|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 January, 2012

மனதைக் கொள்ளை கொள்ள சில வழி...


மாமனார், மாமியார் மீது அன்பு செலுத்துங்கள். ஆமா கிடக்குதுங்க கிழவன், கிழவி என்று முகத்தை சுளிக்க வேண்டாம். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவர் இல்லை. உங்கள் பெற்றோரைக் கவனிப்பது போன்று நினைத்து மாமனார், மாமியாரையும் அன்பாகப் பார்ததுக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களை அவர்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். உங்கள் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை அடிக்கடி சமைத்து அசத்துங்கள். அவர் வயிறு நிறையும்போது மனமும் நிறையும். அடடா என் மனைவி எனக்கு பிடித்த உணவையே சமைக்கிறாளே என்று பெருமிதப்படுவார்.

அவர் ஆபீசுக்கு கிளம்புகிறாரா? அவரது உடை, ஷூ, பேக் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து கொடுத்து உதவுங்கள். அது அவரின் மனதை இலேசாக்கும். என் மனைவி பார்த்து, பார்த்து பணிவிடை செய்கிறாள் என்று கூறி பெருமைபடுவார். அவர் பணிக்கு செல்லும்போது நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். அவ்வாறு செய்தால் அன்றைய நாள் அவருக்கு இனிய நாளாக இருக்கும். பணி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மீண்டும் நெற்றியில் முத்தமிடுங்கள். அது மாலைப் பொழுதை இனிமையாக்கும். அவருக்கு பிடித்த மாதிரி உடை அணியுங்கள். குண்டானவரா, உடம்பைக் குறைக்கும் வழியைப் பாருங்கள். கணவரின் கண்ணுக்கு சிக்கென்று தெரியும்படி இருங்கள். பேச்சைக் குறைத்து அவரைப் பேசவிட்டு கேளுங்கள். எப்பொழுது பார்த்தாலும் தொண, தொணத்தாலும் ஆண்களுக்கு பிடிக்காது. அது அவர்களை எரிச்சலடையச் செய்யும்.  படுக்கை அறையில் அவர் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள். இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யலாம்...!

ஐ.பி.எல். டுவென்டி20 கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு!

 5வது ஐ.பி.எல். டுவென்டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் துவங்குகிறது. மொத்தம் 54 நாட்களில் 76 போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி மே 27ம் தேதி நடைபெறுகிறது. இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.) சார்பில் ஆண்டுதோறும் டுவென்டி 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான 5வது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் 4ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்குகிறது.

இந்த தொடருக்கான அட்டவணையை நேற்று மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்தது. சென்னையி்ல் நடக்க உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி கொள்ள உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்க உள்ளன. கடந்த ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, நீக்கப்பட்டதால், இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காது. மொத்தம் 72 லீக் போட்டிகளும், 3 தகுதிச் சுற்று போட்டிகளும், இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 54 நாட்களில் 76 போட்டிகள் நடக்க உள்ளது.

5வது ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியும், இறுதிப் போட்டியும் சென்னையில் மைதானத்தில் நடக்க உள்ளது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எதிரணி உடன் 2 முறை விளையாடும் இதில் 1 போட்டி உள்ளூரிலும், இன்னொரு போட்டி வெளியூரிலும் நடைபெறும். லீக் போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று தகுதிப்பெறும். தகுதிச் சுற்றில் வெற்றிப் பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏப்ரல் 4, 7, 10, 12, 14, 19, 21, 25, 28, 30 மற்றும் மே 4, 6, 10, 12, 14, 17 உள்ளிட்ட தேதிகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளது.

எப்போது கிரிவலம் செல்லலாம்?

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி,  எப்போது கிரிவலம் செல்லலாம்' என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 8ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 1.19 மணிக்கு தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 1.41 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும். இந்த மாத கிரிவலம் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியன்று வருவது சிறப்பு.

பென்னிகுக்கிற்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்.


முல்லை பெரியாறு அணையை கட்டி பென்னிகுக்கிற்கு லோயர்கேம்ப் பகுதியில் சிலையுடனான் மணிமண்டபம் அமைக்க தமிழ்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். லோயர் கேம்ப் பகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1 கோடி செலவில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மணிமண்டப திறப்பு விழாவிற்கு பென்னிகுக்கின் பேரன் அழைக்கப்படுவார் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

யார் பென்னிகுக்: முல்லை பெரியாறு அணை கட்டிய இன்ஜியரான பென்னிகுக்,116 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் தனது சொந்த பணத்தை செலவு செய்து இந்த அணை கட்டி உள்ளார். பல்வேறு இடையூறுகளை கடந்து தனது சொத்துக்கள் குஅனைத்தையும் விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு பென்னிகுக் முல்லை பெரியாறு அணையை கட்டி உள்ளார். 116 ஆண்டுகளுக்கு முன்னரே புவியூர்ப்பு விசை, தட்பவெப்ப நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருங்கற்களால் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டின் டாப்10 வார்த்தைகள்...

லாஸ் ஏஞ்சல்ஸ் : கேட், செர்ன், ஒலிம்பிக்ஸ் ஆகிய வார்த்தைகள் 2012ம் ஆண்டின் டாப் 10 வார்த்தைகளாக இருக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி இந்த ஆண்டில் முதல் இடத்தை பிடிக்கும் வார்த்தை கேட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஷன், கொண்டாட்டம் உள்ளிட்டவைகளில் முக்கிய இடம்பிடிப்பது கேட் வார்த்தையாகும்.

இதே நாள்...


  • மொனாக்கோ விடுதலை பெற்றது(1297)
  •  ஆல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்(1838)
  •  அலாஸ்காவில் ராணுவ ஆட்சி வந்தது(1900)
  •  பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது(1959)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...