி்யர்கள் பக்கபலமாக இரு்பபார்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

ரிஷபம்: பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். சிலருக்கும் வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

மிதுனம்: பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவுகளைக் குறைக்கவும். உடல் நலம் நன்றாக இருக்கும். பண வரவு தாமதமாகலாம். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். மனம் நிம்மதியாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்: பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நிம்மதி தரும் செய்திகள் உங்களைத் தேடி வரும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பிரச்சனைகள் தீரும். உடல் நலனில் கவனம் செலுத்தவும். பண வரவு நன்றாக இருக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணிபுரிவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

கன்னி: பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். மேற்கில் இருந்து நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். நீண்ட கால எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரிடம் பாராட்டு பெறக்கூடும். உறவினர்கள் அன்போடு பழகுவார்கள். மனம் உற்சாகமாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பெறுப்புகள் வந்து சேரும். கால, நேரம் பார்க்காமல் உழைப்பீர்கள்.

துலாம்: பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். கைக்கு கிடைக்காத பொருள் தானாக வந்து சேரும். உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக குழந்தையில்லாமல் இருந்த தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைத்து மகி்ழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழ்வீர்கள். சக ஊழி்யர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நல்ல செய்திகள் வீடு தேடி வந்து மகிழ்விக்கும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரி்த்துச் செல்வது நல்லது.

தனுசு: பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். உடல் நலம் மேம்படும். குடும்பத்தோடு குல தெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். நல்ல செய்திகள் வீடு தேடி வந்து மகி்ழ்விக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

மகரம்: பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். வீண் செலவுகளைக் குறைக்கவும். புனிதப் பயணம் மேற்கொள்ளக்கூடும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களுடம் அன்பாக இருப்பீர்கள். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். வீண் பேச்சைக் குறைக்கவும்.

கும்பம்: பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார், உறவினர் வீடு தேடி வந்து மகிழ்விப்பார்கள். வீணாக மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்கள் அன்புடன் பழகுவார்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மீனம் : பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் அனைத்து வேலைகளையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தொடங்கியது சதயவிழா...


மாமன்னர் ராஜராஜசோழனின் 1026 வது சதய விழா தஞ்சாவூரில் கோலகலமாக தொடங்கியுள்ளது. இரண்டுநாள் நடைபெறும் விழாவில் மன்னரின் புகழை தெரிவிக்கும் வகையில் இசைச்சங்கமம்,, கவியரங்கம் ஆகியவை நடைபெறுவதால் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.தஞ்சாவூரை தலைமையிடமாக ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜசோழன் சதயநட்சத்திர தினத்தில் பிறந்தார் என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தஞ்சாவூரில் இரண்டுநாள் சதயவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 1026 வது சதயவிழா வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

மா மன்னரின் மாட்சிகள்: முதல் நிகழ்ச்சியாக ராஜராஜனின் புகழை உணர்த்தும் மாமன்னரின் மாட்சிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனையடுத்து மங்கள இசை, இசைச்சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இரண்டு நாட்களும் கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவதை ஒட்டி ஏராளமானோர் தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெறும் சதயவிழாவில் பங்கேற்றுள்ளனர். சதயவிழாவின் முக்கிய அம்சமாக பெருவுடையாருக்கும், பெரியநாயகிக்கும் 47 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மூன்றுமணிநேரம் நடைபெற்ற இந்த அபிஷேகத்தை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர். அப்போது பேசிய பக்தர்கள், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னர் ராஜராஜனின் சிலையை பெரிய கோவிலில் நிறுவவேண்டும் என்றும் தமிழ்ஆர்வலர்கள் கோரிக்கை 

மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் ...


மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது. தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.

தண்ணீர் மருத்துவம்: எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்: உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள், புற்றுநோய் - 180 நாட்கள், காச நோய் - 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்துநோய்களும் முற்றிலும் குணமாகும் அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பக்கவிளைவு கிடையாது: பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம்.தண்ணீர் குடித்தால் மட்டுமே 'பக்க விளைவு' வராது -மாறாக 'தண்ணி' அடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 'பக்கா'வான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நிறைய தண்ணீர் குடிங்க, அந்தத் 'தண்ணி'யை மறந்துடுங்க...!

வாத நோய் போக்கும் கோவக்காய்!

சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில இனிப்புச்சுவையுடன் இருக்கும். அது குளிர்ச்சியை தரவல்லது. கசப்பு சுவையுடன் இருக்கக் கூடிய கோவைக்கிழங்கு வெப்பத்தை தரக்கூடியது.

ஜீரண சக்தி தரும்: இனிப்புள்ள கோவைக்காய் வற்றலாக வறுத்துச்சாப்பிட ருசியாக இருக்கும். இது மலச்சிக்கலை போக்கும் தன்மையுடையது. குடல் சுழற்சிகளைப் போக்குவதோடு ஜீரண சக்தியையும் எளிதாக்கும். இது உடலுக்கு வலிமை தரும்.

நீரிழிவுக்கு மருந்து: கோவைக்காய் காயவைத்து இடித்து தூளாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். சிறிதளவு தூளுடன் காய்ச்சிய பாலை கலந்து சாப்பிட சிறுநீர் தாரளமாக பிரியும். நீரிழிவு நோய் தணியும். 

வாதநோய்: பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இக்காயின் சூரணத்தை சாப்பிட்டு வர பூரண குணமாகும். பித்தம் மற்றும் கபம் நோய்களுக்கும் இது கண்கண்ட மருந்தாகும். மேலும் தோல் தொடர்புடைய அனைத்து நோய்களையும் இது குணமாக்கும்.

சிஇஓ. - கார்கள்


அனைத்து தரப்பினருக்கும் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டிருக்கின்றனர். மேலும், கார்களை தங்களின் அந்தஸ்தின் அடையாளச் சின்னமாகவே கருதுகின்றனர். எனவே, விரலுக்கேத்த வீக்கம் என்பது போன்று அவரவர் வசதிக்கேற்ப லட்சங்களையும், கோடிகளையும் கொட்டி கார் வாங்குவதில் நாட்டம் செலுத்துகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் வைத்திருக்கும் கார்களை பற்றிய விபரங்கககள்.

முகேஷ் அம்பானி: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி மேபேக் சொகுசு காரில்தான் அதிகம் செல்கிறார். இதுதவிர, அவரது வீட்டு கேரேஜில் மெர்டிசிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரும், மெர்சிடிஸ் எஸ்எல்-500 காரும் நிற்கின்றன.

அனில் அம்பானி: அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மஞ்சள் நிற லம்போர்கினி அவென்டெடார் சூப்பர் காரை வைத்துள்ளார். இது தவிர போர்ச்சே மற்றும் மெர்சிடிஸ் கார்களும் அவரிடத்தில் உண்டு. யூபி குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா கார் பிரியர்.இவரிடத்தில் ஏராளமான கார்கள் இருந்தாலும் தற்போது பென்ட்லீ கான்டினென்டல் பிளையிங் ஸ்பர் ஆடம்பர காரைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

குமார் மங்களம் பிர்லா: ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் பிரிமியம் செடான் காரில்தான் சென்று வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் இந்த காரும் ஒன்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஸிம் பிரேம்ஜி: விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி தற்போது டொயோட்டோ கரோல்லா காரைத்தான் வைத்துள்ளார்.


சுனில் பார்தி மிட்டல்: பார்தி ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தற்போது மெர்சிடிஸ் எஸ்-500 செடான் காரைத்தான் பயன்படுத்தி வருகிறார். இதுதவிர, இவரது வீட்டு கேரேஜில் ஏராளமான கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

சுபாஷ் சந்த்ரா: ஸீ டெலிபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் சந்த்ரா மெர்சிடிஸ் வயானோ 3.5 எம்பிவியை பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் பிளாஸ்மா டெலிவிஷனும், அதற்கு டிஷ் ஆன்டெனாவும் பொருத்தப்பட்டிருக்கிறது.

மல்விந்தர் சிங்:மருந்து தயாரிப்பில் புகழ்பெற்ற ரான்பாக்ஸி நிறுவனத்தின் தலைவர் மல்விந்தர் சிங் இரண்டு மெர்சிடிஸ் எஸ்350எஸ் கார்களை வைத்துள்ளார்.


ஷிவ் நாடார்:எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஆடம்பர காரை வைத்துள்ளார்.இதுதவிர, அவரிடம் மெர்சிடிஸ் 500எஸ்இஎல் காரும் உள்ளது.


விசி.பர்மன்: நாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான டாபர் குழுமத்தின் தலைவர் வி.சி.பர்மன் மெர்டிசிஸ் கொம்பரஸர் காரை வைத்துள்ளார். இதுதவிர, ஸ்போர்ட்ஸ் கார்களையும் இவர் வைத்திருக்கிறார்.

அமெரிக்கப் பெண்களின் மார்புகள் பெரிதாகி நியூயார்க் டைம்ஸ்...


அமெரிக்கப் பெண்களின் மார்புகள் பெரிதாகி வருகிறதாம். இதனால் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதுப் பெண்களுக்கு மார்பு அளவு இயல்பை விட பெரிதாக உள்ளதாம். இதன் காரணமாக கடைகளில் விற்பனையாகும் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.தங்களது அளவுக்கேற்ற பிராவை வாங்கிச் செல்லும் பெண்கள், சீக்கிரமே சைஸ் மாறி விடுவதால் பிராக்களை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம். அமெரிக்காவின் முன்னணி பிரா தயாரிப்பாளரான வகோல் அமெரிக்கா நிறுவனம், கடந்த ஆண்டு 36டி என்ற பிரா வகையை அறிமுகப்படுத்தியது. அது அமெரிக்கப் பெண்களிடையே சீக்கிரமே பிரபலமானது. ஆனால் இந்த ஆண்டு அதை தூக்கி விட்டு 36 டிடி என்ற புதிய பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். காரணம், ஆரம்பத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த 36டி பிரா, பின்னர் சைஸ் சரியாக இல்லை என்று பெருமளவில் புகார்கள் வந்ததால்தான் இப்போது 36டிடி என்ற அடுத்த பிராவை களம் இறக்கியுள்ளதாம். அமெரிக்கப் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு மார்பக வளர்ச்சி இயல்பை விட பெரிதாக இருப்பதே இந்த பிரா குழப்பத்திற்குக் காரணம் என்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் பொருளாதாரப் பிரச்சினை. இப்போது...? 

கோவையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு வைகோ அழைப்பு!


ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு வரும் 6ம் தேதி கோவையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வது நமது முதல் கடமை என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


ஈழத் தமிழர் உரிமை காக்க, தமிழ் ஈழம் விடியல் காண 3 தமிழர் உயிரைக் காக்க, கோவை மாநகரில், சிதம்பரம் பூங்காவில் நவம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) மாலையில், உணர்ச்சிக் காவியம் படைப்போம். தமிழ் ஈழ இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துகின்றது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை ஏற்கின்றார்.தமிழ் ஈழ விடுதலை உணர்வாளர்களும், ஈழத் தமிழர் படுகொலையை நடத்திய இந்திய அரசின் துரோக முகத்திரையைக் கிழிக்க போர் முழக்கம் எழுப்புவோரும், இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர் ரான் ரைட்னர், ஐக்கிய நாடு அவையின் வல்லுநர் குழு அறிக்கையை வெளியிடுகின்றார்.

நான் அதனை பெற்றுக் கொள்கின்றேன். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மென்னியை முறிக்க, தூக்குக் கயிற்றை வீச முயலும் இந்திய அரசின் முயற்சிகளை முறியடிப்போம். லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு, இந்திய அரசு வேலை செய்கிறது. அதனால் தான் 2013ம் ஆண்டு இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறியுள்ளார்.ராஜபக்சே அரசை உலக குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த கோவையில் சூளுரைப்போம். தமிழ்க் குலத்தின் உரிமை காக்க, தோள் தட்டிடப் புறப்படு கோவை நோக்கி என, தியாகிகள் செங்குருதி அழைக்கின்றது. கோவையில் நடக்கும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்பது, நமது முழு முதல் கடமை. அணி திரண்டு வாருங்கள் தமிழர்களே என அழைக்கின்றேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட பணிவாய்ப்புகளைத் தரும் படிப்புகள்!


மருத்துவம், பொறியியல், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பிரதான தொழில் சார்ந்த படிப்புகள் மட்டுமின்றி, சில மாறுபட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.மேற்கூறிய பிரதான தொழில்கள் சார்ந்ததாயினும் அவற்றில் பணிபுரிபவர்கள் தங்களின் பணிநிலையை உயர்த்திக் கொள்ளும் விதத்திலும் சில படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
செயல் அலுவலர்களுக்கான பொதுமேலாண்மை : இந்திய மேலாண்மை நிறுவனம் ஐ.ஐ.எம்.,- லக்னோ, எக்ஸியூட்டிவ்களுக்கான ஜெனரல் மேனேஜ்மென்ட் ஓராண்டுப் படிப்பை வழங்குகிறது. பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கான இப்பாடத்திட்டம் நான்கு பிரிவுகளாக தலா 10நாட்கள் இடைவெளியில் நடத்தப்படும். இரண்டு தொடர் பிரிவுகளுக்குப்பின் 10 வார இடைவெளியில் அடுத்த பிரிவு நடத்தப்படும். நிர்வாக மேம்படுத்துதல் திட்ட தலைவர் சுசீல்குமார் கூறுகையில்,“மாணவர்கள் ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் சமகாலத்திய தொழிற்சாலைப் பிரச்னை தொடர்பான திட்டக்கருத்துரு ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்பாடத்திட்டம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மேலாண்மை மாற்றங்களைக் குறித்து விளக்குவதாக அமையும்” என்றார். பட்டதாரியாகவும், குறைந்தபட்சம் ஐந்தாண்டு பணி அனுபவம் மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். கல்விக்கட்டணம் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். மேலும் விவரங்களுக்கு www.iiml.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
பிஸியோதெரபி: இந்திய உடல்நலத்துறையின் வர்த்தம் வரும் 2015ல், 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த பல்வேறு வேலைவாய்ப்புகளும் பெருகும். மிகவும் பிரபலமான பிஸியோதெரபிக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பரிதாபாத்தில் உள்ள மானவ்ரச்னா சர்வதேச பல்கலைக்கழகம் இரண்டாண்டு பிஸியோதெரபி படிப்பை வழங்குகிறது. இதே துறையில் இளநிலைப் படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கல்விக்கட்டணமாக ஒரு லட்சத்து 8,500 ரூபாய் செலுத்த வேண்டும்.  40 மாணவர்கள் சேர்க்கப்படுவர். படிப்பை முடித்தவர்கள் ஆண்டுக்கு 2.4 லட்சம் ரூபாய் ஊதியமாகப் பெற வாய்ப்புண்டு.
எரிசக்தி மேலாண்மை: ஏற்கனவே இத்துறையில் இருப்பவர்களுக்கு பிரத்யேகமாக வார இறுதி நாட்களில் இப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. குர்கானில் உள்ள Great Lakes Institute of Energy Management &Research நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது. இரண்டாண்டுப் படிப்பான இதற்கு 6 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வரும் ஜனவரியில் இருந்து வகுப்புகள் துவங்குகின்றன. சேர்க்கை நடைமுறைகள் துவங்கியுள்ள நிலையில் வரும் டிச., 31ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 50 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். கேட், ஜிமேட் தேர்ச்சி பெற்றிராதவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.மேலும் விவரங்களுக்கு www.iemr.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
ஏற்றுமதி மேலாண்மை: IIFT கொல்கத்தா மற்றும் டெல்லியில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. நான்கு மாத படிப்பான இதற்கு 55 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைனின் வார இறுதி நாட்களில் நேரடி ஒளிபரப்பு கற்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நான்கு நாட்களுக்கு நேரடிப் பயிற்சி வகுப்பும் உண்டு. மேலும் விவரங்களுக்கு www.iift.edu என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.
அழகுக் கலையியல்: வழக்கமான வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி மாறுதலான துறைகளைத் தேடுவோருக்கு இத்துறை நல்ல தேர்வு. இந்தியாவில் இத்துறை 2,000 கோடி ரூபாய் வர்த்தகத்தைக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவீத வளர்ச்சி பெறுகிறது என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தேர்ச்சி பெற்ற பணியாட்களுக்கான தேவை இத்துறையில் இருந்து கொண்டே இருக்கிறது. ஐதரபாத்தில் இருக்கும் அனூஸ் சர்வதேச அழகுக்கலை பள்ளி இரண்டாண்டு முதுகலைப் படிப்பை வழங்குகிறது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிப்பை முடித்தவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் கிராபிக் டெக்னாலஜி: எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகி விட்ட சூழலில், அதுதொடர்பான பணிகளுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.  வரும் 2013ம் ஆண்டில் இந்திய அனிமேஷன் 4,375 கோடி வர்த்தகமுள்ள ஒரு துறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படைப்பாக்கத்துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மும்பை ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் க்ரியேட்டிவ் ஆர்ட் மூன்றாண்டு இளநிலைப்படிப்பை வழங்குகிறது. பத்தாவது, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 3.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். படிப்பை முடித்தவர்கள் துவக்கத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம். மேலும் விவரங்களுக்கு www.zica.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
வேளாண்மை: இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் வேளாண்துறையின் பங்களிப்பு மட்டும் 20 சதவீதம். இன்றும் மொத்த மக்கள்தொகையில் 62 சதவீதம் பேர், வேளாண் சார்ந்த தொழில் மூலமே வருவாய் ஈட்டி வருகின்றனர். ஜலந்தர் லவ்லி புரபஷனல் பல்கலைக்கழகம் இரண்டாண்டு முதுநிலை வேளாண் அறிவியல் படிப்பை வழங்குகிறது. இளநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்விக்கட்டணம் 29 ஆயிரத்து 500 ரூபாய். 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். படிப்பை முடித்தவர்கள் துவக்கத்திலேயே ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம். அரசுத்துறைகளிலும், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
சிகை மற்றும் அலங்காரவியல்: சிகை அலங்காரம், அலங்காரக்கலை தொடர்பான இப்படிப்பு ஆறு மாத கால பயிற்சியாக வழங்கப்படுகிறது. டெல்லி, பி-பிளன்ட் அகாடமி -யில் இப்படிப்பை மேற்கொள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கல்விக்கட்டணம் 1.75 லட்சம் ரூபாய். சலூன் தொடர்பான அனைத்து நிலைப் பயிற்சிகளும் இப்பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன

இசை மூலம் சிகிச்சை! திருச்சி சுமதி சுந்தர் !!

இசை சிகிச்சை (மியூசிக் தெரபி) சேவை செய்யும் சுமதி சுந்தர்: என் சொந்த ஊர் திருச்சி. எங்கள் குடும்பமே இசை பாரம்பரியம் கொண்டது. நான் மூன்று வயதிலிருந்தே மேடைகளில் பாடி வருகிறேன். சங்கீதத்தில் எம்.ஏ., பட்டமும், மனோதத்துவத்தில் எம்.ஏ., பட்டமும், பெற்றுள்ளேன். தற்செயலாகத்தான் இசைச் சிகிச்சை பற்றி அறிந்தேன். அனைவரும் இசையை ஒரு பொழுபோக்காக பார்க்கும்போது, நாம் அதை அறிவியலாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே, அதற்கான ஆராய்ச்சியில் இறங்கி 10 ஆண்டுகள் முனைந்து முனைவர் பட்டம் பெற்றேன். இந்த உலகில் அனைத்தும் இசை வடிவமாகத்தான் உள்ளது. நம் இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, ரத்த ஓட்டம், மூளையின் மின் அதிர்வுகள், அனைத்திலும் ஒரு இயைந்த, "ரிதம்' உள்ளது. அந்தக் குறிப்பிட்ட ரிதத்தில் மாறுதல் ஏற்படும்போது, உடல் நோய்வாய்ப்படுகிறது. அப்போது, மருந்து மாத்திரைகள், மாற்று சிகிச்சைகளுடன், இசைச் சிகிச்சையும் சேர்த்துத் தரும் போது, அதிசயத் தக்கப் பலன்கள் ஏற்படுகின்றன. பொதுவாக, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்கள் இசைத் தெரபி மூலம் வெகுவாகக் கட்டுப்படுகின்றன. இதில், மேல் நாட்டு கருவிகளுடன், நம் ஊர் கோவில்களில் ஒலிக்கப்படும் உடுக்கை, மேளம், தபேலா போன்றவற்றையும் இசை சிகிச்சையில் பரவலாகப் பயன்படுகின்றன. ஆட்டிசம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், இசைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இசைச் சிகிச்சை அளிக்கிறேன். இதன் மூலம், நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்வமும், மனிதநேயமும் உள்ளவர்களுக்கு முறைப்படி இந்த இசை சிகிச்சையை கற்றுக் கொடுக்கிறேன்.

. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்ததாள் பலமுறை அவமான படுத்தப்பட்டேன் நீதிபதி கர்ணன்!

நீதிபதிகள் கூடும் இடங்களில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மீது சில நீதிபதிகளுக்கு குறுகிய மனப்பான்மை, ஆதிக்க மனப்பான்மை உள்ளது' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.ஐகோர்ட் நீதிபதிகள் சிலர் தன்னை அவமதிப்பு செய்வதாக, ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷனில், நீதிபதி கர்ணன் புகார் தெரிவித்தார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு சிலர், நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவன் என தெரிந்தும், வேண்டுமென்றே அவமானப்படுத்துகின்றனர். இதுகுறித்து ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷனில் புகார் கூறியிருந்தேன். எனது புகார், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணை நடத்த அவர் அனுமதித்திருப்பதாகவும், பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை. விசாரணை துவங்கினால் புகாரை நிரூபிப்பேன். விசாரணை முடியும் வரை, புகார் சம்பந்தமாக எந்தவித விமர்சனமும் தேவையில்லை.இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:எனக்கு 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த அவமரியாதை நடந்து கொண்டிருக்கிறது. நீதிமன்ற மாண்பை காப்பதற்காக இதுவரை பொறுத்துக் கொண்டிருந்தேன். நான் சுயமரியாதை உள்ளவன். அதனால் என்னை குறி வைக்கின்றனர்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார் பற்றி கூறவில்லை. அதற்கு அவசியம் இல்லை. ஆதிதிராவிடர் நலனுக்கான தேசிய கமிஷன், ஒரு கண்காணிப்பு அமைப்பு. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், அதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த கமிஷனுக்கு உள்ளது. ஜனாதிபதியின் கீழ் இந்த கமிஷன் இயங்குகிறது.

என்னை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார் என்பதை விசாரணையின் போது கூறுவேன்.தொடர்ந்து நான் அவமானப்படுத்தப்பட்டேன். தேநீர் விருந்து, டின்னர், மதிய உணவு, நீதிபதிகள் குழு என நீதிபதிகள் ஒன்றாக கூடும் இடங்களில், நான் அவமரியாதை செய்யப்பட்டேன்.என்னை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. நான் அதிக அளவு வழக்குகளை பைசல் செய்துள்ளேன். தகுதியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் மாற்றம் செய்ததற்கும், இதற்கும் சம்பந்தமில்லை. சில நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சேர்ந்து செயல்படுகின்றனர். எனது புகாருக்கு சந்தர்ப்ப சாட்சியம், ஆவண சாட்சியம் உள்ளது.என்னை ஷூ அணிந்த காலால் ஒரு நீதிபதி உதைத்தார். பின்னர் "சாரி' சொன்னார். எனது பெயர் பொறிக்கப்பட்ட அட்டையை கீழே போட்டு காலால் மிதித்தார். இதை இரண்டு நீதிபதிகள் பார்த்தனர். குடியரசு தின நிகழ்ச்சியின் போது இது நடந்தது.எனது சக நீதிபதிகள் சிலருக்கு குறுகிய மனப்பான்மை, ஆதிக்க மனப்பான்மை உள்ளது. குறிப்பாக ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மீது இது உள்ளது. ஆனால், என்னிடம் அது தோற்றுவிட்டது. என் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால், வெளிப்படையாக விசாரணை நடத்தட்டும். அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நான் பிறப்பித்த உத்தரவை பற்றி நீங்கள் கேள்வி கேட்க முடியாது. அதில் தவறு இருந்தால், அதை எதிர்த்து அப்பீல் செய்து கொள்ளலாம். என் மீது பொய்யாக சில குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன .எனக்கு நேர்ந்த தொல்லைகள் பற்றி, மற்ற நீதிபதிகளிடம் நான் தெரிவிக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின், இது ஒரு கருப்பு முத்திரையாக அமைந்துவிட்டது. நீதிபதிகள் அனைவரும் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஜாதி ரீதியிலான பாகுபாடு மனவேதனை அளிக்கிறது.


எனது பணிகளை நான் வழக்கம் போல் செய்வேன். நீதிபதியின் பணிகளில் முடக்கம் கிடையாது. புகாரை நிரூபிக்கும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை? ஐகோர்ட்டின் மீது நம்பிக்கையில்லையா? ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மற்ற நீதிபதிகள் அவமரியாதை செய்யப்படுகின்றனரா? என்கிற கேள்விகளுக்கு, "பதில் இல்லை', "கருத்து இல்லை' என நீதிபதி கர்ணன் பதிலளித்தார். சுயமரியாதை காரணமா?"சுயமரியாதை இருப்பதால் தான் கஷ்டங்களை எதிர்கொள்கிறேன்' என நீதிபதி கர்ணன் தெரிவித்தார்.நீதிபதி கர்ணன் கூறும்போது, "ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சிலர், சுயமரியாதையை கடைபிடிக்க தவறுகின்றனர். ஆனால், நான் சுயமரியாதையை கடைபிடிப்பதால் தான், கஷ்டங்களை எதிர்கொள்கிறேன். சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றிய நீதிபதிகள் கனகராஜ், அசோக்குமார், பி.டி.தினகரன், ஒய்.வெங்கடாசலம், ஜெயபால் எல்லாம் சுயமரியாதை உள்ளவர்கள். என்னைப் போன்று அவர்களும் பிரச்னைகளை அனுபவித்தனர்' என்றார். ஆதிதிராவிட, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மீது கூட துன்புறுத்தல் இருக்கிறது என்றார்.

இதே நாள்...


  • பனாமா கொடி நாள்
  •  இத்தாலி ராணுவ படை தினம்
  •  வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)
  •  ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
  •  அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)

கந்துவட்டி பைனான்சியர்கள் யார் அதிரடிக்கு தயாராகும் கோவை கமிஷனர்!

கோவை நகரில் கந்துவட்டி, மீட்டர் வட்டி என, பல விதமான வட்டிகளை வசூலிக்கும் 60 பைனான்சியர்களின் பட்டியல், போலீஸ் ஸ்டேஷன் வாரியாக தயாரிக்கப்பட்டு, கமிஷனர் அமரேஷ் புஜாரியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கந்துவட்டி பைனான்சியர்களிடம் பணத்தை முதலீடு செய்துள்ள போலீசாரின் விவரங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன; கூடிய விரைவில் அதிரடி நடவடிக்கை பாயவுள்ளது.மதுரை, நெல்லை, திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கொள்ளை வட்டி பைனான்சியர்கள், கோவை நகரில் முகாமிட்டுள்ளனர்.இந்நபர்கள், சிறு, குறுந்தொழில் உரிமையாளர்கள், நகை பட்டறை உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள், கடைக்காரர்களுக்கு நாள் வட்டி, மாத வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி என பலவித வட்டி அடிப்படையில் 10 ஆயிரம் முதல், பல லட்ச ரூபாய் வரை கடன் வழங்குகின்றனர்.கடன் வழங்கும் போது, கடனாளியிடம் வெற்று முத்திரைத்தாள், பிராமிசரி நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெறுகின்றனர். கடன் தொகை அதிகமாக இருப்பின் தொகை, தேதி குறிப்பிடப்படாத வங்கி காசோலைகளையும், சொத்துப் பத்திரத்தையும் வாங்கிக் கொள்கின்றனர்.

குறித்த காலத்துக்குள் அசலுடன் வட்டியை செலுத்தாவிடில், வட்டிக்கு வட்டி போட்டு 100க்கு 20 ரூபாய் வரை வட்டி வசூலிக்கின்றனர். கந்துவட்டி தொழிலில் ஈடுபடும் நபர்களிடம் கோவை போலீஸ் அதிகாரிகள் சிலர், பல லட்ச ரூபாயை முதலீடு செய்து வட்டி பெறுவது குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, கொள்ளை வட்டி வசூலிக்கும் பைனான்சியர்கள் மீதான புகார்களை விசாரிக்க, "கந்துவட்டிக்கு எதிரான விசாரணைப் பிரிவை' சமீபத்தில் துவக்கினார்.பட்டியல் தயாரிப்பு: இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி கோவை மாநகர எல்லைக்குள் யார், யார் கந்துவட்டி, மீட்டர் வட்டி, மாத வட்டி, நாள் வட்டி பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரத்தை, போலீஸ் ஸ்டேஷன் வாரியாக சேகரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். நம்பிக்கையான அதிகாரிகள் இதற்கான பணியில் ஈடுபட்டு, பைனான்சியர்களின் பின்னணி, அலுவலகம் மற்றும் வீட்டு முகவரி, அவர்களிடம் வேலை செய்யும் அடியாட்களின் எண்ணிக்கை, அவர்கள் மீது புகார் மற்றும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் திரட்டி கமிஷனரிடம் அளித்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ளூர், வெளிமாவட்ட பைனான்சியர்கள் 60 பேரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தவிர, பைனான்சியர்களிடம் முதலீடு செய்துள்ள போலீஸ் அதிகாரிகள், போலீஸ் துறை சாராத நபர்களுடன் கூட்டு வைத்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. போலீஸ் குடியிருப்புகள் தோறும் சில போலீசாரும், அவர்களது மனைவிமாரும் ஏலச்சீட்டு நடத்துவதாகவும், மாத வட்டிக்கு போலீசாருக்கே கடன் வழங்கி வருவது தொடர்பாகவும், கமிஷனரிடம் விவரம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ளோரை கண்காணிக்கவும், புகார்கள் வரும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து உடனடி கைது, சோதனை நடவடிக்கைகளை துவக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ள போலீஸ் கமிஷனர், பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார்.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் விலையேறிய பெட்ரோல்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதால், பெட்ரோலியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவற்றின் மீதான விலையுயர்வு தவிர்க்க முடியாததாகிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் ஆர்.எஸ். படோலா கூறுகையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 46.29 என்ற அளவில் இருந்து ரூ. 49.40 என்ற அளவிற்கு குறைந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பெட்ரோலியப்பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இந்திய பெட்ரோலியத்துறை 79 சதவீதம் இறக்குமதியையே சார்ந்துள்ளதால், இந்த விலையுயர்வு தவிர்க்க முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குறும்படம் - நாணல் !


ONE NIGHT - தமிழ் குறும் படம்!

சிறுவனின் நடிப்பு அபாரம் கடைசீயில் இதற்காகவா என்று நினைக்கும் பொழுது படிக்கும் பையனை விட ரொம்ப வேதனையை ...

உலகின் சக்திவாய்ந்த 'பவர்' டாப் 20-ல் சோனியா, மன்மோகன்!

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த முதல் 20 பேர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இடம்பெற்றுள்ளனர். அதிகார பலத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட்டு முதல் 50 தலைவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஒசாமா பின்லேடன் மற்றும் கடாஃபி ஆகியோரின் வீழ்ச்சியால் மிகுந்த செல்வாக்கு காரணமாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 11-வது இடத்திலும், பிரதமர் மன்மோகன் சிங் 19-வது இடத்திலும் உள்ளனர். 'இரண்டு முறை பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, அதனை மன்மோகன் சிங்குக்கு விட்டுக்கொடுத்தவர்' என சோனியாவை ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. ' கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்வர்டில் பயின்ற 'ஊழல் கறைபடியாத' பொருளாதார வல்லுனர்' என பிரதமர் மன்மோகன் சிங் வருணிக்கப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் ரஷ்ய விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர்

அன்னக்கொடி யார் ? கொடிவீரன் யார் ?


பாரதிராஜா தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். படத்தின் பெயர் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் மத்தியில் யார் பாரதிராஜா படத்தில் நடிப்பது என்று கடும் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது.ராதா மகள் கார்த்திகா " பாரதிராஜா சாரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் " என்று தெரிவித்துள்ளார். பார்த்திபன் தனது டிவிட்டர் இணையத்தில் " பாரதிராஜா சாரின் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் இரு வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.'வாகை சூட வா' பட நாயகி இனியா அளித்துள்ள பேட்டியில் " பாரதிராஜா சார் படத்தில் வினய் (உன்னாலே உன்னாலே பட நாயகன்) உடன் இணைந்து நடிக்க உள்ளேன் " என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் பேட்டியளித்துள்ள நிலையில் யார் எல்லாம் தான் இயக்கும் படத்தில் நடிக்கிறார்கள், படப்பிடிப்பு எப்போது என்பது குறித்து இன்னும் பாரதிராஜா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

காங். எதிராக தேர்தல் பிரசாரம் ஹசாரே மீண்டும் எச்சரிக்கை!

எதிர்வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹஜாரே இன்று எச்சரித்தார்.கடந்த 19 நாட்களாக மெளன விரதம் கடைபிடித்து வந்த அண்ணா ஹஜாரே இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் வைத்து தனது விரதத்தை முடித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், "வருகிற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக எங்கள் இயக்கம் பிரசாரம் மேற்கொள்ளும். 

யார் எதைச் சொன்னாலும் கவலையில்லை. லோக்பால் மசோதா நிறைவேறவில்லை என்றால், நான் பிரசாரம் மேற்கொள்வது உறுதி. குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் நிறைவேறவில்லை என்றால், மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கூடாது.  லோக்பால் நிறைவேறவில்லை என்றால், மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன். பிறகு, நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்" என்றார்.மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "நான் பிஜேபிக்காக பிரசாரம் மேற்கொள்ளமாட்டேன். காங்கிரஸுக்கும் பிஜேபிக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை," என்றார் அண்ணா ஹஜாரே. லோக்பால் மசோதாவை வலுவற்றதாக உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டிய ஹஜாரே, "அரசின் எண்ணம் சந்தேகம் அளிக்கிறது. ஜன் லோக்பால் மசோதாவை பலவீனமானதாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. நாங்கள் பரிந்துரைத்த அம்சங்கள் அனைத்தும் லோக்பாலில் இருக்க வேண்டும்," என்றார் அவர்.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... !

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் நிரம்பியுள்ளன. சிறு சிறு ஆறுகளில் உள்ள வெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.தமிழ்நாடு முழுவதும் மழையினால் பல்வேறு நிகழ்வுகளில் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த பகுதி, வங்கக் கடலில் ஈரமான காற்றினை தமிழகத்தின் ஊடாக ஈர்ப்பபதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை நாகப்பட்டினம், வேலூர் ஆகிய இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


சென்னையில் பாதிப்பு: வடகிழக்குப் பருவமைழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கனமழை பெய்தது. இன்று காலையிலும் பலத்த மழை கொட்டியது. இந்தத் தொடர் மழைகாரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால், காலை நேரத்தில் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் சிரமத்திக்குள்ளாகினர். மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. கீழ்ப்பாக்கம், கிண்டி, வடபழனி ஆகிய இடங்களில் காலை முதல் பெய்து வரும் கனமழையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி, வியாசர்புரம், கணேசாபுரம் பகுதிகளில் வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. காலை முதல் மழை கொட்டிக் கொண்டே இருந்ததால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதிகம் அவதிக்குள்ளானார்கள்.

எங்களை ஆலோசிக்காமல், பெட்ரோல் விலை உயர்த்தப்படும் பட்சத்தில், ஆதரவை விலக்கிக்கொள்வோம் மம்தா பானர்ஜி !

 நிருபர்களிடம் அவர் கூறுகையில், "பெட்ரோல் விலையை உயர்த்துவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல் விலை அதிகரிக்கப்படுகிறது என்கிறீர்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்?பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியில் உள்ளது. ஆனால், மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்துகிறது. பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் மிரட்டல் விடுக்கவில்லை. நாங்கள் பல முறை அவமதிக்கப்பட்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் எங்களுக்கென்று அறை கூட கிடையாது. எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மீண்டும் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தினால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம். யாராவாது ஒருவர் பூனைக்கு மணி கட்டித்தானே ஆகவேண்டும்," என்றார் மம்தா பானர்ஜி.

தமிழக அமைச்சரவை மாற்றம் 6. IN 6. OUT


தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென மாற்றியமைத்தார். 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களை விடுவிக்குமாறு காவல்துறைக்கு தொலைபேசி மூலம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டால், அமைச்சர் பதவியில் இருந்து செந்தமிழன் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடவுள் (ஜெயலலிதா) இருக்கும் இடத்தில் காலணி அணியமாட்டேன் என்று சட்டப்பேரவையில் காலணிகள் அணியாமல் வந்த உதயகுமார், திருச்சியில் முதல்வர் ஜெயலலிதா பிராசரம் மேற்கொண்டபோது அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொள்ளதாக தெரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே சலுகை காட்டி, மற்றவர்களை கண்டுகொள்ளாததாக புத்திசந்திரன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. செயல்பாடுகளில் அதிருப்தி காரணமாக, ஏனைய மூவரும் நீக்கப்பட்டதாக தெரிகிறது.

நீக்கப்பட்ட அமைச்சர்கள் விவரம்:
1. சி.சண்முகவேலு (ஊரக தொழில் துறை)
2. புத்திசந்திரன் (உணவுத் துறை)
3. ஆர்.பி. உதயகுமார் (தகவல் தொழில்நுட்பத் துறை)
4. சிவபதி (கால்நடை பராமரிப்புத் துறை)
5. சண்முகநாதன் (அறநிலையத் துறை)
6. செந்தமிழன் (செய்தி மற்றும் சட்டத்துறை)

புதிய அமைச்சர்கள் விவரம்: 
1. பரஞ்சோதி  (திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்)
2. எஸ்.தாமோதரன் (கணத்துக்கடவு எம்.எல்.ஏ.)
3. வீ.மூர்த்தி (மாதவரம் எம்.எல்.ஏ.)
4. ஆர் காமராஜ் (நன்னிலம் எம்.எல்.ஏ.)
5. ராஜேந்திர பாலாஜி (சிவகாசி எம்.எல்.ஏ.)
6. சுந்தர்ராஜ் (பரமக்குடி எம்.எல்.ஏ.) 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...