|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 September, 2011

மன்னன் பூலித்தேவன் 296வது பிறந்த நாள் விழா வரும் 04.09.2011

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ள நெல்கட்டான் செவல் எனும் பாளையத்தை ஆண்டு வந்த மன்னன் பூலித்தேவன். 1755களில் ஆண்டு வந்த இந்த மாமன்னன் கப்பம் என்று ஒரு நெல் மணி கூட கட்ட மாட்டேன் என்று வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்த மாமன்னர்.


இதன் காரணமாகவே இவரது பாளையத்திற்கு நெல்கட்டான் செவல் என்ற பெயர் வந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த இந்த போராளியின் 296வது பிறந்த நாள் விழா வரும் 04.09.2011 அன்று நடைபெற உள்ளது.

அம்மன்னனின் பெயரால், அறக்கட்டளை அமைத்து வருடம் தோறும், அவரது பிறந்த நாள் விழாவை நடத்தி அன்னாதானம் செய்து வருபவர் அந்த அறக்கட்டளையின் தலைவரும், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன். வரும் 4ஆம் தேதி அவர் நடத்த இருக்கும் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இயக்குனர் மனோஜ்குமார், நடிகர்கள் ராஜேஷ், கஞ்சா கருப்பு, நடிகை கன்சிகா, கவிஞர் சினேகன் போன்றவர்கள் பங்கேற்க உள்ளனர்

கழுதைகள் போல் ஓடும் இந்திய வீரர்கள்! உண்மைய சொன்னார் நாசர் ஹுசேன்!

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. சில வீரர்கள் பந்துகளின் பின்னால் கழுதைகளை போல ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கிண்டல் செய்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே 0 4 என்ற புள்ளி கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நடந்த 20 ஓவர் போட்டியிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது. 

தோல்வி முகத்தில் இருக்கும் இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் அடங்குவர். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக பொறுப்பு வகித்தவர் நாகர் ஹுசேன்.

இவர் அளித்துள்ள பேட்டியில், 'என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக உள்ளது. 3 அல்லது 4 வீரர்கள் மட்டுமே சிறப்பாக பந்துகளை தடுக்கின்றனர்.ஒருசில வீரர்கள் கழுதைகளை போல பந்துகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களால் பந்தை தடுத்து ரன் குவிப்பை தடுக்க முடியவில்லை. இதுவே முக்கிய பலவீனம் என கருதுகிறேன் என்று கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.

எப்படி நீ பப்ளிக்கா போட்டு உடைக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம்!

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் முறைப்படி புகார் செய்வோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 


ஏரிகளை பாதுகாக்கும் தனியார் நிறுவனங்கள்!

சங்க காலம் முதல் தமிழக மக்கள் மழை நீரை ஏரிகளில் தேக்கி விவசாயம் செய்து வருகிறார்கள். குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கூட இந்த ஏரியை பயன்படுத்தி வந்தார்கள்.


இந்த நூற்றண்டில் இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறுகள் தோண்ட துவங்கிய பின்னர் தமிழகத்தில் ஏரிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது. ஏரிகள் பயன்பாடும், பராமரிப்பும் இல்லாமல் போனதால், படிப்படியாக நில ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி, பெரிய ஏரிகள் எல்லாம் இப்போது சுருங்கி குட்டையை போல மாறிவிட்டனநகர்ப் புறங்களில் உள்ள ஏரிகள், கழிவு நீரைத்தேக்கி வைக்கவும், குப்பை கூலங்ககளை கொட்டி வைக்கவும் இப்பொழுது பயன்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சிப் பகுதியில் இருந்த பல ஏரிகள் மூடப்பட்டு விட்டன. இன்னும் சில ஏரிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. நாட்டில், ஏற்படும் குடிதண்ணீர் பற்றாக்குறைக்கும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும் ஏரிகள் இல்லாமல் போனதுதான் காரணம் என்பதை உணர்ந்த சமுக ஆர்வலர்களும், சமுக நல அமைப்புகளும் ஏரியை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகிறது.

.சில அமைப்புகள் தாங்களே, தாங்கள் சொந்த செலவில் ஏரியை பராமரித்து பாதுகாக்கிறோம், ஏரியை எங்களிடம் ஒப்படயுங்கள் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன. இந்நிலையில் அம்மாபேட்டையில் உள்ள குமரகிரி ஏரியையும் தங்களிடம் ஒப்படைக்கும் படியும், பாழடைந்து கிடக்கும் அந்த ஏரியை ஆழப்படுத்தி சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டு, பறவைகள் சரணாலயம் அமைத்து, மாணவ மாணவியர்களுக்கு நீச்சல் பயிற்சிக்கும், சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கும் பயன்படுத்திக்கொள்ள இந்த ஏரியை பயன்படுத்திக்கொள்கிறோம் என்று “சிட்டிசன் போரம்’ அமைப்பினர் சேலம் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டனர்.ஏரியின் பாதுகாப்பு, மண் எடுத்தல், கரை அமைத்தல், மீன்பிடி உரிமை உட்பட சில பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் குமரகிரி ஏரியை பரமரித்துக்கொள்ளும் பொறுப்பை “சிட்டிசன் போரம் அமைப்பினரிடம் வழங்கியுள்ளது சேலம் மாநகராட்சி.


மாநகராட்சியின் பராமரிப்பில் கவனிப்பரில்லாமல் கிடக்கும் இந்த ஏரியில், சேலத்தில் உள்ள பெரும்பாலான இரட்சிகடைகக்ரர்கள் கொண்டுவந்து போடும் மாமிச கழிவுகளுடனும், அம்மாபேட்டை பகுதியிலிருந்து வரும் அனைத்து சாக்கடை நீரும், பிலாஸ்டிக் கழிவுகளும் கலந்து குப்பை கூலங்களுடன் நாற்றமெடுத்து கிடந்த குமரகிரி ஏறி இனி சுற்றுலா தளமாகப்போகிறது என்ற செய்தி பொது மக்களையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ''தண்ணீர்'' மனிதனின் ''உயிர் நீர்'' என்பதை அணைவரும் உணர்ந்தால்தான், நாட்டில் உள்ள நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்.

சேலத்தில், இருக்கும் அழகாபுரம் இஸ்மாயில்காண் ஏரி, கன்னங்குறிச்சி மூக்கநேரி ஆகிய இரண்டு ஏரிகளையும் நாங்கள் ஆழப்படுத்தி மரக்கன்றுகள் வைத்து, பறவைகள் சரணலயமாக மாற்றி பராமரித்துக் கொள்கிறோம் என்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் அனுமதி வாங்கிய சேலம் “சிட்டிசன் போரம்’ என்ற அமைப்பினர் அந்த இரண்டு ஏரிகளிலும், தூர் வாரி, ஏறிக்கரைகளை பலப்படுத்தி, கரைகளில் மரக்கன்றுகள் வைத்து, பறவைகள் சரணாலயமாக  அமைத்து வருகிறார்கள்.

பட்டுபுடவைகள் போலியா? உண்மையானதா?

தமிழ்நாட்டு மக்களின் திருமண நிகழ்ச்சியில் தங்கம் இல்லாமல் கூட இருக்கும் ஆனால் பட்டுபுடவை இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு பட்டு புடவையின் மீது பென்களுக்க்கு மோகம் அதிகம் உள்ளது.


உண்மையான பட்டு விலை அதிகம் என்பதால், செயற்கையான முறையில் செய்யப்பட்ட நூலை, வியாபார தந்திரத்தில் உண்மையான பட்டு நூலுடன் கலந்து நெசவு செய்துவிடுகிறார்கள்அதுமட்டுமில்லாமல் வெள்ளி நூலிழைகள் என்ற பெயரில் செயற்கையான பாலியஸ்டர் நூல் இழைகளையும் கலந்து நெசவு செய்து பொதுமக்களிடம் ஏமாற்றி விற்பனை செய்துவிடுகிறார்கள்.


இந்த போலிகளை கண்டறிய தமிழக அரசின் பட்டு விற்பனை நிறுவனமான கோ ஆப் டெக்ஸ்சில் பட்டுச்சேலையிலும் பட்டுத்துணியிலும் உள்ள பட்டு, தங்கம், வெள்ளி, பாலியஸ்டர் போன்ற நூலிலைகளின் அளவினையும் மதிப்பிட்டு சொல்லிவிடும் ஒரு நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.


இந்த இயந்திரத்தை (01.09.2011) சேலத்தில் அறிமுகம் செய்து வைத்த கோ ஆப் டெக்ஸ்சின் நிவாக இயக்குனர் உமா சங்கர், பட்டு சேலைகளின் தரத்தை கண்டறியும் இந்த சோதனைக்கு கட்டணமாக ஐம்பது ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும், இப்ப்போது சேலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் தமிழ் நாடு முழுவதும் அனைத்து கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் இந்த வசதி செய்யப்படும் என்றார். 

எலுமிச்சையின் மகிமை தெரியுமா?

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு.

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒத்துகொள்ளும் தன்மை உடையாது அதனால்தான் வெளிநாடுகளில் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது.

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.  நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும்.

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும்.
எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.

உதடுகளால் ஓவியம்...!


கேன்வாஸ் துணியில் முத்தம் கொடுத்தே ஓவியம் வரைய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் பிரபல பெண் ஓவியர், நாதலி ஐரிஷ் என்ற பெண்.
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த இந்த பெண், தன் உதடுகளில் சிவப்பு சாயத்தை (லிப்ஸ்டிக்) பூசி, பின்னர் அதை கேன்வாசில் பதித்தே அழகான ஓவியங்களை உருவாக்கி விடுகிறார். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு முத்ததின் அழுத்தத்தை வேறு படுத்துகிறார். அதன் மூலம் கேன்வாசில் தேவையான வர்ணம் வந்து விடுகிறது.
இந்த ஓவியம் வரைய அவர் எந்த பிரஷ்ஷையும் பயன்படுத்துவது கிடையாது. இவ்வாறு முத்தம் மூலமே, உலக பேரழகி மர்லின் மன்றோ ஓவியத்தை வரைந்து, சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து நாதலி ஐரிஷ் கூறியதாவது:
நான் பள்ளிக்கூட நாட்களிலேயே விரல்களில் மை தடவி, அதன் மூலம் படங்களை வரையும் கலையை கற்க ஆரம்பித்தேன். அதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும், இதற்கு முன்பும், பலர் இதே வகையில் ஓவியங்களை வரைந்துள்ளனர். எனவே, என் சொந்த படைப்பு என்ற பெருமை எனக்கு கிடைக்கவில்லை. ஏதாவது வித்தியாசமான முறையில் ஓவியம் வரைய வேண்டும் என முடிவு செய்தேன். அப்போதுதான், லிப்ஸ்டிக் மூலம் முத்தம் கொடுத்து, ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்கு முதலில் தேர்வு செய்த ஓவியம் மர்லின் மன்றோ.
மர்லின் மன்றோ ஓவியத்தை லிப்ஸ்டிக் மூலம் வரைவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். என் உதடுகளும், கண்களும் சோர்ந்து விட்டன. பல லிப்ஸ்டிக், "ஸ்டிக்'குகளை பயன்படுத்த வேண்டியிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போது, தன் முத்தம் மூலம் வேகமாக ஓவியங்களை வரையும் பயிற்சியைப் பெற்று விட்டார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வரும், இவர் விரைவில் பல நாடுகளில் நடக்கும் ஓவிய கண்காட்சிகளில் கலந்து கொண்டு, சாதனை நிகழ்த்த இருக்கிறார்.
சாதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், எப்படியும் சாதனை செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு நாதலி ஐரிஷ்.

விக்கெட் சரிவுதான் தோல்விக்கு காரணம் கேப்டன் தோனி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில், முக்கிய நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி புலம்பியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் இரு அணிகள் இடையிலான ஒரு "டுவென்டி-20' போட்டி, மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 11.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், எப்படியும் ஸ்கோர் 200 ஐ எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்து 13 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பின் 17.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்த இந்திய அணி, அடுத்து 7 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல், இந்திய அணி 19.4 ஓவரில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரகானே அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் (33), மார்கன் (49) அதிரடி கைகொடுக்க, 19.3 ஓவரில் 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

டெஸ்ட், ஒருநாள் அல்லது "டுவென்டி-20' என, எந்தவகை போட்டியாக இருந்தாலும், நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைய வேண்டியது முக்கியம். முதலில் விக்கெட்டுகளை இழக்கத் துவங்கிவிட்டால், 12 ஓவர்களுக்கு அப்புறம் சிறப்பாக விளையாட முடியாது. கடைசி கட்ட ஓவர்களில் அடித்து விளையாட, குறைந்தது 5 அல்லது 6 வீரர்கள் இருக்க வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில், மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். ஐந்தாவது பவுலர் இல்லாத நிலையில், கூடுதலாக 12 முதல் 15 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இடையில் விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்ததால், இது முடியாமல் போனது.
அறிமுக துவக்க வீரர் ரகானே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் முடிவு குறித்து இவர் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இதேபோல டிராவிட்டும் அபாரமாக ரன்கள் குவித்தார்.

விராத் கோஹ்லி "டுவென்டி-20' போட்டிகளில் அதிகம் பவுலிங் செய்ததில்லை. தவிர அணியில் இரண்டு "பார்ட் டைம் ஆப் ஸ்பின்னர்கள்' இருந்தனர். இவர்கள் வீசிய 4 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்கப்பட்டது. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம் தான்.
கடந்த இரண்டு ஆண்டுகளாவே இந்திய அணியில் ஐந்தாவது பவுலர் இடம்பெறுவது இல்லை. இப்போது மட்டும் இதில் மாற்றம் தேவைப்படும் என்று நினைக்கவில்லை. இவ்வாறு தோனி கூறினார்.

பாஜியோ கார் தொழிற்சாலை தமிழகத்திடமிருந்து தட்டி பறித்த குஜராத்!

பிரான்சின் பி.எஸ்.ஏ பாஜியோ சிட்ரான் நிறுவனம், குஜராத்தில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. சென்னைக்கு அருகில், கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்த இந்நிறுவனத்தின் திடீர் மனமாற்றம், தமிழக அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இரு மாதங்களுக்கு முன்பு, பாஜியோ சிட்ரான் நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, சென்னையில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, கார் தொழிற்சாலை அமைப்பதற்கான நில ஒதுக்கீடு உள்ளிட்ட, அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை அருகே கார் தொழிற்சாலை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வரை சந்தித்த மறுநாளே, இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து, அம்மாநிலத்தில் கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், பேச்சுவார்த்தை நடத்தியது.

இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த இரு மாதங்களாக, பாஜியோ கார் தொழிற்சாலை, எங்கு அமையும் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், இந்நிறுவனம், குஜராத்தின் சனந்த் தொழிற்பேட்டையில் அதன் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, குஜராத் அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழகத்தின் வாய்ப்பை, குஜராத் அரசு தட்டிப் பறித்து விட்டதாக, இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். சனந்தில் ஏற்கனவே டாட்டா நிறுவனம் அதன் "நானோ' கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. போர்டு மோட்டார்ஸ் நிறுவனமும், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், அங்கு கார் தொழிற்சாலை அமைக்க உள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது

இதே நாள்...


  • வியட்நாம் குடியரசு தினம்(1945)
  •  அமெரிக்காவின் முதலாவது ஏ.டி.எம்., மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)
  •  ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இறந்த தினம்(2009)
  •  சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது(1970)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...