|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 October, 2011

மாறுபட்ட தீர்ப்பை வழங்கும் குமரி மக்கள்!

தேர்தலில் மாறுபட்ட தீர்ப்பை வழங்குவதை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். அலை அல்ல சுனாமியே அடித்தாலும் குமரி மாவட்டத்தில் மட்டும் ராஜாங்கம் பண்ண முடியாமல் திராவிட கட்சிகள் தவிக்கிறது. 1956-ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. அன்று முதல் காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சி வேட்பாளர்களை இம்மாவட்டம் கை தூக்கி விட்டுள்ளது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய பின்னர் 1977-ல் நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக இங்கு திராவிட கட்சிகள் கால் ஊன்றியது. அந்த ஆண்டு முதல் மொத்தம் ஏழு தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் மட்டுமே திராவிட கட்சிகளுக்கு கிடைத்து வருகிறது. காங்கிரஸ், மா.கம்யூ., போன்ற கட்சிகளுக்கு இம்மாவட்டம் தொடர்ந்து பிரதிநிதித்துவம் வழங்கி வருகிறது. அது போல தமிழ்நாட்டில் ஏன் தென் மாநிலங்களிலேயே முதன்முறையாக பா.ஜ.எம்.எல்.ஏ.ஐ தேர்வு செய்ததும் குமரி மாவட்டம்தான்.

அலை அல்ல சுனாமியே அடித்தாலும் அது இம்மாவட்டத்தில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. பல தேர்தல்கள் இதை உறுதி செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. அலை அடித்தது. ஆனால் இங்கு அந்த கூட்டணி ஆறுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நான்கில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதை அடுத்து தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் சுனாமியே அடித்தது. ஆனால் இங்கு அப்படி ஒரு சூழலே ஏற்படவில்லை. ஆளும் கட்சி என்ற பலத்துடன் இறங்கிய அ.தி.மு.க நான்கில் ஒரு நகராட்சியை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனால் இந்த நகராட்சியில் கவுன்சிலர்களின் மெஜாரிட்டி அக்கட்சிக்கு இல்லை டவுன் பஞ்சாயத்திலும் அ.தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. முதல் இடத்தில் பா.ஜ., வும், இரண்டாம் இடத்தில் தி.மு.க.வும் உள்ளது.மாவட்ட பஞ்சாயத்தில் நான்கு இடங்கள் பெற்று தனி பெரும் கட்சியாக அ.தி.மு.க. வந்தாலும் தலைவர் பதவியை பிடிக்க மேலும் இரண்டு கவுன்சிலர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரை குமரி மாவட்டத்தில் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது. நாகர்கோவில் நகராட்சியில் பா.ஜ., வெற்றி பெற்று மீனாதேவ் தலைவர் ஆகியுள்ளார். ஆனால் இதே பா.ஜ.,வின் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை கடந்த தேர்தலில் நாகர்கோவில் மக்கள் தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல் மூன்றாம் இடத்துக்கு தள்ளி விட்டனர். இப்படி எல்லா கட்சிக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவதன் மூலமும், பலரை அதிர்ச்சி தோல்வி அடைய செய்வதன் மூலமும் குமரி மாவட்ட மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர். சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட கட்சிகள் ராஜாங்கம் பண்ணினாலும் இங்கு மட்டும் அது நடக்காமல் போவது இரண்டு கழகங்களுக்கும் சற்று ஏமாற்றமான விஷயம்தான்.

துவந்த யுத்தம் தமிழ் குறும்படம்!

இலங்கை ராணுவத்தால் நம் தமிழக மீனவர்கள் தினம் படும் அவலங்களை அவைஸ்தைகளை இந்த படத்தின் மூலம் நமது அரசாங்கத்தை  செருப்பால் அடித்திருக்கும் இயக்குனர் செல்வகுமாருக்கு தமிழகத்தின் சார்பாக நன்றி! 

கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை பரிதி!


கருணாநிதியின் கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை,'' என, தி.மு.க., துணை பொதுச் செயலராக இருந்த பரிதி இளம்வழுதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சட்டசபைத் தேர்தலின் போது, கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் அளித்தேன். அதன்படி, அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், எவ்வித விளக்கமும் பெறாமல் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த என்னிடமும், விளக்கம் பெறவில்லை.இதுபோல, மாநிலம் முழுவதும் கட்சி மீது அதிருப்தி கொண்டவர்கள் உள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, என் பிரச்னை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை செய்வேன்.என் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் முடிவை, கட்சித் தலைவர் கருணாநிதி மனப்பூர்வமாக செய்திருக்க மாட்டார். அவரைத் தாண்டி உள்ள அதிகார மையம் தான், இதைச் செய்துள்ளது. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை.

இப்பிரச்னை எழுந்த நிலையில், பொருளாளர் ஸ்டாலினை சந்திக்க நான்கு முறை முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதற்கு காரணம் என்வென்று தெரியவில்லை.கட்சித் தலைமையை சந்தித்து, விளக்கம் கொடுக்கவும் நான் செல்லவில்லை. கருணாநிதியையும், ஸ்டாலினையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். எழும்பூர் தொகுதி தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சி பேச்சாளர் ஆகிய பொறுப்புகளில் உள்ளேன். கட்சியில் தொடர்ந்து என் பணியைச் செய்வேன்.என் போன்றவர்களையும், அடக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் கைதூக்கி விடவே தி.மு.க., துவங்கப்பட்டது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக என் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டனர் என சொல்ல முடியாது.அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என பயந்து, கட்சியை விமர்சிப்பதாகக் கூறுவதை ஏற்க மாட்டேன். கடந்த 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக தனியொரு நபராகச் செயல்பட்டவன். எனவே, அ.தி.மு.க., அரசு வழக்கு தொடரும் என்பதற்கு பயந்து, கட்சியை விமர்சிக்கவில்லை.இவ்வாறு பரிதி இளம்வழுதி கூறினார்

3 பேரின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும் வைகோ!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தபோது மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வழக்கில் ஆஜராவதற்கு வசதியாக வேறொரு தேதிக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இன்று இந்த வழக்கு விசாரணையின் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் வைகோ ஆஜரானார். பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுகுறித்து மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீதான விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது. மத்திய அரசு இந்த மனுக்களுக்கு தாக்கல் செய்த பதில் மனுவில், மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.

மாநில அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலும், அந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றே தெரிவித்துள்ளது. இதுகுறித்து வைகோ தன் வாதத்தில் குறிப்பிடுகையில், இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை கடந்த அக்டோபர் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் நடந்தது. மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவர்கள், அந்த மனுவை எதிர்த்துத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், விசாரணை 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், 19ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரித்தது. அப்போது, ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் முன் வாதங்கள் முடிவு பெற்றுள்ளதை ஜேத்மலானி சுட்டிக் காட்டினார். இதையடுத்து அந்த 3 நீதிபதிகள் பெஞ்ச், அந்த மனு மீதான விசாரணையை, தங்கள் நீதிமன்றத்தில் இருந்து விடுவித்தனர். எனவே மேற்கூறிய விசாரணை, ஏற்கனவே நடைபெற்ற, 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிலேயே தொடர்ந்து விசாரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, வழக்கறிஞர் ஜேத்மலானி அவர்கள், சென்னையில் வந்து வாதிடுவதற்கும், இந்த நீதிமன்றத்துக்கும் வசதியான ஒரு தேதிக்கு, இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார் என்று மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-வைகோ: முன்னதாக பேரறிவாளன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது விசாரணை அமைதியாக நடந்தது. ஆனால் கோர்ட்டில் கொந்தளிப்பும், பதட்டமும் இருந்ததாக கூறி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க கூடாது என நினைக்கும் மத்திய அரசு பின்னணியில் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த 3 பேரின் தண்டனையை குறைக்கும்படி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கதக்கது. அதே போல தமிழக அமைச்சரவை 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161யை பயன்படுத்தி கவர்னருக்கு பரிந்துரை செய்வதன் மூலம் இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை சட்டப்பூர்வமானது அல்ல. அதை மீறி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்றார்.

இந்த வார ராசி பலன்(28-10-11 முதல் 3-11-11 வரை)

மேஷம்: பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவை. உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களிடம் எதையும் மனம் திறந்து பேச வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களிடம் எந்த ரகசியத்தையும் கூற வேண்டாம்.

ரிஷபம்: பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மனம் உற்சாகமாக இருக்கும். சமுதாயத்தில் பெரியவர்களின் நட்பு கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பொறுப்புகள் அதிகரிக்கலாம். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

மிதுனம்: பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோர்கள் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு.

கடகம்: பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடல் நலனில் கவனம் தேவை. பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் சந்தோஷமாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடும். வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். மனம் நிம்மதியாக இருக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

சிம்மம்: பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்து செல்லவும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வடதிசையில் இருந்து கடிதம் மூலம் நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு திடீர் என்று இடமாற்றம் கிடைக்கலாம். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

கன்னி: பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். வழக்குகள் சாதமாக முடியும். கடிதம் மூலம் நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

துலாம்: பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். புதிய சொத்துகள் வாங்க முயற்சி மேற்கொள்ளக்கூடும். கணவருடன் அன்பாக இருப்பீர்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன்தொகை கைக்கு வந்து சேரும். வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

விருச்சிகம்: பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் மேம்படும். யாருக்கும் கடன் வாங்கிக் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். உங்கள் வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும்.

தனுசு பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். வருமானம் அதிகரிக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். தந்தை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். பண வரவு சீராக இருக்கும்.

மகரம்: பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைத்து மகிழக்கூடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கோரிக்கைள் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. அதனால் அவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.

கும்பம்: பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மனதில் புது தெம்பு பிறக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். கோரிக்கைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

மீனம்: பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரக்கூடும். உடன் பிறப்புகளுடன் அன்பாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டு. வேலை பார்ப்போருக்கு: கோரிக்கைகள் நிறைவேறும். பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

தீபாவளி 2 நாட்களில் ரூ.160 கோடி மது விற்பனை!


தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் 160 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளது.தீபாவளி பண்டிக்கை கடந்த 2 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகை நாட்களில் மதுவகைகளை உட்கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடையே வழக்கம். இதனால் டாஸ்மாக் கடைகளில் பண்டிகை நாட்களில் மதுவகைகளுக்கு தட்டுபாடு ஏற்படுவது உண்டு. இதை தவிர்க்க தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் உள்ள 6,696 டாஸ்மாக் கடைகளில் அதிகளவிலான மதுபாட்டிகள் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக ஐஎம்எப்எல், பீர், ஒயின் மதுபானங்கள், டாஸ்மாக் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 25 மற்றும் 26ம் தேதி மட்டும், அயல்நாட்டு மதுபானங்கள் 2,30,000 கேஸ்கள் விற்பனையாகி உள்ளன. பீர் வகைகள் 1,70,000 கேஸ்கள் விற்பனையானது.

இதன்மூலம் மொத்தம் 160 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் சென்னையில் உள்ள 441 கடைகளில் மட்டும் 19 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளது. இதன்மூலம் கடந்தாண்டை விட 58 கோடி ரூபாய் மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது. மேலும் இந்தாண்டு 150 கோடி ரூபாய் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சீரியல் மோகம் பிடித்து திரியும் பெண்கள்!


கணவன்மார்கள் வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது டிவி சீரியல்கள். சீரியல் என்று சொன்னாலே கணவன்மார்கள் அய்யய்யோ என்று ஓட்டம் பிடிக்கும் அளவில் இருக்கின்றனர்.
பகல் எல்லாம் உழைத்துக் களைத்து வீடு திரும்பினால் மனைவி டிவி முன்பு அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டே வரவேற்கிறார். ஒரு காபி போட்டுத்தாம்மா என்று கேட்டால் இதோ இந்த சீரியல் இப்போ முடிந்துவிடும், முடிந்தவுடன் காபி தருகிறேன் என்கிறார். வேறு வழியில்லாமல் சீரியல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு கணவன்மார்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் வினோதம் என்னவென்றால் சில கணவன்மார்களுக்கு குறிப்பிட்ட சீரியல்கள் என்றால் பிடிக்கிறது. என்ன சார், உங்க மனைவியோடு சேர்ந்து நீங்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்களா அல்ல அந்த குறிப்பிட்ட சீரியல் உங்களை கவர்ந்துவிட்டதா என்று கேட்டால், அடபோங்கம்மா நீங்க வேற அந்த சீரியல் போடும்போது தான் நிறைய விளம்பரம் வருகிறது என்கிறார்கள். விளம்பரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால். மற்ற சீரியல்களில் 1,2 விளம்பரங்கள் தான் போடுகிறார்கள். ஒரு விளம்பரத்திற்கு சாதம், மறு விளம்பரத்திற்கு சாம்பார், இன்னொரு விளம்பரத்திற்கு கூட்டு, விக்கினால் கூட அடுத்த விளம்பர இடைவேளையில் தான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் அந்த குறிப்பி்ட்ட சீரியல்களில் அதிக விளம்பர இடைவேளை வருவதால் ஒரே நேரத்தில் சாதம், சாம்பார், கூட்டு எல்லாம் கிடைக்கிறது என்கிறார்கள் பரிதாபமாக.

அட சாப்பாடை விடுங்க, சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போலவே சிலர் ஆகிவிடுகின்றனர். பெண்கள் மும்முரமாக சீரியல் பார்த்துக் கொண்டிருக்க வெளியில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து இறந்த கதையெல்லாம் நடந்திருக்கிறது. சீரியல் முடிந்த பிறகு தான் குழந்தை ஞாபகம் வந்து தேடிப்பார்த்தால் வாசலில் இறந்து கிடந்திருக்கிறது. 

பெண்களே, உங்களை சீரியல் பார்கக் வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதேசமயம் சீரியல் மோகம் பிடித்துத் திரியாதீர்கள். கணவனையும், பிள்ளைகளையும் கவனிக்காமல் நீங்கள் சீரியல் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் டிவி, டிவி என்று டிவி சீரியல்களை கட்டிக் கொண்டு அழுதால் கணவன்மார்கள் கவனம் வேறு எங்காவது போவதில் ஆச்சரியம் இல்லை. எனவே, சீரியல்களை குறைத்துக் கொண்டு பாவப்பட்ட கணவன்மார்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.

வெள்ளை மாளிகை தீபாவளி நிகழ்ச்சியில் ஒபாமா!


அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள தீபாவளி நிகழ்ச்சியில் அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் வெள்ளை மாளிகையில் உள்ள ஈஸ்சன்ஹேவர் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் தீபாவளி நிகழ்ச்சி கொண்டாடுவது துவக்கப்பட்டது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவில் இருந்தார். இதனால் மும்பை நகரில் ஒபாமா தீபாவளியை கொண்டாடினார். இந்தாண்டு தீபாவளி நிகழ்ச்சி இன்று மாலை வெள்ளை மாளிகையில் நடக்க உள்ளது. இதில் ஒபாமா கலந்து கொள்ள உள்ளார். வெள்ளை மாளிகையில் நடக்கும் தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர், ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஒபாமா கூறியாதவது, கடந்தாண்டு மும்பையில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க முடிந்தது. இந்தாண்டு, வெள்ளை மாளிகையில் நடக்கும் தீபாவளி நிகழ்ச்சியில் பங்கேற்று, விளக்கேற்றும் முதல் அதிபர் என்பதில் பெருமையாக உள்ளது, என்றார். கடந்த வாரம் ஒபாமா வெளியிட்ட தீபாவளி வாழ்த்து செய்தியில் அவர், இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போது குடும்பம், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் போது சிறப்பு உணவு வகைகளை சாப்பிட்டு, நடனம் செய்யும் தருணம். அது மட்டுமின்றி ஏழை எளியவர்களை நினைத்து அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நேரம் என்று கூறியிருந்தார்.

1,500 ஆண்களுடன் ...? பெண்-வயது 54

இங்கிலாந்து பெண் ஒருவர் தான் இதுவரை சுமார் 1500 பேருடன் செக்ஸ் உறவை பகிர்ந்து கொண்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற பெண்களின் கணவர்கள் அல்லது பாய்பிரண்ட்டுகளாம். மேற்கு லண்டனின் செல்சியா பகுதியில் வாழும் அந்த பெண்ணின் பெயல் மேர் சிமோன். அவர் ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியினரின் தாம்பத்திய வாழ்க்கையை மெருக்கேற்ற உதவும் செக்ஸ் மருத்துவராக வேலை பார்த்து வருவதாகக் கூறிக் கொள்கிறார். அதே நேரத்தி்ல் நான் விபச்சாரப் பெண் அல்ல என்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறும் அவருக்கு தற்போது வயது 54. இது குறித்து அவர் கூறுகையில், அடுத்த பெண்மணிகள் கணவர் அல்லது பாய்பிரண்டுடன் உறங்கி சம்பாதித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு விலைமாது அல்ல. ஒருவருடைய செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், அதற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்திலும் தான் இந்த சேவையை செய்து வருகிறேன்.

இதற்காக அவர்கள் தரும் பணத்தில் தான் என் வாழ்க்கை நடக்கிறது. சேவைக்காக செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி தவறில்லை. பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கும், நான் வழங்கும் அறிவுரைகளுக்காகவும் என்னிடம் வரும் 'நோயாளிகள்' காசு கொடுக்கிறார்கள். செக்ஸ் சுகத்துக்காக அல்ல. நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை முன்னேற்றம் காண, மாறுதல் பெற உழைத்திருக்கிறேன். இதன்மூலம் அவர்களது மனைவிகள் அல்லது கேர்ள்பிரண்டுகளும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

குழந்தை வேண்டும் சில பெண்களுக்கு வேறு சில பெண்கள் வாடகை தாயாக குழந்தை பெற்று தருகிறார்கள். அதேபோல் தான் செக்ஸ் விஷயத்தில் உதவ ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது நம்பிக்கை உண்டாக்கி வருகிறேன். அவர்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்களுடன் உற்சாகமாக செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன்.சில சமயங்களில் மனைவிக்கு முன்னால் அவர்களது கணவருடன் செக்ஸ் கொண்ட அனுபவமும் உள்ளது. அதன்மூலம் அவர்கள் இல்லற வாழ்க்கையை எப்படியிருக்க வேண்டும் என்பதை அந்த தம்பதிகள் புரிந்து கொள்வார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எனது வாடிக்கையாளர்களை சந்தித்து வருகிறேன். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆலோசனை வழங்குவேன். எனது வேலை முழு திருப்தி அளிக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். எந்தவொரு சமயத்திலும் இந்த வேலைக்கு ஏன் வந்தோம் என எண்ணியது கிடையாது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த சேவையை தொடரவிருக்கிறேன். செக்ஸ் பிரச்சனைகளை தீர்ப்பவர் என்ற முறையில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

ஃபார்முலா 1 நாளை பந்தயம்!


ஃபார்முலா 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவில் நடக்கிறது. இதனால் கார் பந்தய ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஃபார்முலா 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவில் அதுவும் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புத் சர்வதேச சர்க்கியூட்டில் நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு பயிற்சி பந்தயம் துவங்கியது. இத்தனை ஆண்டுகளாக ஃபார்முலா 1 கார் பந்தயம் பார்க்க வேண்டும் என்றால் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கிரேடட்ர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச சர்க்கியூட்டில் நடக்கிறது. இன்றும், நாளையும் பயிற்சி பந்தயம் நடக்கிறது. நாளை மறுநாள் பந்தயம் துவங்குகிறது.

புத் சர்வேதச சர்க்கியூட் பற்றி பார்ப்போம், 
புத் சர்வேதச சர்க்கியூட் தான் ஃபார்முலா 1 பந்தயத்திற்காக இந்தியாவில் கட்டப்பட்ட முதல் சர்க்கியூட் ஆகும். இந்த சர்க்கியூட் 875 ஏக்கர் நிலத்தில் 10 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல எஃப்1 டிராக் என்ஜினியரான ஹெர்மன் டில்கே வடிவமைத்துள்ளார். இங்கு பந்தயத்தில் கலந்துகொள்ளும் கார்கள் மணிக்கு 210 கிமீ முதல் அதிகபட்சமாக 320 கிமீ வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜேபீ குரூப் சர்க்கியூட் என்று பெயரிடப்பட்டதை தான் கடந்த ஏப்ரல் மாதம் புத் சர்வதேச சர்க்கியூட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புத்தரின் நியாபகார்த்தமாக புத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கௌதம் புத்தா நகரில் அமைந்துள்ளது. இந்த பந்தயம் குறித்து இந்திய கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் கூறியதாவது,

இந்தியாவில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் நாட்டு மக்கள் முன்பு கார் ஓட்ட வேண்டும் என்ற எனது கனவு நனவாகப் போகிறது. டிராக் அருமையாக உள்ளது என்றார்.

இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர்!


இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் மனித உடலில் செலுத்தி சோதிக்கப்படவிருக்கிறது. இந்த செயற்கை ரத்தம் பயன்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் ஆகும். நோய்களும், விபத்துகளும் அதிகரித்துள்ள இந்த காலத்தில் அன்றாடம் அறுவை சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் போதிய ரத்தம் கிடைக்காததால் நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழக்கின்றனர். ரத்த வங்கிகளில் கூட குறிப்பிட்ட சில குரூப் ரத்தம் இருப்பு இருக்காது. அப்போது ரத்தத்திற்ககாக அலைய வேண்டியது வரும்.

இனிமேல் அந்த அலைச்சல் எல்லாம் இருக்காது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து செயற்கை ரத்தத்தை தயாரி்ததுள்ளனர். இதய மாற்று அறுவை சிகிச்சை, பைபாஸ் சிகிச்சை, புற்றுநோயாளிகளுக்கு இந்த செயற்கை ரத்தம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். செயற்கை ரத்தத்தில் எந்தவித தொற்றுகளும் இருக்காது. அதனால் யாருக்கு வேண்டும் என்றாலும் தைரியமாக ஏற்றலாம். 

இன்னும் 2 ஆண்டுகளில் ஒரு டீஸ்பூன் அளவிலான செற்கை ரத்தத்தை மனிதனுக்கு சோதனை அடிப்படையில் ஏற்றவிருக்கினர். இந்த ரத்தம் பயன்பாட்டிற்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கி அதை ஆய்வுக்கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை தயாரி்ததுள்ளனர்.

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை," என சமீபத்திய ஆய்வு!


கார் விபத்துக்களில் சிக்கிய 2,000 பெண்களிடம் லண்டனை சேர்ந்த யங் மர்மலடே என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு ஒன்றைநடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் பிரபல டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள் தங்கள் மீதுள்ள தவறை ஒப்புக்கொள்வதே இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட 10 பெண்களில் 8 பெண்கள் விபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு நான் பொறுப்பில்லை, என் மீது எந்த தப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், எதிரில் வந்த வாகன ஓட்டிகள் மீது பழியைப் போட்டுள்ளனர், என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடநததற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று கூறிய பல பெண்கள், காரில் பிரச்னை இருந்துள்ளது, எதிரில் வந்தவர்தான் வேகமாக வந்து மோதிவிட்டார் என்று வாயில் கிடைத்த வாசகத்தை அந்த பெண்கள் அள்ளி வீசியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்தத்தில் விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதுதான் ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்களின் பதிலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் - வைரமுத்து!


நேற்று பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. கவிஞர் வைரமுத்து படப்பிடிப்பு தளத்துக்கே சென்று கமல்ஹாசனை சந்தித்தார். காலை 11 மணிக்கு சந்தித்த இருவரும் மாலை 6 மணி வரை தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டார்கள். கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் புதிய படம், `விஸ்வரூபம்'. இந்த படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.  இதுவரை படமாக்கிய காட்சிகளை, வைரமுத்துவுக்கு திரையிட்டு காண்பித்தார், கமல்ஹாசன். 40 நிமிடம் ஓடிய படத்தை பார்த்து, வித்தியாசமான கதைக்களத்தையும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தையும் பாராட்டினார், வைரமுத்து. படத்தில், 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு பாடலை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். வைரமுத்து 5 பாடல்களை எழுதுகிறார். சங்கர் மகாதேவன் இசையமைக்கிறார். ’’சலித்துப்போன கதைகளில் இருந்தும், புளித்துப்போன பாடல்களில் இருந்தும் தமிழ் சினிமா விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த படத்தில், பாடல்களின் தரத்தை இன்னொரு உயரத்துக்கு ஏற்ற விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமையை கொடுக்க வேண்டும்'' என்று வைரமுத்து கேட்டுக்கொண்டார். "உங்களுக்கு இல்லாத உரிமையா? எடுத்துக்கொள்ளுங்கள்’’என்றார், கமல்ஹாசன்.

பூமிக்கு நெருங்கி வருவதால் வியாழன் கிரகத்தை நாளை தெளிவாக பார்க்கலாம்!

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஜுபிடர் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம்தான் மிகப் பெரிய கிரகமாகும். சூரியனை சுற்றும் போது 398.9 நாட்களுக்கு ஒருமுறை சுற்றுப் பாதையில் சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கிரகம் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு நாளை (29-ந் தேதி) நடந்தேற உள்ளது. பொதுவாக பூமிக்கும் வியாழனுக்கு இடையே உள்ள தூரம் 93 கோடி கி.மீ. ஆகும். ஆனால் சூரியனுக்கு நேர் எதிராக வியாழன் வரும் நிகழ்வின்போது, பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள தூரம் மிகவும் குறைந்து விடுகிறது. இந்த தூரம் 93 கோடி கி.மீ.யில் இருந்து 59.3 கி.மீ.யாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


நேர் எதிரில் வருவதால் வியாழன் மீது சூரிய ஒளி முழுவதும் படுவதாலும், பூமிக்கு அது நெருங்கி வருவதாலும் வியாழன் கிரகத்தை பூமியில் இருந்து தெளிவாக பார்க்க முடியும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நேரங்களில் வியாழன் கிரகம் வெளிச்சமாக காணப்படும். 
இந்த நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி நடந்தது. அடுத்ததாக 2012-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் இந்த நிகழ்வு நடக்கும். வானம் தெளிவாக இருந்தால், 28 முதல் 31-ந் தேதி வரை மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை வியாழன் கிரகத்தை பார்க்க, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிர்லா கோளரங்க நிர்வாகம் ஏற்பாடுகளை செய்யும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 16561 பேர் தற்கொலை !

இந்தியா முழுவதிலும் நடைபெற்றுள்ள குற்றச்சம்பவங்கள், விபத்துகள் பற்றிய தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் பற்றிய பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதனை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள விவரங்கள்: கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் தற்கொலையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில், 16 ஆயிரத்து 561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2009-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 424 பேர் தற்கொலை செய்திருந்தனர். இதனுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டைவிட 14.8 சதவீதம் பேர் அதிகம் தற்கொலை செய்துள்ளனர்.
 
சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1325 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 15916 பேரும், பெங்களூரில் 1778 பேரும், டெல்லியில் 1242 பேரும், மும்பையில் 1192 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1 மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் பெரும் பாலானோர் உயிரை இழக்கிறார்கள்.
 
இவர்களில் 70.5 சதவீதம் பேர் ஆண்கள். 67. சதவீதம் பேர் பெண்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங் களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சத வீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 1 ஆண்டில் விபத்தில் சிக்கி, தமிழ்நாட்டில் 64 ஆயிரத்து 996 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
உத்தரபிரதேசத்தில் 835 பேர் பலியாகியுள்ளனர். மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்திய பிரதே சத்தில் அதிகமாகியுள்ளது. இங்கு கடந்த ஆண்டில் 3135 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் 414 பேரும், மும்பையில் 194 பேரும், புனேயில் 91 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்

சென்னை மெட்ரோ ரயில்...!

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   இத்திட்டப்பணிகள் 14 ஆயிரத்து 600 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரை ஒரு மெட்ரோ ரெயில் பாதையும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை மற்றொரு பாதையும் அமைக்கப்படுகிறது. இரண்டு பாதையும் சேர்த்து மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்படும் ரெயில் பாதையில் 14.3 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையாகும்.
இதில் 11 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 8.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் மேலே ரெயில் பாதை உருவாக்கப்படுகிறது. இதில் 6 ரெயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன.   சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரையிலான திட்டத்தில் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
“இதில் சுரங்கப் பாதையாக 9.7 கிலோ மீட்டரும் வெளிப்புற பாதையாக 12.3 கிலோ மீட்டர் தூரமும் அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் 17 ரெயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 9 ரெயில் நிலையங்கள் சுரங்கப் பாதையிலும் 8 நிலையங்கள் வெளிப்புற நிலையமாகவும் அமைக்கப்படுகின்றன. வெளிப்புறமாக சாலையின் மேலே செல்லக்கூடிய ரெயில் பாதைக்கு தேவையான தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுரங்க ரெயில் பாதை அமைக்கப்படும் பணி கடினமானது. அந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. மண் சோதனை ஆய்வுகள் நடக்கின்றன. 
சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில்நிலையம் 2-வது நுழைவு வாயில், ஷெனாய்நகர், திருமங்கலம் வரையிலும், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை வரையிலும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால் அதற்கான நிலையம், பாதை அமைக்கும் பணி அடுத்த கட்டமாக தொடங்க உள்ளது. 
சுரங்கப் பாதையில் ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் 2012-ஆம் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) தொடங்கப்படும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.   இதற்காக சுரங்கம் தோண்டும் எந்திரம் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் அந்த எந்திரம் வந்து விடுகிறது. பூமியின் தரை தளத்தில் இருந்து 17 மீட்டருக்கு அடியில் குழி தோண்டப்படுகிறது. இரண்டு பக்கமும் குழி தோண்டி கான்கிரீட் சுவர் எழுப்பப்படும். அதன் வழியாக சுரங்கம் தோண்டும் எந்திரத்தை கொண்டு சென்று தேவையான அளவிற்கு ஆழம், அகலம் செய்யப்படும். 
ஒவ்வொரு சுரங்க ரெயில் பாதை தனித்தனி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்தந்த ஒப்பந்ததாரர்கள் இந்த பணியை தனித்தனியே செய்கிறார்கள்.சுரங்க ரெயில் நிலையம் அமைக்கும் பணி எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முதலில் தொடங்குகிறது. மெட்ரோ ரெயில் பாதை இருவழிப்பாதையாக அமைக்கப்படுகிறது. ஒரு பாதையில் போகவும், மற்றொரு பாதையில் வரவும் பாதை உருவாக்கப்படுகிறது. இதனால் இருபுறமும் ரெயிலில் ஏறி இறங்க பிளாட்பாரம் வசதி, நிலையங்கள் கட்டப்பட உள்ளன.  மெட்ரோ ரெயிலில் குறைந்தது 4 பெட்டிகள் அதிகபட்சமாக 6 பெட்டிகள் வரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2009-ல் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் பணி 2015-ம் ஆண்டுக்குள் நிறைவடைய வேண்டும்

குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் (71) காலமானார்!


200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  நரசிம்மன்.   “ஆறில் இருந்து அறுபது வரை” படத்தில் ரஜினி தம்பியாக நடித்தார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகளும் பேசப்பட்டன. வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ள வருவார் “நின்னுக்கோரி வரணும்” என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லி கொடுப்பார். இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். 
 
எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...