|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 December, 2011

குடும்ப அட்டை புதுப்பித்தல்...


 புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேல் பகுதியில் 2012 என முத்திரையிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும், ஓராண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேற்பகுதியில் “2012” என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

புது உத்தரவு குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர் நீக்கல், எரிவாயு சிலிண்டர் விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி ஜனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே , குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்கச் செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய்மொழியாக தெரிவித்தால் போதுமானது. 

கையெப்பம் அல்லது கைரேகை அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012 ஆம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் இட, இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால்தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும்.

சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள்...


பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய ஆப்ரிகாட் பழங்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிற பழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.

தோல்நோய்களை நீக்கும் இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப்பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்த வல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

நரம்புகளை வலுப்படுத்தும் பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல். என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சிலவகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கண்பார்வை தெளிவாகும் வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப் படுத்துகிறது. தினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும் கட்டுப்படுத்தப்படும். மலைவாழைப்பழம்-1, ஆப்ரிகாட்-4 ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தயிர்-அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, இரவில் படுக்கும்பொழுது சாப்பிட்டுவர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும்.

அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து!

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.

குறையும் உயிரணுக்கள் இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது. இதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.

டிரான்ஸ் பேட் கொழுப்பு தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எச்சரிக்கை இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை

ஜப்பான் பிரதமருடன் விருந்தில் பங்கேற்ற தனுஷ்!


டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமர் இல்லத்தில் நேற்று நடந்த சிறப்பு விருந்தில் பங்கேற்றார் நடிகர் தனுஷ்.இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சிறப்பு விருந்து அளித்தார். இதுபோன்ற விருந்துகளில் நாட்டின் முக்கிய பிரபலங்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 'கொலவெறி டி' என்ற பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த தனுஷுக்கு, பிரதமர் இல்லத்தில் நடைபெறும் விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பாடல் ஜப்பான் முழுவதும் இரவு விடுதிகளிலும், டிஸ்கொதே கிளப்புகளிலும் பாடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் மாமனார் ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ஏற்கனவே நிறைய ரசிகர்கள் உண்டு. ரஜினியின் முத்து படம்தான் ஜப்பானில் முதன்முறையாக ஜப்பானிய மொழியிலேயே சப் டைட்டிலுடன் வெளியானது. இப்போது தனுஷின் பாடல் புகழ்பெற்றுள்ளது.ஜப்பானி பிரதமருக்கு அவரை அறிமுகப்படுத்தும் விதத்திலும் இந்த விருந்து அமைந்தது. தனுஷின் கொலவெறி பாடல் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிய வண்ணம் உள்ளது. பாகிஸ்தானிலும் இந்த பாடல் 'Where is Democracy?' என்ற பெயரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமருடன் விருந்து உண்ட அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாதது என தனுஷ்

2020ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிற்கு 5 வது இடம் ஆய்வில்.


2020 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் உலகின் முதல் 10 உலக நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்திற்கு வந்துவிடும் என்று பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இயங்கி வரும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம், உலகின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலை செவ்வாய்கிழமையன்று வெளியிட்டது.அதில் இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சியில், இங்கிலாந்தினை, பிரேசில் முந்திவிட்டது எனவும் ஆறாவது இடத்தில் இருந்த இங்கிலாந்தினை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை பிரேசில் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வரிசையில் இந்தியா தற்போது 10 இடத்தை பிடித்துள்ளது.

2020 ல் இந்தியா மேலும், இந்தாண்டில் 10வது இடத்திலுள்ள இந்தியா, 2020ல், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யூரோ மண்டல பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டால், அம்மண்டலப் பொருளாதாரம், 0.6 சதவீதம் மட்டுமே சுருங்கும் எனவும், பிரச்னை தீராவிட்டால், பொருளாதாரச் சுருக்கம், 2 சதவிகிதம் அளவிற்கு இருக்கலாம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மையத்தின் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ், வருங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே செல்லும் எனவும், ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிய வருவதாக, கூறியுள்ளார்.

தமிழ் வீரனுக்கு கட்டுப்பாடு 77 நிபந்தனைகள் 4 காளைகளை மட்டுமே அடக்கலாம்!


உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மதுரை மற்றும் சுற்று வட்டார மக்கள் தயாராகி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகளை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் அறிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளுக்கு மாடு பிடி வீரர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றவையாகும்.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. இடைக்கால நிவாரணமாக பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 77 நிபந்தனைகளை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் இன்று அறிவித்தார்.

நிபந்தனைகள் மிகக் கடுமையாகவே உள்ளன. அவற்றில் சில...
- ஜல்லிக்கட்டு நடத்துவோர் ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.
- புளூகிராசில் சான்றிதழ் வாங்க வேண்டும்.
- 4 காளைகளுக்கு மேல் ஒரு வீரர் அடக்கக் கூடாது.
- ஒரே நேரத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்துவிடக் கூடாது.
- கொம்புகள் கூர்மையாக இருந்தால் மரக்கவசம் அணிய வேண்டும்
- போதை வஸ்துகளை காளைகளுக்கு கொடுக்கக் கூடாது
- காளையை அடக்கும் வீரர்கள் வருவாய் துறையினரிடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
- மாடு பிடி வீரர்கள் மதுபானங்கள் அருந்திருக்கக் கூடாது
- மைதானத்தில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், மருத்துவக் குழு இருக்க வேண்டும்
- வீரர்கள் அனைவரும் சீருடை அணிந்திருக்க வேண்டும்
- போட்டிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
- குடிநீர் வசதி, பார்வையாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்ய வேண்டும்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மாடு பிடிவீரர்கள் இந்த நிபந்தனைகள் மிகக் கடுமையானவை.மேலும் பல கிராமங்களில் இந்த நிபந்தனைகளில் உள்ள பல அம்சங்களைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே இவற்றைப் பூர்த்தி செய்வது மிகக் கடினமானது என்று கூறியுள்ளனர்.

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் அமெரிக்காவுக்கு ஈரான்!


ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால், அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அடைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த, அந் நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.


இந் நிலையில் அந்த நாட்டின் எண்ணெய்யை வாங்குவதை தடை செய்யவும் ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. இதற்காக அந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது, ஈரானின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவது போன்ற திட்டங்களை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் முன் வைத்துள்ளன. உலகில், ரஷ்யா, செளதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஈரானின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்துள்ளது. இப்போது இதையே முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பதிலடிக்கு ஈரான் தயாராகி வருகிறது.

செளதி உள்பட வளைகுடாவில் உள்ள நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் Strait of Hormuz வழியாகத் தான் வெளியுலகை அடைந்தாக வேண்டும். செளதி-ஐக்கிய அரபு நாடுகள்-ஈரானுக்கு இடையே உள்ள இந்த கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. மேலும் இந்தப் பகுதியில் ஈரான் கடற்படை போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இந்தப் பாதை வழியாகவே உலகில் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் மொத்த கச்சா எண்ணெயில் 5ல் 1 பங்கு பயணித்தாக வேண்டும் என்ற நிலையில் இந்தப் பாதையை ஈரான் மூடினால், இந்தியா உள்பட உலகெங்கும் பெரும் பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்படும். இந் நிலையில், இந்தப் பாதையை மூடினால் கடும் விளைவுகள் ஏற்படும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...