|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 May, 2014

யாரை காக்க அமைச்சர் பதவி?

மோடி என்ற ஆடிக்காற்றில், அத்வானி, எம்.எம்.ஜோஷி போன்ற, அம்மிகளே பறந்து கொண்டிருக்கையில், இலவம் பஞ்சுகளான, அன்புமணி, விஜய காந்த் ஆகியோர், எகிறி எகிறி குதிப்பதைக் காணும் போது, வேடிக்கையாகத் தான் உள்ளது. ஒருவர், எவ்வளவு நிர்வாகத் திறமை மிக்கவராகவும், மக்கள் செல்வாக்கு உள்ளவராகவும் இருந்தாலும் கூட, அவரால், இரண்டு முறைக்கு மேல், அமெரிக்க ஜனாதிபதியாக, பதவி வகிக்க முடியாது. அந்தக் கொள்கையை, இங்கே இந்தியாவில் பின்பற்றும், ஒரு அரசியல் கட்சி உண்டென்றால், அது, பா.ஜ., மட்டும் தான். நிரந்தரப் பொதுச் செயலர், பார்லிமென்ட் தலைவர் என்ற பேச்சுக்கே, பா.ஜ.,வில் இடமில்லை. அத்வானியாக இருந்தாலும், எம்.எம்.ஜோஷியாக இருந்தாலும் யாருக்கும், எதற்கும், எப்போதும் விதிவிலக்கு கிடையாது. கடந்த, 20 ஆண்டு கால வரலாற்றைப் புரட்டி பாருங்கள். ஏனைய கட்சிகளில், எத்தனை தலைவர்கள், பதவியில் மாறி இருக்கின்றனர், எத்தனை தலைவர்களை பா.ஜ., அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பது, தெரிய வரும். 

எதிலும் புதுமையைப் புகுத்த விரும்பும் மோடி, 'சிறிய அரசு; நிறைந்த நிர்வாகம்' என்ற கோஷத்துடன், பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இங்கு, அரசியல்வாதிகளுக்கு ஓய்வே கிடையாது. காலனாகப் பார்த்து, கையைப் பிடித்து இழுத்துக் செல்வது வரை, பதவி சுகத்தில், மிதந்து கொண்டிருக்கவே விழைவர். அதிலும், காங்கிரசில், 80, 90 வயதுடையவர்களை, அவர்கள் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, பதவியில் அமர்த்துவர். காலஞ்சென்ற ஜனாதிபதி, சங்கர் தயாள் சர்மா இதற்கு சரியான உதாரணம். அவர் பதவி வகித்த போது, அவரால், தனியாக நடக்கக் கூட முடியாது. இடதுபக்கமும், வலது பக்கமும் இரண்டு பேர், அவரது கைகளை, தோள்களில் தாங்கியபடி அழைத்து வருவர். பார்க்கும் நமக்குத் தான், மனம் பதைபதைக்கும்; காங்கிரஸ் கவலைப்படாது. அதற்கும், ஒரு வழியை மோடி அரங்கேற்றியுள்ளார். அவரது அமைச்சரவையில், 75 வயது பூர்த்தியானவர்களுக்கு, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அமைச்சர் பதவி கிடையாது என்று, துணிச்சலாக முடிவெடுத்துள்ளார். 

இந்த நிலையில், அன்புமணி ராமதாசும், விஜயகாந்தும், முறையே தனக்கும், மச்சான் அல்லது மனைவிக்கும் மத்திய அமைச்சர் பதவி கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்து, காத்திருக்கின்றனராம். 'வென்றவர்களுக்கே அமைச்சரவையில் இடமில்லை' என்று, மோடி, கறார் காட்டும் போது, ஒருவரையொருவர் நம்பாமல், ஒருவருக்கொருவர் குழிதோண்டி, காலை வாரி, தோல்வியையும் தழுவிய பின், எந்த முகத்தை வைத்து, அமைச்சர் பதவி கேட்கின்றனர்! அதிலும், பிரேமலதாவுக்காம். பிரதமர் பொறுப்பேற்பு நிகழ்ச்சிக்கு, அழைப்பனுப்பி, வரவேற்று ஆலிங்கனம் செய்தது, தப்பாகப் போயிற்று போலும். அன்புமணி மீதோ, சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் உள்ளது. இல்லை, தெரியாமல் தான் கேட்கிறோம். இவர்களைப் பொறுத்தவரை, அமைச்சர் பதவி என்பது, மக்களைக் காக்கவா? தங்களை, வழக்குகளிலிருந்து காத்துக் கொள்ளவா? 

போகிற போக்கைப் பார்த்தால், கருணாநிதி கூட, 'பிளைட்' பிடித்துச் சென்று, '2ஜி' வழக்கிலிருந்து, ஆ.ராசாவைப் பாதுகாக்க ஒரு அமைச்சர் பதவி, குறிப்பாக, தொலை தொடர்புத்துறை கேட்கத் துணிந்தாலும், ஆச்சர்யமில்லை. ஏற்கனவே, அப்படித் தானே, விரும்பிய துறைகளை, காங்கிரசிடம் கறாராகக் கேட்டுப் பெற்றார். ' பா.ஜ.,வோடு, தி.மு.க., கூட்டணியே வைக்கவில்லையே... எப்படி ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி கேட்பார்' என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? 'வரும், 2016 சட்டசபைத் தேர்தலில், கூட்டணி வைப்போம். பா.ஜ.,வைச் சேர்ந்தவர், முதல்வராகப் பதவி வகிக்கலாம். ஸ்டாலின், துணை முதல்வராக இருக்கட்டும். அதற்கு, 'அட்வான்சாக' ஆ.ராசாவுக்கு, இப்போது மத்திய அமைச்சர் பதவி ப்ளஸ், ராஜ்யசபா சீட் கொடுங்கள்' என்று கேட்டாலும் வியப்பதற்கில்லை. எப்பூடி?

இதுவே ஒரு அன்னதானம் தான்..!


ஆடலாம் பாய்ஸ் காமெடியா ஒரு டான்ஸ்!


வ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மாதிரி ஒவ்வொரு நடிகருக்கும் டான்ஸ்ல சில வித்தியாச ஸ்டெப்ஸ் உண்டு. வாங்க அதைக் கொஞ்சம் விலாவரியா பார்ப்போம்.எம்.ஜி.ஆர்: கை இல்லாமல் ஆட மாட்டார். வானத்தைக் காட்டுவார், பூமியைக் காட்டுவார், மரத்தைக் காட்டுவார், குளத்தைக் காட்டுவார். காட்டு காட்டு காட்டுனு காட்டுவார். ஹீரோயின் நின்றால் புத்தூர் கட்டு போடும் அளவுக்கு உலுக்கி எடுப்பார். மாங்காய் திருடினது ஒரு குத்தமாய்யா? அதுக்கு ஈவ்டீசிங் ஸ்டெப்ஸ் போட்டு மிரளவைப்பார். சந்தேகம்னா 'உரிமைக்குரல்’ படத்தில் வரும் 'பொண்ணாப் பொறந்தா...’ பாட்டைப் பாருங்க. மைண்ட் புளோயிங்! 

சிவாஜி: டான்ஸிலும் புது வெரைட்டி காட்டியவர் இவர். சோகப் பாட்டிலும் முகத்தில் நிறைய எக்ஸ்பிரஷன்களோடு ஆடுவார். ரொமான்ஸ் பாடல்களில் குட்டி யானை போல நடந்து ஹீரோயினைக் காதலோடு பார்த்து உதட்டைக் கடிப்பார். (அவரோட உதட்டைத்தான்) அடிக்கடி காலை அகற்றி நின்று இரண்டு கைகளையும் மேலே தூக்கி 'ஓ ஜீசஸ்... ஃபர்கிவ் மீ’ எக்ஸ்பிரஷன் கொடுப்பார். உதாரணத்திற்கு நெஞ்சு வரைக்கும் பேன்ட் போட்டு சீ த்ரூ சட்டையைப்போட்டு இவர் ஆடிய எங்கே நிம்மதி... 'புதிய பறவை’ படத்தின் பாடல் அக்மார்க் சிவாஜி ஸ்கூல் ஆஃப் டான்ஸ். 'பாட்டும் பரதமும்’ என்ற படத்தில் 'சிவகாமி ஆட வந்தால்...’ பாடலுக்கு அவர் ஆடிய பரதத்தில் நவரசத்தையும் வெறும் காலால் எட்டி உதைப்பார்.
ரஜினி: காற்றிலே சைக்கிள் ஓட்டுவார். பம்பரம் விடுவார். குழந்தைபோல ஓடுவார். மியூட்டில் இருந்தாலும் என்ன பாட்டுக்கு ஆடுகிறார் என்பதை கைகளாலும் விரல்களாலும் செய்கையின் மூலமே விளக்கிடு வார். உதாரணத்திற்கு 'ஒருவன் ஒருவன் முதலாளி...’ போல பல பாடல்கள் இருக்கின்றன. நகம் கடித்து வெட்கப்படுவதில், சரோஜாதேவியையே மிஞ்சிவிடுவார் தலைவர்.சத்யராஜ்: தன் க்ளோஸ் ஃப்ரெண்ட் கவுண்டமணியின் ஸ்டெப்ஸ்களை இரவல் வாங்கித்தான் பல படங்களில் ஆடுவார். டான்ஸ் நடுவில் எப்போதும் 'அட்டென்ஷன்’ 'ஸ்டேண்ட்டடீஸ்’ பொசிஷனுக்கு கொஞ்சம் பக்கத்தில் போய் வருவதுபோல் கையைக் காலை உதறுவார். அது சில நேரங்களில் அழுது அடம்பிடிக்கும் குழந்தையைப்போலவே இருக்கும். அவரே டைரக்டர் அவதாரம் எடுத்து மிரட்டிய 'வில்லாதி வில்லன்’ படத்தைப் பாருங்க. நக்மாவோட 'தீம்தலக்கடி தில்லாலே...’னு ஒரு டெரர் பாட்டு இருக்கு. சும்மா ரோல்கால் பரேடு போயிருப்பார் நம்ம புரட்சித் தமிழன்.
பிரபு: தன் குழி விழுந்த கன்னத்தைக் காட்டாமல், ஆடவே மாட்டார். கன்னக்குழியை விரலால் குத்திக் காட்டுவார். இடுப்பை ஆட்டிக் காட்டுவார். தொடையைத் தட்டுவார். உடம்பைக் கஷ்டப்பட்டாவது 'உக்கி’ போடுவது போல அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பார். அழகு காட்டி பழிப்புக் காட்டி பெண்கள் போல நடந்து ஆடுவதெல்லாம் இளைய திலகத்துக்கு இளநீர் குடிப்பதுபோல. சந்தேகம்னா சின்னத்தம்பி படத்தில் வரும் 'அரைச்ச சந்தனம்... மணக்கும் குங்குமம்...’ பாட்டை ஒரு வாட்டிப் பார்த்துத் தெளிஞ்சுக்கோங்க பாஸ்.ராமராஜன்: டான்ஸைவிட கான்ட்ராஸ்ட் கலர்களால் சிதறவிடுவார். கைகளைக் கட்டிக்கொள்வார். மூன்று விரல்களை அடிக்கடிக் காட்டிக் காட்டி ஏதோ இந்த உலகத்துக்குச் சொல்ல வருவார். பெரும்பாலும் இரண்டு கைகளால் முட்டுக்கொடுத்து வகையாக நின்றபடி ஆடுவார். சிவப்பு சட்டை, ஊதா பெல்ட், பச்சை பேன்ட், வெள்ளை ஷூ என கண்ணைக் குத்தும் அவரோட பிராப்பர்ட்டி.
டி.ஆர்: வயதுக்கு மீறி ஸ்டெப்ஸ் போட்டு இவர் ஆடுவதைப் பார்த்தால், பயங்கரமாக இருக்கும். இடுப்பை ஆட்டி ஆட்டி கையைத் தலைக்கு மேல் தூக்கி டவுசர் தெரிய ஆடுவார். தலையை அடிக்கடி சிலுப்புவார். தரையில் தவழ்வார், உருள்வார், புரள்வார். ஆனால் ஸோலோவாக. விரகதாப எக்ஸ்பிரஷன்களை டெரராய்க் கொடுக்கும் இவர் பேசாமல் ஹீரோயின்களை தொட்டே ஆடியிருக்கலாம். அப்படி கொலைக்குத்து மூவ்மென்ட் மற்றும் பார்வையோடு இருக்கும் இவரின் டான்ஸ் ஸ்டைல்.  'டிஆர் டான்ஸ் கங்னம் ஸ்டைல்’ என்று யூடியூபில் தட்டிப் பாருங்கள். இதய பலவீனமானவர்கள் அந்த வீடியோ பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது!

திருமணத்திற்கு முன்னும் பின்பும்!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...