|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 August, 2011

Sonia's surgery successful in a US hospital!


ஆன்ட்ராய்டுடன் வரும் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவது குறித்து எல்ஜி தகவல்களை வெளியிடுவதற்கு முன்பே இன்டர்நெட்டில் அந்த போனை பற்றிய தகவல்கள் காட்டுத்தீ போல பரவிவிடுகிறது. இதேபோன்று, அந்த நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் ஆன்ட்ராய்டு போன் குறித்த தகவல்களும் இன்டர்நெட் காற்றில் பறக்கிறது. விரைவில் எல்ஜி அறிமுகப்படுத்த இருக்கும் புதிய ,ஸ்மார்ட்போன் எல்ஜி ஆப்டிமஸ் யூனிவா பற்றிய தகவல்களும் இன்டர்நெட்டில் உலா வருகிறது..

யூனிவா பற்றிய தகவல்களை துவங்குவதற்கு முன் முதலில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு நன்றி கூற வேண்டும்.. 3.5 இஞ்ச் தொடுதிரை கொண்ட இந்த போனில் அப்ளிகேஷன்களை எளிதாக இயக்குவதற்கு ஆன்ட்ராய்டு வெகுவாக துணைபுரிகிறது.

இந்த போனில் அப்ளிகேஷன்களை இயக்கும்போது ஓர் பரவசமான புதிய அனுபவத்தை இந்த போன் கொடுக்கும் என்பது உறுதி. நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த போன் நிச்சயம் இளைஞர்களை வெகுவாக கவரும்.

ஆற்றல்வாய்ந்த 5 மெகாபிக்செல் கேமராவை கொண்டிருந்தாலும், வீடியோ காலிங் செய்வதற்கு ஏதுவாக முகப்பு கேமரா இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. எம்பி-3, எம்பி-4, டபிள்யூஎம்வி, டபிள்யூஏவி மற்றும் ஏஏசி உள்ளிட்ட அனைத்து மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்கலாம். ஆர்டிஎஸ் வசதிகொண்ட எப்எம் ரேடியோ மற்றும் 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் இருக்கிறது.

720பி பார்மெட்டில் ஹைடெபினிஷன் வீடியோ ரெக்கார்டிங் செய்யவும் முடியும். ஆடியோ மற்றும் வீடியோ மல்டிமீடியா அம்சங்களில் இந்த போன் குறைவைக்காது. அனைத்து பார்மெட்டுகளிலும் இயங்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5மெகாபிக்செல் கேமரா கொண்ட இதன் கேமரா துல்லியமான புகைப்படங்களை எடுக்கவும், ஹைடெபினிஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்யவும் உதவி புரிகிறது.எப்எம் ரேடியோ, 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஆகியவையும் இருக்கிறது.

நல்ல சேமிப்பு திறனை கொண்ட இந்த போனில் 32 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனையும் பெற முடியும். 3ஜி, வைஃபை உள்ளிட்ட இணைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. புளூடூத், கம்ப்யூட்டரில் இணைக்க யுஎஸ்பி போர்ட்டும் இருக்கிறது. 2ஜி நெட்வொர்க்கில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிகளை பெற முடிகிறது. ஜிபிஎஸ் மற்றும் ஏஜிபிஎஸ் ஆகிய நேவிகேஷன் வசதிகளையும் பெறலாம்.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்:ஆன்ட்ராய்டு ஓஎஸ், 5 மெகாபிக்செல் கேமரா, ஜாவா சப்போர்ட், 3ஜி, வைஃபை, மல்டி பார்மெட் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர், 3.5மிமீ ஆடியோ ஜாக், ஏஜிபிஎஸ் கொண்ட ஜிபிஎஸ், நடுத்தர ரக ஸ்மார்ட்போனை சேர்ந்த எல்ஜி ஆப்டிமஸ் யூனிவாவின் விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

1000 சிசி மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்பீல்டு திட்டம்!

750, 1000சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு திட்டம்... என்ற செய்தியை கேட்டவுடன் பலர் இருக்கையிலிருந்து விருட்டென எழுந்து கம்ப்யூட்டர் மவுசை சுழற்றும் பரவசத்தை காண முடிகிறது.

அசாத்திய பலம், கம்பீரம், அது எழுப்பும் அலாதியான தடதட ஒலி என பல ப்ளஸ் பாயிண்டுகளை கொண்டு சந்தையில் சத்தமில்லாமல் வெற்றிநடைபோடும் புல்லட் மோட்டார்சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் என்றுமே தனிமரியாதை பெற்றிருக்கிறது. விரைவில் 500சிசி குரோம் புல்லட் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு அறிமுகப்படுத்த உள்ளது. புதிய 500சிசி புல்லட்டை வாங்குவதற்கு பல வாடிக்கையாளர்கள் கனவுகளுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், 750சிசி மற்றும் 1000 சிசி புல்லட் வேரியண்டுகளை அறிமுகப்படுத்த ராயல்என்பீல்டு திட்டமிட்டுள்ளதாக இணையதளங்களில் செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 350 சிசி திறன் கொண்ட புல்லட் ரூ.ஒரு லட்சம் விலையிலும், 500 சிசி புல்லட் ரூ.1.5 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், புதிதாக வரும் புல்லட் மாடல்கள் ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ராயல்என்பீல்டு நிறுவனம் புதிய புல்லட் மாடல்கள் குறித்து தகவல்கள் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்!

நடிகர் ஜான் ஆபிரகாம் 150 கிலோ எடையுள்ள பைக்கைத் தூக்கி அசத்தியுள்ளார். இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமிற்கு பைக் என்றால் உயிர். எந்த பைக் பற்றி எப்பொழுது கேட்டாலும் அசராமல் பேசுவார். தற்போது அவர் போர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு காட்சியில் பைக்கைத் தூக்க வேண்டும் என்று இயக்குனர் நிஷிகாந்த காமத் ஜானிடம் தெரிவித்துள்ளார். உடனே ஜானும் ஓகே சொல்லிவிட்டார்.

இது குறித்து படத்தி்ன் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியதாவது, ஜான் பைக்கைத் தூக்கியபோது நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். ஜானை பைக்கைத் தூக்குமாறு கூறியுள்ளதாக இயக்குனர் தெரிவித்ததற்கு நான் வேண்டாம் என்றேன். அவ்வாறு செய்தால் ஜானுக்கு முதுகிலோ, முழங்காலிலோ காயம் ஏற்படலாம் என்றேன். ஆனால் இயக்குனருக்கு ஜான் மீது நம்பிக்கை இருந்தது.

ஜான் திடகாத்திரமானவர். சில காட்சிகளுக்கு நாங்கள் கயிறை பயன்படுத்தினோம். ஆனால் பைக் காட்சியில் பயன்படுத்தவில்லை. ஜான் தானாக பைக்கைத் தூக்கி அசத்தினார் என்று ஸ்டண்ட் இயக்குர் தெரிவித்தார். பிபாஷா பாசுவை தனது மனதில் பல காலமாக நிறுத்தி வைத்திருந்தவருக்கு பைக் ஒரு பெரிய விஷயமா?

கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு!

கிராமப்புற இளம் பெண்களுக்கு நோய்த் தொற்று உள்ளிட்டவற்றைத் தடுக்கும் வகையில் இலவசமாக நேப்கின் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதுகுறித்துக் கூறியதாவது:

இளம் பெண்களிடையே சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, எதிர்வரும் காலத்தில் தொற்று நோய்களையும், கருவுறாமையின் ஆபத்தையும் குறைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

கிராமப்புறங்களில் வாழும் இத்தகையப் பெண்களுக்கு ஆறு சானிடரி நாப்கின் உள்ள ஒரு பேக்கெட் ஆறு ரூபாய் என்ற மானிய விலையில் பத்து மாவட்டங்களில் விநியோகிக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டில் செயல்படும் கிராம சுகாதார செவிலியர்களின் மூலமாக மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் வாழும் இளம்பெண்களுக்கு சானிடரி நாப்கின் இலவசமாகவே வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் செலவாகும்.

பொது காப்பீட்டுத் திட்டம்: அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்க இந்த அரசு ஒரு முழுமையான பொதுக் காப்பீட்டுத் திட்டத்தைப் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, "முதல்வரின் விரிவான பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம்" என்ற மேம்படுத்தப் பட்ட இப்புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

முந்தைய அரசு செயல் படுத்திய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் இந்தப் புதிய திட்டத்தில் நீக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஓர் ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் காப்பீடாக நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் வகையிலும், காப்பீட்டுக்காலம் மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்கத்தக்க வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட ஒரு சில நோய்களுக்கு காப்பீட்டு வரம்பு ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை முறைகள் அதிகரிக்கப்பட்டு குறிப்பாக மருத்துவ பராமரிப்புக்கும், குழந்தை பிறப்புக்கு பின் தேவைப்படும் சிகிச்சைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இப்புதிய திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ வசதிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

படிப்பதற்கு அமெரிக்கா லாயக்கில்லை!இந்திய விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவ் !!

கல்வி கற்பதற்கு அமெரிக்கா உகந்த இடமில்லை என்று மூத்த இந்திய விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார். பெரும்பாலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கத் தான் விரும்புகின்றனர். இந்நிலையில் கல்வி கற்பதற்கு அமெரி்ககா சிறந்த இடமில்லை என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் சி. என். ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராவ் பேசியதாவது,
அமெரிக்காவில் அனைத்துமே நன்றாக இருப்பதில்லை. இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருக்கும் இரண்டாம் தரமான கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். நீங்கள் வெளிநாட்டுக்கு செல்கிறீர்கள் என்பதால், அங்கு சிறந்த கல்வி கிடைக்கிறது என்று அர்த்தமில்லை. தற்போது இந்தியாவிலேயே அருமையான கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏராளமான பொற்றோர்கள் பணத்தைக் கொட்டி தங்கள் பிள்ளைகளை அமெரி்க்கப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இந்தியாவிலேயே சிறந்த பள்ளிக் கூடங்களை அமைத்தால் தான் அவர்கள் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கமாட்டார்கள் என்றார்.

அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3, 500 கோடிக்கு மேல் சொத்து தெகல்கா!

மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான முக அழகிரிக்கு பினாமி பெயர்களில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெகல்கா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வு இதழான தெகல்கா மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் அழகிரி தனது நெருங்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார். அவரது மனைவி காந்திக்கும் நில மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெகல்கா அழகிரியின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: அழகிரி கடந்த 2009-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அப்போது தன்னிடம் ரூ. 133.65 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பினாமி பெயரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது. நிலம், சினிமா தயாரிப்பு மற்றும் வினியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளார்.

அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மருமகள் அனுஷ்கா, மருமகன்கள் ஒய்.கே. வெங்கடேஷ், விவேக் ரத்தினவேல் ஆகியோர் பெயர்களில் ஏராளமான சொத்துக்களும், வியாபாரங்களும் உள்ளன. இது தவிர அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மொரீஷியஸ், வெர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொழில் நடத்தி வருகின்றனர் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகிரி வெளியிட்ட சொத்து விவரத்தின்படி அவரிடம் 18 ஏக்கர், 63 சென்ட் விவசாய நிலம், 1 ஏக்கர், 82 சென்ட், 23 ஆயிரத்து 278 சதுர அடி நிலம், 20 சென்ட் பிளாட், சென்னை, மதுரையில் வீடுகள், ரூ. 4 கோடி வைப்பு நிதி மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் ரூ. 1.39 கோடி, 85 கிராம் தங்கம், ரூ. 1. 40 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி, ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் எஸ்யூவி, தயா டயாக்னோஸ்டிக்ஸில் ரூ. 96 லட்சம் முதலீடு உள்ளது.

சிவரக்கோட்டையில் உள்ள தயா பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் முக அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரத்தை அவர் வெளியிடவில்லை. விதிமுறைகளை மீறி 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தனது சொத்துக்களின் மதி்ப்பை குறைத்தே வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆயிரத்து 100 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ. 22 லட்சம் என்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு ரூ. 2. 5 கோடி. அழகிரியின் மனைவி காந்திக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. அவர் தான் தயா சைபர் பார்க்கின் தலைவர். மேலும், முக அழகிரி கல்வி அறக்கட்டளை உறுப்பினராகவும் இருக்கிறார்.

அழகிரி வெளியிட்ட காந்தியின் சொத்துக்கள் விவரம்.48. 42 ஏக்கர் விவசாய நிலம், கொடைக்கானலில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள 82.3 சென்ட் பிளாட், சென்னையில் ரூ. 4.30 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 376 சதுர அடி பிளாட், சேமியர்ஸ் ரோட்டில் ரூ. 4. 39 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 488 சதுர அடி பிளாட், மதுரை பாப்பாக்குடியில் 3 ஆயித்து 60 சதுர அடி பிளாட், மதுரையில் 4 ஆயிரத்து 378 சதுர அடியில் தயா கல்யாண மண்டபம், கொட்டிவாக்கத்தில் ஆயிரத்து 845 சதுர அடி வியாபார நிலம், மாதவரம் மேடாஸ் கிரீன் பார்க்கில் ஆயிரத்து 320 சதுர அடி வீடு.அழகிரி தனது மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்களை வெளியிட்டபோது தயா சைபர் பார்க்கில் காந்தி செய்திருக்கும் முதலீடு குறித்து தெரிவிக்க மறந்துவிட்டார்.

கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி நடந்த நிறுவனக் கூட்டத்தில் தயா சைபர் பார்க் பங்கு மூலதனம் ரூ. 10 லட்சத்தில் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்டியாக இருக்கும் காந்தி தனக்கு வெறும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பங்குகள் தான் இருப்பதாக தெரிவித்தார்.

அவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை பற்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அந்த நிலம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக காந்தி மற்றும் லாட்டரி மாபியா மன்னன் சான்டியாகோ மார்டின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிடைத்துள்ள ஆவணங்களின்படி மார்டின் கோவில் நிலத்தை காந்திக்கு ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி.

அழகிரி தனது மகன் தயாநிதி பெயரில் இருக்கும் சில சொத்துக்கள் பற்றியும் தெரிவிக்க மறந்துவிட்டார். தயாநிதி அழகிரி தான் தயா பொறியியல் கல்லூரி, தயா பல்மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர், ஜேஏகே கம்யூனிகேஷன்ஸ், கிளவுட் நைன் மூவிஸ் எம்டி, ராயல் கேபிள் விஷன் மற்றும் மகேஷ் எலாஸ்டோமர்ஸின் தலைவர். ஆனால் இத்தனை சொத்துக்களையும் தெரிவிக்க மறந்துவிட்டார் அழகிரி. சென்னை, திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கேபிள் ஆபரேட்டரான ஜேஏகே கம்யூனிகேஷன்ஸில் தாயநிதிக்கு தற்போது 50 சதவீத பங்குகள் உள்ளது. கருணாநிதி குடும்பத்தினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றவே சினிமாத்துறையில் நுழைந்ததாக சினிமாத் துறையில் உள்ள சிலர் தெரிவித்தனர்.

அழகிரியின் பணம் மற்றும் பதவி மோகத்தால் தான் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக ஸ்டாலினை தோற்கடிக்கவே அழகிரி இத்தனை விரிந்த சாம்பிராஜ்ஜியத்தை நிறுவியுள்ளார். கருணாநிதிக்கு அடுத்து திமுகவின் தலைவராக அழகிரி விரும்புகிறார். அதற்கு பண பலமும், ஆள் பலமும் சேர்த்து வைத்துள்ளார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தெகல்கா செய்தி வெளியிட்டுள்ளது.

பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல! - ஏ ஆர் முருகதாஸ்!


யாருடைய ஆதரவுமில்லாமல் சென்னைக்கு வந்தேன். இன்று நிறைய மனிதர்களைச் சம்பாதித்துவிட்டேன். எனக்கு பணம் சம்பாதிப்பது நோக்கமல்ல, புதிய இயக்குநர்களை உருவாக்குவதே குறிக்கோள், என்றார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து எங்கேயும் எப்போதும் என்ற படத்தை தயாரிக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.

ஜெய்-அஞ்சலி, அனன்யா - சர்வானந்த் ஜோடிகளாக நடிக்கும் இந்தப் படத்தை முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார். சி சத்யா இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் சினிமாஸில் நடந்தது. நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இந்த விழாவுக்கு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நடிகர் சங்கத் தலைவர் ஆர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் இருவருமே வரவில்லை. எனவே மிகத் தாமதமாகவே தொடங்கியது நிகழ்ச்சி.விழாவில் பேசிய இயக்குநர் முருகதாஸ், "நான் சென்னைக்கு வந்தபோது என்னைத் தவிர யாரையும் தெரியாது எனக்கு. இன்று நிறைய மனிதர்களைச் சம்பாதித்துள்ளேன்.

என்னால் முடிந்த அளவு இந்த சமூகத்துக்கு திருப்பித் தர நினைக்கிறேன். நல்ல சினிமாக்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாக என்னால் முடிந்த அளவு உதவத்தான் இந்த தயாரிப்பு வேலையில் இறங்கினேன். ஹாலிவுட்டில் பெரிய நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நம்முடன் கைகோர்த்துள்ளது. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய லாபம் என்ற நோக்கம் எனக்கில்லை.

சின்ன பட்ஜெட், புதிய நடிகர்கள், இயக்குநர்களை வைத்து நல்ல சினிமா கொடுத்து குறைந்த லாபம் கிடைத்தால் போதும். அதுதான் இந்த எங்கேயும் எப்போதும் படத்தின் நோக்கம்.இந்தப் படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அப்படி ஜெயித்தால் இன்னும் நிறைய படங்களை இணைந்து தயாரிப்போம். வருடத்துக்கு இரு இயக்குநர்களாவது அறிமுகமாவார்கள்," என்றார்.

விழாவில் பேசிய சூர்யா, "எங்கேயும் எப்போதும் படம் என் சொந்தப் படம் மாதிரி. இந்தப் படம் ஜெயிக்க வேண்டும். இன்னும் நிறைய ஹாலிவுட் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரவேண்டும்," என்றார்.இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விவேக் உள்பட பலரும் வாழ்த்திப் பேசினர்.

விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!

விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.தன் மீதான நில மோசடி புகார் குறித்தும் தன்னை போலீஸ் தேடி வருவதாகவும் வெளியான செய்திகள் குறித்து நேற்று வடிவேலு பரபரப்பாக பேட்டியளித்திருந்தார்.இந்த பேட்டி தொடர்பாக இணையதளத்தில் வெளியான செய்திகளுக்கு வாசகர்கள் அளித்த கமெண்ட்களைப் படித்த வடிவேலு, அவற்றுக்கு பதிலளித்துள்ளார்.

வடிவேலு தனது தொழிலை மட்டும் செய்திருந்தால் நிலமோசடியில் சிக்கி இருக்க மாட்டார் என்று ஒரு வாசகர் கூறியதை மறுத்துள்ள வடிவேலு, "என் தொழிலை மட்டும்தான் செய்கிறேன். சம்பாதிக்கிற பணத்தை வரும் காலத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் சேமித்து வைக்கத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அந்த பணத்துக்கு சொத்துக்களை வாங்கி போடுவார்கள். அப்படித்தான் நான் செய்தேன். மோசடி செய்யவில்லை. மோசம் போனேன்," என்றார்.

விஜயகாந்த் பெரிய மனசு வைத்து வடிவேலுவை மன்னித்து விடலாம். வடிவேலு தான் செய்த தவறை உணரவேண்டும், என மற்றொரு வாசகர் கூறிய கருத்துக்கு பதலிளித்துள்ள வடிவேலு, "இந்த கருத்தை சொன்னவர் எதிரி கூடாரத்தின் முக்கிய உறுப்பினர். யாரையோ இவர் சொல்கிறாரே அவர்தான் (விஜயகாந்த்) தவறை உணர்ந்து திருந்தி வருந்த வேண்டும். அவர் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்..." என்று கூறியுள்ளார்.

மேலும் 'என் கிணற்றை காணோம் என்று சினிமாவில் நடித்தார். நிஜத்தில் சுடுகாட்டு நிலத்தை காட்டி சிங்கமுத்து ஏமாற்றி விட்டதாக கூறுகிறாரே' என்ற வாசகரின் கருத்துக்கு, 'அது பொய்யல்ல, மெய்', என்று கூறியுள்ளார் வடிவேலு.

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்!

சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.

அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சாலையில் சுற்றியுள்ளனர். இதைப் பார்த்த சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 பேர் திரண்டு வந்து அந்த சிங்களர்கள் தங்கியிருந்த விடுதிக்குள்ளும் புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில் சில சிங்களர்கள் காயமடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 8900 கோடிக்கு புதிய திட்டங்கள்


தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மோனோரெயில் திட்டப் பணிகளை இந்த ஆண்டே துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவங்கப்படும், நடமாடும் மருத்துவமனைகள் செயல்படுத்தப்படும், 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே அறிவித்தபடி மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செப்டம்பர் 15ம் தேதி அன்று முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்படும்.  தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  
அதில் அவர் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தார். வரி நிர்வாகம் குறித்து அவர் கூறியதாவது: 
201112ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை மொத்த வருவாய் வரவுகள் ரூ.79 413.26 கோடி எனவும், செலவு ரூ.78,974.48 கோடி எனவும், வருவாய் உபரி ரூ.438.78 கோடி எனவும் மதிப்பிடப்பட்டது.  இந்த இடைக்கால நிதிநிதி அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை ரூ.13,506.85 கோடியாக மதிப்பிடப்பட்டது.  

வணிக வரித்துறையில் மின்னணு ஆளுகை முறைகளை புகுத்துவது அவசியமாக கருதப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.45.37 கோடியை அனுமதித்துள்ளது.  இதில் மத்திய அரசின் பங்கு ரூ.31.26 கோடியாகும்.

மின் ஆளுகை முறையை முழுமையாக புகுத்த அரசுஇந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளும். வணிக வரித்துறையில் உள்ள நிலுவைகளை முடிவுக்கு கொண்டு வர சமாதான் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2012 மார்ச் 31ம் தேதி வரை மீண்டும் ஒரு சமாதானதிட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

இதேபோல  பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆய்வுக்காகவும் சந்தை விலையை நிர்ணயம் செய்வதற்காகவும் அதிகஅளவில் நிலுவையில் உள்ளன.  இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. எனவே வசூலிக்கப்படாமல் உள்ள இந்த தொகையை வசூலிக்கும் பொருட்டும் பொது மக்களுக்கு பத்திரங்கள் திரும்ப கிடைக்கச் செய்யும் பொருட்டும் சமாதான் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த அரசு தொடங்கி உள்ள பல்வேறு புதிய திட்டங்களையும் வளர்ச்சி முயற்சிகளையும் செயல்படுத்த கூடுதல் நிதி தேவை ரூ.8900 கோடியாகும். இந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரத்தை பெருக்க ஏற்கனவே அரசு வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்ததின் மூலம் அரசுக்கு ரூ.3618 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திருத்த வரவு  செலவு மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவு ரூ.85,685 கோடி. இதில் செலவினம் ரூ.85,511 கோடி. வருவாய் உபரி ரூ.173.87 கோடி. அதே சமயம் நிதிப்பற்றாக்குறை ரூ.16,881 கோடியாகும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.90 விழுக்காடாகும்.

அரசு கேபிள் டிவி ...!


அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு  தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், குறிப்பாக, இரண்டாம் நிலை நகரங்கள், ஊரகப்பகுதிகளில் இந் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும். ’’உலகளவில் தகவல் தொழில்நுட் பத்திற்கும், அதனைச் சார்ந்த சேவை நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஒரு முக்கிய முதலீட்டு இடமாக அமைந் துள்ளது. 

இம்மாநிலத்தில் 2010-11ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 40,000 கோடி ரூபாயாகும். தகவல் தொழில்நுட்பமும், அதனைச் சார்ந்த தொழில்களும் வளர்ச்சி யடைய இந்த அரசு அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செய்து தரும்.

இரண்டாம் நிலை நகரங்களில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்புகளை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு காலியாக உள்ள இடங்களைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.


கணினி வன்பொருள் துறையில் முதலீட்டினை ஈர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசானது புதிய தகவல் பரிமாற்ற தொழில்நுட்பக்கொள்கை 2011ஐ உருவாக்கும். இக்கொள்கையானது மென்பொருள், வன்பொருள் தொழில் களை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையி லும் அமையும்.
16 மாவட்டங்களில் புதிய தலைமுனை யங்கள் நிறுவியும், 11 மாவட்டங் களில் தனியார் தலைமுனைய களுடன் ஒப்பந்தம் செய்தும் ஒளிபரப்பு வசதிகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இத்தகைய தலைமுனையங்களிலிருந்து விரைவில் மாநிலம் முழுவதும் ஒளிபரப்பு தொடங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்தபடி, அரசு கம்பிவட தொலைக்காட்சிக்கழகத் தைப் புத்துயிரூட்ட இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தஞ்சா வூர், கோயம்புத்தூர், வேலூர், திரு நெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஒளிபரப்பு தலைமுனையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50 கி.மீ. சுற்றெல்லையில் இருக்கும் கம்பிவட இயக்குபவர்கள் அரசு கம்பிவட தொலைக்காட்சி சேவையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

சன் டிவி அலுவலகத்தில் போலீஸ் அதிரடி சோதனை!

சேனல்களை ஒளிபரப்புவதற்கான லைசென்சை புதுப்பித்துள்ளனரா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில்  சன் டிவிக்கு சொந்தமான கரண் டிவி அலுவலகம் மற்றும் சுமங்கலி கேபிள் விசன் நிறுவனத்தில் போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ மற்றும் தாசில்தார் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. 

Mamata eyes London model for Kolkata...?


என்.கே.கே.பி. ராஜா கைது செய்யப்பட்டது ஏன்?

பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோடு தென்றல் இல்லம் என்ற இடத்தை சேர்ந்தவர் ராமசாமி, இவர் ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா ஈரோடு மாநகராட்சி மேயர் குமார்முருகேஷ், ஈரோடு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஓ.சி. விஸ்வநாதன், இவரது மகன் ராஜேந்திரன்,என்.கே.கே.பி.ராஜா கைதுக்கு காரணமான வழக்கு விபரம்: மற்றும் பெருந்துறையை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னியப்பன், தட்சணா மூர்த்தி, சிவக்குமார், செல்வராஜ், கோபிநாத், மகேஷ், ராஜா ஆகிய 12 பேர் மீது ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். 
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி.ராஜா. கடந்த தி.மு.க. ஆட்சியில் இவர் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார்.  



இவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். என்.கே.கே.பி.ராஜா மீது 120 பி. (கூட்டுசதி), 470, 455, 458, 471 (மோசடி), 385 (போலி ஆவணம் தயாரித்தது), 3(1) (சொத்து அழிப்பு இழப்பீடு செய்தல்) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ந.ராஜா,  வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதால் என்.கே.பி. ராஜா, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

அம்மனுவில்,   ‘’பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோட்டில் எனக்கு 6.60 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு கடலை மில் நடத்தி வந்தேன். இதன் அருகே எனது மகன் இளங்கோ, மருமகள் உமையவள்ளி ஆகியோர் பள்ளிக்கூடம் நடத்தி வந்தனர். எனது வியாபாரத்துக்காக கடந்த 1992-ம் ஆண்டு பால சுப்பிரமணியம் என்பவரிம் ரூ. 6 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தேன்.

பிறகு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சரியாக வட்டி கொடுக்க முடியவில்லை. இதனால் அசல் வட்டி, கூட்டு வட்டி, அபராத வட்டி கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ. 77 லட்சத்து 60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி, எனது நிலத்தை கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி மிரட்டி எழுதி வாங்கி கொண்டனர்.

இதன்பிறகு 2007-ம் ஆண்டு பெருந்துறையை சேர்ந்த ஓ.சி. விஸ்வநாதன், சிவக்குமார், பால சுப்பிரமணியம், தட்சணா மூர்த்தி, மகேஷ், ராஜா கோபிநாத், ராஜேந்திரன், செல்வம் ஆகியோர் தனது நிலத்தில் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த 80 தென்னை மரங்களை வெட்டியும், புல்டோசர் மூலம் 2 ஏக்கர் நிலத்தை நிரவியும் சேதப்படுத்தி விட்டனர்.

இதன்பிறகு கவுந்தப்பாடியில் உள்ள என்.கே.கே.பி. ராஜா வீட்டில் வைத்து எனது குடும்பத்தை மிரட்டினார். 
பிறகு பெருந்துறை பயணியர் தங்கும் விடுதியில் என்னையும், எனது குடும்பத்தினரையும் மிரட்டி வெற்று பேப்பர்களில் கையெழுத்து வாங்கி கொண்டனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்ட ரூ.32 கோடி!

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:


* காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்டப்படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி ஒதுக்கீடு. 

* ரூ.130 கோடியில் நீதி மன்றங்களுக்கு சொந்த கட்டிடம்.

* நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.

* தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த, புதிதாக 10 கட்டடங்கள் கட்ட திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு.

* கூட்டுறவுத்துறை மூலம் கடனை திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.

* சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரூ.117 கோடி.

* சென்னை பெருநகர காவல் ஆணையம் உருவாக்கம். சென்னை புறநகர் காவல் ஆணையம் இதனோடு இணைக்கப்படுகிறது.  சென்னை பெருநகர காவல் ஆணையம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை முடிந்தது...! தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது!!


சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். செளஹான் ஆகியோர் முன்பு வந்தது.எதிர்தரப்பு வாதங்கள் மீது பதில் அளித்து வாதாடிய தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர், பி.பி. ராவ், சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல் படுத்த முடியாததற்கான காரணங்களை விளக்கினார்.சமச்சீர் பாடப் புத்தகங்களில் உரிய மாற்றங்களை செய்து அடுத்த ஆண்டு அல்லது வரும் ஆண்டுகளில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். தமிழக அரசின் சார்பில் பதில் விளக்கம் இன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

மேலும், சமச்சீர் கல்வி புத்தகங்களை ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் பள்ளி, மாணவ, மாணவியர்களிடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.1 முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனு மீது 6 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

அமெரிக்காவில் "தமிழ்த்தாய்க்கு சிலை'...!

 சுவாமிமலையில் உருவாக்கப்பட்ட தமிழ்த்தாய் படிமம், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கும்பகோணம் அருகிலுள்ள, சுவாமிமலை குபேரன் சிற்பக்கூட ஸ்தபதி மோகன்ராஜ், "பெருந்தச்சன்' என்ற பெயரை தாங்கி சிற்பங்களை செய்து வருகிறார். இவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தஞ்சை பல்கலை சிற்பத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின், தென் கரோலினா பகுதியில் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் நிர்வாகிகள் அரிநாத், தண்டபாணி ஆகியோர், ஸ்தபதி மோகன்ராஜை சந்தித்து, தமிழ் உணர்வை பறைசாற்றும் வகையில், தமிழ்த்தாய் படிமத்தை வடிவமைத்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, 30 கிலோ எடை கொண்ட, ஒன்றரை அடி உயரமுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட, பஞ்சலோக தமிழ்த்தாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாயின் இடது கையில், ஓலைச்சுவடியும், வலது கையில் செங்கோலுக்கு பதில் காந்தள் மலரும், தலையில் கிரீடம், பின்னணியில் உள்ள வட்டத்தில் மூவேந்தர் மன்னர்களின் சின்னங்களான, கயல், புலி, வில் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாய் காலில் சிலம்பும், இடுப்பில் பதக்கமும், காதுகளில் அகன்றத் தோடும், ஐவகை நிலங்களை ஆடைகளாக அணிந்திருக்கிறார். தமிழ்த்தாய் சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த அமெரிக்கத் தமிழர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, சிலையை வடிவமைத்த மோகன்ராஜ் பெயரும் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புமிக்க தமிழ்த்தாய் படிமம், கடந்த வாரம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு, அங்கு தமிழர்களால் நகர்வலம் செய்யப்பட்டு, கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முன்னிலையில், அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு: நகலை எரித்தார் ஹசாரே!


மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதா நகலை தீயிட்டு எரித்து அன்னா ஹசாரே பேராட்டம் நடத்தினார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட லோக்பால் மசோதா, பார்லிமென்டில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு தயாரித்துள்ள இம்மசோதா சட்ட வரம்பில், பிரதமர் பதவி வகிப்போருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காந்தியவாதி அன்னா ஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடுமையான சட்டதிட்டங்கள் இல்லாத, நீர்த்துப்போன இம்மசோதாவால் ஊழலை ஒழிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில், இன்று டில்லியில் அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் அரசு தயாரித்த லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதா நகல் எரித்து போராட்டம் நடத்தினர்.

பா.ஜ., எதிர்ப்பு: மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதாவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மசோதா சட்டவரம்புக்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்திற்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...