|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2011

பன்னாட்டு நிறுவன ஆதிக்கம் கூடாது விஜயகாந்த்!


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆதிக்க நாடுகளின் பன்னாட்டு கம்பெனிகளை இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசு சில்லறை வர்த்தகத்திலும் அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்துள்ளது. ஒரே ஒரு பொருளை மட்டும் விற்பனை செய்யும் அந்நிய நிறுவனங்கள் 100 சதவிகிதம் நேரடி முதலீடு செய்யலாம் என்றும், பல்வேறு பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்கள் 51 சதவிகிதம் முதலீடு செய்யலாம் என்றும் அறிவித்ததன் மூலம் வளர்ந்த நாடுகளில் உள்ள பகாசூர கம்பெனிகள் இந்தியாவில் புகுந்து கொள்ளை லாபம் சம்பாதிக்க இந்திய அரசு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

இத்தகைய முடிவினால் சிறு வியாபாரிகளின் வாழ்வு சூறையாடப்படும் என்பதில் சந்தேகமில்லை. சிறு மற்றும் நடுத்தர தொழில்களும் பெரிதும் பாதிக்கப்படும். இது நம்முடைய பொருளாதாரத்தை சீர்குலைப்பது மட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரித்து கோடிக் கணக்கான குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திவிடும். ஓர் அரசின் பொருளாதாரக் கொள்கை அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் கண்ணியமான வேலை வாய்ப்பைத் தருவதாகவும், கௌரவமான ஊதியத்தை பெறுவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக இந்திய அரசு இந்த நடவடிக்கையின் மூலம் சாதாரண மக்களின் சொற்ப வாழ்வையும் பறிப்பதாக உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

அந்நிய நாட்டு முதலீடு நம்முடைய நாட்டில் கூடவே கூடாது என்று நான் கூறவில்லை. அந்நிய நாட்டு முதலீடு ஒன்று நம்முடைய நாட்டின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இங்கேயே உற்பத்தி செய்கிற பொருளை வாங்கி, இங்கேயே விலைக்கு விற்கும் வியாபாரம் தொன்று தொட்டு நாம் செய்து வருவதே தவிர, நமக்கு தெரியாதது அல்ல.இரண்டவாது அந்நிய நாட்டு மூலதனம் நம்முடைய நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதாக இருந்தால் வரவேற்கலாம். 


ஆனால், இதுவோ வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு பதிலாக, இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறிக்கின்ற ஒன்றாகும். ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் இந்த அந்நிய நாட்டு மூலதனம் தேவையற்றது மட்டுமல்ல, தீதானதும் கூட. ஏற்கனவே வர்த்தகம் என்ற பெயரால் வந்த கிழக்கிந்திய கம்பெனிதான் இந்தியாவை 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி சுரண்டியது. அதே வகையில் இன்றும் வரலாறு திரும்புகிறது என்று சொல்வதைப் போல மீண்டும் ஆதிக்க நாடுகளின் பன்னாட்டு கம்பெனிகளை இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுப்பதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


ஆபத்தை ஏற்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள்!


தலைவலி உடல்வலி என்று எதற்கெடுத்தாலும் வலி நிவாரண மாத்திரை உட்கொள்பவர்களா? நீங்கள் அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. சின்ன சின்ன வலிகளுக்கெல்லாம் வலிநிவாரண மாத்திரை எடுத்துக்கொண்டால் சிறுநீராக புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு மாத்திரை போடுவதென்பது சாக்லேட் சாப்பிடுவதைப்போல. தலைவலி, கால்வலி என்று தொட்டதற்கெல்லாம் மாத்திரை போட்டுக்கொள்வார்கள். மருத்துவர்கள் பரிந்துரைப்பதை விட தாங்களாகவே மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று வலிநிவாரண மாத்திரைகளை போட்டுக்கொள்பவர்களும் இருப்பார்கள். 

இப்படி அடிக்கடி வலி நிவாரண மாத்திரை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் என்று அபாயம் உள்ளதாக பாஸ்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி பேராசியர் இயாங்ஷோ தலைமையிலான குழுவினர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களில் 51 சதவிகிதம் பேர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பிரின் வலி நிவாரணி மாத்திரையான ஆஸ்பிரின், டிஸ்பிரின் போன்ற மாத்திரைகள் உடனடியாக வலியை போக்கினாலும் மெல்லக்கொல்லும் ஆபத்தை விளைவிப்பவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வலி நிவாரணியாக அந்த மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தவர்கள் ஒரு கட்டத்தில் அந்த மாத்திரைக்கு அடிமையாகிவிடுகின்றனர். புகைப்பழக்கத்திற்கும், குடிப்பழக்கத்திற்கும் அடிமையாவதைப்போல வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாமல் அவர்களால் காலம் தள்ள முடியாது. இதனால் எண்ணற்ற நோய் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.

சிறுநீராகம் செயல் இழக்கும் இந்த மாத்திரைக்கு அடிமையானவர்கள், மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து விடும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. வாழ்நாளில் ஆயிரம் வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொண்டவர்கள் நிச்சயம் சிறுநீரக செயல் இழப்புக்கு ஆளாவார்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சில சமயம், நுரையீரல் தொடர்புடைய நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ரத்தத்தை சுத்திகரிப்பது தடைபடுகிறது. வயிறு புண்ணாகி அல்சர் நோய் ஏற்படும். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்படும். மேலும் காது இரைச்சல், தோல் நோய்கள், முடிகொட்டுதல், சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்களும் ஏற்படும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை

சிறு குழந்தைகளுக்கு ஆபத்து கர்ப்பிணிப் பெண்கள் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொண்டால் அது குழந்தைகளையும் பாதிக்கும் என்பது ஆய்வாளர்களின் எச்சரிக்கை. சிறுவர்களுக்கு ஆஸ்ப்ரின், டிஸ்ப்ரின் போன்ற மாத்திரைகளை கண்டிப்பாக கொடுக்கக் கூடாது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் நான்கு வயது குழந்தைகள் ஆஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் மாத்திரை உட்கொண்டால் நுரையீரல் செயல் இழப்பு ஏற்படும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாகும். எனவே உடலில் வலி தோன்றினால் உடனே மாத்திரை சாப்பிடுவதை விட மருத்துவர்களை நாட வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம்!


 சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலின் சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் படி உயர்நீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜைகள் நடை பெற்று வருகிறது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களுக்கு பம்பை அருகே சாலக்கயம் என்ற இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த டோல்கேட்டில் பேருந்துகள் உள்ளிட்ட பெரிய வாகனங்களுக்கு ரூ.100ம், மினிபஸ்களுக்கு ரூ.75ம், வேன்களுக்கு ரூ.50ம், கார்களுக்கு ரூ.30ம், ஆட்டோக்களுக்கு ரூ.15ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சபரிமலை வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடந்த வருடம் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் பார்க்கிங் கட்டணம் எனக்கூறி மீண்டும் தேவசம்போர்டு பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலை தொடர்பாக கோவிலின் சிறப்பு ஆணையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன், சி.டி.ரவிக்குமார் அடங்கிய பெஞ்ச் "சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மலைப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். வாகனங்கள் நுழையும் எந்த பகுதியிலும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதற்கான அதிகாரமும் தேவசம் போர்டுக்கு கிடையாது'' என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ரம்மி ஆடுவது சூதாட்டத்தின் கீழ் வராது என்று சென்னை உயர்நீதிமன்றம் !


 ரம்மி ஆடுவது சூதாட்டத்தின் கீழ் வராது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் சட்டவிரோத சீட்டுக்களை விளையாடினால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராய நகரைச்சேர்ந்த மகாலட்சுமி கலாச்சார சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மகாலட்சுமி கலாசார சங்கத்தில் ரம்மி சீட்டு விளையாடியவர்களை பாண்டிபஜார் போலீசார் கைது செய்தனர், அவர்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதனை எதிர்த்து மகாலட்சுமி கலாச்சார சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது :சென்னை தியாகராயநகரில் 1981-ம் ஆண்டில் எங்களது சங்கம் தொடங்கப்பட்டது. எங்கள் சங்கத்தில் பலர் 13 சீட்டுக்கள் கொண்ட ரம்மி என்ற சீட்டு விளையாட்டை விளையாடுவார்கள். காசு வைத்தும் வைக்காமலும் இந்த விளையாட்டை உறுப்பினர்கள் ஆடுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த 10.8.11 அன்று எங்கள் சங்கத்தில் ரெய்டு நடத்திய பாண்டிபஜார் போலீசார், அப்போது மங்காத்தா என்ற சூதாட்டத்தை ஆடுவதாகக் கூறி 56 பேர் மீது வழக்கு தாக்கல் செய்தனர். 178 பண டோக்கன்களையும் கைப்பற்றினர்.

திறமை வளர்க்கும் ரம்மி ரம்மி சீட்டு விளையாட்டு சூதாட்ட குற்றத்தின் கீழ் வருவதல்ல. அது திறமையை வளர்க்கும் விளையாட்டு. 3 சீட்டுக்களை வைத்து மங்காத்தா விளையாடுவதுதான் சூதாட்டம். 13 சீட்டுக்களை வைத்து விளையாடும் பந்தயமாக பணம் கட்டியோ, கட்டாமலோ 'ரம்மி' விளையாடுவது சூதாட்டம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே எங்கள் சங்கத்தில் ரம்மி சீட்டு விளையாடுவதை தடுக்கும் விதமாக போலீசார் தலையிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது சூதாட்டம்தான் இதற்கு பதில் மனு தாக்கல் செய்த பாண்டிபஜார் போலீசார், மகாலட்சுமி கலாசார சங்கத்தில் சீட்டுக்கட்டை வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். இவர்களிடம் இருந்து ரூ.6.75 லட்சம் சூதாட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.

ரம்மி ஆடினால் தப்பில்லை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், ரம்மி என்பது, ஞாபகசக்தி, திறமை, சரியான நேரத்தில் சரியான சீட்டை இறக்கும் யுத்தி போன்ற பல திறமையான அம்சங்களை உள்ளடக்கிய ஆட்டம் என்று உச்சநீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் கூறுவதுபோல், அவர்கள் ரம்மி ஆட்டம்தான் ஆடியிருந்தால் அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. வாய்ப்பை ஏற்படுத்தி பணத்தை கொட்டிக் கொடுக்கும் மற்ற சீட்டுக்கட்டு ஆட்டங்களைப்போல், ரம்மி ஆட்டத்தை கருத முடியாது. ஆனால் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் விருந்தாளிகள், சீட்டை வைத்து சூதாட்டம் விளையாடியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ரம்மி விளையாட்டை தவிர, வேறு ஏதாவது சட்டவிரோத சீட்டு விளையாட்டு விளையாடப்பட்டாலோ, அது தொடர்பான தகவல்கள் வந்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தார்.


நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா!


நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும்.

எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை.

முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான்

ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ ராசா 

தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு 

முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் 

அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். 

ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில் உள்ளார். 

இந்நிலையில் ஆ.ராசா நீதிமன்ற அறையில் 

பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். 

அவர் கூறுகையில், "திகார் ஜெயில் வாழ்க்கை, 

தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும்

என்னை மேலும் செம்மையாக்கி உள்ளது.



எனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து விட்டேன். சிறையில் இந்த புதிய வாழ்க்கையை கிட்டத்தட்ட 12 மாதங்கள் அனுபவித்து விட்டேன். இந்த இரண்டிலும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நான் தற்காலிக விடுதலையை விரும்பவில்லை. இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் ஜாமீன் கேட்டு எந்த கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும் போது, பலர் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் நிரந்தரமாகவே ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று நீங்கள் கருதி விடக்கூடாது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கட்டும் முதலில் கனிமொழி ஜெயிலில் இருந்து விடுதலை ஆகட்டும். அதன் பிறகு நான் ஜாமீன் மனுதாக்கல் செய்வது பற்றி யோசிக்கிறேன்," என்றார்.


ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி...


இந்திய சமையலில் தனியா எனப்படும் கொத்தமல்லிக்கு சிறப்பு மிக்க இடமுண்டு. சமையலில் மசாலா பொருளாக வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் இருந்து வளரும் சிறுதாவரமான கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இந்த சிறிய வகை தாவரத்தில் உள்ளது என்றால் மிகையில்லை. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உரைவதை தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.

கண்பார்வை தெளிவடையும் சிறுவயது முதலே கொத்தமல்லி கீரையைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலைக்கண்நோய் ஏற்பட்டவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர மாலைக்கண்நோய் குணமடையும்.

மக்கட் பேறு ஏற்படும் உடலில் புதிய ரத்தம் உண்டாகி நல்ல பலம் பெற வேண்டுமானால் கொத்தமல்லிக்கீரையை நெய்யில் வதக்கி துவையல் போல சாப்பிட்டு வரவேண்டும். இதன் மூலம் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துக்களை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். தினசரி மல்லிக்கீரையைச் சாப்பிட்டு வர எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் பலசாலியாக வாழலாம். கொத்தமல்லிக்கீரையை தினசரி சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உற்பத்தியாகும். இதனால் தாது விருத்தி அடையும். மக்கட் பேறுக்கு வழிகிடைக்கும்.கர்ப்பிணிகள் கர்ப்பம் தரிக்கத் தொடங்கிய மாதத்தில் இருந்து கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து வர வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தையில் எலும்புகளும், பற்களும் உறுதியடையும். சொறி, சிரங்கு உள்ளிட்ட நோய்கள் தாக்காது.

வயிற்றுப்புண் குணமடையும் வயிற்றில் புண் இருந்து அதன் மூலம் அடிக்கடி வலி ஏற்படுபவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் இதனால் புண் ஆறி வயிற்று வலி குணமடையும்.வாய், உதடு போன்றவற்றில் சிறு புண் ஏற்பட்டிருந்தாலும் கொத்தமல்லியை துவையல் செய்து உட்கொண்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும் 

மூக்கு தொடர்புடைய நோய்கள் பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற நோயினால் சிரமப்படுபவர்கள் கொத்தமல்லித் துவையலை உணவில் சேர்த்து உட்கொள்ளவேண்டும். இதனால் மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். தோல் நோய்கள் குணமாக்குவதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. சொறி, சிரங்கு, புண் போன்றவைகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு வந்தாலும் தினசரி கொத்து மல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர அவை சீக்கிரம் குணமடையும்.

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!


 மும்பை தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் பெயர் அந்த தாக்குதல்களில் காயம் அடைந்து நிதியுதவி பெற்றோர் பட்டியலில் இருந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். 

பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. அவ்வாறு நிதியுதவி பெற்றவர்களின் பட்டியல் மும்பை கலெக்டர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தாக்குதல்கள் நடத்திய தீவிரவாதி அஜ்மல் கசாபின் பெயரும் இருந்துள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் ஒரு முன்னணி செய்தித்தாள் இதைக் கண்டுபிடித்து அதிகாரிகளிடம் தெரிவித்தது. அதன் பிறகு பட்டியலைத் திருத்தியுள்ளனர். இது குறித்து மும்பை கலெக்டர் சந்திரசேகர் ஓக் கூறுகையில், "இந்த பட்டியல் தயாரித்தவர் செய்த தவறால் கசாப் பெயர் காயமைடந்து நிதியுதவி பெற்றவர்கள் பட்டியலில் வந்துள்ளது. அந்த தவறைத் திருத்தி தற்போது புது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது," என்றார்.

மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள திருமாவளவன் அழைப்பு!


 மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்கள், கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக நவம்பர் 27ம் நாள் உலகம் முழுக்க தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை நவம்பர் 27 ந் தேதி என்பதால் மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் கொண்டாட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு வீரநங்கை செங்கொடி அரங்கில் மாவீரர் நாள் நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரதிநிதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி மோடி!


 நான் தமிழர்களின் பிரதிநிதியாக இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யுனைடெட் விஷுவல்ஸ் நாடகக் குழுவின் நிறுவனர் ‘டி.வி.'வரதராஜன், தனது குழுவினருடன் கடந்த 13ம் தேதி முதல் அகமதாபாத், மும்பை, சூரத் ஆகிய நகரங்களில் நாடகங்கள் நடத்தினார். அகமதாபாத்தில் நாடகம் நடத்தச் சென்ற குழுவினர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு குறித்து வரதராஜன் கூறுகையில், "குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை வலியுறுத்துவதற்காக சீனா சென்றிருந்த முதல்வர் நரேந்திர மோடி அகமதாபாத் திரும்பியிருந்தார். 

அவரை சந்தித்து பேச வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தவுடனே எங்களுக்கு நேரம் ஒதுக்கினார். எங்கள் குழுவை வரவேற்று அன்பாக உபசரித்து அரை மணி நேரம் எங்களுடன் கலந்துரையாடினார். குழுவில் உள்ள அனைவரையும் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தச் சொல்லி எங்களைப் பற்றி தெரிந்து கொண்டார். கலைஞர்கள் நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அவர் பேசியபோது அவரது முகம் பெருமிதத்தில் பூரித்தது. தான் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள மணிநகரில் தமிழர்கள் அதிக அளவில் இருப்பதாகவும், தமிழர்களின் பிரதிநிதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் மோடி தெரிவித்தார். அதை கேட்டு நாங்கள் எல்லாம் நெகிழ்ந்துபோனோம். தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் குஜராத் வாழ் தமிழர்களுக்காக நாடகம் ஒன்றை நடத்த அனுமதி கேட்டதற்கு உடனே ஒப்புதல் அளித்தார்," என்றார்.

மாவீரர் தினம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று(26.11.2011)   57 வது பிறந்த நாள்.  இதை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழின உணர்வாளர்கள்,  அவர்களது இடங்களில் கொண்டாடி வருகின்றனர். தமிழ் அமைப்புகள் அனைத்தும் அவர்களது அலுவலகங்களில் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. நாளை 27ம் தேதி மாவீரர் தினம்.  சேலத்தில் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு கட்சியினர் இந்த மாவீரர் தின எழுச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த எழுச்சி கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.  ஆனால்,  தடையை மீறி இக்கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் காவல்நிலையத்தில் 4 பெண்களை பாலியல் பலாத்காரம்!



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுரை அடுத்த டி.மண்டபத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த காசி வசிக்கிறார்.  திருட்டு வழக்கில் காசி உள்ளிட்ட 6 பேர் திருக்கோவிலூர் போலீசார் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணைக்காக ராதிகா, வைத்தீஸ்வரி, கார்த்திகா, லட்சுமி ஆகிய 4 பெண்களும் அழைத்துச்செல்லப்பட்டனர்.     இவர்கள் காசியின் உறவினர்கள்.   22ந் தேதி இரவு திருக்கோவிலூர் போலீஸ் விசாரணை என்ற பெயரில்  பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்த 4 பேரும் புகார் கூறியுள்ளனர்.  விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 4 பெண்களும் நீதிகேட்டு மனுகொடுத்துள்ளனர்.

நாசமா போயிருவீங்க சீமான்!


25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அவர் பேசுகையில், ஒருத்தன் கேட்கிறான் பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் ஏறிவிட்டது. ஏன்னென்றால், பொதுநிறுவனங்களை பாதுகாக்க நிதி இல்லை. உடனே ஒருத்தன் எடுத்து பேசுறான், அண்ணா நூலகத்தை மாற்ற காசு இருக்கு. இதுக்கு காசு இல்லையா. இதுக்கு யாரிடம் பதில் இருக்கு.  மத்திய அரசு, மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்கி தரவில்லை. மத்திய அரசுடன் கூட்டணி அமைக்காமல் இந்த அரசு அமைந்திருக்கிறது. பெரும்பான்மையோடு அமைந்திருக்கிறது. தனக்கு அடிபணியவில்லை. அதனால் வஞ்சிக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஆளுகிற காங்கிரஸ் அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது. 

மேற்கு வங்காளத்தை ஆளுகிற மம்தா பானர்ஜியோடு கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இங்கே ஆளுகிற அதிமுக அரசு காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. அதனால தேவையான நிதியை தரவில்லை. அப்ப நீங்க என்ன செய்திருக்க வேண்டும். மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கி தராததால், நான் விலைவாசியை உயர்த்தினால் பால் விலை 6 ரூபாய் 25 காசு கூடும். பேருந்து கட்டணம் இரட்டிப்பாகும். பேருந்தில் எவன் போவான். ஷேர் ஆட்டோவில்போகமுடியாதவன். இருசக்கர வாகனம் வைத்துக்கொள்ள முடியாதவன். கார் வைத்துக்கொள்ள முடியாதவன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாதச் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வாங்குபவன்தான் பேருந்தில் போவான். அவன் காசை பறித்து, அதில் இருந்து நிதியை பெருக்கி, நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு மோசமானது என்பதை சிந்திக்க வேண்டும். 

அப்ப என்ன செய்திருக்க வேண்டும். என் அன்பு மக்களே, இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி தரவில்லை என்றால், பால் விலையை ஏற்றினால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் உங்களுக்கு இவ்வளவு சுமை இருக்கும். இவ்வளவு கஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே எனக்கு ஆதரவாக நில்லுங்கள். நான் போராடுகிறேன். அப்படித்தான் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் போராடினார்கள். மத்திய அரசு வேண்டிய அறிக்கையை கொடுக்காதபோது, மக்களைத் திரட்டி ஒரு நாள் போராட்டம். அடுத்த நாள் பதறிக்கொண்டு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. அப்படி போராடி இருக்க வேண்டும். மத்திய அரசு, நான் உங்களை அடிக்கிறேன். நீங்கள் திருப்பி என்னைத் தான் அடிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் அப்பாவியை அடிக்கக் கூடாது. அது சரியல்ல. 

ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை. பெரம்பலூரில் டிசம்பர் 15ல் தம்பி அப்துல் ரசக்கின் நினைவுத் தினத்திற்கு கூட்டம் போட்டால் அந்த இடத்தில் அனுமதியில்லை. ஏன், பக்கத்தில் அகதிகள் முகாம் இருக்கிறது. சீமான் பேசினால், பக்கத்தில் இருக்கிற அகதிகள் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இலங்கைக்கு போய்விடுவானா. சீமான் பேசினால் உணர்வு பெற்றுவிடுவான். ஏண்டா ஒரு தமிழன் கூட உணர்ச்சியே பெற்றுவிடக் கூடாதா. உணர்வே பெற்றுவிடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தீங்கன்னா, இதை எங்கப்போய் சொல்லறது. நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கும், எங்கோ ஓரத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருக்கும் தமிழர்கள் உணர்வு பெறுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அதுக்காக அந்த இடத்தில் பேச அனுமதி இல்லையென்றால், இதைவிட ஒரு கொடுமை, இதைவிட ஒரு சர்வாதிகாரம், இதைவிட அடக்கமுறை எதாவது இருக்கா.
கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னை பேச வைத்து இறையாண்மைக்கு எதிரா பேசுறான். விடுதலைப்புலிகளை ஆதரிச்சு பேசுறான். சட்டத்துக்கு எதிரா பேசுறான் என்று தூக்கி தூக்கி உள்ளே போட்டாரு. இதுக்கு அதுவே பரவாயில்லை. இங்கே நீ பேசவே விடல. அந்த கொடுமையை தொலைக்கத்தான் இந்த வேலையை செய்தோம். இது அதைவிட பெரிய கொடுமையா இருக்கு. இதை தொலைக்க பெரிய வேலை செய்யணும் போலிருக்கு நாங்க. நான் சொன்னேன் ஒரு அதிகாரிகிட்ட எடுத்து, நாசமா போயிருவீங்கன்னு சொன்னேன். இது நடக்கும். இந்த சேட்டையெல்லாம் நீங்க வைச்சிக்கக் கூடாது. ஒண்ணு தெரிந்துக்கொள்ளுங்கள் அப்படியே ஒரு வாய்க்காலில் ஓடுகிற தண்ணீரை நீங்க அடக்கி தேக்கி தேக்கி வைச்சி வைச்சி திறந்தீங்கண்ணா, அது வேக வேகமா பாயும். அதைத்தான் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. இரவு முழுவதும் பட்டியில் கட்டி வைத்திருந்த மாடுகளும், ஆடுகளும் காலையில் திறந்து விட்டால் எவ்வளவு வேகமா வெளியே பாய்ந்து வருமோ, அவ்வளவுவேகமா நாங்க வருவோம். ஆடு, மாடுமே அப்படி பாயும்போது, வீரத்தமிழ் புலிகள் நாங்கள் எப்படி பாயுவோம் என்று நீங்க புரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

முதல் தரிசனம் பெண்களுக்கு!


எந்தக் கோவிலாக இருந்தாலும் அந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவனின் புராண இதிகாச வரலாறு அடிப்படையில் தான் அந்த இறைவனுக்குரிய வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன. சில தலங்களில் துளசி இல்லை; வைணவக் கோவில்களில் திருநீறு நுழைவதில்லை. ஒவ்வொரு இறைவனுக்கும் தனித் தனி வழிபாட்டுப் பூக்கள் உண்டு; வழிபாட்டு முறைகளும் உண்டு. இந்த இறைவர்களை வணங்கும் பக்தர்களுக்கும் தனித்தனி அனுஷ்டானங்களும் உண்டு. இறைவழிபாட்டில் காணும் இந்த வேறுபாடுகளை யாரும் காரணம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் இவைகள் கற்பிக்கப்பட்ட காரணங்கள் அன்று. இறைவனே விரும்பி ஏற்கும் வழிபாட்டு முறைகள் ; அனுஷ்டானங்கள்.
சபரிமலையில் குடிகொண்டுள்ள  ஐயப்பனுக்கும் தனியான அனுஷ்டானங்களும் வழிபாட்டு முறைகளும் அமைந்திருப்பது வரலாற்றுப் பின்னணியோடு அமைந்த புனிதமான ஒன்றாகும்.  ஐயப்பன் பரிபூரண பிரம்மச்சரியத்தை கைக்கொண்டு அதையே தனித் தத்துவமாக்கி, அந்தத் தத்துவத்தின் விளக்கமாகச் சபரி மலையில் விளங்கிக் கொண்டிருப்பவர். பிரமச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு அருள் பாலிக்க மறுக்கும் கடவுள் என்று அர்த்தம் ஆகாது. பூரண பிரம்மச்சரிய நிலையில் தவத்தில் ஆழ்ந்திருக்கும் ஐயன் எத்தனையோ விதங்களில் பெண்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அவர் நோக்கில் உலகப் பெண்கள் அனைவரும் மஞ்சமாதாக்கள். எனவே பெண்களின் மஞ்சள் குங்குமத்திற்கும் மாங்கல்ய பலத்திற்கும்  ஐயப்பன் காவலனாக அமைந்துள்ளார்.

ஐயப்பன் வழிபாட்டில் பெண்கள் அவர் சன்னிதானத்தை நேரிடையாகக் கண்டு, பரிபூரணக் காட்சியில் திளைத்து, அருள் பெரும் நிலை இல்லாதிருப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகாது. ஐயப்ப வழிபாட்டுத் தத்துவத்தை முழுமைப்படுத்தும் முறையில் மேற்கொள்ளும் புனிதப்பயணத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றேயாகும். எனவே பெண்கள் வரக்கூடாது என்பது தடை செய்யப்பட்டதன்று; தத்துவமாக்கப்பட்ட ஒன்று. சபரிமலைக்குச் செல்லும் சாமிமார்கள் ஒரு மண்டலம் தவ வாழ்க்கையில் விரதங்களை மேற்கொண்டுள்ளார்கள். தாயுடன் இருக்கும் காலத்தில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் கனிவு, பாசம் பற்று இவையனைத்தும் திருமணத்திற்குப் பின்பு மனைவிடம் பெறமுடிகிறது. பெண்களின் இந்தத் தாய்மைப் பண்புகளை நினைத்து நன்கு பாராட்டும் வாய்ப்பு இந்த விரதகாலத்தில் ஆண்களுக்குக் கிடைக்கிறது. எல்லாப் பெண்களையும் தாய்மைப் பண்பில் கருதும் மேலான காலம் இது. மாளிகைபுரம் என்று மரியாதையாக மட்டுமல்லாமல் புனிதமான தெய்வநிலையிலும் அவர்களை அழைக்கிறார்கள். எனவே ஐயப்பன் விரதகாலங்களில் வீட்டில் கண் கூடாகக் காணுத் தெய்வங்கள் பெண்களே.
இந்தப் பெண்களுக்கு  ஐயப்பன் அருள் எவ்வாறு கிடைக்கிறது? அவர்களும் ஆண்களைப் போன்று மலைக்குச் சென்று ஐயனைக் காணாத நிலையில் அவன் அருள் கிட்டிவிடுமா? 

இது நியாயமான கேள்வி. ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவத்தில் ஆண்கள் மலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் முன்னரே ஐயன் அருள் பெண்களுக்குத்தான் முதலில் கிடைக்கிறது. விரதம் மேற்கொள்ளுங் காலங்களில் சாமிமார்கள் ஒவ்வொருவரும் ஐயப்பனாகவே ஆகிவிடுகிறார்கள். விரதகாலங்களில் பெண்கள் செய்யும் திருத்தொண்டுகள் அனைத்தும் குடும்பத்திலுள்ள ஒருவருக்குச் செய்யும் நடைமுறைச் செயல்களாக அமையவில்லை.  ஐயப்பனுக்கே அவர்கள் திருத்தொண்டுகள் ஆற்றும் பெரு வாய்ப்பு பெண்களுக்கே கிடைக்கிறது. சபரிமலைக்குச் சென்று அருள் பெற்றுத் திரும்பும் சாமியார்களுக்கு முன்னதாகவே அவர்களுக்குச் செய்யும் திருத்தொண்டுகளால் ஒவ்வொரு நாளும் விளக்கேற்றும் அருஞ்செயல்களால் எல்லாவற்றிற்கும் மேலாக விரதம் பூரணமடைய ஒத்துழைப்புகளைத் தருகின்ற புனித எண்ணங்களால் ஐயப்பனின் அருள் ஆசிகளைப் பெண்கள் முன்னதாகவே பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

இந்த நடைமுறைத் தத்துவங்களே ஐயப்ப வழிபாட்டில் இடம் பெற்றுவிட்ட படியால் பெண்கள் வெகு தூரத்தில் சிரமான நிலையில்- கடினமான பாதைகளில்- காட்டில்-மலையில்-கடந்து சென்று இறைவனைக் காணவேண்டியதில்லை. மற்ற வழிபாட்டில் காணப்படும் வழிபாட்டு முறைகளைவிட  ஐயப்ப வழிபாட்டு முறைகள் தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. உலக மாயைகளில் சிக்கித் திணறுவோர் மனஅடக்கம். புலன் அடக்கம் இவற்றிற்கான பயிற்சியில் ஈடுகொண்டு வெற்றி பெற்று, இந்த அடக்கங்களின் தத்துவமாய் மலையில் இருப்பவனைக் காணுவது ஐயப்ப வழிபாட்டின் சிறப்பான விஷயம். பெண்கள் இங்கிருந்தபடியே மன அடக்கம், புலனடக்கம் பெற்று ஐயப்ப சுவாமிமார்களுக்கு சேவை புரிந்து ஐயப்பனின்  அருள் பெறுகின்றனர். ஆனால் ஆண்கள் இதை விரதமாக கடைப்பிடித்து சபரிமலை சென்று இறைவனை காண்கின்றனர். இந்த எண்ணத்தில்தான் பரம்பரை பரம்பரையாக ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே செல்வது வழக்கமாக உள்ளது.

இவை தவிர-
1. சன்னதியிலும், சுற்றுப்புறத்திலும் பெண்களுக்கென்று தனி வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை.

2. விரதமிருப்பவர்கள் பெரியபாதையின் வழியாகச் சென்று வழிபாடு செய்வதே முறையாகவிருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் நடந்து செல்ல வேண்டும். பெண்கள் காடுகளினூடே இரண்டு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளுவது கடினமான ஒன்றாகும்.

3. கடுங்குளிர், மழை இத்தகைய சூழ்நிலைகள் அனைவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. குளிப்பது தூங்குவது முதலிய அனைத்துச் செயல்களும் தனித்துச் செய்யும் வாய்ப்பில்லை.

4. சாமியைத் தவிர வேறு நினைவொன்றும் மலையில் வருவதில்லை வரவும் கூடாது. சில நேரங்களில் ஆண்களது மனம் பக்குவமடையாத நிலையில் தங்களின் பிரம்மசரிய விரதங்களுக்குத் தடைகள் வரலாம். இத்தடைகள் மனத்தளவிலும் வருதல் கூடாது.

5. எதிர்பாராத நிலையிலும் காலந் தவறியும் பெண்களின் உடல் இயற்கை மாற்றத்தால் அசுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
இவற்றையும் மனதில் கொள்ளவேண்டும். இவையெல்லாம் தெரிந்துதான் பெரியோர்கள் ஐயப்ப வழிபாட்டில் பெண்கள் மலைக்கு வந்து சிரமப்படுவதைத் தவிர்த்து வைத்திருந்தார்கள். எனவே ஒன்பது வயதிற்கு உட்பட்ட, ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கோயிலுக்கு வந்து தரிசிப்பதே முறையான வழிபாடாகும். நடைபாதைக் கடைகளில் இளம்பெண்கள் வியாபாரம் செய்வதையும் தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட கடைகளுக்குச் செல்வதைச் சாமிமார்கள் தவிர்ப்பதைத் தெரிந்தால் வியாபாரிகள் இந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள். ஐயப்ப வழிபாட்டில் வழிவழியாக நம் பெரியோர்கள் கடைபிடித்து வந்த விரதமுறைகளையே நாமும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நம் வசதிக்காக, வாய்ப்பிற்காக வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொண்டால் புனிதத்தலங்கள் மாசுபடத் தொடங்கி விடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மும்பை டெஸ்ட் திரில் டிரா...


இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மும்பை டெஸ்ட், "டிரா ஆனது. இருப்பினும், 2-0 என தொடரை வென்ற இந்திய அணி, கோப்பை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. முக்கியத்துவமில்லாத மூன்றாவது டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 590, இந்தியா 482 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில்  2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து, 189 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பிராத்வைட் (34), டேரன் பிராவோ (27) அவுட்டாகாமல் இருந்தனர். 



ஓஜா கலக்கல்: இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பிராத்வைட் (35) ஓஜாவின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ (48), சாமுவேல்ஸ் "டக் அவுட்டாகினர். கார்ல்டன் (1), பாவெல் (11), கேப்டன் சமி (10) விரைவில் நடையை கட்டினர். வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 134 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய பிரக்யான் ஓஜா 6, அஷ்வின் 4 விக்கெட் வீழத்தினர்.


சேவக் அரைசதம்: இரண்டாவது இன்னிங்சில் 64 ஓவரில் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் காம்பிர் (12) ஏமாற்றினார். சேவக் 60 ரன்கள் எடுத்தார். சச்சின் (3), டிராவிட் (33), லட்சுமண் (31), தோனி (13) அடுத்தடுத்து அவுட்டாகினர். விராத் கோஹ்லி 63 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அஷ்வின் (14) ரன் அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 242 ரன்கள் மட்டும் எடுக்க, போட்டி "டிரா ஆனது.

சென்னை ஐகோர்ட்டின் 150வது ஆண்டு விழா ஓராண்டு காலத்திற்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது


சென்னை ஐகோர்ட்டின் 150வது ஆண்டு விழா இன்று முதல் ஓராண்டு காலத்திற்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை பல்கலை., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே. கங்குலி, முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை ஐகோர்ட்: ஒரு பார்வை: சென்னை ஐகோர்ட்டின் முதல் இந்திய நீதிபதி டி.முத்துசாமி அய்யர். ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக டாக்டர் பி.வி.ராஜமன்னார், 13 ஆண்டுகள் (1948 முதல் 1961 வரை) இருந்துள்ளார். இப்போது வரை, 313 நீதிபதிகள் பதவியில் இருந்துள்ளனர். ஐகோர்ட்டில் நீதிபதிகளாக பதவி வகித்த 24 பேர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்த பதஞ்சலி சாஸ்திரி, ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தனர். தற்போது ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இக்பால், 35வது தலைமை நீதிபதி. சென்னை ஐகோர்ட் 1862ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போது, தலைமை நீதிபதி மற்றும் ஐந்து நீதிபதிகள் இருந்தனர். 1911ம் ஆண்டு ஐகோர்ட்டுகள் சட்டம் இயற்றப்பட்ட பின், நீதிபதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.

தற்போது சென்னை ஐகோர்ட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண் ணிக்கை 60. இவர்களில் 42 நிரந்தர நீதிபதிகள், 18 கூடுதல் நீதிபதிகள் இருக்க வேண்டும். மதுரை ஐகோர்ட் கிளை 2004ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி துவங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லகோத்தி, துவக்கி வைத்தார். விக்டோரியா மகாராணி பிறப்பித்த சாசனத்தின் அடிப்படையில், 1862ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் கோல்கட்டா, சென்னை, மும்பை ஐகோர்ட்டுகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த மூன்று ஐகோர்ட்டுகளும் தான், "சார்ட்டர்டு' ஐகோர்ட்டுகள் என அழைக்கப்படுகின்றன

கொழும்பு-தூத்துக்குடி சேவையில் ஈடுபடும் கப்ப‌ல் சேவை தடுத்து வைக்குமாறு கொழும்பு ‌கோர்ட்!


இலங்கை தலைநகர் கொழும்புக்கும் - தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த எம்.டி. ஸ்கோஷியா பிரின்ஸ் கப்பலை, கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்குமாறு ‌கொழும்பு ‌கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு 3ல் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றின் சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. இராசிக் அன் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தினர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்

இந்த கப்பலுக்கு கடந்த அக்டோபர் மாதமும், இம்மாதமும் தாம் 478,173.23 அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு எரிபொருட்களை வழங்கியதாகவும், அதற்குரிய பணத்தினை இந்த கப்பலை சேவையில் ஈடுபடுத்தி வரும் நிறுவனம் வழங்கவில்லையென்றும், இந்தப் பணத்தினைப் பெற்றுத்தர வேண்டுமெனக் கோரியே இந்த வழக்கினை குறித்த நிறுவனம் தாக்கல் செய்திருந்தது. இந்த கப்பல் சேவையினை, மும்பையில் உள்ள பிளமிங்கோ நிறுவனம‌ே நடத்தி வந்தது. இந்த நிறுவனத்துக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி டபிள்யூ.பி.டி.எல். ஜெயதிலக முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முத்த வக்கீல் கே. பூபாலசிங்கத்தின் உதவியுடன் வக்கீல் தமயந்தி பிரான்சிஸ் மனுதாரர் சார்பில் ஆஜரானார். மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எம்.ரி. ஸ்கோட்டியா பிரின்ஸ் என்ற கப்பபை தடுத்து வைக்குமாறு துறைமுக அதிகார சபைக்கு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையினை, டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மின் கட்டண உயர்வு குறித்து மூன்று மாதத்திற்குள் முடிவு செய்ய திட்டம்...


தமிழக மின் வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்ட புதிய மின் கட்டண உயர்வு கோரிய மனுவை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. புதிய கட்டண உயர்வு குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்திய பின், மூன்று மாதத்திற்குள் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை, ஆணையம் வெளியிடவுள்ளது. தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக மின் வாரியம், புதிய கட்டண உயர்வு கோரி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த 17ம் தேதி, மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை, மின் ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.இதைத் தொடர்ந்து, புதிய மின் கட்டண உயர்வு குறித்து, டிசம்பர் 2ம் தேதியன்று நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட முடிவு செய்துள்ளது. கட்டண உயர்வு குறித்து எழுத்து மூலமான கருத்துக்கள் மற்றும் மறுப்புரைகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் ஆணையம், பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், கருத்து அறியும் கூட்டங்கள் நடத்திய பின், மூன்று மாதத்திற்குள் புதிய மின் கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில் நடைபெறவுள்ளது.

செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.தற்போது, இந்த புதிய கட்டணப்படி, வீடுகளுக்கு ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ரூ.2ம், 201 முதல், 500 யூனிட்களுக்கு, ரூ.3.50ம், 501 யூனிட்களுக்கு மேல் ரூ.5.75ம் கட்டணம் உயருகிறது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ரூ.4ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு என தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது பிரச்னையா?அழையுங்கள் மக்கள் பிரதிநிதிகளை!!

திருச்சி மாநகராட்சி தேர்தலில் மேயர், கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை உங்கள் ஏரியாவில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மொபைலில் கூப்பி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருச்சி மாநகராட்சியின் முதல் கூட்டம், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தும்விதமாக, ஸ்ரீரங்கத்தில் பக்தர் தங்கும் விடுதி அமைக்க, ஸ்ரீரங்கம் கோவில் இடம் மாநகராட்சிக்கும், மாநகராட்சியின் இடம் கோவிலுக்கும் பரிமாற்றம் செய்யும் சம்பிரதாயமான கூட்டமாக முடிந்தது. மக்கள் தேவைகள், பிரச்னைகளை அலசி ஆராயும் அசல் மாநகராட்சிக்கூட்டம், வரும் 25ம் தேதி நடக்கவிருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்று பேசும் உங்களது கவுன்சிலர்கள், மாநகராட்சி மன்றத்தில் உங்களது பிரச்னைகளை உரக்கப்பேசி பதிவுச்செய்ய வேண்டும். உங்களது பகுதிகளின் அடிப்படை பிரச்னை, தேவை குறித்து, உங்களது வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உங்களது பிரச்னைக்கு தீர்வுகாண கீழ்க்கண்ட மொபைல் ஃபோன் எண்களை சுழற்றுங்கள். திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா - 98940 55850, 27வது வார்டு கவுன்சிலர் மற்றும் துணைமேயர் ஆசிக் மீரா - 94431 30043, ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர் மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் லதா - 94433- 47588, அரியமங்கலம் கோட்டத்தலைவர் மற்றும் 24வது வார்டு சீனிவாசன் - 94433 71234, பொன்மலை கோட்டத்தலைவர் மற்றும் 43வது வார்டு கவுன்சிலர் மனோகரன் - 99445 80338, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தலைவர் மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் ஞானசேகர் - 99655 08787. கவுன்சிலர்கள்: மாநகராட்சி 2வது வார்டு கவுன்சிலர் தமிழரசி (பொது சுகாதாரக்குழுத்தலைவர்) - 99949 43771, 3வது வார்டு முத்துலெட்சுமி - 93459 86480, 4வது வார்டு பாபு- 94434 94430, 5வது வார்டு பச்சையம்மாள் - 94886 05538, 6வது வார்டு செல்வராஜ்- 93604 84575, 7வது வார்டு அன்புலெட்சுமி - 99526 72555, 8வது வார்டு சுதாகர் - 94431 71948, 9வது வார்டு சகாதேவ் பாண்டியன் - 94438 95853, 10வது வார்டு ராஜபாண்டி - 94436 49158, 11வது வார்டு ஐயப்பன் (வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர்) - 94423 03333, 12வது வார்டு நத்தர்ஷா - 99421 58118, 13வது வார்டு கார்த்திகேயன் - 96986 99666, 14வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி (கணக்குக்குழுத்தலைவர்) - 94433 79890, 15வது வார்டு அமுதா - 97154 56292, 16வது வார்டு சங்கர் - 94431 27783. மாநகராட்சி 17வது வார்டு லாவண்யா - 98424 80889, 18வது வார்டு சத்தியமூர்த்தி - 94439 55257, 19வது வார்டு முகமது முஸ்தபா - 94433 71557, 20வது வார்டு சம்ஸாத் பேகம் - 98948 24214, 21வது வார்டு ராஜேந்திரன் - 94434 95148, 22வது வார்டு ராஜசேகர் - 94437 41459, 23வது வார்டு சாரதா - 98424 48829, 25வது வார்டு கவுன்சிலர் ஜெரால்டு மில்டன் (நியமனக்குழு உறுப்பினர்) - 98651 91936, 26வது வார்டு லீலா - 98422 84257, 28வது வார்டு ரவிசங்கர் - 94434 31313, 29வது வார்டு கயல்விழி - 98424 99007, 30வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர் (பணிகள் குழுத்தலைவர்) - 93451 13530, 31வது வார்டு தஞ்சாயி - 99762 77881, 32வது வார்டு அன்பழகன் - 94431 56220, 33வது வார்டு மகாலெட்சுமி - 94438 33697. மாநகராட்சி 34வது வார்டு வெங்கட்ராஜ் - 94437 80820, 35வது வார்டு கணேசன் - 98420 40080, 36வது வார்டு உஷாராணி - 98424 15353, 37வது வார்டு ஏர்போர்ட் விஜி - 90474 17533, 38வது வார்டு சரசு - 97864 08889, 39வது வார்டு கதிரவன் - 93456 78115, 40வது வார்டு முத்துசெல்வம் - 93446 06070, 41வது வார்டு கவிதா - 94431 41051, 42வது வார்டு கலைவாணன் - 94421 34644, 44வது வார்டு ஹேமா - 99428 91767, 46வது வார்டு ராமமூர்த்தி - 94435 34098, 47வது வார்டு துர்காதேவி - 94439 97855, 48வது வார்டு முஸ்தபா - 98424 33263. மாநகராட்சி 49வது வார்டு சையது இப்ராஹிம் - 94430 77499, 50வது வார்டு சண்முகம் - 98424 88044, 51வது வார்டு கல்பனா - 96954 10800, 52வது வார்டு சகாதேவன் - 98424 58586, 53வது வார்டு நாகராஜன் - 98424 80320, 54வது வார்டு ராஜேஸ்வரி - 93603 51366, 55வது வார்டு கவுன்சிலர் பூபேந்திரன் (கல்விக்குழுத்தலைவர்) - 93457 94999, 56வது வார்டு ஆனந்தஜோதி - 99762 75009, 57வது வார்டு வனிதா - 94421 69603, 58வது வார்டு கவுன்சிலர் வளர்மதி (நகரமைப்புக் குழுத்தலைவர்) - 98424 70989, 59வது வார்டு அறிவுடைநம்பி - 98424 22330, 60வது வார்டு சிவசங்கர ராஜவேலு - 93451 30457, 61வது வார்டு குமார் - 99655 91801, 62வது வார்டு ஜவஹர்லால் - 99528 00287, 63வது வார்டு வேல்முருகன் - 99421 03959, 64வது வார்டு சாந்தி - 98949 25162, 65வது வார்டு பாஸ்கர் - 93451 17400. அதிகாரிகளையும் கூப்பிடலாம்: மாநகராட்சி அதிகாரிகள்: கமிஷனர் வீரராகவராவ் - 94431 07788, நகரப்பொறியாளர் ராஜாமுகமது - 94431- 46175, ஸ்ரீரங்கம் கோட்டம் உதவி கமிஷனர் சுப்பு - 98940 88259, அரியமங்கலம் கோட்டம் உதவி கமிஷனர் ராஜம்மா - 94423 03747, கோ.அபிஷேகபுரம் கோட்டம் உதவி கமிஷனர் பாஸ்கரன் - 94435 65042, பொன்மலை கோட்டம் உதவி கமிஷனர் தனபால்- 98942 77411, நகர்நல அலுவலர் சேரன் - 93446 78317.

இறுதி சடங்கிற்கு பணம் வைத்து விட்டு தற்கொலை!

இறுதி சடங்கிற்கு சட்டை பையில் பணத்தை வைத்து விட்டு, விஷம் குடித்து முதியவர் ஒருவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை மேலூர் தெற்குதெரு ஜனா ஜான்சன் மில்லின் எதிர்புறம் உள்ள வயல் வெளியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. நான்கு வழிச் சாலை ரோட்டை ஒட்டி உள்ள அவ்விடத்தில், கவிழ்ந்த நிலையில் 60 வயது மதிக்கதக்க முதியவர் உடல் கிடந்தது. அவரின் சட்டை பையில், 3 ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தில், "காவல் துறை அதிகாரிக்கு, நான் ஒரு அனாதை. என் இறப்புக்கு நானே காரணம். இந்த பணத்தை வைத்து என்னை எரித்து விடுங்கள். எனது சாவு குறித்து பொதுமக்களை எந்த  தொந்தரவும் செய்ய வேண்டாம்' என இருந்தது

நின்றுகொண்டே பயணம் செய்த குண்டுமனிதர்...


உடற்பருமன் கொண்ட தன்னை, அமெரிக்க விமான நிலையம் தொடர்ந்து 7 மணிநேரம் நிற்க வைத்தே பயணம் செய்ய வைத்துவிட்டதாக தொழிலதிபர் கூறிய புகார், அமெரிக்காவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தன்னை அவமானப்படுத்துவதாக உள்ளதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி ‌தொழிலதிபரான ஆர்தர் பெர்கோவிட்ஜ், சமீபத்தில் ஆன்கரேஜ் நகரிலிருந்து பிலடெல்பியா நகருக்கு வருவதற்காக யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை நாடியுள்ளார். பெர்கோவிட்ஜ், 181 கிலோ உடற்எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளைட் 901 விமானத்தில் ஏறிய அவருக்‌கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இருக்கை அவருக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவரை விமான ஊழியர்கள், கடைசியில் உள்ள இருக்கைக்கு சென்று அமருமாறு கேட்டுக் கொண்டனர். அவருக்கு அந்த இருக்கையும் போதுமானதாக இல்லை. அவர் உட்கார்ந்தால், பக்கத்து இருக்கையையும் அடைத்துக் கொள்கிறார் என்று மற்ற பயணிகள் புகார் தெரிவிக்கவே, விமான ஊழியர்கள் அவரை நி்ன்று கொண்டே வருமாறு ‌கூறியுள்ளனர். இதனையடுத்து, அவர் தொடர்ந்து 7 மணிநேரமாக நின்று கொண்டே பயணம் செய்து பிலடெல்பியா வந்தடைந்துள்ளார்.

இதுகுறித்து, பெர்கோவிட்ஜ் தனது உறவினரிடம் கூறியிருப்பதாவது, இந்த பயணம், எனக்கு மறக்கமுடியா‌த சோகத்தை அளித்துள்ளது. தான் இப்படி நடத்தப்பட்டதன் மூலம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் நான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என்னால், சீட்பெல்ட் அணியமுடியாது என்பது தெரிந்தபோதிலும், என்னிடம், அவர்கள் சோதனை மேற்கொண்டது மிகுந்த அதிர்ச்சியளித்தது. இதற்காக, யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 800 டாலர் நஷ்ட ஈடு கேட்டு புகார் செய்திருந்தேன். ஆனால், அவர் பிச்சைக்காரத்தனமாக 200 டாலருக்கான வவுச்சர் மட்டுமே தந்தனர். இதன்காரணமாக, பெர்கோவிட்ஜ், அலாஸ்காவிலிருந்து பில‌டெல்பியாவிற்கு விமான பயணத்தை தவிர்த்ததாக அவரது வக்கீல் கிறிஸ்டோபர் ஏலியாட் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக, யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம், பெர்கோவிட்ஜிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...