|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

இறந்த பி்ச்சைக்கார மூதாட்டியின் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சம்


நெல்லை சந்திப்பில் இறந்து கிடந்த பிச்சைக்கார மூதாட்டியின் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சம் இருப்பதாக வெளியான தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலைய 2வது பிளாட்பாரத்தில் 65 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். சந்திப்பு இன்ஸ்பெக்டர்கள் கோமதி, ரேனியல் ஜேசுபாதம் ஆகியோர் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் பையில் 4 பிளாஸ்டிக் டப்பாக்களும், கொஞ்சம் சில்லரைகளுமே இருந்த நிலையில் அவரது பெயர் யாருக்குமே தெரியவில்லை. ஆனால் போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் வெளியாகின. இறந்த மூதாட்டியின் சொந்த ஊர் கல்லிடைக்குற்ச்சி. அங்குள்ள அஹ்ரகார தெருவில் இருந்து வெளியேறிய அவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் சில மாதங்களாகவே பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் பிச்சயெடுத்த பணத்தை தேசியமாக்கப்பட்ட வங்கியில் வைத்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் சுமார் ரூ.7 லட்சம் வரை உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிலத்திலும், நீரிலும் செல்லும் கார்...

நிலத்திலும், நீரிலும் செல்லும் அதிசய பேட்டரி காரை தஞ்சாவூர் பிரிஸ்ட் எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியில் இயங்கும் கார்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பல முன்னணி கார் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள பிரிஸ்ட் பல்கலைகழகத்தில் பயிலும் இறுதியாண்டு எஞ்சினியரிங் மாணவர்கள் 7 பேர் கொண்ட குழு புதிய பேட்டரி காரை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய பேட்டரி கார் நிலத்திலும், நீரிலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடியிலுள்ள ஹைடெக் புராஜெக்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் முரளி மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி இந்த புதிய காரை பிரிஸ்ட் பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.


இ-கார்போ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கார் நிலத்தில் 30 கிமீ வேகத்திலும், நீரில் 15 கிமீ வேகத்திலும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் சூரிய சக்தி மின்சாரத்தை சேமித்து இயங்கும் என்பதால் இரவில் கூட இதில் பயணம் செய்ய முடியும் என்கின்றனர் இந்த காரை வடிவமைத்த மாணவர்கள். மேலும், சுற்றுச்சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாது என்று கூறிய அவர்கள் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டு இந்த காரை வடிவமைத்ததாக தெரிவித்தனர். வெறும் ரூ.35,000 செலவில் இந்த காரை உருவாக்கியுள்ளதாக மாணவர்கள் கூறினர்.



நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனுசாமி முன்னிலையில் இந்த காரை புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே மாணவர்கள் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பித்தனர். அப்போது, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு குழுமியிருந்தனர். நிலத்தில் சிறிது தூரம் சென்ற அந்த கார் திடீரென நீரிலும் இறங்கி படகு போன்று மிதந்து சென்ற அந்த காரை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். வெறும் 35,000 ரூபாயில் இந்த காரை வடிவமைத்து சாதனை புரிந்துள்ள இந்த மாணவர்களின் சாதனையை ஆட்சியர் முனுசாமி, மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

உப்பு கலந்த நொறுக்குத்தீனி இதயத்தை பாதிக்கும்!

அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் இந்த ஆய்வினை மேற்கொண்டது.

ரத்த நாளங்கள் பாதிப்பு டிக்கின்சன் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 16 ஆரோக்கியமான நபர்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 நபர்களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப்படுத்தப்பட்ட தக்காளி சூப் 10 முறை வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட நொறுக்குத்தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இதய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தது.

அதிக உப்பு ஆபத்து இதே ஆய்வு மீதமுள்ள 8 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஓட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன்படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது. எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

மேலும், உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸைடை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது. இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. நம் ஊரில் நிறைய பேர் ஊறுகாயும், அப்பளமும்தான் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நடிகை ஷ்ரியாவின் அறை நிர்வாணம்...







வாக்களிப்பதை கட்டாயமாக்க அத்வானி வலியுறுத்தல்.

தேர்தல் சீரமைப்பு தொடர்பாக தற்போது விவாதம் நடந்துவரும் நிலையில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார். இதை நிறைவேற்றுவது ஒன்றும் முடியாத காரியம் அல்ல என்று அவர் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களையும் வாக்காளர்களாக தேர்தல் ஆணையம் பதிவுசெய்யும் திட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். அதே சமயம், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர். கல்வி என்பது இப்போது அடிப்படை உரிமையாகியுள்ள நிலையில், வாக்களிப்பதை குடிமக்களின் அடிப்படை பொறுப்பாக்க வேண்டும் என அத்வானி கூறினார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மாதவன் நாயர்...


மிகவும் குறைந்த விலைக்கு, "எஸ்-பாண்டு' அலைக்கற்றைகள் ஒதுக்கியதில், முறைகேடு குறித்தான புகாரின் அடிப்படையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அரசு பதவி, குழுத் தலைவர் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. "இது முழுக்க முழுக்க இஸ்ரோ தலைவரின் சர்வாதிகாரப் போக்கு; இதை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்வேன்' என, மாதவன் நாயர் ஆவேசப்பட்டார்.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) தயாரித்து பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி பெருமை பெற்ற அமைப்பு. அலைக்கற்றைகள் (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் இதன் வர்த்தக அங்கமான ஆன்டிரிக்ஸ் நிறுவனம், தன்னிடம் உள்ள இரு செயற்கைக்கோள்களின் 70 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகளை, தேவாஸ் மல்டி மீடியாவுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்தது. அப்போது, இஸ்ரோவின் தலைவராக மாதவன் நாயர் பதவி வகித்தார். ஸ்பெக்ட்ரம் "எஸ்-பாண்ட்' வழங்கும் ஒப்பந்தம், 2005ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி கையெழுத்தானது. ஆனால், இதை விட குறைவாக, அதாவது 20 மெகாஹெட்ஸ் அலைக்கற்றைகள், பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய தொலைபேசி நிறுவனங்களுக்கு 12 ஆயிரத்து 847 கோடி ரூபாய்க்கு இதே நிறுவனம் ஒதுக்கீடு செய்தது. இதனால், தேவாஸ் நிறுவனத்திற்கு இஸ்ரோ ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தான் பிரச்னையை கிளப்பியது.

இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, தேவாஸ் நிறுவனத்துடன் இஸ்ரோ செய்து கொண்ட ஒப்பந்தத்தை, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. காரணம், "எஸ்-பாண்ட்' அலைக்கற்றைகள் செயற்கைக்கோள் மூலம், "மொபைல் டிவி' ஒளிபரப்பு உட்பட அதிநவீன திட்டங்களுக்கு உதவும் அரிய வகை சாதனம் ஆகும். இதுகுறித்து, மத்திய அமைச்சரவைக்கு இஸ்ரோ அளித்த அறிக்கை சரியானதா என்பது குறித்து அறிய, கடந்தாண்டு மே மாதம் 31ம் தேதி, பிரதமர் மன்மோகன் சிங், ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்தார்.

ஒழுங்கு நடவடிக்கை: இக்குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. இந்நிலையில், இக்குழு அளித்துள்ள பரிந்துரையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், இந்நிறுவன முன்னாள் அறிவியல் துறைச் செயலர் பாஸ்கர நாராயணா, ஆன்டிரிக்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.ஸ்ரீதரமூர்த்தி, இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குனர் கே.என்.சங்கரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அரசு பதவிக்கு தடை: இதையடுத்து, நேற்று மத்திய அரசு, இந்த நால்வரும் வருங்காலத்தில் அரசு பதவியையோ, குழு, கமிட்டி போன்ற எந்த அமைப்பு பதவியையும் வகிக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மத்திய அரசு உயரதிகாரிகளுக்கும், மாநில தலைமை மற்றும் உள்துறைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இஸ்ரோவின் ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டி மீடியா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை குறித்து, இன்னும் ஓரிரு நாளில் மத்திய விண்வெளித் துறையிடம் இருந்து அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்ததில் பிடித்தது!



Sundar Vadivel: திண்டிவனம் கீரை வியாபாரியோட காத்தடிகளின் கவனத்திற்கு :ஜாதி கட்சியை வச்சிக்கிட்டு ஆட்சியை புடிக்கிறேன் என்று தமாஸ் பண்றது,ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு பிச்சை எடுக்குறது, போதிதர்மன் என்று காமெடி பண்றது,சட்டசபை தேர்தலில் ஊருக்கு நாலு லட்ச வோட்டு வச்சி இருக்கேன்னு சொல்லிட்டு முனு சீட் வாங்கினது,மேட்டூரில் பெல் தோற்றது, உள்ளாட்சி தேர்தலில் செருப்படி வாங்கினது,கொலை குற்றத்திற்கு சிபிஐ கைது செய்யுறது என்று உங்க பொழப்பு நாறி இருக்கு .....இந்த லட்சணத்தில் மிரட்டல் அது இதுன்னு கோபம் வர மாதிரி காமெடி செய்வதை நிப்பாட்டுங்க ..இப்படி ஒரு பொழப்பு பிழைக்கும் உங்களுக்கு மட்டும் தான் ஜாதி பின்பலம் இருக்கா மற்றவர்கள் என்ன சூப்பா....எனக்கு அசிங்கமா இருக்கு இப்படி பேசுறதுக்கு கூட..எனது நட்பு வட்டத்தில் இனியும் இந்த மாதிரி ஜாதி பிடிப்பு ஆசாமிகள் இருந்தால் நீங்களா விலகிடுங்க ('அது யாராக இருந்தாலும் சரி').....உங்களின் ஜாதி உணர்வை உங்களோட விருப்பமான இடத்தில காட்டி இருந்தால் கண்டிப்பாக நான் நீக்க போறேன்...



சந்திரமுகி MOVIE ONLINE...


The Metro - 2011 Malayalam Movie


வேட்டை MOVIE SONG


மூன்று கொள்ளையர்களின் படத்தை வெளியிட்டனர்.


வங்கியில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களை கொண்டு பல மணிநேர முயற்சிக்கு பின் வரையப்பட்ட மூன்று கொள்ளையர்களின் படத்தை போலீசார் நேற்று வெளியிட்டனர். ஒட்டப்பட்டன. சென்னை பெருங்குடி வங்கி கொள்ளை சம்பவத்தை பார்த்த பரோடா வங்கி ஊழியர்களை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அவர்கள் கூறிய முக அடையாளங்களை கொண்டு கிராபிக்ஸ் முறையில் படம் வரையப்பட்டது. இந்த படங்களை பார்த்த வங்கி ஊழியர்கள் கொள்ளையர்களின் முகம் இப்படித்தான் இருந்தது என ஊர்ஜிதம் செய்தனர். அந்த படம் நூற்றுக்கணக்கான பிரதியெடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷங்கள் ஆகிய இடங்களிலும் ஒட்டப்பட்டன. விசாரணை தீவிரம் பரோடா வங்கி கிளையில், 3,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வங்கி ஊழியர்களுக்கு சமைத்து கொடுப்பவர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பல நாட்களாக திட்டமிட்டு நடந்துள்ள, இந்த கொள்ளையில் எந்த துப்பும் கிடைக்காததால், வடமாநில வாடிக்கையாளர்களை தனிப்படை தீவிர விசாரணை நடத்திவருகிறது. வங்கியை சுற்றியுள்ள பகுதி மற்றும் ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமான பணிக்காக வந்திருந்த வெளிமாநிலத்தவர்கள் என, சல்லடை போட்டு சலித்து வருகின்றனர்.பொதுமக்கள் உதவிநேற்று மாலை துரைப்பாக்கம் உதவிகமிஷனர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசிங் ஆகியோர் முன்னிலையில் பெருங்குடியில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. 

இதில், ராஜிவ்காந்தி சாலையில் உள்ள வாடகைக்களுக்கு வீடுகளை விடும் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், வடமாநில வேலையாட்களை பணிக்கு அமர்த்தும் கான்டிராக்டர்கள் மற்றும் வீட்டு புரோக்கர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் கொள்ளையர்களின் மாதிரி புகைப்படம் வழங்கப்பட்டது. அந்த பகுதியில் வசித்து திடீர் என மாயமானவர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். நம்பகமான தகவல் : ராஜிவ்காந்தி சாலையில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு 2100 வெளிமாநிலத்தினர் வேலை செய்கின்றனர். அவர்களில் நான்குபேர் கடந்த 18 ம் தேதி முதல் முன் அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தனி மொபைல் எண் அறிவிப்பு : வங்கி கொள்ளை வழக்கில், கொள்ளையர்கள் குறித்து பொதுமக்கள் மொபைல் எண் 98842 03821 ல் தகவல்களை தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். போலீசார் வெளியிட்ட அறிக்கை: பெருங்குடி பேங்க் ஆப் பரோடா வங்கி கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்த தகவல்களை, 98842 03821 என்ற மொபைல் எண்ணில், 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். பொறுப்புள்ள காவல் அதிகாரி தகவலை பெற்றுக் கொள்வார். தகவல் அளிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். விவரம் ரகசியமாக வைக்கப்படும். 

இதே நாள்...


  •  உலக சுங்கத்துறை தினம்
  •  இந்திய குடியரசு தினம்(1950)
  •  உகாண்டா விடுதலை தினம்
  •  இந்தி, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது(1965)
  •  இஸ்ரேலும், எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன(1980)

தேதி சொன்னால் கிழமையை சொல்லும் மாற்றுத் திறனாளி சிறுமி!


கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி என்ன கிழமை என்று கேட்டால், "புதன் கிழமை' என்று பளிச்சென்று சொல்லி, திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார்.கடந்தாண்டு மே மாதம் 4ம் தேதி, என்ன கிழமை என்று கேட்டால், நாம் அனைவரும் காலண்டரை புரட்டுவோம் அல்லது மொபைல் போனில் உள்ள காலண்டரை பார்ப்போம். ஆனால், திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி பிரியங்காவிடம், 2010, 2011, 2012, 2013 ஆகிய நான்கு ஆண்டுகளில் மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டால், சரியான கிழமைகளைச் சொல்லி அசத்துகிறார். திருச்சி, தீரன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 47; சென்னையில், செக்யூரிட்டி கார்டாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பானு; உறையூர் சிவாலயா பாலானந்தா பள்ளியில் சிறப்பு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும், "கேர் டேக்கராக' வேலை பார்க்கிறார். இவர்களது மகள் பிரியங்கா, 11. புத்தூர் நால்ரோட்டில் உள்ள ஆல்-சைன்ட்ஸ் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

பிரியங்காவுக்கு, மற்ற குழந்தைகளை காட்டிலும் தனித்திறன் உள்ளது. பிரியங்கா பிறக்கும்போது, மாறுகண் ஏற்பட்டது. இடது கை செயல்படவில்லை. இடது கால் வளர்ச்சி குன்றி காணப்பட்டது. அவர் வளர்ந்த பிறகு சற்று திக்கி... திக்கித் தான் பேசினார். மனம் தளராத தாய் பானு, குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி இரவு 11 மணிக்கு அவரது தாய் பானு, "ஆகஸ்ட் 13ம் தேதி "லீவு' போடணும். "லீவு' கிடைக்குதா? என்னானு தெரியலை' என்று புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது, பிரியங்கா, "ஆகஸ்ட் 13ம் தேதி சனிக்கிழமை உனக்கு "லீவு' தானே அம்மா?' என்று சாதாரணமாக கூறியுள்ளார். இதைக் கேட்ட பானு, காலண்டரை புரட்டி பார்த்து, ஆச்சர்யமானார். சிறுமி சொன்னது சரியாக இருந்தது. பிரியங்காவுக்கு இப்படி ஒரு, "சூப்பர் பவர்' இருப்பது, கடந்தாண்டு ஜூலை 10ம் தேதி தான் தெரியும். 2010, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் எந்த மாதம், தேதியை குறிப்பிட்டு கேட்டாலும் சரியாக கிழமையை சொல்லிவிடுவாள். அதேபோல், குறிப்பிட்ட மாதத்தில் எந்தெந்த தேதியில் எத்தனை முறை ஒரே கிழமை வருகிறது என்று கேட்டாலும் சரியாக சொல்லிவிடுவாள். ஆறு வயதுக்கு மேல் தான் நடக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் தான் காலில் ஆபரேஷன் செய்தோம். தற்போது ஓரளவு காலை ஊன்றி நடக்கிறாள். கை தான் இன்னும் சரியாகவில்லை. இவ்வாறு தாய்  பானு 

குடியரசு... அப்படின்னா?


உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.

குடியரசு என்பதன் நேரடிப் பொருள், "மக்களாட்சி'. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கின்றனர். குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறைதான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

எப்படி வந்தது குடியரசு: நாடு சுதந்திரம் பெறும் முன், பல சுதந்திர போராட்ட தலைவர்களும் ஆங்கிலேயரிடம் இருந்து "டொமினியன்' அந்தஸ்து பெற்றால் போதும் என எண்ணினர். டொமினியன் அந்தஸ்து என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என சுதந்திர போராட்ட தலைவர்களிடம் மாற்றம் வந்தது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.

அடிப்படை கடமைகள்: இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 5ல் மக்களின் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

* தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்
* அனைவரும் நாட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
* ஜாதி, மதம், இன பாகுபாடின்றி சகோதர மனப்பான்மையோடு ஒன்றாக பழக வேண்டும்.
* பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்.
* இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
* வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், அறிவியல் மற்றும் மனிதாபிமான உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
* அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
* 6-14 வயது குழந்தைகள் கல்வி பெறுவது அவசியம். 

மேலே இருக்கும் எதாவது நாம் பின் பற்றுகிறோமா ? இல்லை நமது தலைவர்கள் ?  இதில் நாம் 63 குடியரசு தினத்தில் இருக்கிறோம் நம்கண் முன்னே தெருவோரம் எத்தனையோ குழந்தைகள் பிச்சை எடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் அரசு சொத்துக்களை சுரண்டாத அரசியல்வாதி யாராவது ஒருவர்? பக்கத்து நாட்டில் அழிந்த சொந்தைங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசாங்கம், இன்னும் தீர்வை ஏற்படுத்தாத முல்லை பெரியார், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாத அரசாங்கம், இன்னும் இன்னும்...   மக்களாட்சி அடிமைப்பட்டு கிடக்குது தமிழினம்...   

தேனீக்களை போன்றே பறக்கும் விமானம்...


பறவைகள்   போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி விமானத்தை பறக்க வைப்பதில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வெற்றி கண்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிபவர் மண்டயம் ஸ்ரீனிவாசன். இந்தியரான ஸ்ரீநிவாசன், தேனீக்கள் போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் அதே உத்தியை பயன்படுத்தி விமானங்களை பறக்க வைக்கும் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். இப்பொழுது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளார். தற்சமயம் விமானங்கள் ஒரு இலக்கில் இருந்து மற்றொரு இலக்கிற்கு ஜிபிஎஸ் உதவியுடன்தான் பயணிக்கின்றன. குறிப்பாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆளில்லா ஆயுதம் தாங்கி விமானங்கள் இந்த சேவையுடன்தான் குறிப்பிட்ட இலக்கிற்கு பயணித்து எதிரிகளை தாக்குகின்றனர். ஆனால் இந்த சேவை 100 சதவிகிதம் துல்லியமாக இருப்பது இல்லை. மேலும் மிகப் பெரிய கட்டிடங்களுக்கு நடுவில் பறந்து செல்ல இயலாது. ஆனால் மண்டயம் ஸ்ரீனிவாசன் இந்த விமானம் கேமரா மற்றும் கணினி உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மண்டயம் ஸ்ரீனிவாசன் கூறுகையில், தேனீக்கள் போன்ற சிறு பூச்சி இனங்கள் பற்றி இன்னும் நாம் மிக முழுமையாக தெரிந்து கொள்ள வில்லை. இந்த பூசிகள் தங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் பறந்து சென்று வேண்டிய உணவை சேகரித்து பின்பு தங்கள் இருப்பிடத்தை மிக சரியாக வந்தடைய இவைகள் பயன்படுத்துவது இரு கண்கள் மற்றும் கடுகளவு மூளை. இதே முறையை பயன் படுத்தி சிறு விமானம் ஒன்றில் இரு காமெராக்கள் பொருத்தப்பட்டு, மூளை போன்று இயங்கும் சிறு கணிப்பொறிஉடன் இணைக்கப்பட்டுள்ளது. விமானம் பறக்க தொடங்கயுடன் கணினியுடன் இணைக்கப்பட்ட இரு காமெராக்கள் மூலம் தென்படும் காட்சிளை வைத்து விமானம் எங்கும் மோதாமல் பாதுகாப்பாக பறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டத்தில் விமானம் மிக சிறப்பாக இயங்கி பத்திரமாக தரை இறங்கியது.

ஆரத்தி தட்டில் காணிக்கை வசூலிக்க கோர்ட்டு தடை...

அந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராகு, கேது பூஜை மற்றும் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாளகஸ்தியை சேர்ந்த வேணுகோபால் நாயுடு, பிரசாத் பாபு ஆகிய 2 பேரும் சாமி தரிசனம் செய்ய சிவன் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் கோவிலுக்குள் சென்று, ராகு, கேது பூஜை மற்றும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அர்ச்சகர்கள் ஆரத்தி தட்டை காண்பித்து காணிக்கை போடுமாறு இவர்களிடமும் மற்ற பக்தர்களிடமும் கேட்டனர். இவ்வாறு காணிக்கை வசூலிப்பதை எதிர்த்து, வேணுகோபால் நாயுடு, பிரசாத்பாபு ஆகியோர் ஸ்ரீகாளகஸ்தி குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை மாஜிஸ்திரேட்டு சுப்பாரெட்டி விசாரித்து வந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் அர்ச்சகர்கள், ஆரத்தி தட்டை காண்பித்து பக்தர்களிடம் காணிக்கை வசூலிக்க இடைக்கால தடை விதித்தும், மேலும் இதுதொடர்பான உத்தரவை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கவும் மாஜிஸ்திரேட்டு சுப்பாரெட்டி உத்தரவிட்டார்.

டுவிட்டரில் நடிகை பூனம் பாண்டே...


டி.வி.க்கள் நடத்தும் தத்ரூபமான ஷோக்களில் நாயகியான இவர், இப்போது டுவிட்டரில் தலைகாட்டி உள்ளார்.   அவர் தனது டுவிட்டரில் வெள்ளை நிற பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாக காட்சி அளிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இப்படி ஆபாசமாக காட்சி அளிப்பதில், தனக்கு கவலையோ, தயக்கமோ கொஞ்சமும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் நுழைந்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். பூனம் பாண்டே என்ற நானும் டுவிட்டரில் உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மெகா மண்டலம் ...

சென்னை மாநகரின் அபரிமிதமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு 'மெகா' சென்னை மண்டலம் உருவாக்க அரசு பரிசீலித்து வருகிறது. நெரிசலில் சிக்கி சென்னை நகரம் விழிபிதுங்குவதால் புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி.ரோட்டில் செங்கல்பட்டு வரை மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை 7.7 சதவீதம் உயர்ந்துள்ளது.



ஆனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் மக்கள் தொகை 38.69 சதவீதமும் திருவள்ளூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 35.25 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் தென் மாவட்டகளில் இருந்து வேலைக்காக சென்னை வருபவர்கள் புறநகர் பகுதிகளில் குடியேறுகிறார்கள். அதே போல் ஆந்திரா, பீகார், மேகாலயா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு வேலைகளுக்காக தமிழ்நாட்டுக்கு வருபவர்களும் இங்கு தங்கி விடுகிறார்கள்.
 
ஆனால் இந்த பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றபடி வீடு, போக்குவரத்து, கழிவுநீர் வசதி, சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. புறநகர் பகுதிகளில் ஓரளவு விலைகுறைவாக வீட்டு மனைகள் கிடைத்ததால் இந்த பகுதிகளில் அதிக அளவில் மக்கள் குடியேறினார்கள். தற்போது வளர்ந்து வரும் மக்கள் தொகை இதே வேகத்தில் சென்றால் 2026-ல் சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1.26 கோடியாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். எனவே சென்னை மண்டல மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆணையம் உருவானதும் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு பகுதி, காஞ்சீபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதி, திருவள்ளூர் மாவட்டத்தின் வடக்கு பகுதி ஆகியவற்றை இணைத்து சென்னை மெகா மண்டலம் உருவாக்கப்படும்.
 
 தற்போது இந்த மாதிரியான அமைப்பு டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ளது. மெகா மண்டலம் உருவாகும் போது சென்னை 8 ஆயிரம் சதுர கிலோ மீட்டராக விரிவு படுத்தப் படும். டெல்லியின் பரப்பளவு 33,578 சதுர கிலோ மீட்டராகவும், மும்பை 4354 சதுர கிலோ மீட்டராகவும், பெங்களூர் 8005 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது.சென்னை மண்டல மேம்பாட்டு ஆணையம் உருவானதும், அந்த அந்த பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய திட்டங்களை செயல்படுத்தும். அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும். முற்றிலும் நகர மயமாக்காமல் விவசாய நில பகுதிகளில் விவசாயமும் மேம்படுத்தப்படும்.

ஒருதலைக்காதல் விபரீதம்...


சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் உள்ள கட்டிநாய்க்கன்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கண்ணன்-வயது 26.   இவர் மேட்டூர் அருகில் உள்ள கருமலைக்கூடலில் இரண்டு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.கண்ணனின் கடையிலிருந்து கோம்பூரான்காட்டுக்கு செல்லும் வழியில் உள்ளது புது சின்னக்காவூர் என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் குடியிருக்கும் செங்கல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளியான கோவிந்தன் என்பவரின் மகள் பிரபா வயது-19 .

பிரபா மேச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகம் படித்து வந்தார். கோவிந்தன் வேலைக்கு செல்லும் போது தனது (டி.வி.எஸ் எக்ஸ்.எல்) இருசக்கர வாகனத்தில் தனது மகள் பிரபாவையும் கூட்டிக்கொண்டு வருவார். மகளை பேருந்தில் ஏற்றிவிட்டு, கருமலைக்கூடலில் இருக்கும் கண்ணனின் கடையில் வண்டியை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வார் கோவிந்தன். மாலையில் கல்லூரி முடிந்துவரும் பிரபா தன்னுடைய தந்தையார் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார். இப்படி, பிரபாவும்-கண்ணனும் தினமும் சந்தித்துவரும் வேளையில் கண்ணனுக்கு பிரபாவின் மீது “காதல்” ஏற்பட்டுள்ளது. பிரபாவின் மீது இருக்கும் காதலை தெரிந்துகொண்ட கண்ணனின் பெற்றோர்கள் கண்ணனுக்கு தாங்கள் உறவுக்கார பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டனர்.

கண்ணனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டாலும், பிரபாவின் மீது இருந்த “காதல்” தீரவில்லை, அவ்வப்போது “நீ என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும்” என்று பிரபாவுக்கு “தூது” விட்டு வந்துள்ளார். ஆனால், கண்ணனின் தூதை பிரபா நிராகரித்து வந்துள்ளார். ஆனாலும், விடாமல் பின் தொடர்ந்து வந்து “காதல்” தொல்லை கொடுத்து வந்துள்ளார் கண்ணன். கண்ணனின் போக்கு சரியில்லை என்பதை அறிந்த கோவிந்தன்,  இப்போது கண்ணனின் கடையில் வண்டியை நிறுத்துவதை விட்டுவிட்டார். 

நேற்று முன்தினம், மாலை பிரபா கல்லூரியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, வழியில் நின்றுகொண்டிருந்த கண்ணன் என்னை “நீ” திருமணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையானால், உன்னுடைய அப்பா, அம்மா எல்லோரையும் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். “எனக்கும், உனக்கும் ஒத்து வராது”, “நீ உன்னுடைய வேலையை பார்”... இனி இப்படி பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தால், நான் உன்மீது போலீசில் புகார் கொடுக்கவேண்டிவரும் என்று பிரபா கண்ணனை எச்சரித்து விட்டு சென்று விட்டார். பிரபா வீட்டுக்கு சென்று தனது பெற்றோர்களிடம் கண்ணனின் காதல் தொல்லை பற்றி புகார் சொல்லியுள்ளார். பிரபாவின் உறவினர்கள் கண்ணின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து “இனி மேல் நீ மரியாதையாக இருந்துகொள்” இல்லையானால் போலீசில் அடிவாங்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர். “இனிமே நான் உங்கள் பெண்ணை பற்றி நினைக்க கூட மாட்டேன்” என்று சொல்லிவிட்டார் கண்ணன். ஆனால், கண்ணனுக்கு போன் வந்த கொஞ்ச நேரத்தில், பிரபாவின் அப்பா கோவிந்தன் தன்னுடைய (டி.வி.எஸ் எக்ஸ்.எல்) வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார்.கடையிலிருந்தபடியே கண்ணன் இதை கவனித்துள்ளான். கோவிந்தன் வேலைக்கு போனால் திரும்பவும் காலையில்தான் திரும்பி வருவார் என்பது கண்ணனுக்கு தெரியும். இப்போது பிரபாவின் வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்துகொண்ட கண்ணன். 

இரவு ஒன்பது மணிக்கு டாஸ்மாக்-கில் போய் ஒரு “ஆப்” பாட்டில் சரக்கு வாங்கி உள்ளே உற்றிக்கொண்டு பிரபாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.டாஸ்மாக் சரக்கை உள்ளே தள்ளியிருந்த கண்ணன், தனது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியுப்-பை பிடுங்கி, வெளியே வந்த பெட்ரோலை பிராந்தி பாட்டிலில் பிடித்து தன்னுடைய உடம்பெல்லாம் உற்றிக்கொண்டார், மீதி ஒருபாட்டிலிலும் பெட்ரோலை பிடித்துக்கொண்டு போய் பிரபாவின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.கண்ணன் தான் வந்துள்ளான் என்பதை தெரிந்துகொண்ட பிரபா  “இப்போது எதுக்கு இங்கே வந்தாய்”...? என்று கேட்டுள்ளார் பிரபா.உங்க அப்பா கடையில வண்டிய விட்டுட்டு வேலைக்கு போயிட்டார், அதை கொண்டாந்து விட்டுட்டு போகலாமுன்னு தான் வந்தேன், என்று சொல்லியுள்ளார் கண்ணன்.

அவசரமான பல நேரங்களில் கோவிந்தன் தனது (டி.வி.எஸ் எக்ஸ்.எல்) வாகனத்தை கண்ணனின் கடையில் விட்டுவிட்டு பேருந்தில் வேலைக்கு போய்விடுவார்.கண்ணன் கடையில் உள்ள வேலையை எல்லாம் முடித்துவிட்டு வாகனத்தை கொண்டுவந்து கோவிந்தனின் வீட்டில் விட்டுவிட்டு போவது வழக்கம்... இப்போதும் அப்படித்தான் அப்பாவின் வண்டியை கண்ணன் எடுத்துக்கொண்டு வந்துள்ளார் என்று நினைத்த பிரபா கதவை திறந்துகொண்டு வெளியில் வந்துள்ளார்.பிரபா கதவை திறந்ததும், அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பரவாயில்லை.... வா நாம் இரண்டு பேரும் செத்துப்போகலாம் என்று கூறியபடியே தன்மீது “தீ” வைத்துக் கொண்டு பிரபாவையும் கட்டி பிடித்துக்கொண்டார் கண்ணன்.

கண்ணன் மீது பற்றி எறிந்த நெருப்பு பிரபாவையும் பற்றிக்கொண்டது, கண்ணன், பிரபா இருவர் மீதும் தீ பற்றி எரிந்த நிலையில், பிரபா போட்ட சத்தத்தில் பக்கத்து வீட்டுகளில் இருந்தவர்கள் ஓடிவந்து கண்ணையும், பிரபாவையும் பிரித்து விட்டுள்ளனர்.கண்ணின் உடல் பெட்ரோலில் நன்றாக நனைந்திருந்தால், தீயில் எரிந்து போன உடல் கரிக்காட்டையாகி சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார்.ஐம்பது விழுக்காடு தீ காயங்களுடன் இருந்த பிரபா முதலுதவிக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கால்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த தீவைப்பு சம்பவத்தில், கோவிந்தனின் வீடு முழுவதும் எரித்து நாசமாக்கியது. 

Raamayanam - Tamil Movie...


Anniyan tamil movies...


பருத்திவீரன் தமிழ் MOVIE...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...