|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 October, 2011

கலிகாலம் 3 = ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள்!



ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா(28), சோபியா(26), நெட்காய் கோக்வாரா(24). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பொது மக்களை காக்கும் பொலிஸ் ஒருவரையே கடத்திச் சென்றுள்ளனர். 
இந்த பெண்கள் ஹரேரே மாஷோலைன்ட் மற்றும் குவேறு ஆகிய நகர்களில் தெருவில் செல்லும் ஆண்களை தமது வாகனத்தில் ஏற்றி அனுமதித்த பின் அவர்களை மயக்க மருந்து கொடுத்து தமது காரியத்தை சாதித்து வந்துள்ளனர். இந்தப் பெண்கள் குறிப்பிட்ட ஆண்கள் மயக்கம் தெளிந்ததும் அவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளனர். அந்த ஆண்களிடமிருந்து விந்தணுக்களை சேகரித்த பின் அந்தப் பெண்கள் அவர்களை தெருவோரத்தில் கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர். ஆண்களின் விந்தணுக்கள் மூலம் தாம் அதீத மந்திர ஆற்றல்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த பெண்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரில் கோபி நகோவரா என்ற 26 வயது பெண்ணும்  உள்ளடங்குகிறார்.ஆண்களைக் கடத்திச் சென்று      ஊறவுக்கு உட்படத்திய குற்றச்சாட்டுக்கும் பாதசாரியொருவரை வாகனத்தால் மோதி அவர் பலியாவதற்கு காரணமாக இருந்ததற்கும்  தொடர்பாக வழக்கும் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...