|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்டே!


 சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் யாருமே தராத அதிர்ச்சியை ஒருவர் தந்துள்ளார். அவர் நிர்வாணமாக தோன்றப் போவதாக அவ்வப்போது பயமுறுத்தி வந்த பூனம் பாண்டே! காரணம் வேறொன்றுமில்லை... இத்தனை நாள் அரை, முக்கால் நிர்வாணம் காட்டி வந்த பூனம், இப்போது முழு நிர்வாணமானகிவிட்டதுதான்!


கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு மாடல் பூனம் பாண்டே என்றால் யார் என்று தான் அனைவரும் கேட்டார்கள். ஆனால் இந்திய அணி கோப்பையை வென்றால் வீரர்களுக்கு முன்பு நிர்வாணமாக நிற்பதாக அறிவித்ததையடுத்து பிரபலமானார். தற்போது பூனம் பாண்டே கையில் ஒரு விஷ்ணு படத்துடன் நிர்வாண போய் கொடுத்துள்ளார். அதை ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நமஸ்கரிக்கிறார். அந்த விஷ்ணு படத்தை உற்றுப் பார்த்தால் முகம் சச்சினுடைது. விஷ்ணு கையில் பேட், தலையில் ஹெல்மெட், கையில் உலகக் கோப்பையை வைத்திருக்கிறார். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெளிவாகத் தெரிந்தாலும் இணையத்தில் சக்கைப் போடு போடுகிறது.



மேலும் மகா விஷ்ணுவின் படத்துடன் பூணம் நிர்வாணமாக நிற்பது போன்ற இந்த மாரிபிங் படத்தின் மூலம், சுவாமியின் படத்தையும் அவமரியாதை செய்துள்ளனர்.இந்த புகைப்படத்தைப் பார்த்துதான் சச்சின் டெண்டுல்கர் அதிர்ந்து போனார். என்னை வைத்து என்ன கூத்தெல்லாம் அடிக்கிறார்களே என்று நொந்துவிட்டார்.படத்தைப் பார்த்த பூனம் டுவிட்டரில், "எனது ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இது போன்று மார்பிங் புகைப்படத்தைப் பார்த்து வருத்தப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் ஒரு மதம் மாதிரி,' என்று எழுதியுள்ளார்.அப்போது கூட தன்னை நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டதற்காக அவர் வருந்தவில்லை, கிரிகெட்டுக்காகத்தான் வருத்தப்படுகிறாராம்!

கல்லறைகளில் இருந்து இளம்பெண்களின் உடல்களை திருடி,வீடு முழுக்க வைத்திருந்த ஆராய்ச்சியாளர் கைது!


ரஷ்யாவில் வோல்கா ஆற்றை ஒட்டிய பகுதி நிஸ்னி நோவ்கரட். இங்குள்ள கல்லறையில் மர்மமான முறையில் இளம்பெண்களின் உடல்கள் காணாமல் போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். கைரேகைகள், கால் தடங்களை தடயவியல் வல்லுனர்கள் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதே பகுதியை சேர்ந்த ஒருவர் உடல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோபா, கட்டில், டிவி அருகே, புத்தக அலமாரி அருகே என பல இடங்களிலும் சடலங்களுக்கு மேக்கப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. பேஷன் ஷோக்களில் வருவது போல விதவிதமான தொப்பிகள், ஆடைகள் அந்த உடல்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு 29 உடல்கள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அனாடலி மாஸ்க்வின் (45) என்று மீடியாக்கள் தெரிவித்துள்ளன. வரலாற்று ஆய்வாளரான அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நாள்


  • ஏகே 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கையில் கலாஷ்னிகோவ் பிறந்த தினம்(1919)
  •  நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1951)
  •  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் விற்பனைக்கு வந்தது(2001)
  •  சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு லூனாகோட் என்ற தானியங்கி ஊர்தி‌யை கொண்டு சென்றது(1970)

39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில்...?


மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர். நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர். காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர். வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!


யூனிலீவர் நிறுவனத்தின் உலகப் புகழ்பெற்ற லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதை சீன தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்கப்படும் தேயிலை பிராண்ட் லிப்டன் டீ. யூனிலீவர் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இதில் rare-earth elements எனப்படும் மிக அரிதான ரசாயன கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் மிக அரிதாகக் கிடைக்கும் சீரியம், இட்ரியம், எர்பியம் உள்ளிட்ட 17 வகையான தனிமங்கள் தான் ரேர் எர்த் எலிமெண்ட்ஸ். இதில் சில வகை தனிமங்கள், டீ தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தேயிலை கெட்டுப் போகாமல் இருக்கும், டீக்கு நல்ல வாசனையைத் தரவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், லிப்டன் உள்ளிட்ட 5 வகையான பிராண்டுகளில் இவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக சீனாவின் தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. லிப்டன் நிறுவனம் சீனாவில் விற்கும் டீயில் கிலோவுக்கு 2 மில்லிகிராமுக்கு அதிகமாக இந்த தனிமங்கள் உள்ளதாம். இந்தத் தனிமங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பார்முலாவை லிப்டன் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறதா என்பது தெரியவில்லை. அப்படியிருந்தால், இந்தியாவில் விற்பனையாகும் டீயிலும் பிரச்சனை இருக்கலாம்.

அழகை அதிகரித்து காட்டும் டிப்ஸ்!


ஆள் பாதி ஆடை பாதி என்றிருந்த காலம் போய் ஆள் கால், மேக் அப் முக்கால் என்றாகி விட்டது. சுமாராக இருப்பவர்கள் கூட மேக் போட்டு சூப்பராக தேற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் போது சாதாரணமாக இருப்பவர்கள் வெளியில் ஏதாவது பார்ட்டி அல்லது அலுவலகத்திற்கோ கிளம்பினால் மேக் அப் போட்டுப் பட்டையைக் கிளப்பத் தவறுவதில்லை. நாம் பயன்படுத்தும் உடையைப் போலவே தேர்ந்தெடுக்கும் மேக் அப் சாதனமும் நம்மை உயர்த்தி காட்டும். இருப்பினும் ஆடை உடுத்துவது எப்படி ஒரு கலையோ அதுபோல மேக் அப் போடுவதும் ஒரு கலைதான். எனவே எப்படி மேக் போடுவது என்பது குறித்து அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை படியுங்கள். அதற்கேற்ப உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

இந்திய நிறத்திற்கான அழகு: மேக் அப்பிற்கு முதலில் தேவை பவுண்டேசன் எனப்படும் அடிப்படை முகப்பூச்சு. தரமான பவுண்டேசன் கேக் தேர்வு செய்வது அவசியம். ரசாயணங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தேர்வு செய்வதை விட இயற்கை பொருட்களில் தயார் செய்யப்பட்ட மேக் அப் சாதனங்களை தேர்வு செய்வது முகத்திற்கு பாதுகாப்பானது. இந்தியர்களின் நிறத்திற்கு ஏற்ப லேசான கலராகவோ அல்லது கோல்டன் கலர் டோன் வரக்கூடிய மேக் அப்களை தேர்வு செய்ய வேண்டும். பிங்க் நிறத்தை தரக்கூடிய மேக் அப் சாதனங்களை தவிர்ப்பது நல்லது. பவுண்டேசன் போடும் முன்பாக முகத்தை எண்ணெய் பசை இன்றி தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கண்களும், உதடும்: முகத்திற்கு அழகூட்டக் கூடியவையான கண்களுக்கும், இதழுக்கும் தனி கவனம் செலுத்த வேண்டும். கண்களுக்கான ஷேடோ, உதட்டிற்கு தேர்ந்தெடுக்கும் லிப்ஸ்டிக் ஆகியவற்றில் தனி கவனம் தேவை. நேவி புளு, சாக்லேட் ப்ரவுன் போன்ற கலர்கள் கண்களின் ஷேடோவிற்கு ஏற்றது. உதட்டின் கலருக்கு ஏற்ப லிப்ஸ்டிக் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். உதட்டிற்கு அவுட்லைன் வரைந்து பின்னர் தகுந்த கலரினை தேர்ந்தெடுக்க வேண்டும்.அலுவலகத்தில் லஞ்ச் மீட்டிங் என்றால் அதற்கேற்ப திக்காக லைன் வரைந்து கிரீம் கலர் லிப்ஸ்டிக் உபயோகிக்கலாம். அதே சமயம் டின்னர் மீட்டிங்கிற்கு போகும் போது லிப் கிளாஸ் மட்டுமே உபயோகிப்பது நலம். அதேசமயம் கண்களின் மேக் அப்பிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இப்படிச் சின்னச் சின்ன மேக்கப் டிப்ஸ்களை கடைப்பிடிப்பதன் மூலம் எழிலுக்கு எழிலூட்டலாம்.

இனவெறி இலங்கையில் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு!

கலிபோர்னியா: இனவெறி இலங்கையில் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளதற்கு அமெரிக்க நாம் தமிழர் அமைப்பு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி:  கடந்த ஞாயிறன்று நடந்த காமன்வெல்த் மாநாட்டின்போது, 2013ம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டை நடத்தவுள்ள இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை பேச அழைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளிநடப்பு செய்தது மிகவும் துணிகரமான, பாராட்டுக்குரிய செயலாகும். இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து அக்கறையும் கவலையும் கொண்டுள்ள மேற்கத்திய தலைவர்களுக்கு இது ஊக்கம் தரும் செயலாக அமைந்துள்ளது. உலகத் தலைவர்கள், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து வரும் இலங்கையை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு சரியான முன்னுதாரணமாக கனடா பிரதமரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

2013 காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவு குறித்து ஹார்ப்பரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இலங்கை மீதானகடுமையான மனித உரிமை மீறல்கள்,போர்க்குற்றச்சாட்டுக்கள், தமிழர் மீள்குடியேற்றம் உள்ளிட்டவை குறித்து தான் ராஜபக்சேவுடன் பேசியதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக இலங்கை அரசு மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜபக்சேவை தான் வலியுறுத்தியதாகவும் கூறினார் ஹார்ப்பர். மேலும் நாகரீகமடைந்த உலகிந் எதிர்பார்ப்புகளை ராஜபக்சே அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதாகவும் தெரிவித்தார் ஹார்ப்பர். மேலும், இந்தப் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான தீர்வு காணாவிட்டால்,2013 காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தனது முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதில்லை என்றும் ஹார்ப்பர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

கனடாப் பிரதமரின் இந்த உறுதியான முடிவை திறந்த மனதுடனும், மகிழ்ச்சியுடனும் நாம் தமிழர் அமெரிக்கா வரவேற்கிறது. இதேபோன்ற நடவடிக்கையை உலகத் தலைவர்களிடமிருந்தும் நாம் தமிழர் அமெரிக்கா எதிர்பார்க்கிரது. மேலும் இதைப் பயன்படுத்திக் கொண்டு, ஹார்ப்பரும், பிற உலகத் தலைவர்களும் இலங்கைக்கும், ராஜபக்சே அரசுக்கும் கடும் நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்டவற்றை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மரியாதையுடனும், கெளரவத்துடனும், அமைதியுடனும் வாழ வழி கிடைக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. நாம் தமிழர் அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட பொது நலன் அமைப்பாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருவதாக அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு www.us.naamtamilar.org

35 வயதுக்கு மேல் செக்ஸ் உணர்வு குறைந்தால் தப்பா?

35 வயதைத் தாண்டிய பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கி விட்டதே என்பதுதான் என்றஉ டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்பதே அவர்களின் பதில். 35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கி விடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம்.

ஆனால் டாக்டர்கள் இதை சுத்தமாக மறுக்கிறார்கள். இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகையில், நிச்சயம் இது தவறான கருத்து. 30 வயதைத் தாண்டி விட்டோம், இனி செக்ஸ் வாழ்க்கை முன்பு போல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவு செய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதே போல 30 வயதைத் தாண்டிய பின்னரும் கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல்தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல்செக்ஸ் ஆர்வம் குறைவது இயல்புதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது.

ஆர்கசம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20 களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு. எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, செக்ஸ் உறவில் ஈடுபடும்போது நமது மன நிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஆர்கசம் பிரச்சினை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோ ரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம். 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் ஆர்கசம் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ் குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை.

இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.எனவே 30 வயதுக்கு மேல் செக்ஸ் உணர்வும், ஆர்கசமும் அற்றுப் போய் விடும் என்ற கவலையும், ஆர்கசம் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை. இவை இயல்பானவைதான். அதற்கான உபாயங்களைக் கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதனுக்கு உள்ள பெரிய பலமே மூளைதான். அது எந்த சிந்தனையின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கட்டுப்பாடு, மனதின் கையில்தான் உள்ளது. எனவே மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற முதுமொழிக்கேற்ப இதையும் சமாளிக்க முயல்வோம்.

பரவி வரும் தமிழ் கல்வி !


தமிழ் மொழியைக் கற்பதில், உலகளவில் ஆர்வம் பெருகி வருகிறது. குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைக் கற்பதில், தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனம், தமிழ் பண்பாடு, இலக்கியம், வரலாறு மற்றும் ஆசிய மொழிகளை ஒப்பிட்டு, உயர்நிலையில் ஆய்வு மேற்கொள்ளும், பன்னாட்டு நிறுவனமாகும். தமிழர்களின் கடல் கடந்த தொடர்பு குறித்த ஆய்வுக்கும் முன்னுரிமை தரப்படுகிறது. இந்நிறுவனத்தில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின், சீனா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர், தமிழ் மொழியைக் கற்பதோடு, தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் குறித்த ஆராய்ச்சிகளும் செய்து வருகின்றனர். மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் வரை, சென்னையில் தங்கி படிக்கின்றனர். இது தமிழ் மொழியின் மீதான ஆர்வம், உலகளவில் படிப்படியாக வளர்ந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

தற்போது, ஆசியவியல் நிறுவனத்தில் தமிழ் கற்று வரும், ஜப்பான் நாட்டின் ஓசாகாவை அடுத்த ககாவா ஊரைச் சேர்ந்த கோகி கூறுகையில், "நான் சீன மொழி படித்துள்ளேன். மொராக்கோவில் அரபி மொழி கற்றேன். தற்போது, தமிழ் மீது ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, கடந்த ஆறு மாதமாக தமிழ் படித்து வருகிறேன். தமிழ் மிகவும் அழகான மொழி. அது வாழும் மொழி. இந்திய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில், தமிழக கலாசாரத்திற்கு தனித்தன்மை உள்ளது. தமிழ் நாளிதழ்களை எழுத்துக் கூட்டி படித்து வருகிறேன்' என்றார். ஜப்பான் நாட்டின் கியூட்டோ மாநிலத்தைச் சேர்ந்த தொமாகா கூறுகையில், "சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவ, மாணவியருக்கு ஜப்பான் மொழி கற்றுத் தருவதற்காக, என் நாட்டு அரசின் சார்பாக இந்தியாவிற்கு வந்துள்ளேன். நான் இங்கு வந்தவுடன், தமிழ் மொழி குறித்தும், தமிழக பாரம்பரிய கலாசாரம், பண்பாடு, இலக்கியம் குறித்தும் கேட்டறிந்தேன். இதனால், எனக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது, தமிழ் படித்து வருகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் இருக்கப் போகிறேன். நான் எனது நாட்டிற்கு திரும்பும் போது, தூய தமிழில் எழுதி, படித்து, பேசும் அளவிற்கு தயாராகி விடுவேன்' என்றார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வெய்பென் கூறுகையில், "எனது தாய்மொழி ஆங்கிலம். இது தவிர மாண்டரின், இந்தி, கொஞ்சம் தமிழ் தெரியும். ஆசிய பண்பாடு மற்றும் தெற்காசிய பண்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மேலும், சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளேன். அதற்காக, ஆசியவியல் நிறுவனம் மூலம் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. மாண்டரின் மொழிக்கும், தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சிங்கப்பூரில் இந்தி மற்றும் தமிழ் பேசக் கூடியவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களிடம் உள்ள வேறுபாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த மசகாசுகோனா என்பவர் கூறுகையில், "மொழியியல் துறையில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளேன். சீனா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை பார்த்தேன். சிங்கப்பூரில் இருந்த போது, தமிழ் மொழியை கேட்டறிந்தேன். அங்குள்ள தமிழர்களுடன் பழகி, கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேச ஆரம்பித்தேன். ஆனால், அங்கு தமிழ் முறைப்படி படிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதையடுத்து, தமிழகத்திலுள்ள ஆசியவியல் நிறுவனம் குறித்து கேட்டறிந்தேன். அதன் பின், இங்கு வந்தேன். இங்கு, தமிழ்மொழி மூலம் ஜப்பானிய மொழி கற்றுத் தருகின்றனர். அதற்கான சிறப்பு கையேடுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது ஆசியவியல் நிறுவனத்தின் வாயிலாக, சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்-ஜப்பானிய மொழி உறவு குறித்து, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தமிழ் மொழி பேச ஆசையாக இருந்தாலும், மிகவும் கடினமாக உள்ளது. எனது நோக்கம் ஜப்பானியர்களுக்கு தமிழ் மொழியும், தமிழர்களுக்கு ஜப்பான் நாட்டு மொழியும் கற்றுத் தரவேண்டும் என்பதும், இரு மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்து ஆராய்ச்சி செய்வதும் தான்.

வெளிநாட்டினர்களுக்கான தமிழ்ப் பயிற்சி போதித்து வரும், ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜான் சாமுவேல் கூறிய தாவது: கடந்த 1983ம் ஆண்டு முதல், இந்நிறுவனம் வெளிநாட்டினருக்கு தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு குறித்த வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை, 750க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், இங்கு தமிழ் பயின்றுள்ளனர். தொடக்க நிலையில் தமிழ் கற்க, அமெரிக்காவில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் வந்து சென்றனர். தற்போது, ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியைக் கற்பதிலும், ஆராய்ச்சி மேற்கொள்வதிலும், ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதிகம் தமிழாராய்ச்சி செய்ய விரும்புகின்றனர். ஜப்பானியர்கள், கொரிய நாட்டினர், சீன நாட்டினர் ஆகியோரும் தமிழாராய்ச்சியில் சிறப்பு ஆர்வம் காட்டுகின்றனர். ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும், தற்போது, தமிழாராய்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். எனவே, கடல் கடந்த நாடுகளில், தமிழாராய்ச்சியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு, ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல் கூறினார்.

மைக்கேல் ஜாக்சன் விற்பனைக்கு !

பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தனது கடைசி நாட்களில் பயன்படுத்திய பொருட்கள் தற்போது விற்பனைக்கு வர உள்ளன. இதில் அவர் உயிர் விட்ட படுக்கையும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த விற்பனை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டிசம்பர் 17ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. கடைசி நாட்களில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்தி அனைத்து பொருட்களும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வரை மைக்கேல் ஜாக்சன் தனது 3 குழந்தைகளுடன் வாழ்ந்த வீடு தனியாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பொருட்களுக்கான ஏலம் டிசம்பர் 12ம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

.200 கோடி அரசு மருத்துவமனை கட்டு போடக்கூட துணி இல்லை!



விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், நோயாளிகள் அவதிப்படும் நிலை தொடர்கிறது. இதைக் கண்டித்து அரசு டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ள நிலையில், மாவட்ட அமைச்சர் சண்முகம் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில், 45 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் அவசரமாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேவையான அத்தியாவசிய சாதனங்கள் அமைக்காத நிலையில், திறப்பு விழா நடந்தது. மருத்துவமனை திறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கட்டமைப்பு வசதிகள் முழுமை பெறாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்படும் பெரும்பாலான நோயாளிகள், மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவது தொடர்கிறது. இம்மருத்துவமனை அமைந்ததும், உயரிய சிகிச்சை கிடைக்கும் என்ற மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வீணாகியுள்ளது.

கட்டு போட துணி இல்லை: தமிழகத்தில் நீளமான தேசிய நெடுஞ்சாலையை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில், நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. விபத்துகளில் காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் யார் வந்தாலும், அவர்களுக்கு உடனடி அவசர சிகிச்சை ஏதுமின்றி, மேல்சிகிச்சைக்கு அருகிலுள்ள புதுச்சேரி மற்றும் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில், பல பேருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், ரத்தப் போக்கு அதிகமாகி உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. விபத்தில் அடிபட்டு வருபவர்கள் உடல்நிலை பற்றி உடனடியாக அறிய தேவையான, "சிடி' ஸ்கேன் இல்லாததும் முக்கிய காரணம். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட "சிடி' ஸ்கேன், விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையம் இரவில் செயல்படாததால், அவசரத் தேவைக்கு பயன்படாத அவலம் நீடிக்கிறது. அனைத்து துறைகளில் டாக்டர்கள் பணியில் இருந்தாலும், அவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்யத் தயாராக இருந்தும் பிரச்னை தீரவில்லை. மருத்துவத்திற்குத் தேவையான மருந்துகள், குளுகோஸ் பாட்டில்கள் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படவில்லை. இங்கு, மருத்துவச் சிகிச்சைக்காக வரும் தினக்கூலி ஏழை மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், கட்டு போடும் துணி கூட இல்லாததால் மக்கள், மருத்துவமனையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

இப்பிரச்னைகள் குறித்து, பணியில் உள்ள டாக்டர்கள் மருந்து மற்றும் அடிப்படை சாதனங்கள் தேவை பற்றி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் பலனில்லை. நிர்வாகத்தின் சார்பில் சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றாலும், சிகிச்சையின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. துரித சிகிச்சை அளிக்கப்படாததால் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், நோயாளிகளின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். இதனால் ஆவேசமடைந்த டாக்டர்கள், மருத்துவமனையில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம்(8ம் தேதி), கறுப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கட்டண கழிவறை இன்றளவும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கலெக்டர் மணிமேகலை மருத்துவமனையை ஆய்வு செய்தபோது, அடிப்படை வசதிகள் முழுமை பெறாதது தெரிய வந்தது. கலெக்டர் உடனடியாக அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தியும், பிரச்னைகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ள கட்டப்பட்ட இம்மருத்துவமனையில், "சிடி' ஸ்கேன் போன்ற சாதனங்களும், மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் பயிற்சித் திறனை வளர்த்துக் கொள்வது கேள்விக்குறியான விஷயமாகியுள்ளது. மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையைப் போக்க கடந்த ஆட்சியில் அவசரக் கோலத்தில் திறக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறம்படச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டியது, புதிய அரசின் கடமையாகும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அமோக ஆதரவளித்து ஆட்சிப் பொறுப்பை வழங்கிய மாவட்ட மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், புதிய அரசு செயல்பட வேண்டும். மக்களின் உயிர் காக்கும் முக்கிய பிரச்னையான இதை முதல்வர் ஜெ., கவனத்திற்கு கொண்டு சென்று, மருத்துவமனை முழுமையாகச் செயல்பட அமைச்சர் சண்முகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டு போட வேட்டி: கடந்த 6ம் தேதி, விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மற்றொரு கார் மோதியதில், புதுமணப்பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போதிய மருத்துவ வசதியில்லாததாலும், கட்டு போட துணி இல்லாததாலும் உடன் சென்ற உறவினர்கள், கட்டியிருந்த வேட்டியால் மணப்பெண் மற்றும் ஒரு பெண்ணிற்கு கட்டு போட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இம்மருத்துவமனைக்கு கம்பெனி மூலம் சப்ளை செய்யப்பட்ட மருந்துகளுக்கு "பில்' செலுத்தாத காரணத்தால், பல்வேறு மருந்து கம்பெனிகளும் தங்கள் சப்ளையை நிறுத்திக் கொண்டுள்ளன. பெரிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்துகள் இம்மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை. கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நிலையில், தற்போது மாதத்திற்கு 20 அறுவை சிகிச்சைகள் கூட செய்யப்படுவதில்லை. காரணம், அதற்கான மருந்துகள் சப்ளை செய்யப்படுவதில்லை என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் செய்வாரா? கடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி முயற்சியின் பேரில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது என இன்றளவும் அக்கட்சியினர் பெருமை கொள்கின்றனர். அதேபோல், கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சியின்போது அமைச்சர் பதவி வகித்த சண்முகம், திண்டிவனம் நகருக்கு கண்டரக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததை அவரது கட்சியினர் சாதனையாக சொல்லி வருகின்றனர். இத்திட்டங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டவை என்பதால் இருவருக்கும் மிகுந்த மக்கள் செல்வாக்கை உருவாக்கியது. இதேபோல், மக்கள் நலன் கருதி மாவட்ட அரசு மருத்துவமனை முழுமையாகச் செயல்பட, உள்ளூர் அமைச்சர் சண்முகம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது.

பிளஸ் 1 படிக்கும் 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு மெருன் நிறத்தில் இலவச சைக்கிள்!


தமிழ்நாட்டில் பிளஸ் 1 படிக்கும் 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு மெருன் நிறத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்குச் சென்று வர வசதியாக இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே வெளிர் பச்சை நிறத்தில் சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு இலவசமாக வழங்கப்படும் சைக்கிள் மெருன் நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு சுமார் 148 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பஞ்சாபில் இருந்து தரமான சைக்கிள்களின் உதிரிப் பாகங்கள் வரவழைக்கப்பட்டு இங்கு தொழிலாளர்களை வைத்து சைக்கிளாக உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வசூலில் பின்தங்கிய ரா ஒன்!


ரிலீசான முதல் வாரம் வசூலில் நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்த ஷாரூக்கானின் ரா ஒன், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கிவிட்டது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திப் படம் ஷாரூக்கானின் ரா ஒன். அசாதாரண பப்ளிசிட்டி மூலம் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பினர் இந்தப் படத்துக்கு.தீபாவளியன்று இந்தப் படம் உலகம் எங்கும் பிரமாண்டமாக வெளியானது. துவக்கநாளில் மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், இரண்டாம் நாளே ரூ 30 கோடிக்கும் அதிகமாக ஈட்டியது. 9 நாட்களில் ரூ 200 கோடியைத் தாண்டிவிட்டது ரா ஒன். ஆனால், இந்தவாரம் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படியானால் இந்தப் படம் வெற்றியா தோல்வியா?"வெற்றியுமில்லை , தோல்வியுமில்லை. தயாரிப்பாளர் இப்போதைக்கு தப்பித்துவிட்டார். தனது முதலீட்டின் மீது 30 சதவீதம் வரை லாபம் பார்த்துள்ளார். இன்னும் ஓரிரு வாரங்கள் நல்ல வசூலுடன் ஓடியிருந்தால் இந்தப் படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்திருக்கும். ஆனால் இந்த வாரம் மொத்தமே ரூ 14 கோடி வசூலித்துள்ளது. பல தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டு வருகிறது," என்கிறார் பிரபல சினிமா வர்த்தக பார்வையாளர் கோமல் நாதா. பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், "நிச்சயம் ரா ஒன் வெற்றிப் படமே. ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றிப்படமல்ல. இருந்தாலும் நிகரலாபமாக ரூ 125 கோடியை நெருங்கிவிட்டது," என்றார்.

பூமிக்கு அருகே வந்து விட்டுப் போன விண்கல் !


பூமிக்கு அருகே, அதாவது 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் அருகே வந்து விட்டுப் போன பெரிய சைஸ் விண்கலத்தைக் காண காத்திருந்த நாசா விஞ்ஞானிகள், மகா இருளாக அந்த விண்கல் இருந்ததால் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அந்த விண் கல்லுக்கு 2005 ஒய்யூ 55 என்று பெயர். இந்த விண்கல்லானது, செவ்வாய்க்கிழமையன்று இரவு பூமியை நோக்கி வந்தது. இதையடுத்து விண்கல்லை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா வி்ஞ்ஞானிகள் பட்டாளம் தயாராக காத்திருந்தது. ஆனால் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளால் கூட பார்க்க முடியாத அளவுக்கு விண்கல் இருளாக இருந்ததால் பூமிக்கு அருகே வந்து போனதை பார்க்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த விண்கல்லானது, செவ்வாய்க்கிழமை இரவு, பூமியிலிருந்து 2 லட்சத்து 2 ஆயிரம் மைல்கள் அதாவது தோராயமாக மூன்றே கால் லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கி வந்தது. பூமிக்கு அருகே விண்கல் வந்ததால் அது குறித்து நிறைய தகவல்களை ஆராய முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது முடியாமல் போய் விட்டது. விண்கல் பூமியை நோக்கி வந்த சமயத்தில், நிலவின் வட்டப் பாதையில் அது இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும். இதற்கு முன்பு பூமியை நோக்கி ஒரு விண்கல் வெகு அருகே நெருங்கி வந்தது 1976ம் ஆண்டு நடந்தது. அடுத்து 2028ம் ஆண்டு இதேபோல நடக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பூமிக்கு பக்கத்தில் வந்து போன விண்கல்லானது ஒரு ஹெலிகாப்டர் சைசிலானது. கிட்டத்தட்ட 400 மீட்டர் அகலத்தைக் கொண்டது. அட்டக் கரி நிறத்தைக் கொண்டது. இது ஒரு குறிப்பிட்ட வடிவில் நகராமல் அது இஷ்டத்திற்கு வேறு வேறு திசையில் நகர்கிறது. மிகவும் மெதுவாக நகரக் கூடியதாகவும் உள்ளது. ஒவ்வொரு 20 மணி நேரத்திற்கும் ஒருமுறைதான் இது நகருகிறது. இதுகுறித்து நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வகத்தைச் சேர்ந்த லேன்ஸ் பென்னர் கூறுகையில், இதுவரையில் பூமிக்கு வெகு அருகே நெருங்கி வந்த ஒரு விண்கல் எது என்றால் அது இதுதான். இவ்வளவு அருகே இதுவரை எதுவும் நெருங்கி வந்ததில்லை என்றார்.

இந்த விண்கல் பூமிக்கு அருகே வந்ததால் அது குறித்த மேலும் பல விரிவான தகவல்களை ஆராய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு கலிபோர்னியாவின் கோல்ட்ஸ்டோன் ஆய்வகத்திலும், பியூர்டரிகோவில் உள்ள அரெக்கிபோ ஆய்வகத்திலும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் விண்கல் பெரும் இருட்டாக இருந்ததால் அதை காண முடியாமல் போய் விட்டது. இந்த இரு ஆய்வகங்களிலும் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகள் உள்ளன. ஒலிகளை அனுப்பி அதன் மூலம் இந்த விண்கல்லின் தன்மை குறித்து ஆராய திட்டமிடப்பட்டிருந்தது. அதன் உண்மையான வடிவம், விண்கல் எதனால் ஆனது உள்ளிட்டவற்றை ஆராய காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த விண்கல் குறித்து நாசாவைச் சேர்ந்த டான் யோமன்ஸ் என்பவர் கூறுகையில், 2005 ஒய்யூ 55 விண்கல் மிகவும் வித்தியாசமானது. இது விண்கல்லாக இருந்தாலும் கூட இது ஒரு வகையான கிரகமும் கூட. இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கார்பனும் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே மனிதர்களின் கவனத்திற்குள்ளாகியுள்ளது இந்த விண்கல் என்றார்.இந்த விண் கல் பூமியில் விழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இது பூமியின் நிலப்பரப்பில் விழுந்தால் 4000 மெகாடன் அளவிலான பெரும் பிரளயம் ஏற்படும். மேலும், 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நான்கு மைல் நீளத்திற்கும், 1700 அடி ஆழத்திலும் பெரும் பள்ளம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் பயமுறுத்துகின்றனர். ஒரு வேளை கடலில் விழுந்தால், விழும் இடத்தில் 70 அடி உயரத்திற்கு ராட்சத சுனாமி அலைகள் எழும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து 2029ம் ஆண்டில் அபோசிஸ் என்ற இன்னொரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி வரப் போகிறதாம். இதுவும் கூட ஒய்யூ 55 போன்ற விண்கல்தான். இதனாலும் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள். இந்த விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு அருகே வந்து செல்லுமாம். பூமியிலிருந்து 29,500 கிலோமீட்டர் தொலைவுக்கு இது நெருங்கி வரும் என்பதால் விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடுத்து 2036ம் ஆண்டிலும் இதே விண்கல் பூமிக்கு அருகே வருமாம்.

தியான பயிற்சியில் கனிமொழி!

 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி, சிறையில் தியானம், ஆத்ம, ஆன்மீக சிந்தனைப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருவதால் கனிமொழி மனமுடைந்து காணப்படுகிறார். டெல்லி சிபிஐ கோர்ட் வளாகத்தில் வைத்து தாயார் ராசாத்தியம்மாளை கட்டிப்பிடித்து அழுதார். ராசாத்தியும் அழுதார். சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் ஸ்டாலினிடமும் கண்ணீர் வடித்தார். இந்த நிலையில் மனதை ஒருமுகப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் தியானம், ஆன்மீக சிந்தனை குறித்த பயிற்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம். அரசு சாரா தொண்டு நிறுவனமான திவ்ய ஜோதி ஜாக்ரிதி சன்ஸ்தன் என்ற அமைப்பு கைதிகளுக்கு ஒழுக்க நெறிகள், தியானம், ஆன்மீக சிந்தனைகள் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதுதொடர்பான புத்தகங்களையும் அது வழங்குகிறது. அதில் தான் கனிமொழியும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருவதாக சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானில் பறந்த படி உறவு!

skydiving பயிற்சியின் போது அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோடி செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளது. skydiving இன் போது நடுவானில் செக்ஸ் வைத்துக் கொண்டமை உலகிலேயே முதன் முறை என்று கூறப்படுகின்றது.
இவர்கள் இருவரும் விமானத்தில் சென்று அங்கிருந்து நடுவானில் குதித்துள்ளனர். பின்னர் skydiving செய்தபடியே செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளனர். 

500 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் அண்ணா சாலை!


ரூ.500 கோடி செலவில் சென்னை அண்ணா சாலையை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரை மேம்படுத்தி, உலகின் சிறந்த நகரங்களின் வரிசையில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக அண்ணா சாலை, உள்வட்ட சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய 3 சாலைகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. அண்ணா சாலையை மேம்படுத்த மட்டும் ரூ. 500 கோடி செலவிடப்படவுள்ளது. சாலையின் இரு புறமும் நடைபாதை அகலப்படுத்தப்படவுள்ளது. உள்வட்ட சாலை ரூ.300 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணி ரூ. 90 லட்சத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணி விரைவில் தொடங்க உள்ளன. ஆய்வுப் பணிகளுக்காக உலக வங்கி ரூ.30 லட்சம் நிதி அளித்துள்ளது. மீதி ரூ. 60 லட்சத்தை நெடுஞ்சாலைத் துறை அளிக்கும். இந்த சாலைகளை மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளும். இது தவிர சென்னையின் மேலும் 30 முக்கிய சாலைகளையும் உலகத் தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தை மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் ரூ. 225 கோடி செலவில் செய்து தரப்படவுள்ளன. இதற்கான திட்ட அறிக்கையை வரும் 15ம் தேதி தமிழக அரசிடம் மாநகராட்சி சமர்பிக்கவுள்ளது.

மீன்பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கை தா. பாண்டியன்!


தமிழக மீனவர்களை தாக்குவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக மீனவர்களை சுட்டுத் தள்ளும் ஒரே நாடு இலங்கை தான் என்று இந்திய ம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் கலந்து கொண்டார்.


கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக அவர்களை சுட்டுத்தள்ளும் ஒரே நாடு இலங்கை தான். இவ்வாறு தொடர் தாக்குதல் நடத்துவதன் மூலம் இலங்கை இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் நடத்துகிறது என்றே வைத்துக் கொள்ளலாம். நேச நாடு என்று சொல்லிக் கொள்ளும் எந்த நாடாவது இவ்வாறு செய்யுமா என்றார்.

தயாநிதி மாறனுக்கு உதவிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் சிபிஐ!


ஏர்செல் நிறுவனத்தை வலுக்கட்டாயமாக மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையில் உயர் அதிகாரிகளாக இருந்தவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, கூடுதல் செயலாளர் ஜே.எஸ்.சர்மா, துணை டைரக்டர் ஜெனரல் பி.கே.மிட்டல், தயாநிதி மாறனின் பி.ஏ. சஞ்சய் மூர்த்தி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொலைத் தொடர்புத்துறையின் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ள சிபிஐ, அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகளை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன் 2ஜி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தபோது, அவருக்கு அதை வழங்க உத்தரவு பிறப்பித்தார் மிஸ்ரா. ஆனால், அந்த லைசென்கள் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் சர்மா. அவர் ஏன் அவ்வாறு உத்தரவு பிறப்பித்தார் என்ற கேள்வி எழுகிறது. இதே காலகட்டத்தில் தான் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் என்னை நிர்பந்தித்தார் என்று சிபிஐயிடம் சிவசங்கரன் வாக்குமூலம் தந்துள்ளார்.

ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கிய பின், ஏர்செல் நிறுவனத்துக்கு ஒருங்கிணைந்த லைசென்ஸ் வழங்கலாம் என்று சர்மாவே மீண்டும் ஒரு நோட் எழுதியுள்ளார். சர்மாவின் உத்தரவின்பேரில் மிட்டல் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் நடந்தபோது சர்மா தொலைத்தொடர்புத்துறையின் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். முதலில் கூடுதல் செயலாளராகவும், பின்னர் செயலாளராகவும், இதையடுத்து டிராய் அமைப்பின் (தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) தலைவரானார். இப்போதும் அவர் தான் டிராய் தலைவராக உள்ளார்.

இதற்காக இவர்களுக்கும் இந்த விவகாரத்தில் நேரடியாக தொடர்பிருக்கும் என்று சிபிஐ கருதவில்லை என்று தெரிகிறது. ஆனாலும் இவர்களிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல உண்மைகள் வெளி வரலாம் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தில் ஏர்செல் நிறுவனத்தை விற்க ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் குறித்தும் மேக்சிஸ் நிறுவனத்துக்கு காட்டப்பட்ட சலுகைகள் குறித்தும் இவர்களிடம் விசாரிக்கப்படவுள்ளது. அதே போல மாறனின் பி.ஏ. சஞ்சய் மூர்த்தியையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. மேலும் வயர்லெஸ் பிரிவில் இணை ஆலோசகர் ராம்ஜி சிங் குஷ்வாஹாவிடமும் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.

சோனியா தொகுதியில் ஜன்லோக்பாலுக்கு 99.5% பேர் ஆதரவு!


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரே பரேலியில் உள்ள 99.5 சதவீதம் பேர் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அன்னா குழுவினர் கூறியுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவோற்றா விட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அன்னா குழுவினர் தங்கள் மசோதாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரே பரேலியில் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினர்.அவர்களுக்கே ஆச்சரியம் அளிக்கும் வகையில் 99.5 சதவீதம் பேர் ஜன் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக உள்ளனர்.

இது குறித்து அன்னா குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் வரும் தேர்தலில் நாங்கள் சோனியா காந்தியை ஆதரிக்க மாட்டோம் என்று ரே பரேலி மக்கள் தெரிவித்தனர் என்றார்

உ.பியை 4 மாநிலங்களாக பிரிக்க மாயாவதி திட்டம்!



 75 மாவட்டங்களுடன் பரந்து விரிந்திருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 மாநிங்களாக பிரிக்க அம்மாநில முதல்வர் மாயாவதி திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் இந்த திட்டத்தை தீட்டியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வருமான மாயாவதி 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். இந்த ஆட்சியில் மாயாவதியின் பெயர் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி கெட்டுவிட்டது. இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அவ்வப்போது சர்பிரைஸ் விசிட் கொடுத்து விவசாயிகளை ஆச்சரியப்படுத்தி விவசாயிகள் தோழன் என்று பெயர் வாங்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.

இவர் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பாஜக, சமாஜ்வாடி கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க முனைப்பாக உள்ளன. ஏற்கனவே பிரச்சனைகள் இருக்கையில் இந்த போட்டிக் கட்சிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று மாயாவதி யோசித்தார். உடனே ஆங்கிலேயர்களின் திட்டமான பிரித்து ஆளுதல் அவர் நினைவுக்கு வந்ததது போலும். 75 மாவட்டங்கள் உள்ள பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாக்கத் திட்டமிட்டுள்ளார். பூர்வாஞ்சல் (32 மாவட்டங்கள்), ஹரித் பிரதேஷ் (22 மாவட்டங்கள்), மத்திய உபி (14 மாவட்டங்கள்), பண்டல்கண்ட் (7 மாவட்டங்கள்) என 4 மாநிலங்களாகப் பிரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான மசோதாவை வரும் 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.மாநிலம் உண்மையிலேயே பிரிக்கப்படுகிறதோ இல்லையோ தனது இந்த அறிவிப்பின் மூலம் மாயாவதி தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை எளிதில் பெற்று மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்கிறது ஓர் ஆய்வு.

இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது !


இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப் போல நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது பதவிப் பொறுப்புக்கு வந்தாலும், அவருக்கு முந்தைய ஆட்சியில் மக்களுக்குப் பயன்படும் என்னென்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டன என்று கண்டறிந்து, அவைகளுக்கெல்லாம் மூடு விழா நடத்துவதிலேயே மகிழ்ச்சி அடைபவர். அந்த வரிசையில் நேற்றைய தினம் அறிவித்திருக்கின்ற மற்றொரு மூடுவிழா 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை கொஞ்சமும் இரக்கமின்றி வீட்டிற்கு அனுப்புகின்ற சாதனையாகும்.

தி.மு.கழக ஆட்சி 1989ம் ஆண்டு மீண்டும் அமைந்த போது, தமிழகத்திலே வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கிய ஒரு திட்டம் தான் மக்கள் நலப் பணியாளர்களை நியமித்த திட்டமாகும். இந்தத் திட்டத்தைத் தொடங்கிய போது மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ 750 மதிப்பூதியம் என்ற அளவிலே நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் இரண்டாண்டுகளில் 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும், அவருடைய பரந்த உள்ளம் காரணமாக 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களையும் டிஸ்மிஸ் செய்து 13-7-1991 முதல் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.  1996ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததும், பதவியிழந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வாய்ப்பளித்தோம். அதைப் போலவே பத்தாயிரம் சாலைப் பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றதும், காழ்ப்புணர்ச்சி எதுவுமே இல்லாத அவர், கருணை உள்ளத்தோடு கழக ஆட்சியிலே நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி அவர்களின் வயிற்றெரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டார். 

1-6-2001 முதல் மக்கள் நலப் பணியாளர்களையெல்லாம் பணி நீக்கம் செய்து ஜெயலலிதா ஆட்சியின் ஊரக வளர்ச்சித் துறை ஆணை எண். 149 அறிவித்தது. பணியிழந்த 13 ஆயிரத்து 247 பேரில் சுமார் பாதி பேர் பெண்களாகும். ஐந்தாண்டு காலம் பணியாற்றி மாதந்தோறும் ஊதியம் பெற்று வந்த அந்தக் குடும்பத்தினர் எல்லாம் திடீரென்று வேலையில்லை என்றால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? அந்த ஊதியத்தை நம்பி பல பேர் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள். பலர் தங்கள் பெண்களை திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள். அவர்களின் கதி எல்லாம் என்னவாகியிருக்கும்? அதைப் பற்றி ஜெயலலிதாவிற்கு என்ன கவலை? பல பேர் தற்கொலையே செய்து கொண்டு மாண்டார்கள். இந்த வேலையை நம்பி பலருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வேலை போனதால் திருமணங்கள் நிறுத்தப்பட்டு, அதை நம்பியிருந்த பல பெண்கள் நிர்க்கதிக்கு ஆளானார்கள்.

உதாரணமாக ஒரு சிலவற்றை கூற வேண்டுமேயானால், நாகை மாவட்டம், கீழையூர் அருகேயுள்ள வைரவன்கட்டளை என்ற கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற மக்கள் நலப் பணியாளர் வேலை போனதின் காரணமாக 11-6-2001ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சி. கந்தசாமியின் வேலை பறி போன காரணத்தால், அவருடைய மனைவி பிரபா என்பவர் 11-6-2001ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  12-6-2001ல் நத்தம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி வந்த திலகர் என்பவரும் வேதனை தாங்காது தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர்களின் குடும்பத்திற்கு அப்போதே தி.மு. கழகத்தின் சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராமமூர்த்தி பணி பறி போனதும் சோகத்தில் பட்டினி கிடந்தே மாய்ந்து போனார்.

நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடியைச் சேர்ந்த இளங்கோவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமனாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் கபிலன் வேலை போன காரணத்தால் பட்டினி கிடந்து உயிர் துறந்தார் என்று பட்டியல் நீளுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய எந்தப் போராட்டத்திற்கும் ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. 2006ம் ஆண்டு தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த மக்கள் நலப் பணியாளர்கள் என்னைச் சந்தித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். 1-6-2006 முதல் மீண்டும் அவர்கள் எல்லாம் தி.மு.கழக அரசினால் பணி நியமனம் பெற்றார்கள். பணி அளித்தது மாத்திரமல்லாமல், கால முறை ஊதியத்தின் கீழ் மக்கள் நலப் பணியாளர்களை கொண்டு வர வேண்டுமென்ற எண்ணத்தோடு தி.மு.கழக ஆட்சியில் 1-6-2009 முதல் ரூ. 2500 - 5000 மற்றும் ரூ. 500 தர ஊதியம் என்ற அளவில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை காரணமாக 12,653 மக்கள் நலப் பணியாளர்கள் பயன் பெற்றனர்.

மக்கள் நலப் பணியாளர்கள் முதியோர் கல்வியைப் பரப்புவதிலும் குடிப் பழக்கத்தின் தீமைகளை மக்களுக்கு உணர்த்துவதிலும் தெரு விளக்குகளைப் பராமரிப்பதிலும் மற்றும் சத்துணவு மையங்களைக் கவனிப்பதிலும் தங்களது பணிகளைச் செலுத்தி வந்தார்கள். அ.தி.மு.க. அரசு எப்போது பதவிப் பொறுப்புக்கு வந்தாலும், அரசு அலுவலர்களையெல்லாம் ஏதோ எதிரிகள் என்பதைப் போல நினைத்துச் செயல்பட்டு வருகிறது. அந்த ஏழைகளின் வயிற்றிலே ஒரு அரசு இப்படியெல்லாம் அடிக்கலாமா? கோடிக் கணக்கிலே அரசின் நிதியைச் செலவழித்துக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை வீணாகப் போட்டு வைத்திருப்பதும் அண்ணாவின் பெயரிலே உள்ள நூலகக் கட்டிடத்திலே குழந்தைகளுக்கான மருத்துவமனையைத் தொடங்கப் போகிறேன் என்பதும் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதெல்லாம் பொய் வழக்குகளைச் சுமத்தி, அவர்களை சிறையிலே அடைத்து வைத்து இன்பம் காண்பதும் ஒரு அரசுக்குரிய இலக்கணங்கள்தானா? இதற்கான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள் யாருமே அங்கே இல்லையா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

அவசர உதவி கோரி 80 நிமிடத்திற்கு ஒரு அழைப்பு!


குற்றங்களை தடுக்கவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் எத்தனையோ நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வந்தாலும் தினந்தோறும் குற்றநடவடிக்கைகள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் தொடர்பான பதிவு குறித்து எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தமிழ்நாடு காவல்துறையில் 80 நிமிடத்திற்கு ஒருமுறை குற்றம் தொடர்பான அவசர அழைப்பு பதிவு செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது. தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரத்தின்தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் தொடர்பான அவசர அழைப்புகள் பதிவு செய்யப்படுவதில் தேசிய அளவில் தமிழ்நாடு ஒன்பதாம் இடத்தை வகிக்கிறது. 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது. 2009-ஆண்டு தமிழ்நாட்டில் 3080 குற்றம் தொடர்புடைய அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் 2010-ம் ஆண்டு 6,351 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லிதான் அதிகம்: நாட்டின் தலைநகரகம் டெல்லியோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் கவலைப்படக்கூடிய விசயமாக தெரியவில்லை. ஏனெனில் டெல்லியில் 25 செகன்டுக்கு ஒரு முறை குற்றம் தொடர்புடைய அவசர அழைப்புகள் பதிவு செய்யப்படுகிறதாம். அங்கு மட்டும் 2010 –ம் ஆண்டு 19 லட்சம் குற்றம் தொடர்புடைய அழைப்புகள் பதிவாகியுள்ளன. கிரேட்டர் சென்னையில் உள்ள 13 ஆயிரம் காவல்துறையினர் 1,200 குற்றங்களை கண்டுபிடித்து அதற்கு தீர்வும் கண்டுள்ளனர். அதேசமயம் 20 சதவிகிதம் அழைப்புகள் விளையாட்டுத்தனமாக வந்தவையாகும். அவை, அவசர போலீஸ் 100 ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடும் நடவடிக்கை: காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர அழைப்பு எண்ணில் போன் செய்து விளையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு செய்யப்பட்ட தகவல் ஒலிபரப்படுகிறது. இருப்பினர் ஒருசிலர் விளையாட்டுத்தனமாக அவசரபோலீஸ் 100 ல் போன் செய்து விளையாடுவதாக தெரிவித்துள்ளார் கிரேட்டர் சென்னையின் காவல்துறை ஆணையர் ஜே.கே. திரிபாதி. ஜூலை மாதத்தில் மட்டும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விளையாடிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிறமாநிலங்களோடு ஒப்பிடுகையில் சென்னையில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்பது சற்றே ஆறுதலான விசயம்தான்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகி கலாநிதி மாறன் மனைவி!


இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் முதலிடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 64.4 கோடியாகும். ஆண் நிர்வாகிகளில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். 2வது இடத்தில் கலாநிதி மாறன் இருக்கிறார். பார்ச்சூன் இதழ், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் நவீன் ஜின்டாலும், பெண்கள் பிரிவில் காவேரி கலாநிதி மாறனும் முதலிடத்தில் உள்ளனர். 


காவேரியின் சம்பளம் ரூ. 64.4 கோடி: காவேரி கலாநிதி மாறன் இந்தியாவின் பத்து அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் சன் டிவியின் இணை நிர்வாக இயக்குநர் ஆவர். இவரது வருடாந்திர சம்பளம் ரூ. 64.4 கோடியாகும். 2வது இடத்தில் இருப்பவர் பெனின்சுலா லேன்ட் நிறுவனத்தின் தலைவர் ஊர்வி பிரமாள். 3வது இடத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டி இருக்கிறார். 4வது இடத்தில் பிரிட்டானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீதா பாலி இருக்கிறார். ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். இவரது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 69.7 கோடியாகும்.

கலாநிதிக்கு 2வது இடம்: 2வது இடம் கலாநிதி மாறனுக்குக் கிடைத்துள்ளது. கலாநிதி மாறனின் ஆண்டு வருமானம், 64.4 கோடியாகும். அதாவது இவரும் மனைவி காவேரியும் ஒரே சம்பளம் வாங்குகின்றனர். கடந்த 2010-11ல் கலாநிதியின் சம்பளம் 73.68 சதவீதம் அதிகரித்துள்ளது. டிவி சானல்கள், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை உள்ளிட்ட பல பிசினஸ்களில் ஈடுபட்டுள்ளார் கலாநிதி மாறன். இவரை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை தென்னிந்தியாவின் தொலைக்காட்சி ராஜா என்று வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதிக்கு 2, காவேரிக்கு 3 ஒட்டுமொத்த இந்திய சிஇஓக்கள் பட்டியலில் அதிக சம்பளம் வாங்குவோரில் கலாநிதி மாறன் 2வது இடத்திலும், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் 3வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள்: இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் அல்லது நிர்வாகிகள் பட்டியலையும் பார்ச்சூன் வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சார். 2வது இடத்தில் ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான ஷிகா சர்மாவும், 3வது இடத்தில் டபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனும் உள்ளனர். 4வது இடத்தில் காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி அருணா ஜெயந்தி உள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...