|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 June, 2011

இந்த கோடையில் வரும் ஆங்கிலப்படங்கள்!


சுனாமி 3 மாதங்களுக்கு பிறகு ஜப்பான்...


The Best S-P-E-L-L-E-R - ஆக இந்தியாவின் சுகன்யா தேர்வு!

 84th annual Scripps National Spelling Bee

இந்தியாவின் வளர்ச்சி (GDP) மிகவும் மெதுவாக... CNN


சீனாவில் பிறந்த அதிசய வெள்ளை மான்!


உலகின் அதிநவீன மிகப்பெரிய - TELESCOPE


அரசுக்கு எதிராக போராடும் மக்களை கொன்று குவிக்கும் கடாபி அரசு இதுவரை 1242 பேரை காணவில்லையாம் லிபியாவில்!

இதற்கு   இடையில் வெளிநாட்டினரை கொள்ளும் நோக்கில் பென்காசில் ஸ்டார்  ஓட்டல் அருகே கார் பார்கிங்கில்  குண்டு வைத்த லிபியா படை .

அமெரிக்காவில் 'Extreme' சுறாவளி காட்சி...


நாயுறுவிச் செடியில் பல்வேறு மருத்துவப் பயன்கள்!



பார்க்கும் இடத்தில் எல்லாம் களைச்செடிபோல சாதாரணமாக முளைத்திருக்கும் நாயுறுவிச் செடியில் பல்வேறு மருத்துவப் பயன்கள் உள்ளன. சாலை ஓரங்கள், பயன்படுத்தாத நிலங்களில் காணப்படும் இந்த தாவரத்தின் உறுப்புகள் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை.

பெயர்க்காரணம்: நாயுறுவி செடிக்கும் நாய்க்கும் நிறைய தொடர்பு உண்டு. இம்மூலிகை நாய்க்கடி விஷத்தை முறிக்கக் கூடியது. இம்மூலிகைக்கு நாய் வணங்கி என்றொரு பெயரும் உண்டு.நாய் இந்த செடியின் மேல் படுத்து உருளும் பழக்கம் உடையது. அந்த வேளையில் இதன் விதைகள் முள்ளைப் போல் நாயின் உடல் எங்கும் பற்றிக்கொண்டு விடும். இதுவே இம்மூலிகைக்கு இப்பெயர் ஏற்பட காரணமாகும். இந்த செடியின் விதைகள் நம்மேல் பட்டால் சிறிது நேரத்திற்கு நமைச்சல் ஏற்படும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் பிடைனி, அக்கிரான்தைன், ஹென்டிரிஅகோன்டேன், ஒலியனோலிக் அமிலத்தின் குளுகோசைடுகள் உள்ளன. விதைகளில் அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன.

மூல நோய்க்கு மருந்து: மூலக்கட்டிகளுக்கு வேரின் பொடி தேனுடன் கலந்து உட்கொள்ளப்படுகிறது. அரிசி கஞ்சியில் சேர்க்கப்பட்ட விதைகள் மூல நோய் இரத்தப் போக்கிற்கு மருந்தாகிறது. வேரின் கசாயம் வயிற்றுப் போக்கினை தடுக்கிறது. வேரின் பசை கருச்சிதைப்பிற்குப்பின் ஏற்படும் ரத்தப் போக்கினை நிறுத்தும்.

சிறுநீராக நோய்: முழுத்தாவரத்தின் கசாயம் சிறுநீர்ப்போக்கினை தூண்டுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது. உலர்ந்த தாவரம் குடல்வலி மற்றும் கோனேரியாவிற்கு மருந்தாகிறது. மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. தண்ணீர் மற்றும் வெல்லத்துடன் கரைந்த தாவரத்தின் சாம்பல், திசுக்கள் மற்றும் தோலுக்கு கீழாகச் சேர்த்த நீர்க் கோர்வையினைப் போக்கும்.

நுரையீரல் நோய்க்கு மருந்து: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

விஷக்கடி குணமடையும்: இலையின் பசை விஷ பூச்சிக் கடிக்கு மருந்தாகிறது. நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். நல்லெண்ணெயில் தாவரத்தின் சாம்பல் சேர்த்து தயாரித்த ‘ அப்பமார்க்’ தைலம் காதுவலிக்கு மருந்தாகிறது.

ரத்தச்சிக்கலை நீக்கும்: நாயுறுவி செடி விதைகளை பொடி செய்து உட்கொண்டால் மூக்கு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் குணமாகும். மந்தம், அதிசாரம், கபநோய், ரத்தப்போக்கு, குன்மம் முதலியன குணமாகும்.
இதன் இலைச்சாறு வயிற்றுவலி, குன்மம் இவைகட்கு வழங்கப்படும். இதன்வேர் சூரணத்துடன் மிளகுச்சூரணம் அல்லது திப்பிலி சூரணத்துடன் சேர்த்து தேனில் அருந்த இருமல் தீரும். இதன் சமூலத்தைச்சுட்டு சாம்பலாக்கி 5 குன்றி எடை வீதம் வெல்லத்தில் கொடுக்க ரத்தச்சிக்கலை நீக்கும்.


Plant name : Nayuruvi
“It cures mainly all types of Vatha and Kapha diseases”

Botanical name : Achyranthes aspera
Family : Amaranthaceae
Actions : Diuretic, Astringent, Anti-vatha, Anti-kapha

Siddha Medicinal Uses :

  1. The decoction prepared from the samoolam of this plant is given for inflammatory condition of the body. It is also a potent diuretic.
  2. The decoction of the roots is helpful to cure abdominal disorders.
  3. The dried powder of the leaves in the dose of 2 to 5 grams is given with honey for diarrhoea.
  4. The dried powder of the roots along with equal amount of Trikadugu choornam is given for cough.
  5. Leaf juice is a helpful remedy given for skin diseases like Prutitis, Scabies etc.
  6. The paste of leaves is applied externally for toxic bites.
  7. Nayuruvi chambal or ash is a good remedy for bleeding piles and abdominal problems. 
Note: Siddha treatment is based on complete physical examination of the patient, Naadi diagnosis, and other diagnostic criteria of the disease. The content given in this article is purely meant for information and education purpose only. Kindly consult a Siddha physician before any sort of self medication.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை!

                                                                                                                               ஆளுநரின்  உரையின் முக்கிய அம்சங்கள்:
* குறுகிய காலத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

* சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும். அதுவரையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் நிறுத்தப்படும்.

* கலைஞர் வீட்டு வசதி திட்டம் மாற்றியமைக்கப்படும். *கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்.

* தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மாணவர்களுக்கான இலவச லேப்டாப், வீட்டுப் பெண்களின் உபயோகத்துக்கான இலவச ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை இந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் வழங்க ஏற்பாடு.

* திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியவர்களின் படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு.

* கேபிள் டிவி மீண்டும் அரசுடமை ஆக்கப்படும். கேபிள் ஆபரேட்டர்களைப் பாதிக்காத வகையில்...

* ஓய்வூதியம் டிஜிட்டலைஸ் செய்யப்படும். வங்கிக் கணக்கு மூலம் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வழங்க ஏற்பாடு. இந்த விஷயத்தில் தினமணியின் யோசனை ஏற்கப்பட்டுள்ளது. சமூகப்பாதுகாப்புத் திட்டம் குறித்து, என்ன வேண்டும் எங்களுக்கு என்ற தலைப்பில் தினமணி கூறிய யோசனை ஏற்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு 20-25 என்ற தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாரிக்கப்படும். அதன்மூலம் மாநில வளச்சிக்கு திட்டம் வரையப்பட்டு, வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* 75 லட்சம் சிறிய நடுத்தர விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் திட்டம் தயாரிக்கப்படும்.

* நதிநீர் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவே அரசு விருப்பப்படுகிறது. ஆனால் அது சாத்தியமாகாவிட்டால், மேற்கொண்டு சட்டபூர்வ நடவடிக்கைக்கு இந்த அரசு தயங்காது.

* உயிரி தொழில்நுட்பம், நேனோ டெக்னாலஜி, மருந்து தயாரிப்பு ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* புதுப்பிக்கத் தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் தயாரிபுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* மாநில நெடுஞ்சாலைகள் எல்லாம் இரு வழிச்சாலைகளாக மாற்றம் பெறும்.

* 2014க்குள் மக்கள் தொகை 800 என்ற அளவில் இருக்கும் கிராமங்களுக்கு தார்ச் சாலை வசதி செய்து தரப்படும்.

* சிறப்பு நகர்ப்புற வளர்ச்சிக்கு தொலைநோக்குத் திட்டம்

* மோனோ ரயில் திட்டம் தொடங்கப்படும்

* மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்

* தெருவிளக்குகள் சோதனை அடிப்படையில் சூரிய மின்சக்தியில் இயங்க ஏற்பாடு

* 60 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்படும். இந்திய தர நிர்ணயக் கழகத்தால் விதிக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் மறுசுழற்சி முறை கடுமையாக ஒழுங்குபடுத்தப்படும்

* 5 அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒன்றாக்கப்படும்

* தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் இலங்கை அகதிமுகாம்களில் இருக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படும்.

* இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்துதரும்படி இலங்கை அரசை வலியுறுத்துமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.

இவ்வாறு ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஓடி ஒழியும் பழக்கம் என்னக்கு இல்லை சட்டப்படி எதிர்கொள்ளத் தயார்-சீமான்!


அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை களங்கப்படுத்தும் உள்நோக்கத்தோடு திட்டமிட்ட செயல்கள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகின்றன.பொய்ப்புகார் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு வழக்கினை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

கடந்த மூன்றாண்டுகளாக பல மாதங்கள் சிறைப்பட்டும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர் நலனுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டும், மக்களிடமிருந்தும்,இயக்கத்தினரிடமிருந்தும் எள்ள்ளவும் பிரியாது தொண்டாற்றும் எமது கட்சியின் தலைவரை இனநலனுக்கான போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் சிலரது தூண்டுதலின் பேரிலே இந்த பொய்ப்புகார் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

மேலும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், முறைகேடு போன்றவற்றின் மூலம் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்ட சில காட்சி ஊடகங்கள் சீமான் தலைமறைவு, என்கிற பொய்யான செய்தியை வெளியிட்டு எமது பெயருக்கு களங்கம் விளைக்க முயல்கின்றனர்.சீமான் அவர்கள் எங்கும் தலைமறைவாகவில்லை என்பதை தெரிவிப்பதோடு. அவர் எவ்வித விசாரணைக்கும் தயாராகவே உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தைஎள்ளவும் தளரவைக்கமுடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...