|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 January, 2012

சூரியன் MOVIE ONLINE












கருத்தகண்ணன் C / O ரேக்ளா ரேஸ்...


தங்கமகன் MOVIE ONLILE


சித்தர்கள் கூறும் மருத்துவ முறைகள்!

 பண்டைச் சித்தர்கள் தங்களது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க எளிய முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மருத்துவ முறை பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அதில் வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள் மூலம் எளிதாக செய்யும் சில மருத்துவ முறைகளையும் குறிபிட்டுள்ளனர் அவை ..  ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும். நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும். மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும். பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.  செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும். எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

இதே நாள்...


  • நவூறு விடுதலை தினம்(1968)
  •  அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)
  •  யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)
  •  தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)

தைப்பூச திருவிழா துவங்குகிறது...

முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா. இத் திருவிழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தையொட்டி காலை 9.15 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி கொடி கட்டி மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்கினத்தில் கொடியேற்றப்படும்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் ஆறாம் நாள் திருவிழாவாக 6ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் ரத வீதிகளில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 7ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி தோளுக்கு இனியாளுடன் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மேஷ லக்கனத்தில் தேரேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு தந்த பல்லக்கு தேர் கால் பார்த்தல் நிகழ்சசியும் நடைபெறும். 

பெண் இன்ஸ்பெக்டரை அறைந்த IAS அதிகாரி மனைவி.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் "மும்பை ஹீரோஸ்' "கர்நாடகா புல்டோசர்ஸ்' இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதைக் காண்பதற்காக தன் மகளுடன், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பங்கஜ்குமார் பாண்டேயின் மனைவி அம்புஜா பாண்டே ஸ்டேடியத்துக்கு வந்தார். கேட் எண் ஒன்றில், உள்ளே நுழைய முயன்ற அம்புஜாவை, கப்பன் பார்க் போலீஸ் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலா நாயக் தடுத்து, டிக்கெட் கேட்டார். அம்புஜா, தன்னிடம் இருந்த ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இரண்டு பேருக்கு ஒரு டிக்கெட் கொடுப்பது ஏன்? என்று அஞ்சுமாலா கேட்டு, யாருக்கோ போன் செய்தார். பின்னர், அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார். தன்னை இவ்வளவு நேரம், கேட்டில் காக்க வைத்ததால், கோபமடைந்த அம்புஜா, இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில், அஞ்சுமாலாவின் மூக்கு, வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக, அவர் பவுரிங் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி பெற்றுக் கொண்டு, தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றார்.


இச்சம்பவத்தை "சிசிடிவி' கேமராவில் பார்த்துக் கொண்டிருந்த கூடுதல் போலீஸ் கமிஷனர் சுனில்குமார், சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன், அம்புஜா அங்கிருந்து சென்று விட்டார். நடந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் அஞ்சுமாலாவிடம் கேட்டறிந்த சுனில் குமாரும், மற்ற உயர் போலீஸ் அதிகாரிகளும் புகார் கொடுக்க முயன்றதைத் தடுத்து, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், நேற்று காலையில் மீடியாக்கள், பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதனால், போலீசார், அம்புஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகினர். இதன்படி, கப்பன் பார்க் போலீசில், அம்புஜா மீது 353வது பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்து, அவரை தேடி அவரது வீட்டுக்குச் சென்றனர்.

சிலிர்க்க வைக்கும் பாம்பு மசாஜ்!


இஸ்ரேல் நாட்டில் உள்ள மசாஜ் செய்யும் அழகுக் கலை நிலையம் ஒன்று தங்களது வாடிக்கையா ளர்களுக்கு புது விதமான சேவை ஒன்றை வழங்கியுள்ளது. அமேசன் காடுகளில் பிடிக்கப்பட்டு பழக்கப்பட்ட பாம்புகளைக் கொண்டு மசாஜ் செய்யும் முறையே அது. பாம்புகளை மனிதனின் முதுகுப்பகுதி, தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, கால் போன்றவற்றில் ஊர விட்டு ஒரு விதமான புல்லரிக்கும் மசாஜ் இங்கே செய்யப்படுகின்றது.இந்த மசாஜ் சேவைகளுக்கு வெறும் 80 டொலர்கள் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இந்த மசாஜ் செய்வதால் மன அழுத்தங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றதாம்.

இயக்குநர் பாரகானின் கணவரை நடிகர் ஷாருக்கான் புரட்டி எடுத்தாரா?

பிரபல பாலிவுட் நடன இயக்குநரும்,  இயக்குநருமான ஃபராகானின் கணவர் சிரிஷ் குந்தரை நடிகர் ஷாருக்கான் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் அக்னீபாத் பட வெற்றிக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு நடிகர் சஞ்சய் சத் அளித்த விருந்தின்போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. போதையில் இருந்த குந்தர், ஷாருக்கானை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை கொடுத்ததாகவும், குளியறைக்கு சென்றபோதும் அவருடனே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஷாருக்கான் அவரை சோபாவில் தள்ளி புரட்டி எடுத்துள்ளார்.

இதையடுத்து சஞ்சய் தத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். சமாதானப்படுத்தும் போது அவரும் குந்தரை கன்னத்தில் ஒரு அறை அறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவி மன்யதாவுக்கு கீழ்த்தரமான எஸ்.எம்.எஸ்களை அனுப்பி வந்ததற்காகவும், அந்த விருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் குந்தரை சஞ்சய் தத் கன்னத்தில் அறைந்தார் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த சம்பவம் குறித்து ஃபராகானும், குந்தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். எனினும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க உள்ளதாகக் கூறப்படுவதை இருவரும் மறுத்தனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...