|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 April, 2013

விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்.

இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“

என்ற பாரதியின் கூற்றிற்கேற்ப மேலைநாட்டு இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வ. வே. சு. ஐயர். என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்காக தீவிரமாகப் போராடினார். சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது வ.வே.சு.ஐயர் சிறந்த இலக்கிய வாதிகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார்.

Sex அதிகம் தேடும் இந்தியர்!



பெண்களுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும் நகரம் என்று சொல்வதற்கு, எப்போது பெண்கள் தனியாக எந்த நேரமும், பயமின்றி செல்ல முடியுமோ, அந்த நகரம் தான் பாதுகாப்பான நகரம். ஆனால் தற்போது சிறு பெண் குழந்தைகளுக்கு கூட, சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இதுவரை கிராமங்களில் வாழும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று நினைத்தால், கிராமங்களை விட மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நகரங்களிலேயே அதிக ஆபத்தானது உள்ளது. மேலும் தொம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் உள்ள ட்ரஸ்ட்லா (TrustLaw) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சொல்கிறது. ஏனெனில் பாலியல் வன்முறைகள், கடத்தல் போன்றவை இந்தியாவில் அதிகம் உள்ளது. மேலும் கூகுளில் அதிகம் "செக்ஸ்" என்ற வார்த்தையைத் தேடுபவர்களில், உலகில் உள்ள ஏழு நாடுகளில் இந்தியாவில் இருப்போர் தான் அதிகம் என்று கூகுள் கூறுகிறது.

 மேலும் இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் (International Herald Tribune) கட்டுரையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில், இந்தியா மிகவும் மோசமான இடத்தைப் பெற்றுள்ளது என்று உள்ளது. அனைத்து நகரங்களில் நன்மைகளும், தீமைகளும் இருக்கும். ஆனால் அவற்றில் பெரும்பாலான நகரங்களில் எவ்வளவு நன்மை கிடைக்கிறதோ, அதே அளவில் தீமைகளும் உள்ளது. எனவே பெண்கள் எப்போதும் மற்றவர்களை நம்பாமல், சுயபாதுகாப்புக்காக, பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்போது, இத்தகைய இந்தியாவில் பெண்கள் செல்ல பயப்படும் 10 இடங்கள்?

1, டெல்லி என்று சொன்னாலே அனைவரும் தற்போது ஞாபகம் வருவது பலாத்கார விவகாரம் தான். ஆகவே தற்போது பெண்கள் டெல்லி என்று சொன்னாலே, பயப்படுகின்றனர். இந்தியாவின் தலைநகரமான டெல்லி, தற்போது புதிய பெயரையும் பெற்றுவிட்டது. அது தான் "பலாத்காரத்தின் தலைநகரம்". மேலும் தேசிய குற்றப் பதிவு செயலம், டெல்லியில் மொத்தம் 23.8% கற்பழிப்பு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கிறது.

2, கொல்கத்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் இங்கு பெண்களை கிண்டல் செய்தல், கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனவே தான் பெண்கள் இங்கு செல்லவே அஞ்சுகிறார்கள்.

3, தென்னிந்தியாவில் குற்றம் அதிகம் நடக்கும் இடங்களில் பெங்களூரும் ஒன்று. இங்கு என்ன தான் பெண்கள் வருவதற்கு ஆசைப்பட்டாலும், போதைப் பழக்கம் மற்றும் பெண்களுக்கு நைட் ஷிப்ட் வேலை இருப்பதால், கற்பழிப்பு எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. எனவே தான், இந்த இடத்திற்கு பெண்கள் செல்ல விரும்புவதில்லை.

4, ஹரியானாவில் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் குர்கான், கற்பழிப்பு வழக்குகள் மற்றும் குற்ற விகிதங்கள் அதிகம் இருப்பதால், பெண்கள் குர்கான் வருவதை தவிர்க்கின்றனர். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு தான் மோசமான பாதுகாப்பு உள்ளது.


5, என்ன தான் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும், மும்பையில் தான் 10.8% கற்பழிப்பு வழக்கு அதிகம் உள்ளது. ஆகவே தான் பெண்கள் இங்கு தனியாக வெளியே செல்லவும், தங்குவதற்கும் பயப்படுகின்றனர்.

6, மத்திய பிரதேசமும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மோசமான நகரமாக உள்ளது என்று FSI சர்வே வெளியிட்டுள்ளது. எனவே தான் பெண்கள் இங்கு செல்ல அஞ்சுகின்றனர்.

7, இந்தியாவில் பெண்கள் தவிர்க்க வேண்டிய நகரங்களில் ஹைதராபாத் ஒன்றாக உள்ளது. என்ன தான் பெரிய நகரமாக இருந்தாலும், அங்கு கற்பழிப்புகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இதனை நன்கு வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில் ஒன்று என்று சொல்லலாம்.

8, மஹாராஷ்டிராவில் பெண்கள் வெறுக்கும் நகரங்களில், அங்கு இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் பூனேயும் ஒன்று. பூனேயில் மிகவும் கடினமான அனுபவம் என்ற சொன்னால், இங்கு போக்குவரத்து அமைப்பிலிருந்து, பொது பேருந்துகள் வரை அனைத்தும் மிகவும் மோசமாக இருக்கும்.

9, இந்தியாவிலேயே வன்முறை குற்றங்கள் அதிகம் நிகழும் இடங்களில் உத்தர பிரதேசம் தான் முதன்மையாக 11.9% ஆக உள்ளது. இங்கு பெண்களுக்கு சிறு பாதுகாப்பு கிடைப்பதே பெரிய சந்தேகம் தான். ஏனெனில் இங்கு எந்த ஒரு காரணமின்றியும், எந்நேரமும் தாக்குவார்கள் என்பதாலேயே.

10, என்ன தான் சுற்றுலாத் தளமாக இருந்தாலும், இங்கு பெண்கள் செல்வதற்கு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்தே செல்ல முடியும். ஏனெனில் இங்கு போதைப் பொருட்களான மதுவை பொது இடங்களிலேயே அருந்துவதால், இதுவும் பெண்கள் செல்வதற்கு அஞ்சக்கூடிய நகரங்களுள் ஒன்றாக உள்ளது.


உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்!



ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. அமெரிக்காவில் 150 பேரில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.. இந்தியாவில் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். உலகளவில் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. சிறந்த பயிற்சியும் கவனமும் எந்தக் காரணத்தினால் இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பதே கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

அந்தத் திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின் கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். திறமைகளை கண்டறியலாம் பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி காணப்படுவர். அனைவரிடமும் சகஜமாக பழகாமல் ஓரிடத்தில் அமராமல் சத்தமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த செயல்பாடுகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். அவர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பயிற்சிகளை கொடுக்கும்போது அவர்களிடம் பெரும் மாற்றங்களை காண முடிகிறது என்கின்றனர் இவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள். அப்படி பயிற்சியளித்தால் அவர்களிடம் ஒளிந்திருக்கும் அதீத திறன்களைக் கண்டறிய முடிகிறது என்கின்றனர் பயிற்சியாளர்கள். பெற்றோர்களின் பங்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதன் மூலமே அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனைக் கண்டுகொள்ள முடியும் என்கின்றனர் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள். 

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறனுடன் காணப்படுகிறார்கள். பேசும் பயிற்சி, பழகும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் மூலம் இவர்களின் குறைகளை ஓரளவு களைய முடியும். என்ன அறிகுறிகள்? பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள். தவிர ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் இதன் ஆரம்ப அறிகுறிகளாகும். விளையாடுவதில் சிக்கல் 18 - 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அறிகுறிகளாகும். 

குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம். 2 வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து, சரி செய்ய முடியும். அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து, சுயதொழில் கற்றுத்தரலாம். ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு வகை மனநிலை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்,'' என்கின்றனர் நிபுணர்கள். இந்தியாவில் 33 ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு, இக்குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக்குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். இது மூளை வளர்ச்சி, மனவளர்ச்சி குறைபாடில்லை என்பதை பெற்றோர், சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.


மாஃபியாவின் பேராசைக்கு முற்றுப்புள்ளி!



புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை கோரி, சுவிட்சர்லாந்து மருந்து நிறுவனம் நோவார்டிஸ் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருந்து நிறுவனமான நோவார்டிஸ், ‘ஜிலிவிக்' என்ற பெயரில் புற்றுநோய் மருந்தைத் தயாரிக்கிறது. அதற்கு இந்தியாவில் காப்புரிமை கேட்டு சென்னையைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை வாரியத்திடம் விண்ணப்பித்தது. காப்புரிமை தரப்பட்டால், புற்றுநோய் மருந்துக்கான வேதிப் பண்புகள் கொண்ட பொது மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடும் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, காப்புரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நோவார்டிஸ் தொடர்ந்த வழக்கில் காப்புரிமை அளிக்க உத்தரவிடுவதுடன், புற்றுநோய் மருந்துக்கு தேவையான வேதிப் பண்பு அடிப்படையிலான பொது மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க தடை விதிக்கவும் கேட்கப்பட்டது.

 அந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புற்றுநோய் மருந்துக்கு காப்புரிமை கோரும் நோவார்டிஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உள்நாட்டில் வேதிப் பண்பு அடிப்படையில் பொது மருந்துகளை தயாரிக்க தடை விதிக்கவும் மறுத்து விட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நோவார்ட்டிஸ் என்னும் மருந்து தயாரிக்கும் மாஃபியாவின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலகில் பல மருந்துகளை கண்டுபிடிக்கும் நிறுவனங்கள் அதனை அதிக விலை வைத்து விற்கின்றனர். அதனால் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அரிய வகை நோயான புற்று நோய் மற்றும் லுகேமியா போன்ற நோய்கள் வந்தால் வசதி படைத்தவர்கள் மட்டுமே மருந்துகளை வாங்க இயலும். இதனை இந்திய மருந்து கட்டுபாட்டு கழகம் ஜெனரிக் டிரக் என்னும் முறையை கொண்டு வந்து அதே ஃபார்முலாவில், ஆனால் உள்நாட்டிலேயே தயாரித்து அதை இந்தியாவில் விலை மலிவாக எல்லோரும் உபயோப்படுத்துவது போல கொண்டுவந்தனர். 

நோவார்ட்டிஸ் நிறுவனம் புற்று நோய்க்கான ஒரு காப்புரிமையை உச்சநீதிமன்றம் வரை போய் இழந்தது. இது 2007 ஆம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம் தான் இதனை முதலில் தள்ளுபடி செய்தது. பின்பு பல கட்டங்கள் போராடி உச்சநீதிமன்றம் போன நோவார்ட்டிஸ் இந்த காப்புரிமையை இழந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடந்த வருட டர்ன் ஓவர் மட்டும் 5670 கோடி டாலர்கள் மற்றும் இதன் லாபம் மட்டும் 960 கோடி டாலர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் நேற்று அளித்த தீர்ப்பின் மூலம் புற்றுநோய்க்கான ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள மருந்து இந்தியாவில் ரூ. 8,000க்கே மலிவாக கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது போல காச நோய், லுக்குமியா, எய்ட்ஸ் மற்றும் இன்னும் பல உயிர் கொல்லி நோய்களின் மருந்து மலிவு விலையில் கிடைக்கும்.


பார்த்ததில் பிடித்தது!


வரலாறு தெரியாத காங்கிரஸ்!



காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை இன்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார். சட்டசபையில் அவர் இன்று பேசுகையில், நேற்று உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார். அப்போது உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை என்றார். கூடவே, விஜயதாரணியும் 'ஆமாம் மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை' என்றார். வேறு சில உறுப்பினர்கள் அப்போது குறுக்கிட்டு இது வரலாறு, வரலாற்று உண்மை என்றார்கள். அப்போது உறுப்பினர்கள் பிரின்சும், விஜயதாரணியும் மகாத்மா காந்தி இப்படி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்கள். ஆதாரம் இருக்கிறது. அந்த ஆதாரத்தை கையிலே வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று நான் பேசாமல் இருந்தேன்.

 மகாத்மா காந்தி 30.1.1948 அன்று கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது 29.1.1948 அன்று காங்கிரஸ் கட்சிக்கான ஒரு வரைவு சட்டத் திட்ட விதிகளை எழுதி அவர் அனுப்பினார். இது மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, 7.2.1948 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆச்சார்யா ஜூகல் கிஷோர் என்பவரால் வெளியிடப்பட்டது. "The Collected Works of Mahatma Gandhi - Volume 90" என்ற புத்தகம் இதோ இருக்கிறது (அந்தப் புத்தகத்தைக் காட்டினார்). இந்த நூல் மத்திய அரசின் Ministry of Information and Broadcasting உடைய Publication Division ஆல் 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்திற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அன்னாள் பாரதப் பிரதமருமான அன்னை இந்திரா காந்தி அவர்களே முன்னுரை எழுதி இருக்கிறார். மகாத்மா காந்தி எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான சட்ட திட்ட விதிகளில் Draft Constitutionல் என்ன சொல்லி இருக்கிறார்?. ஆங்கிலத்தில் தான் எழுதி இருக்கிறார். அதாவது அதற்கு தலைப்பு 'Draft Constitution of Congress'. "Though split into two, India having attained political independence through means devised by the Indian National Congress, the Congress in its present shape and form, i.e. as a propaganda vehicle and parliamentary machine, has outlived its use." அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்?. காங்கிரஸ் காலாவதியாகிவிட்டது என்று மகாத்மா காந்தி அவர்களே எழுதி இருக்கிறார். மேலும் மகாத்மா காந்தி எழுதி இருக்கிறார். 

"India has still to attain social, moral and economic independence in terms of its seven hundred thousand villages as distinguished from its cities and towns. The struggle for the ascendancy of civil over military power is bound to take place in India's progress towards its democratic goal. It must be kept out of unhealthy competition with political parties and communal bodies. For these and other similar reasons, the AICC resolves to disband the existing Congress organization ..." அதாவது மகாத்மா காந்தி அவர்களே தன் கைப்பட எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான வரைவு சட்ட திட்ட விதிகளில் அவர் பல காரணங்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இந்த காங்கிரஸ் அமைப்பையே கலைத்துவிடுவது என்று முடிவு செய்கிறது என்று எழுதி இருக்கிறார். ஆகவே, காங்கிரஸ் கட்சியிலே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியாமல் இங்கே பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது தான் தக்க ஆதாரம் என்பதை கூறி அமர்கிறேன் என்றார் ஜெயலலிதா.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...