|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 June, 2011

இதே நாள்

  • பூட்டானில் முதல் முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)

  •  மார்க்கோனி, வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)

  •  டென்மார்க் மக்கள், மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர்(1992)

  •  அமெரிக்க பழங்குடிகளுக்கும் அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்(1924)

  •  ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகோதரர்கள் ஸ்டீவ் வாஹ் மற்றும் மார்க் வாஹ் பிறந்த தினம்(1965)

  • 10 Tips to prevent diabetes

    Exercise: Get physically active and strengthen your body's machinery for handling blood glucose- the key to diabetes prevention. Moreover, exercising regularly helps you lose weight, which further reduces your risk of developing diabetes

    Lose weight:Excess weight makes it harder for the body to use insulin to control blood sugar. So, maintain a healthy weight by eating right and exercising regularly.

    Avoid trans fats: Hydrogenated vegetable oils and other trans fats have been shown to contribute to heart disease and may also contribute to diabetes type 2.

    Avoid sugary foods and refined carbohydrates: Avoid eating foods such as white rice and dry cereals as they are high on refined carbohydrates. Processed and fried foods are also unhealthy and the fats and carbohydrates found in them undermine your health.

    Have lots of fibre: Have a diet rich in fibre. With high-fibre carbohydrates, glucose is released slowly, preventing the typical blood sugar spike that leads to diabetes.

    Say no to smoking: Smoking is not only associated with the development of diabetes but it also contributes to heart disease and causes lung cancer.

    Eat more fruits and vegetables: Add lots of fruits and vegetables to your diet to prevent diabetes. Fresh fruits and vegetables have fibre content. If you eat canned or frozen fruits, avoid ones with sugar or other additives. If eating canned or frozen vegetables, try to use low-salt or no-salt varieties.

    Avoid having excess tea and coffee: Studies have shown that drinking too much tea and coffee (more than 4 cups a day) multiplies your risk of developing diabetes. It is advisable to keep your coffee and tea cups under check.

    Eat small but frequent meals: Eating small meals regularly throughout the day is important for regulating your blood sugar and avoiding sudden blood sugar hikes that make your pancreas to produce insulin.

    Take care of your heart: If you have prediabetes, it becomes all the more important to make sure other aspects of your cardiovascular health are under control. High blood pressure, also known as hypertension, is associated with a higher risk of diabetes. Consult your doctor to make sure your blood pressure is within the normal range i.e. under 120/80 mmHg for those aged under 65 years.

    மத்திய மந்திரி தயாநிதி மீது விரைவில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை

    Central Bureau of Investigation (CBI) will question former Telecom Minister Dayanidhi Maran over his alleged role in the 2G spectrum allocation scam. The CBI is also likely to question C Sivasankaran, one of the former owners of Aircel and  Malaysian businessman T Ananda Krishnan, the current owner, about the grant of spectrum.

    The allegation against Dayanidhi Maran is that Aircel, previously denied a telecom licence for over two years, was finally given one only when its owners changed hands to Malaysia-based Maxis. The charge is that Maran cleared the decks only after a sister company of Maxis invested Rs. 675 crore in the Maran-owned Sun TV, which the BJP calls a conflict of interest.

    In a statement issued today, Mr Maran said, "I own no shares or any interest in Sun Direct TV or Astro. I was not even a minister when Astro invested in Sun Direct TV." Mr Maran met Telecom Minister Kapil Sibal before he issued the statement.




    ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் புதிதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி மாறன் மீது, சி.பி.ஐ., விசாரணை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்
    காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அந்த காலத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    குற்றச்சாட்டு என்ன : தயாநிதி மாறன், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் தயாநிதி மாறன், காலதாமதம் ஏற்படுத்தினார். ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், சன் டைரக்ட் கம்பெனியில், 599.01 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, டெகல்கா ஆங்கில வார இதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார் வெளிவந்ததும், தயாநிதி மாறன் இதை மறுத்தார். இது தொடர்பாக, "மானநஷ்ட வழக்கு தொடர, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும்' தெரிவித்தார்

    தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்திவந்த, சிவா குழும சேர்மன் சி.சிவசங்கரன், கடந்த மாதம் மத்தியில், சி.பி.ஐ., வசம் அளித்த புகாரில், "தான் நடத்தி வந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை, விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு தயாநிதி மாறன் தான் காரணம்' என, குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தனது நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்க தாமதம் செய்து வந்த தயாநிதி மாறன், வெளிநாட்டு கம்பெனிக்கு விற்றதும், அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கீடு அளித்தார் என குற்றம்சாட்டியுள்ளார். சிவசங்கரனின் புகார் குறித்து முழுமையான வாக்குமூலத்தை பெற, அடுத்த வாரம் அவரிடம் சி.பி.ஐ., நேரடியாக விசாரிக்க இருக்கிறது. அதன் அடிப்படையில், தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என தெரிகிறது.

    பொது நல மனு: இந்நிலையில், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, பொது நல மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பிரபல வக்கீலும், லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு சாதகமாக தயாநிதி மாறன் செயல்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதார, ஆவணங்கள் உள்ளன. சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. தயாநிதி மாறன், ஏர்செல் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தினார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்தன. அதே ஆண்டு, மே மாதம், மலேசியாவின் மேக்சிஸ் கம்பெனி, ஏர்செல்லின் 74 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு கைமாறியபோது, ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழங்கப்பட்டது. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், ரூ.599.01 கோடி முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டி டி எச்' நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம்.இது குறித்து வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


    மறுப்பு: இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. உண்மையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

    செல்போன்களால் கேன்சர் அபாயம் உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

    A World Health Organization panel has concluded that cell phones are "possibly carcinogenic,'' putting the popular devices in the same category as certain dry cleaning chemicals and pesticides, as a potential threat to human health.

    A panel representative also noted that using a hands-free during a conversation or communicating via text message would be options for lowering radio frequency exposure.
    Here are some tips to reduce exposure to mobile radiations:

    • Use a wired headset to minimise the waves hitting you
    • Talk on a speakerphone whenever possible
    • Don't wear Bluetooth continuously
    • Avoid using phone in enclosed areas
    • Hold phone little away while talking
    • Send text messages
    செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
    இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

    பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் : செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

    கதிர்வீச்சு அபாயம் : செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

    சாய்பாபா அறையில் என்ன தான் இருக்கிறது? நீடிக்கும் ரகசியம்

    சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் உள்ள அவரது தனி அறையான யஜூர் மந்திரில் என்ன இருக்கிறது என்பது மர்மமாக உள்ளது.

    சத்ய சாய்பாபா கடந்த மார்ச் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது தனி அறையான யஜூர் மந்திர் பூட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சாய்பாபா இறந்தார். இந்நாள் வரை சாய்பாபாவின் அறை திறக்கப்படவில்லை. அதன் சாவி தற்போது சாய் அறக்கட்டளை செயலர் சக்ரவர்த்தியிடம் உள்ளது.

    இதற்கிடையே யஜூர் மந்திரில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த விலை மதிக்கமுடியாத பொருட்கள், கணக்கிலடங்கா பணம் மற்றும் நகைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

    சாய்பாபாவுக்கு நினைவிடம் கட்டுவதற்காக பிரசாந்தி நிலையத்தை 6 வார காலம் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எப்பொழுது மந்திரைத் திறப்பது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை அனுமதிப்பது தொடர்பாக நேற்று அறக்கட்டளை உறுப்பினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் வராததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    யஜூர் மந்திரில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாய் உள்ளனர். அதனால் யஜூர் மந்திரைத் திறக்குமாறு உள்ளூர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சாய்பாபாவின் தனி அறையை முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நாகி ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ரோட்டில் அனாதையாக்கப்படும் சொகுசு கார்கள்

    திருட்டு கார்கள் இறக்குமதி தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கோடிக்கணக்கான மதிப்புடைய இரண்டு சொகுசு கார்கள் டெல்லியில் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்து திருட்டு கார்களை இறக்குமதி செய்து விற்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துத்துள்ளது. இந்த நூதன மோசடியில் மூளையாக செயல்பட்டு தலைமறைவான சுமித் வாலியா என்பவனை சமீபத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை(டி.பி.ஐ.)அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கார்களை வரி ஏய்ப்பு செய்வதற்கு இந்தியாவுக்கான வியட்நாம் மற்றும் வடகொரிய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும், பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளான்.

    பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு சுமி்த் வாலியாவிடம் சொகுசு கார்களை வாங்கிய தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் தற்போது நடுக்கத்தில் உள்ளனர்.

    சுமித் வாலியா எங்கே நமது பெயரையும் கூறியிருப்பானோ என்ற அச்சத்தில் உள்ள பிரபலங்கள் தற்போது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகட்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதனால், உஷாரான சிலர் கோடிக்கணக்கான மதிப்புடைய கார்களை ரோட்டில் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடும் சம்பவங்கள் அரங்கேற துவங்கியுள்ளன.

    டெல்லியில் உள்ள பரபரப்பு மிகுந்த சாலையின் ஓரத்தில் பல கோடி மதிப்புடைய அஸ்டன் மார்ட்டின் மற்றும் பென்ட்லீ கார்களை அதன் உரிமையாளர்கள் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். இந்த கார்களை சமீபத்தில் டி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இந்த கார்கள் சுமித் வாலியாவிடமிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இறக்குமதி வரி கட்டாமல் சொகுசு கார்களை வாங்கிய பல கோடீஸ்வரர்கள் தங்களது கார்களை இதேபோன்று அனாதையாக நிறுத்திவிட்டு தப்பிஓடும் சம்பவங்கள் வரிசையாக அரங்கேறும் என கூறப்படுகிறது.

    இப்படியும் ஒரு போட்டி- ஜிம்பாப்வேயின் மிஸ்டர் அவலட்சண ஆணழகனாக ஆஸ்டின் பேவே

     

    Zimbabwe’s Austin Mbewe bagged the country’s ugliest man award at a fun filled event in the Pagomo Heights Leisure Centre in Beitbridge. He beat eight other men in a nationwide contest for the Mr Ugly title after all women judges crowned him the most ugliest.


    30-year-old Mbewe hails from Zimbabwe’s second largest city of Bulawayo. He also received a blanket and a cash prize of 1,200 Zimbabwean dollar. Hundreds of people, some of whom came from as far as Bulawayo and Harare, attended the special event.


    Harare-based dance group Girls La Musica added colour to the event. The venue was filled with long winding queues of cars along the road to Pagomo Heights, reported a website.  Initially, 15 men were expected to battle it out, but six of them later backed out. The event, held for the third consecutive year, was organised in collaboration with the National Arts Council and the Zimbabwe Tourism Authority. 


    ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆஸ்டின் பேவே, அந்த நாட்டின் அவலட்சண ஆணழகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னுடன் போட்டி போட்ட 8 'அழகர்களைத்' தோற்கடித்து மிஸ்டர் அவலட்சண ஆணழகன் பட்டத்தை வென்றார்.

    கடந்த சனிக்கிழமை வேடிக்கை வினோதம் நிறைந்த மிஸ்டர் அவலட்சண ஆணழகன் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள பெய்ட்பிரிட்ஜில் நடந்தது. இதில் முதலில் 15 பேர் கலந்து கொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் 6 பேர் பி்ன்வாங்கியதால் இறுதியில் 9 பேர் கலந்து கொண்டனர்.

    அந்நாட்டின் கலைபண்பாட்டு கவுன்சில் மற்றும் சுற்றுலா துறையும் இணைந்து இந்த போட்டியை நடத்தின. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த போட்டியைக் காண நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். நாட்டின் தொலைதூர நகரங்களான புலாவாயோ, ஹராரேவில் இருந்தும் கூட மக்கள் வந்திருந்தனர். இந்த போட்டியின் நடுவர்கள் அனைவரும் பெண்கள்.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட 30 வயது இளைஞர் ஆஸ்டின் பேவே மிஸ்டர் அவலட்சண ஆணழகன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு சால்வையும், ரூ. 8 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    பெய்ட்பிரிட்ஜைச் சேர்ந்த குதக்வாஷே சிரம்பா(45) இரண்டாவது இடத்தையும், மாஸ்விங்கோவைச் சேர்ந்த சிடோவா செழிரா(39) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கும் சால்வையும் ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    16 வருட போராட்டத்திற்குப் பின் பிளஸ்டூ பாஸ் செய்த ஒரிஸா அமைச்சர்

    16 வருடத்திற்கு முன்பு பிளஸ்டூவில் பெயிலான ஒரிசா அமைச்சர் ஒருவர் கடும் போராட்டத்திற்குப் பின்னர் தற்போது பாஸாகி பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். மேல் படிப்பு' தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஒரிசா மாநில பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரமேஷ் சந்திர மாஜி வெற்றிகரமாக பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளார் ரமேஷ் சந்திர மாஜி. அவர் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதினார். அதில் 600-க்கு 376 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் பூங்கொத்துகள் மற்றும் இனிப்பு கொடுத்து அமைச்சரை வாழ்த்தினர்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...