|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 July, 2011

இதே நாள்...


அரை மணி நேரம் 'ஜாலி'-250 கலோரி 'காலி'!

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதோ, டிரெட்மில்களில் ஏறி கால் வலிக்க வலிக்க ஓடுவதோ தேவையே இல்லை. உங்களது உடலில் கூடிப் போய் விட்ட கூடுதல் எடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்- செக்ஸ் உறவுக்காக.

'எக்சர்ஸைஸை' விட 'செக்ஸர்ஸைஸ்' சிறந்த உடற் பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் எடையைக் குறைக்க உடல் உறவே சிறந்த வழி என்ற எண்ணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருக்கிறதாம். நாள் முழுக்க கடுமையான வேலை பார்த்து விட்டு வந்தாலும் இரவில் உறவு கொள்வதற்கு பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக இருக்கிறார்களாம்- அது உடல் எடையைக் குறைத்து, மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் என்பதால்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 76 சதவீத பெண்கள், உடல் எடைக் குறைப்புக்கு செக்ஸர்ஸைஸ் சிறந்த வழி என்று கருதுகிறார்களாம்.

மூன்றில் இரண்டு பங்குப் பெண்கள், ஜிம்முக்குப் போய் உடற் பயிற்சி செய்வதை விட சிறந்தது செக்ஸ் உறவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கெர்ரி மெக்லோஸ்கி என்பவர் எழுதியுள்ள 'The Ultimate Sex Diet' என்ற புத்தகத்தில், அரை மணி நேர உடல் உறவின் மூலம் 150 முதல் 250 கலோரிகள் வரைக் குறைவதாக கூறியுள்ளார். உறவில் ஈடுபடுவோரின் செயல்பாடுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது 350 கலோரிகள் வரை கூட கூடுகிறதாம்.

முத்தமிடுவதன் மூலம் 200 கலோரிகள் வரை குறைகிறது என்ற தகவலையும் கெர்ரி தெரிவித்துள்ளார்.

எந்த ஜிம்முக்கும் போகாமலேயே இயற்கையான முறையிலேயே நமது உடல் எடையைக் குறைத்து நம்மை டிரிம்மாக வைத்துக் கொள்ள முடியும். செக்ஸ் என்பது உடல் ரீதியான இன்பத்துக்கு மட்டும் நமக்கு உதவுவதில்லை. மாறாக நம்மை புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும், வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. எனவே செக்ஸ் என்பதை உடல் மகிழ்ச்சிக்கான விஷயமாக மட்டும் கருதாமல் அதை பல விதங்களிலும் நமக்கு உதவும் ஆசானாக கருதி அணுகினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்பது கெர்ரியின் கருத்து.

உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்!

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

உடல் சோர்வு நீங்கும்: சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

குடல்புண்களை ஆற்றும்: சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.

நீரிழிவுக்கு மருந்து: முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

வாந்தி மயக்கம் நீங்கும்: சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

அயோடின் உப்பு பயன்படுத்துவதில் கடைசி இடத்தில் தமிழகம்!

அயோடின் உப்பு பயன்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே கடைசி இடத்தில் உள்ளது என தூத்துக்குடியில் உப்பு கமிஷனர் சுந்தரேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்தியாவி்ல் 200 லட்சம் டன் உப்பு ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 55 லட்சம் டன் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 30லட்சம் முதல் 40 லட்சம் டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.400 கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மத்திய அரசு இந்தியாவில் 2009ம் ஆண்டு ஒரு பெரிய ஆய்வு மேற்கொண்டது. இதில் மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் உணவில் அயோடின் சேர்த்து கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீதம் பேர் அயோடின் கலக்காத உப்பை உட்கொள்கின்றனர். இந்திய அளவில் அயோடின் உப்பை பயன்படுத்தாத மாநிலங்களில் தமிழகம் கடைசியில் உள்ளது.

2ல் 3 பங்கு குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இரும்பு சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு அயோடின் உப்புடன் இரும்பு சத்து ஏற்றப்பட்ட ஈருட்ட உப்பு தயாரித்து வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக இரும்பு சத்து கலக்கும் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான தொழில்நுட்பம் குறித்து உப்பு உற்பத்தியாளர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழகம் உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது என்றார் அவர்.

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க!

அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.

இல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :

எதிர்பார்ப்பில்லாத அன்பு: அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.

தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.

அரவணைப்பு அவசியம்: தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.

கட்டிப்பிடி வைத்தியம்: ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.

நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும்.

'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' என்பார்கள். கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும். இது போன்ற கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையான மாலுமியாக உருவாகிவிடுவார். அதுபோலத்தான் திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

தொடக்க நிலையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை வெற்றிகரமாக தாண்டிவிட்டால் போதும் வசந்தம் வீசும் வாழ்க்கை உங்களை நோக்கி ஓடி வரும். அதற்கு சில புரிதல்கள் தேவை.

மன்னிக்கும் மனப்பக்குவம்: குடும்பம் என்பது கணவன் மனைவி இருவர் தொடர்புடையது மட்டுமல்ல இருவருடைய புகுந்த வீட்டு, பிறந்த வீட்டு சொந்தங்களும் அந்த குடும்பத்திற்குள் அடக்கம். எங்காவது ஒரு இடத்தில் சிறு நெருடல் ஏற்பட்டாலும் உட்கட்சி பூசல் போல கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே தவறு யார் மீது என்று அலசி ஆராய்ந்து சண்டை போடுவதை விட்டு விட்டு மன்னிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கனியிருக்க காய் வேண்டாமே; ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு ஓரளவிற்காவது பேசி புரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது. சண்டையே ஏற்பட்டாலும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.உடனே சமாதானக் கொடி உயர்த்த வேண்டும்

சமத்துவம் வேண்டும்:வீட்டு வேலைகளைச் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மை கூடாது. எந்த நோக்கத்திற்காக வேலை செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் நீயா? நானா? போட்டி ஏற்பட வாய்ப்பே இல்லை.

கட்டுப்பாடான சுதந்திரம்: எதற்கும் ஓர் எல்லை உண்டு. யாரும் யார் மீதும் ஆதிக்க செலுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அங்குதான் விரிசலுக்கான விதை தோன்றுகிறது. அது வளர்ந்து விருட்சமாகி வளராமல் தடுப்பது அவரவர் கையில்தான் உள்ளது. அதே சமயம் கட்டுப்பாடான சுதந்திரமே குடும்பத்தை கட்டுகோப்பாக கொண்டு செல்ல உதவும்.

நகைக் சுவை உணர்வு: வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை: 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே உறவில் விரிசல் விழ வாய்ப்பே இல்லை.

வயிற்றுப் போக்கை விரட்டும் மாவடு!

மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மா இலை சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.

கிருமிநாசினியான மாவிலை: கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும். நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூவும், பட்டையும்: மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும். இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

பித்த வெடிப்பு குணமாகும்: பித்த வெடிப்பினால் கால் வலி ஏற்படுவதோடு பாதங்கள் பார்ப்பதற்கே அறுவெருப்பாக காணப்படும். கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மாங்காய்: மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்: மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம். கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

உதிரப்போக்கு கட்டுப்படுத்தும்: மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

இந்திய மாணவர்கள், விசா மோசடி பல்கலைக் கழகங்களிடம் ஏமாற வேண்டாம்! அமெரிக்கா!!


அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள், விசா மோசடி பல்கலைக் கழகங்களிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா வழங்குவதில் பல்வேறு தவறுகளைச் செய்துள்ள மற்றொரு அமெரிக்க பல்கலைக்கழகத்தை கண்டுபிடித்திருப்பதன் மூலம், அமெரிக்கா இந்த விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது. ஏற்கனவே இவ்வாறு செய்து வரும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்து வருகிறோம். மாணவர்களும் இதுபோன்ற நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் டோனர் கூறினார். விசா மோசடியில் ஈடுபட்ட மற்றொரு பல்கலைக் கழகத்தை வடக்கு விர்ஜினியாவில் கண்டுபிடித்துள்ளோம். இது குறித்து மத்திய அரசிடமும், தொடர்ந்து பேசி வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பல நல்ல கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயின்று சான்றிதழ்களை பெறுகின்றனர். இந்த ஆண்டும் அது தொடரும். எங்கள் நாட்டிற்கு வரும் இந்திய மாணவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் செய்தித் தொடர்பாளர் டோனர் கூறினார்.

5000 பணியிடங்களை உருவாக்கும் ஃபோர்டு !

  அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு, ஒரு பில்லியன் டாலர் (ரூ.4000 கோடி)முதலீட்டில் குஜராத்தில் கார் மற்றும் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதில் புதிதாக 5000 பணியிடங்களை உருவாக்க ஃபோர்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த இரு ஆலைகளுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்குள் இவ்விரு ஆலைகளின் பணிகளும் முழுமையாக நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளில் முதல் கட்டமாக 240,000 கார்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

கலைஞர் "டிவி' சொத்துக்களை பறிமுதல்! நடவடிக்கையில் அமலாக்கத் துறை!!


சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் "டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது' என, அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.அதனால், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காகவும், சிலருக்கு சலுகை காட்டியதற்காகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அந்த லஞ்சப் பணத்தை மீட்கும் வகையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

கலைஞர் "டிவி'யில், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழிக்கு, 80 சதவீத பங்குகளும், அந்த "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு, 20 சதவீத பங்குகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற "டி.பி' ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி, 2,100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஏற்கனவே "டிபி' குரூப், வெர்ஜின் மொபைல், மில்கிவே டெவலப்பர்ஸ் மற்றும் இடிஏ ஸ்டார் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவ்வாறு அமலாக்கத் துறை உயர் அதிகாரி கூறினார்

கிரைண்டர் இலவசமானாலும் தரம் இருக்கும் அரசு!

இலவசமாகக் கொடுத்தால், அதில் தரம் இருக்காது' என, பலரும் கருதலாம்; அதுவும் அரசு கொடுத்தால் எப்படியிருக்கப் போகிறது என, அலட்சியப்படுத்தலாம். ஆனால், தற்போது அரசு தரும் கிரைண்டர், மார்க்கெட்டில் உள்ள கிரைண்டர்களை விட தரம் வாய்ந்தாக இருக்கும். அதை உறுதி செய்ய, தொழிற்சாலைகளில் டெண்டருக்கு முன்பே அரசு அதிகாரிகள், நேரடியாக திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். அரசின் அதிரடியால், போலியாக டெண்டர் கொடுத்தோர், கலக்கத்தில் உள்ளனர்.

இலவச லேப்டாப், மிக்ஸி, மின்விசிறி வரிசையில் கிரைண்டரும் இடம் பிடித்தது. அடுத்த ஆறு மாதங்களுக்குள், 25 லட்சம் கிரைண்டர்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்தது. கிரைண்டர் கொள்முதல் செய்ய டெண்டர் விடும் முன், பல்வேறு விஷயங்களை தீவிர ஆய்வு செய்தது.கிரைண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுக்க, ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இந்த ஆய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ள, முதுநிலை துணைத்தலைவர் பெருமாள், பொதுமேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர், நேரடியாக தொழில் நிறுவனங்களை "விசிட்' செய்து தேர்வு செய்துள்ளனர்.

கிரைண்டர் மோட்டார்: கிரைண்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார், கிராமப்புறங்களில் வரும் ஏற்றத்தாழ்வு மின் அழுத்தங்களுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள டேபிள் டாப் கிரைண்டர்களில், பெரும்பாலும் 100 வாட் சக்தியில் இயங்குவதாக இருந்தால், இலவச கிரைண்டரில், 150 வாட் மின் சக்தியில் இயங்கும் மின்மோட்டார் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது. இத்தகைய தரம் வாய்ந்த மோட்டார், இந்திய தயாரிப்பில் மட்டுமே சாத்தியம்.

மின் ஒயர்: மின்மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் ஒயர், கட்டாயமாக ஐஎஸ்ஐ தரத்தில் இருக்க வேண்டும். எவ்விதத்திலும் மின்கசிவு இருக்கக் கூடாது.பிளாஸ்டிக் பாகங்கள்: கிரைண்டரில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாகங்கள், உறுதியாக இருக்க வேண்டும். மேல் மூடி, பாலிகார்பன் எனப்படும் உறுதித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். கீழே தவறி விழுந்தாலும் உடையக் கூடாது .தொழில்நுட்ப விளக்க கூட்டம் சென்னையில் நடந்தபோது, டெண்டரில் பங்கேற்க விண்ணப்பித்த, அனைத்து வெட்கிரைண்டர் தயாரிப்பாளருக்கும், மாதிரி கிரைண்டர்களை சமர்ப்பிக்கும்படி தெரிவித்திருந்தது.

இதில், அரசு கூறிய விதிமுறைகளின்படி தயாரான கிரைண்டரை, பரிசோதனைக் கூடத்தில் சோதனை செய்து, அதைச் சான்றிதழுடன் சமர்ப்பிக்கும்படி கூறியிருந்தது.அதோடு, தற்போது தயாரித்து வரும் கிரைண்டர் ஒன்றையும், இணைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. இந்த இரண்டு கிரைண்டர்களையுமே பெற்ற அதிகாரிகள், சான்று பெற்ற கிரைண்டரை விட்டு விட்டு, தற்போது நிறுவனங்கள் தயாரித்து வரும் கிரைண்டரை, பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

திடீர் ஆய்வுகள்: சென்னையில் நடந்த டெண்டரில் பங்கேற்று விட்டு, அடுத்த நாள் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் ஊருக்குத் திரும்பும் முன்பே, அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோவையில் பல நிறுவனங்களில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டனர்.இந்த ஆய்வில், டெண்டரில் குறிப்பிட்டபடி, ஒரிரு லட்சம் கிரைண்டர்களை தயாரிக்கும் அளவுக்கு இந்த நிறுவனங்கள் உண்மையான விவரங்களைக் கொடுத்துள்ளனவா என ஆய்வு செய்தனர். இவற்றை அறிக்கையாக தயார் செய்து, உடனுக்குடன் "ஆன்லைன்' முறையில், சென்னைக்கு அனுப்பினர். நேரடியாக தொழிற்சாலைக்கே வந்து ஆய்வு செய்த குழுவால், தொழிற்சாலை இல்லாமல், வியாபார நோக்கில் பங்கேற்ற நிறுவனங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், டெண்டரில் பங்கேற்ற பல வர்த்தகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தரத்தில் உயர்வு;விலையில் நியாயம்: அரசு அதிகாரிகளிடம், டெண்டரில் பங்கேற்ற உற்பத்தியாளர்கள் பலர், "அரசு கொடுத்திருந்த விதிமுறைகள், தர நிர்ணயத்தின்படி கிரைண்டர் தயாரித்தால், கூடுதலாகச் செலவாகுமே' என கேட்டுள்ளனர். பதிலளித்த அரசு அதிகாரிகள், "பொருள் எப்படியிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துள்ளோம். இதற்கு ஆகும் செலவு உள்ளிட்ட நியாயமான விலையை நீங்கள் கேட்கலாம். விலை மலிவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது' என பதில் அளித்துள்ளனர்.
தலையீடு கிடையவே கிடையாது: டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் உண்மையானவையா, குறிப்பிட்ட அளவுக்கு, வெட்கிரைண்டரை தயாரிக்கும் திறன் வாய்ந்தவையா என்பதையெல்லாம் ஆய்வு செய்ய, அதிகாரிகள் குழு ஈடுபட்டதால், எவ்வித தலையீடும் இல்லாமல் டெண்டர் வெளிப்படையாகவே நடக்கும் என, கோவையைச் சேர்ந்த கோயம்புத்தூர் வெட்கிரைண்டர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிர்வாகி தேவராஜ் நம்பிக்கை தெரிவித்தார். ""சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது நடைமுறைக்கு ஒவ்வாதது. அப்படியிருந்தாலும், கோவையில் தயாராகும் கிரைண்டரின் தரத்துக்கும் குறைவாகவே இருக்கும். அரசு தர நிர்ணயம் செய்திருப்பதால், கிரைண்டர் தொழில் நிறுவனங்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லை

ராஜா சொன்னதைத் தான் நான் செய்தேன்: சந்தோலியா!

டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில், கலைஞர் "டிவி'யை கொண்டு வர முன்னாள் அமைச்சர் ராஜா முயன்றார். இது தொடர்பாக நடந்த ரகசிய ஒப்பந்தத்தில், ராஜாவுக்கும், அரசியல் புரோக்கர் நிரா ராடியாவுக்கும் பங்குள்ளது' என்று, ராஜாவிடம் உதவியாளராக இருந்த சந்தோலியா குற்றம் சாட்டினார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பான வாதம், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், முதல் இரண்டு நாட்கள், முன்னாள் அமைச்சர் ராஜா சார்பில் வாதாடப்பட்டது. அப்போது, "மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, சாட்சியாகச் சேர்க்க வேண்டும்' என, ராஜா வழக்கறிஞர் வாதாடினார். மேலும், பிரதமருக்குத் தெரிந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தது என்று கூறியதோடு, வேறு சில குற்றச்சாட்டுகளையும் ராஜா கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறையின் செயலர் சித்தார்த்த பெகுராவின் வாதம் துவங்கி, இரண்டு நாள் நீடித்தது. "அரசின் திட்டத்தை அமல்படுத்திய ஒரே காரணத்திற்காக, இவ்வழக்கில் தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்' என, தெரிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா தரப்பு வாதம் நேற்று முன்வைக்கப்பட்டது.

அப்போது, அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியதாவது:டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில் கலைஞர் "டிவி'யைச் சேர்க்க, ராஜா முயன்றார். சந்தோலியா, ராஜாவிடம் உதவியாளராகத் தான் இருந்தார். எஜமானர் எடுக்கும் முடிவுக்கு எதிராக, உதவியாளரால் கேள்வி கேட்க முடியுமா என்ன? முடிவு எடுக்கும் அதிகாரம் சந்தோலியா கையில் இருந்ததில்லை.ஓராண்டு விசாரணைக்கு பின், சந்தோலியாவை சி.பி.ஐ., வழக்கில் சேர்த்தது. "2ஜி' விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் அவர் இல்லை. அவரது எஜமானர் (முன்னாள் அமைச்சர் ராஜா) பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்படுத்துவது தான் அவரின் வேலை. ராஜாவின் அன்றாடப் பணிகளுக்கு உதவுவதே சந்தோலியாவின் வேலை.

ராஜா எடுக்கும் முடிவுகள் சரியா, தவறா என்று எவ்வித கவலையும் அவருக்கு இல்லை. சந்தோலியா ஒன்றும் பெரிய ஆளும் இல்லை. மேலும், ராஜா சார்ந்திருந்த தி.மு.க., கட்சியுடனோ, கலைஞர் "டிவி'யுடனோ, வேறு டெலிகாம் கம்பெனிகளுடனோ எவ்வித தொடர்பும் சந்தோலியாவுக்கு இல்லை.டாடா ஸ்கை டி.டி.எச்., குழுமத்தில் கலைஞர் "டிவி'யை கொண்டு வர, ராஜா முயன்றார்.

இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்த ரகசிய ஒப்பந்தத்தில், ராஜாவுக்கும், அரசியல் தரகர் நிரா ராடியாவுக்கும் பங்கு உள்ளது. இதற்கு பாலமாகச் செயல்பட்டவர் ராஜாவின் உதவியாளராக இருந்த ஆச்சாரியா. நிரா ராடியா, ஆச்சார்யா இடையேயான உரையாடலின் போது, ஆச்சார்யா என்ன பேசுகிறார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை. இதிலிருந்து, கலைஞர் "டிவி', டாடா இடையேயான ஒப்பந்தம் குறித்து ஆச்சார்யாவுக்கு தெரிந்திருப்பது தெளிவாகிறது. இதன் மூலம், டாடா, நிரா ராடியா, ஆச்சார்யா, கலைஞர் "டிவி' உட்பட அனைவரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட வேண்டும். டாடாவும், ராடியாவும் பெரிய மனிதர்கள் என்பதால், சி.பி.ஐ., அவர்களை விட்டுள்ளது. ஆனால், ஆச்சார்யா ஏன் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாமல் சந்தோலியாவை கைது செய்துள்ளனர்.சந்தோலியா கையெழுத்து போட்ட ஒரு ஆவணத்தையாவது சி.பி.ஐ., காட்ட முடியுமா. எத்தனையோ பேர் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களை எல்லாம் சி.பி.ஐ., விட்டுவிட்டது.
டாடா - கலைஞர் "டிவி', ராடியா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஆச்சார்யாவுக்கு, கடந்த 12 ஆண்டுகளாக ராஜாவுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இவ்வாறு சந்தோலியா வழக்கறிஞர் கூறினார்.முன்னதாக சந்தோலியா வாதம் துவங்குவதற்கு முன், சந்தோலியா தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி சைனி அறிவித்தார். "தன்னிடம் விசாரணை நடத்துவதற்கு, சி.பி.ஐ., சரியான முறையில் அனுமதி பெறவில்லை' என, மனுவில் சந்தோலியா குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர் "டிவி' சொத்துக்களை பறிமுதல் செய்யநடவடிக்கையில் இறங்கியது அமலாக்கத் துறை:"சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.எம்.எல்.ஏ.,), கலைஞர் "டிவி'யின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, அமலாக்கத் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது' என, அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:கலைஞர் "டிவி'க்கு, 215 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது.அதனால், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அவற்றைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததற்காகவும், சிலருக்கு சலுகை காட்டியதற்காகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும், பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அந்த லஞ்சப் பணத்தை மீட்கும் வகையில், இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

கலைஞர் "டிவி'யில், கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழிக்கு, 80 சதவீத பங்குகளும், அந்த "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு, 20 சதவீத பங்குகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற "டி.பி' ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பது, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறி, 2,100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஏற்கனவே "டிபி' குரூப், வெர்ஜின் மொபைல், மில்கிவே டெவலப்பர்ஸ் மற்றும் இடிஏ ஸ்டார் குரூப் ஆகிய நிறுவனங்களுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இவ்வாறு அமலாக்கத் துறை உயர் அதிகாரி கூறினார்

சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம்!


தமிழகத்தில் சொட்டுநீர் பாசனத்திற்கு முழுமையாக மானியம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விவசாயத்துறை அதிகாரிகள் கிராமம் வாரியாக, சிறு மற்றும் பெரு விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் கிணற்று பாசனம் இல்லாமல் போய் விட்டது. போர்வெல் (ஆழ் துளை குழாய்) பயன்படுத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாயம் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இந்நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் உணவு தானிய விளைச்சல் குறையும் அபாயம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு அரசு, விவசாயிகளுக்கு பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு, தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. "போர்வெல்' பயன்படுத்தி அதிகப்படியான நீரை உறிஞ்சி விவசாயம் செய்வதற்கு மாற்று ஏற்பாடாக, சொட்டுநீர் பாசன திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. பல ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள தென்னை, பெரிய நெல்லி, தேக்கு மற்றும் பல வகை மரம் மற்றும் செடிகளுக்கு, கூலியாட்களை வைத்து தண்ணீர் பாய்ச்ச முடியாததால், ஒரே இடத்தில் இருந்து பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் "சொட்டு சொட்டாக' நீர் பாய்ச்சும் முறையை, சில ஆண்டுகளுக்கு முன் தனியார்கள் கையாளத் துவங்கினர்.

சொட்டுநீர் பாசன முறையில் கூலியாட்களின் தேவை மிக, மிக குறைவு. அத்துடன் சாதாரண முறையில் தோட்டத்திற்கு பாய்ச்சப்படும் தண்ணீரின் அளவில், பல மடங்கு குறைவாகவே நீர் தேவைப்படும். கூலியாட்கள் குறைவு, தண்ணீர் குறைவு போன்ற சிறப்பம்சங்கள், இத்திட்டத்தில் உள்ளது பற்றி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு, கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இரவில் எழுந்து தோட்டத்திற்கு நீர்பாய்ச்ச செல்லும் போது, கால் இடறி தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து இறத்தல், பாம்பு கடியால் இறத்தல் போன்ற பல அபாயங்களை விவசாயிகள் சந்திக்கின்றனர். சொட்டு நீர் பாசன திட்டத்தால், இந்த அபாயங்களில் இருந்து விடுபட விவசாயிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. என்ன நோக்கத்திற்காக இத்திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வந்துள்ளது என்பதை விவசாயிகளுக்கு, அதிகாரிகள் தெளிவுபடுத்தி வருகின்றனர். பல கிராமங்களில், இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, விவசாயிகள் ஆர்வமாக உள்ள விவரம் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

"தினமலர்' செய்தி அரசு மும்முரம் : விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில், சொட்டுநீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியுன், கடந்த மாதமே தினமலரில் செய்தி வெளியாகியிருந்தது. அதன், எதிரொலியாக அத்திட்டத்தை செயல்படுத்த விவசாயத்துறை அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மாவட்டந்தோறும், கிராமம் வாரியாக, விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் மற்றும் அப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசன வசதி கிடைத்தால், விளைச்சல் மற்றும் மகசூல் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

20 கோடி வருவாய் ஈட்டிய தாஜ்மகால்!


ஆக்ராவில் அமைந்துள்ள, காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆக்ராவில் அமைந்துள்ள காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தாஜ்மகாலைப் பார்க்க தினந்தோறும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், நுழைவுச் சீட்டு விற்பனை மூலம், தாஜ்மகால் கடந்த ஆண்டில், ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும் 116 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், டில்லியில் உள்ள குதூப் மினார் மூலம், ரூ. 10 கோடியும், ஹூமாயூன் கல்லறை மூலம் ரூ. 6.15 கோடியும், செங்கோட்டை மூலம் ரூ. 5.90 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

இலங்கைத் தமிழர் சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் தீர்மானம் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவில், இலங்கைத் தமிழர் சம உரிமை, அரசியல்தீர்வு சிறப்பு மாநாட்டில் தமிழர் சம உரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இது குறித்த செய்திக் குறிப்பு:


* இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம் வசதிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
* தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

உடனடியாக செய்யப்பட வேண்டியவை:
♦ இலங்கையில் இறுதிகட்ட போரின்போது ராஜபக்சே தலைமையிலான அரசினுடைய ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும், சர்வதேச தரமுள்ள, மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு சுயேச்சையான நேர்மையான விசாரணைக்கு இலங்கை அரசு உத்தரவிட வேண்டும். ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், ஐ.நா.வின் மனித உரிமை சாசனத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் இந்த விசாரணை அமைய வேண்டும்.
♦ சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
♦ இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கான அனைத்து முன்முயற்சிகளும் உடனடியாகத் துவக்கப்பட வேண்டும்.
♦ மாகாண அரசுகளுக்கு காவல்துறை,நிலம் போன்ற அம்சங்களில் நிர்வாக அதிகாரம் வழங்க வேண்டும். தமிழ் மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.
♦ ஆயுத மோதலினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களது சொந்த வாழ்விடங்களில் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.
♦ அனைத்து நிலைகளிலும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது மத உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பேணப்பட வேண்டும்.
♦ அவசர கால சட்டம் நீக்கிக் கொள்ளப்பட்டு, ராணுவ நடமாட்டம் விலக்கப்பட்டு ஜனநாயகபூர்வ சகஜ வாழ்வு திரும்ப வேண்டும். அச்சம் அகன்று அமைதி திரும்ப வேண்டும்.
♦ இலங்கையில் இருந்து வந்த நாடாளுமன்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு அதிபராட்சி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கூட்டாட்சியில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. உண்மையான கூட்டாட்சி முறை செயல்படுத்தப்பட வேண்டும்.
♦ அரசு, நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் அனைத்து அம்சங்களும் நீக்கப்பட வேண்டும். இந்திய அரசின் கடமை இலங்கையின் அண்டை நாடு என்ற முறையிலும் சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற முறையிலும், இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு மக்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற முறையில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தகுந்த அரசியல் தீர்வு காண உதவ வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. எனவே, இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா அளிக்கும் உதவி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?, பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு கிடைக்கிறதா? என்று கண்காணிக்கும் பொறுப்பும் இந்தியாவிற்கு உண்டு. இதனை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.


இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வந்துள்ளது, வருகிறது. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து மாநில சுயாட்சி வழங்க வேண்டுமென்ற அரசியல் தீர்வே சரியான வழி என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தம் 27.7.2011 அன்று கூறிய கருத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.



“ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பொருளாதார, பண்பாட்டு செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் எனற செய்தியையே இந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.” 



இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பிட தமிழகமெங்கும் ஆகஸ்ட் 9, 2011 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுவது என இலங்கைத் தமிழர் சமஉரிமை-அரசியல் தீர்வு-சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. இலங்கைத் தமிழர்களை காக்க

அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு குரல் எழுப்ப இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது கலைஞர்!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது அதிமுக அரசின் பழிவாங்கும் மனப்பாண்மையை காட்டுவதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக அறப்போராட்டம் அமைதி வழியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார்.


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் கலைஞர், திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது நடைபெறும் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. காவல்துறையின் அராஜகத்தை கண்டிப்பதற்காகவும், பொய் வழக்குப் போடுவதை கண்டிப்பதற்காகவும் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 1ல் அறிவித்துள்ள திமுகவின் அறப்போராட்டம் திட்டமிட்டபடி அமைதி வழியில் நடைபெறும் என்றார். 

இதே நாள்...


  • வனுவாட்டு விடுதலை நாள்(1980)
  •  பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
  •  கலிப் அல் மன்சர் என்பரால் பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
  •  ஜெருசலம் சட்டத்திற்கு இஸ்ரேல் கெசட் ஒப்புதல் அளித்தது(1980)
  • கோவை: தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது!


    .மு.க., எம்.எல்.ஏ., அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உடுமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர், கோவை கருமத்தம்பட்டியில் உள்ள காகித மில்லை விலைக்கு வாங்கி நடத்திவந்தார். இந்நிலையில் மில்லை விற்ற நபர், சென்னை தி.நகர் எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட 8 பேர் சீனிவாசனை மிரட்டி மில்லை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சீனிவாசன் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து நள்ளிரவில் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் கைது செய்யப்பட்டு உடுமலை அழைத்து வரப்பட்டார். உடுமலை: கைது செய்யப்பட்ட அன்பழகன் எம்.எல்.ஏ.,வை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்த, மாலை போலீசார் உடுமலைக்கு அழைத்து வந்தனர். 4.15 மணிக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் அன்பழகனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தனக்கு சர்க்கரை வியாதி உட்பட பல்வேறு நோய்கள் இருப்பதாகக் கூறி அதற்கான மருத்துவச் சான்றுகளை வழங்கினார்.பின், 4.35 மணிக்கு உடுமலை ஜே.எம்.எண்., 1 மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். தனது உடல்நலனை கருத்தில் கொண்டு, சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என, எம்.எல்.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்காத மாஜிஸ்திரேட் தீபா, அன்பழகன் எம்.எல்.ஏ.,வை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறைக்கு மாலை 4.50 மணிக்கு அன்பழகன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    8 பேர் மீது வழக்குசீனிவாசன் அளித்த புகாரின் பேரில் கிங்ஸ்லி, இவரது மனைவி ஜமீலா, ரவிசாம்ராஜ் இவரது மனைவி மார்ஜினா, ஐயப்பன், சுப்புரத்தினம், சக்சேனா, அன்பழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...