|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 September, 2011

உலகின் முதலாவது 17 அங்குல இரட்டை திரைகளுடன் கூடிய மடிக்கணனி!


உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘ஸ்பேஸ்புக்’ என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது.

வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார்.

மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது.

இதே நாள்...


  • எத்தியோப்பியா, தேசிய மறுமலர்ச்சி தினம்
  •  ‌ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார்(1609)
  •  சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)
  •  ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)
  •  அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்(1933)
  • பலூன் திருமண உடை!

    இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத்தின் திருமண உடைக்கு ஏகப்பட்ட மவுசு. ரூ. 2 கோடி மதிப்புள்ள அவரின் திருமண உடை ஜூலை 23-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மூன்று லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் பேர் இதுவரை இதனைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.


    இதற்கிடையில் பலூன்களின் மூலம் பல்வேறு சாதனைகளைப்படைத்த லெவிட் என்ற 54 வயதுப்பெண், கேத்தின் திருமண உடையைப் போன்றே பலூனில் செய்து அசத்திவிட்டார். சுமார் 5 ஆயிரம் பலூன்களைப் பயன்படுத்தி ஆடையை உருவாக்கியுள்ளார்.

     
    அதிகமாக வெள்ளை நிற பலூன்களும், ஆடையின் மேல் பகுதியை அலங்கரிப்பதற்குக் கலர் பலூன்களையும் பயன்படுத்தியுள்ளார். ""5 ஆயிரம் பலூன்களை ஊதி, சைஸ் வாரியாக முறுக்குவதற்கே நான்கு நாள்கள் பிடித்தது'' என்கிறார் லெவிட்.

    திருச்சி ஆலையில் டயர் உற்பத்தி: எம்ஆர்எப் அறிவிப்பு!

    வரும் ஆண்டு துவக்கத்தில் திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஆலையில் டயர் உற்பத்தியை துவங்க எம்ஆர்எப் திட்டமிட்டுள்ளது. டயர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் எம்ஆர்எப் நிறுவனம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தொழிற்சாலை அமைத்து டயர் உற்பத்தி செய்து வருகிறது. தவிர, கோவா, மேடக், கோட்டயம் மற்றும் புதுச்சேரியிலும் எம்ஆர்எப் டயர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், திருச்சியில் புதிய டயர் ஆலையை எம்ஆர்எப் அமைத்து வருகிறது. ரூ.900 கோடி முதலீட்டில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. இந்த புதிய ஆலையில் விரைவில் டயர் உற்பத்தியை துவங்க எம்ஆர்எப் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து எம்ஆர்எப் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாக துணைத்தலைவர் கோஷி கே. வர்கீஸ் கூறி்யதாவது: "தமிழகத்தில் உள்ள இரண்டு ஆலைகள் உள்பட அனைத்து ஆலைகளிலும் முழு அளவில் டயர் உற்பத்தி நடைபெற்று வருகிறது. திருச்சியில் கட்டப்பட்டு வரும் ஆலையில் வரும் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் டயர் உற்பத்தி துவங்க திட்டமிட்டுள்ளோம்.

    உற்பத்தி துவங்கப்பட்ட 6 முதல் 8 மாதங்களுக்குள் திருச்சி ஆலை முழு அளவு உற்பத்தி திறனை எட்டும். திருச்சி ஆலையும் உற்பத்தியை துவங்கும்போது உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதிக்கான தேவையை நிறைவு செய்ய முடியும்," என்று கூறினார்.

    ஆண்மையை அதிகரிக்கும் ஜின்செங்!

    தினம் தினம் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு போரடித்துப் போய் இருப்பவர்களுக்கு உடனடியாக உற்சாகம் தரும் உணவுகளை உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாகவும் சாப்பிடவேண்டும் அதே சமயம் உடலுக்கு உற்சாகம் தருவதாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த உணவுகள் நிச்சயம் பிடிக்கும்.

    ஹார்மோன்களுக்கு சீஸ்; சீஸ் எனப்படும் பால் பொருள் அதிக சத்து நிறைந்தது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், தைராமின் ஆகியவை ஹார்மோன்களுக்கு ஊக்கமளித்து உடலை உற்சாகப்படுத்தும். சிறிதளவு சாப்பிட்டாலே போதும். அதிக அளவு சீஸ் சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகிவிடும். சீஸ் சாப்பிடும் முன் விழிப்புணர்வு தேவை.

    ஆண்டிஆக்ஸிடென்டல் ஸ்ட்ராபெரிஸ்: ஸ்ட்ராபெரிஸ் பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, மங்கனீசியம், போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் காணப்படுகின்றன. நாளொன்றுக்கு 8 நடுத்தர ஸ்ராபெரிஸ் சாப்பிட்டால் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் கிடைக்கும். இதிலுள்ள ஆண்டிஆக்டிடென்டல் உடலில் பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பித்து உடனடியாக உற்சாகத்தை தரும். சோர்வை உண்டாக்கும் நோய்கிருமிகளை எதிர்த்து போராடும்.

    உடனடி உற்சாகம்; அருகம்புல் ஜூஸ் உடலுக்கு தேவையான சத்துக்களை உடனடியாக அளிக்க வல்லது. ஒருடம்ளர் அருகம்புல் ஜூஸ் குடிப்பது 25 கப் காய்கறிகளை உண்பதற்கு சமம் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உடனடி உற்சாகத்தை விரும்பும் ஏராளமானோர் அருகம்புல் ஜூஸ் குடிக்கின்றனர். குளோராபில்ஸ், தாதுஉப்புக்கள், ஏ, பி காம்ளக்ஸ், சி, ஈ கே போன்ற வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன. இரத்தத்திற்குத் தேவையான புரதம், 17 வகையான அமினோ அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.

    ஆண்மையை அதிகரிக்கும் ஜின்செங்: சீனாவில் வளர்க்கப்படும் ஜின்செங் செடியின் வேர் உடலுக்கு தேவையான சக்தினையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த வேரினை டீ, காபியில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்புகளை பலப்படுத்தி உற்சாகமூட்டும். ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

    பால் சுரத்தலை ஊக்குவிக்கும் முக்கம்பாலை!

    மரங்கள் இயற்கையின் கொடை. மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை போக்கும் மருந்துகள் மரத்தில் இருப்பதால்தான் எண்ணற்ற சித்தர்கள் காடுகளில் வசித்து வந்துள்ளனர். இயற்கையோடு வாழ்ந்து உடலுக்குத்தேவையான மருந்துகளை கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளனர்.

    உயரமான கிளைகளை உடைய முக்கம்பாலை மரம் மருத்துவ கொண்டது. இந்த மரத்தின் மலர்கள் பசும் வெண்மை நிறத்தை கொண்டவை. மணமுடையவை. கனிகள் மெலிந்த வெடிகனி. காம்பிலிருந்து கொத்தாக தொங்குபவை. விதைகள் பழுப்புநிறமுடையவை. முக்கம்பாலையின் இலைகள், பட்டை மற்றும் கட்டை மருத்துவ குணம் கொண்டவை. இந்தியாவில் இமயமலையின் அடிப்பகுதி, பீகார், அந்தமான் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

    செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளவற்றில் டிடாமைன், அல்ஸ்டோமைன், பிக்ரினைன், ராசிமைனைன் முக்கியமானவை.

    பெரி-பெரி நோய்குணமாகும்: இலைகளின் கசாயம் பெரி-பெரி என்னும் தோல்நோய்க்கும், கல்லீரல் அடைப்புக்கும் மருந்தாகும் இதன் இலைகளை கசக்கி எண்ணெயில் சூடுபடுத்தி உள்ளுக்குள் தர நீர்க்கோவை நோய் குணமடையும். இலையை அரைத்து பற்றுப்போட நாட்பட்ட புண்கள் குணமடையும்.

    குழந்தை பேற்றுக்குப்பின்னர் பெண்களுக்கு இலையின் சாறு இஞ்சியுடன் சேர்ந்து கலந்து கொடுக்கப்படும். இது பால் சுரத்தலை ஊக்குவிக்கும். சதையை இறுக்கும். தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கத்தை தரும்.

    ஜீரணமண்டல நோய் குணமடையும்: முக்கம்பாலை மரத்தின் பட்டை வயிற்றுப்பூச்சிகளை கொல்லும். வயிற்றுப்போக்கு, மலேரியா ஆகியவற்றிற்கு எதிரானாது. ஜீரண மண்டல நோய்களைத் தீர்க்க வல்லது.

    மரத்தின் பால் காது வலியின் போது எண்ணெய் கலந்து மருந்தாக ஊற்றப்படுகிறது. மூட்டுவலி, பல்வலி, தோல்கட்டிகள் புண்களின் மேல் பூச்சாக உதவுகிறது. மரத்தின் கட்டையினை நீருடன் சேர்த்து மூட்டுவலி மற்றும் காயங்களுக்கு பயன்படுகிறது. இத்தாவரத்துடன் வேறுபல தாவரங்களையும் சேர்த்து அமிர்த அரிஷ்டா என்னும் மருந்து தயாரிக்கப்படுகிறது. இது காய்ச்சல் நோய்க்கு மருந்தாகும்.

    இனிய தாம்பத்யத்திற்கு இயற்கை மூலிகைகள்!

    இல்லறத்தில் இனிய தாம்யத்தை விரும்புபவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. இயற்கை உணவுகளை உட்கொண்டால் இதமான தாம்பத்யத்தை அனுபவிக்கலாம் என்று மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

    உணவியல்துறை வல்லுநர்கள் ஆய்வு; ஜின்செங் மற்றும் குங்குமப்பூவை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் அது உடலை உற்சாகம் மூட்டும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிவப்பு ஒயின், மற்றும் சாக்லேட்டும் கூட தாம்பத்யத்தின் இனிமையை கூடுதலாக்கும் என்று குல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவியல்துறை பேராசிரியர் மாஸிமோ மார்க்கோன் தனது மாணவர் ஜான்மிலின்க் உடன் இணைந்து ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். அவர்களது ஆய்வு முடிவுகள் உலக உணவு ஆய்வியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள் உங்களுக்காக.

    பக்கவிளைவு ஏற்படுவதில்லை: தாம்பத்யத்தில் சரியான ஈடுபாடு இல்லையென்றால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே இயற்கையான ஜின்செங், குங்குமப்பூ, யோகிம்பைன் போன்ற மருந்துகளை கண்டறிந்துள்ளனர். ஜின்செங் என்பது சீனாவில் பயிரிடப்படும் வேர்ச்செடி, யோகிம்பீ என்பது மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் மரமாகும். இவற்றை உட்கொள்வதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் உற்சாகம் அதிகரிக்கிறது என்று ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். இதேபோல் சாக்லேட்டும் உறவின் போது உற்சாகத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.

    இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், உணவுகள் தாம்பத்ய வாழ்க்கைக்கு உற்சாகமூட்டுகின்றன. ஆனால் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்கிறார் மிலின்க்.

    போதை தேவையில்லை: ஆனால் நீடித்த இன்பத்திற்காக தற்போது விற்பனை செய்யப்படும் வயாக்ரா உள்ளிட்ட மாத்திரைகளை உபயோகிக்கின்றனர். இதனால் உடல்வலி, தலைவலி உள்ளிட்ட ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் மிலின்க். போதை மருந்து ஆல்கஹால் போன்றவை உறவின் போது உற்சாகத்தை தரலாம் ஆனால் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    தோல்நோய்களை குணமாக்கும் காட்டு எலுமிச்சை!

    நோய் தோன்றினால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்கிறோம். பழங்காலத்தில் காடுகளில்கிடைக்கும் தாவரங்களே மருந்து போல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இன்றைக்கும் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனங்களில் கிடைக்கும் மூலிகைகளையே மருந்தாக உட்கொள்கின்றனர்.

    அந்த வகையில் சிறியவகை மரமான காட்டு எலுமிச்சையானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கிழக்கு வங்கத்தினைச் சேர்ந்த இந்த மரம். தென் இந்தியா, இலங்கை நாடுகளில் காணப்படுகிறது. ஒடிசா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அந்தமான் தீவுகளிலும் இது வளர்கிறது. இதன் இலைகள், வேர், கனிகள் மருத்துவப் பயன் கொண்டவை.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்; இத்தாவரத்திலிருந்து எளிதில் ஆவியாகும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் பல வேதிப்பொருட்கள் உள்ளன. லினலுல், லினலைல் அஸிடேட், ப்ரைடிலின், எபிப்ரைடிலினால், கெம்ஃஸ்டிரால், ஸ்ட்கம ஸ்டிரலல், அட்லான்டேலைடு, அட்லாஃபெல்லைன், ஔரப்டென், மர்மிசின்

    தோல் வியாதிகள்: இலைகளின் கசாயம் தோல் வியாதிகளுக்கு மருந்தாகிறது. வேர் கிருமிகளுக்கு எதிரானது. தசை பிடிப்பு வலி போக்குவது. செயல்தூண்டுவி. வீக்கங்கள் மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மேல் பூச்சாகிறது. கனிகளின் எண்ணெய் காய்ச்சல் போக்கும், பக்கவாதம் மற்றும் மூட்டுவலிக்கு தடவப்படும்.

    விந்து உற்பத்தி அதிகரிக்கும்: இத்தாவரம் காய்ச்சல் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ருசி மற்றும் பசி தூண்ட உதவுகிறது. இது உடல் வண்ணத்தை ஒளிரச்செய்யும் என்றும் விந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்க வல்லது எனவும் இராஜநிகண்டு என்னும் மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் ஊறுகாயாகத் தயாரிக்கப்படுகிறது.

    குழந்தைகளை டேகேரில் விட்டால் இதய நோய் வரும்!

    குழந்தைகளை டேகேரில் கொண்டு விடுவதால் அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் இதய நோய் வரும் என்றும் இங்கிலாந்து மனோதத்துவ நிபுணர் எச்சரி்க்கை விடுத்துள்ளார்.

    இன்றைய இயந்திர உலகில் தந்தையும், தாயும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் தங்களின் குழந்தைகளை கொண்டு போய் டேகேரில் விடுகின்றனர். அங்கு குழந்தைகள் தாயின் அரவணைப்பின்றி யாரோ ஒரு ஆயாவிடம் இருக்கிறது. இது தான் இன்றைய லைப்ஸ்டைல். டேகேரில் நம் குழந்தை மற்ற குழந்தைகளுடன் பேசிப் பழகி விளையாடும் என்று பெற்றோர் நினைக்கின்றனர்.

    ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. குழந்தைகளை டேகேரில் விடுவதால் அவர்கள் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று மனோதத்துவ நிபுணர் தெரிவித்துளார்.

    இது குறித்து இங்கிலாந்து மனோதத்துவ நிபுணர் அரிக் சிக்மேன் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது, சின்னப் பிள்ளைகளை டேகேரில் விடும்போது அவர்களை யாரோ தெரியாத நபர் பராமரிக்கிறார். இதனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

    அடுத்தவர்கள் பராமரிப்பில் இருப்பதால் குழந்தைகளுக்கு இருமல், தடுமலில் ஆரம்பித்து இதய நோய் வரை ஏற்படும். வேலைக்கு செல்லும் தாய்மார்கள் டேகேரினால் ஏற்படும் விபரீதங்களைத் தெரிந்து கொள்ளாமல் உள்ளனர். ஒரு குழந்தைக்கு சிறந்தது தாயின் அரவணைப்பா அல்லது டேகேர் ஆயாவின் பராமரிப்பா? டேகேர் செல்லும் குழந்தைகளின் மன அழுத்தம் 3 வயது வரை தான் அதிகரிக்கிறது. இருப்பினும் இந்த காலகட்டத்தில் தான் குழந்தைகளின் மூளை படுவேகமாக வளரும் என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    This could raise the odds of a host of problems, from coughs and colds in the short-term, to heart disease in the years to come; children deprived of their mother's attention during the vital years in which the brain blossoms may also find it harder to form relationships as adults, he said.

    "The uncomfortable question remains: which is better for a young child during weekdays -- the biological mother or a paid career at an institution?" Sigman said.
    In his article for 'The Biologist' journal, Dr Sigman has cited studies which show higher levels of the stress hormone cortisol in children who go to daycare. The increase appears only up until the age of three or so, but he says it is still important, as the brain develops rapidly during these years.
    High levels of cortisol are linked to lower resistance to infection in the short-term and heart disease in long-term. Dr Sigman added: “The effects of daycare on the child continues to be discussed through the prism of adult sexual politics and women's rights.

    "This has been a significant impediment, involving a serious conflict of interest: Women's rights and self-fulfilment are not the same issue as a child's well-being and may often compete for precedence."

    மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு!

    பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது. அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி. இரண்டு மீட்டர் உயரம் வளரக்கூடியது. சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    எகிப்திய கல்லறை சித்திரங்களின் அடிப்படையில் இத்தாவரம் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. இது கசப்பானது, மலமிளக்கி, தூக்கத்தை தூண்டும். இந்திய மருத்துவத்தில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. பால் உணர்வு தூண்டுவி. வலுவேற்றி, தசை சுருக்கத்திற்கு எதிரான செயல்திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் ஸ்டிராய்டல்,குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள்,அஸ்பராகைன் மற்றும் ஃபிளேவனாய்டுகள் காணப்படுகின்றன.

    சிறுநீர் நோய்களை குணமாக்கும்: இத்தாவரம் சிறுநீர் போக்கினை தூண்டும். பலவிதமான சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.

    கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் டயாஸ்கொரிடஸ் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கசாயத்தின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிட்டுள்ளார். சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும், சிறுநீரக கோளாறுகள், மஞ்சள்காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும் இதனை சிபாரிசு செய்துள்ளார்.

    நரம்பு மண்டல நோய்: இது தைலங்கள் தயாரித்தலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.

    குடல்வலி,வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றவற்றை போக்கவும் பயன்படுகிறது. வேர் கிழங்கு வெல்லப்பாகுடன் சேர்த்து இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. புதிய வேரின் சாறு தேனுடன் கலந்து சுகமளிக்கும் மருந்தாகிறது. பட்டை நச்சுத்தன்மை கொண்டது.

    மலட்டுத்தன்மை போக்கும்: இத்தாவரத்தில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுள் சதாவேரி கிரிதா, ஃபாலகிரிதா, நாராயணதைலம், விஷ்ணுதைலம்,பிரமேக மிகிர தைலம் ஆகியவை முக்கியமானவை. இத்தாவரத்தின் சாறுடன், வெண்ணெய், பால் ஆகியவை கலந்து கொதிக்க வைக்கப்பட்டு சதாவேரி கிருதா தயாரிக்கப்படுகிறது. இத்துடன் வால்மிளகு,தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் உணர்வு தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

    சதாவேரி சாறுடன் வெண்ணெய், பசுவின் பால் ஆகியவற்றுடன் வேறுசில மருந்துகள் மிகச்சிறிய அளவில் கலந்து ஃபாலகிரிதா தயாரிக்கப்படுகிறது. இது விந்து சுரப்பினை அதிகரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி பெண்குறி கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது. பால்வினை நோயான கோனேரியாவுக்கு பாலுடன் கலந்து தரப்படுகிறது

    கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் பார்த்து விட்டேன்- டோணி!

    இங்கிலாந்துத் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்க முடியாமல் போய் விட்ட கேப்டன் டோணி, நேற்று முடிந்து போன 4வது ஒரு நாள் போட்டி குறித்து விரக்தியுடன் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியையும் நான் பார்த்து விட்டேன் என்று அவர்தெரிவித்துள்ளார். நேற்று நடந்த 4வது போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டை ஆனதாக அறிவிக்கப்பட்டது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோணி கூறுகையில்,

    இந்தப் போட்டியில் கிரிக்கெட்டின் அசிங்கமான பகுதியை நாங்கள் பார்த்தோம். வெற்றி பெறக் கூடிய நிலையில் இருந்த அணியும் விளையாட விரும்பவில்லை. அதேசமயம், வெற்றி பெறும் நிலையில் இல்லாத அணியும் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை. இதற்குப் பேசாமல் கால்பந்து விளையாடியிருக்கலாம். அப்படித்தான் இரு அணிகளும் நடந்து கொண்டன என்றார் டோணி.

    நேற்றைய போட்டியின் போது மொத்தம் 3 முறை மழை குறுக்கிட்டு காரியத்தைக் கெடுத்தது. முதலில் இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்தபோது மழை பெய்தது. 2வது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியாவின் கை ஓங்கிய நிலையில் மழை குறுக்கிட்டது.

    இறுதிக் கட்டத்தில் மழை பெய்து நின்றபோது இரு அணிகளும் சம நிலையில் இருப்பதா கூறியது டக்வொர்த் லூயிஸ் முறை. இதனால் ஆட்டம் டை ஆனது.
    இதுகுறித்து டோணி கூறுகையில், பகல் நேரப் போட்டிக்கு ஒரு விதிமுறை உள்ளது. அதேசமயம், இரவு நேரப் போட்டிக்கும் அதே விதிமுறையைக் கையாளும் நிலையில் உள்ளோம். ஆனால் இது நன்றாக இல்லை.

    போட்டியின் முடிவு குறித்து எங்களுக்கே கூட குழப்பமாக இருந்தது. முதலில் நாங்கள் வென்றதாகத்தான் நினைத்தோம். மழை பெய்து நின்று விடும், மீண்டும் ஆட்டம்தொடரும் எனவும் சிலர் நினைத்தனர். டிரஸ்ஸிங் ரூமில் உட்கார்ந்து பார்த்தபோதுதான் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது தெரிய வந்தது என்றார் டோணி.

    அடுத்த ஆண்களை நாடும் மலேசியப் பெண்கள்!



    அழகான, பணக்கார கணவர்கள் கிடைத்தும் பல மலேசியப் பெண்கள் தங்கள் உடல் பசியைத் தீர்க்க வேறு ஆண்களை நாடுகின்றனர். இது குறித்து மலேசிய நாளிதழான மெட்ரோ அகாதி்ல் கூறப்பட்டுள்ளதாவது,

    மலேசியப் பெண்களில் பலர் தங்கள் உடல் பசியைத் தீர்த்துக் கொள்ள திருமணம் ஆகாத மற்றும் திருமணமான வேறு ஆண்களைத் தேடுகின்றனர். வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவரவர் வீட்டில் மனைவியாகவும், குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    அந்த நாளிதழின் பத்திரிக்கையாளர்கள் வீட்டுக்குத் தெரியாமல் வெளியே உறவு வைத்துக் கொள்ளும் 30-களில் உள்ள சில பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இது பற்றி கேட்டதற்கு, நாங்கள் என்ன செய்வோம். எங்கள் கணவன்மார்கள் எப்பொழுது பார்த்தாலும் வியாபாரம், வியாபாரம் என்று வெளியே சென்றுவிடுகின்றனர். தனிமையாக உணர்வதால் நாங்களும் வெளியே செல்கிறோம் என்றனர்.

    அதில் லிண்டா(31) என்ற பெண்மணி கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளில் 5 பேரிடம் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளேன். என் கணவருக்கு என்னைவிட வேலை தான் முக்கியமாக இருக்கிறது. நான் இவ்வாறு இருந்தாலும் என் கணவரையும், குடும்பத்தையும் விட்டு வெளியே வரமாட்டேன். நான் செய்வது தப்பு என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த பாதை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    யார் கண்டா, எங்கள் கணவன்மார்களும் அவர்கள் ஆசையத் தீர்த்துக் கொள்ள வேறு பெண்களிடம் போகத் தான் செய்வார்கள் என்று கூறி தங்களின் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர்.

    சிங்காரவேலர், ஜீவரெத்தினத்திற்கு மணிமண்டபம் ஜெயலலிதா!

    ஏழைத் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஓய்வறியாத் தொண்டரும், சிந்தனைச் சிற்பியுமான சிங்காவேலருக்கும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஆற்றல்மிகு பேச்சாளராகவும், மீனவ இனத்தின் தலைவராகவும் விளங்கிய சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினத்துக்கும் அவர்கள் நினைவைப் போற்றி மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக விதி எண் 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கை: நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளையும் சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும்; அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும். தமிழ் சமுதாயத்துக்கு வாழ்வளிக்க தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த பெருமக்களுக்கு பெருமை சேர்ப்பதில் எனது அரசு மிகுந்த முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது.

    சிந்தனைச் சிற்பி என்று மக்களால் போற்றப்படும் சிங்காரவேலர் மயிலாப்பூர் மீனவர் கிராமத்தில் 18.2.1860-ல் பிறந்து, கல்வி பல கற்று சிறந்த வழக்குரைஞராக திகழ்ந்தவர். அந்நியருக்கு எதிராக அண்ணல் காந்தியடிகள் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது தனது வழக்குரைஞர் அங்கியைத் தீயிட்டு கொளுத்திவிட்டு தீவிரமான விடுதலைப் போராட்ட வீரராக மாறியவர்.

    கான்பூரில் நடைபெற்ற பொதுவுடைமைக் கட்சியின் முதல் மாநாட்டிற்கு தலைமையேற்று, தன்னைப் பெற்றெடுத்த தமிழகத்துக்கும், தான் பிறந்த மீனவ இனத்துக்கும் தனிப்பெருமை சேர்த்தவர். சிந்தனையாலும் செயலாலும் அல்லும் பகலும் ஏழைத் தொழிலாளர் வர்க்கத்துக்கு பாடுபட்ட உழைப்பாளர் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்.

    சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம் 11.11.1911-ல் ஏழை மீனவர் குடும்பத்தில் பிறந்து, தமிழையும் ஆங்கிலத்தையும் சிறப்பாகக் கற்று சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜீவரத்தினம், தமிழர் நலனிலும், மீனவர் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு சமுதாய மாற்றத்தைக் காண கடுமையாக உழைத்தவர். பேரறிஞர் அண்ணாவின் அன்பையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கையையும் பெற்றுத் திகழ்ந்தவர்.

    பழமையை விடுத்து புதுமையை ஏற்று சமுதாய மாற்றத்தைக் காண உழைத்தவர். ஏழைத் தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஓய்வறியாத் தொண்டரும், சிந்தனைச் சிற்பியுமான சிங்காவேலருக்கும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஆற்றல்மிகு பேச்சாளராகவும், மீனவ இனத்தின் தலைவராகவும் விளங்கிய சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினத்துக்கும் அவர்கள் நினைவைப் போற்றி மணிமண்டபங்கள் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்தக் கோரிக்கைகளை மிகுந்த உவகையுடன் ஏற்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் தலைவர்களான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருக்கும்; சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினத்துக்கும் சென்னை, பட்டினப்பாக்கத்தில் மணி மண்டபங்கள் கட்ட எனது அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழுக்காக தியாகம் செய்த சிதம்பரநாதனுக்கு சிலை

    தமிழ் மொழியின் மீது தணியாத பற்று கொண்டு, பல தலைவர்கள் தமிழ் நாட்டிற்காக தியாகங்கள் பல செய்துள்ளனர். அதில் குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டோடு இணைத்திட போராட்டம் நடத்திய மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் முக்கியமானவர் ஆவார். தியாகி சிதம்பரநாதன் 5.1.1948-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருவிதாங்கூர்- கொச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். விதாங்கூர்- கொச்சி அரசில் வனம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சிதம்பரநாதன், திருவிதாங்கூர்- கொச்சி அரசில் அமைச்சர் பொறுப்பு வகித்த ஒரே தமிழர் ஆவார்.

    அக்காலத்தில் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் மேல் விதிக்கப்பட்டிருந்த மானிய வரியை இவர் நீக்கினார். தாய்த் தமிழகத்துடன் தமிழ்ப்பகுதிகளை இணைப்பது ஒன்றே திருவிதாங்கூர் தமிழர்களின் சிக்கல்களுக்கு ஒரே தீர்வு என்ற நிலையில், தன் அமைச்சர் பதவியைத் துச்சமெனத் துறந்தார்.

    தாய்த் தமிழகத்துடன் தமிழ்ப் பகுதிகளை இணைக்கக் கோரி 4.7.1954-ல் கண்டன நாளாக அறிவிக்கப்பட்டு, பொது மக்களை சந்திக்க மூணாறு சென்றபோது, சிதம்பரநாதன் கைது செய்யப்பட்டு 6.7.1954-ல் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானார். சிதம்பரநான் 1956 முதல் 1969 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பல தியாகங்களை செய்த மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தேன்.

    அந்த வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் திருவுருவச் சிலையை, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் அமைக்க எனது அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் என்று அவர் கூறினார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...